Tuesday, July 01, 2008

கண்ணன் பாட்டு 100வது இடுகைக்கு திருமதி. நாகி நாராயணன் அவர்களின் வாழ்த்துகள்


திருமதி. நாகி நாராயணன் அவர்கள் ஒரு தேர்ந்த கருநாடக இன்னிசைப் பாடகி. இவர் இரவிசங்கர் கண்ணபிரான் எழுதிய பாடலை தனது தோழி திருவரங்கப்ரியா ஷைலஜா அவர்களுடன் இணைந்து பாடியதை இந்த இடுகையில் கேட்கலாம்.

இனி அவரது வாழ்த்துச்செய்தி:

அன்புள்ள திரு.கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களுக்கு, கண்ணன் பாட்டு
எண்ணிக்கை நூறு ஆனதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அதைத் தெரிவித்துக் கொள்ள ஒரு சிறு கவிதை முயற்சி !!!

கண்ணனின் அற்புத லீலைகளும் - மணி
வண்ணனின் திவ்யப் பண்களும்
கண்ணன் பாட்டுப் பதிவகத்தில்
எண்ணிக்கை நூறை எட்டியதில்
மண்ணெங்கும் பரவசமடைந்து
விண்ணை எட்டும் குரலில்
உண்மையாக உரைப்போம்
வாழ்க உம் பணி, வளர்க உங்கள் தொண்டு !!!!

- வாழ்த்துக்களுடன்,
நாகி நாராயணன்.

4 comments:

ஷைலஜா said...

பாடிக்கொடுத்த கோதையே வருக! வாழ்த்துக்கு மிக்க நன்றி!
ஷைலஜா

Kavinaya said...

எங்க மைபாக்காவுடன் சேர்ந்து அருமையாகப் பாடி நூறாவது பதிவை சிறப்பித்துக் கொடுத்த தங்களுக்கும் மிகுந்த நன்றிகள். பாடல் மிகவும் பெருமை பெற்றது, பாடகியரால்... :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாடிக் கொடுத்த படர்கோதை
நாகி அக்காவுக்கு நன்றிகள் பல! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடியேன் பெயரை முன்னிட்டு மெயில் அனுப்பினாலும், நாகி வாழ்த்த வந்தது கண்ணன் பாட்டு குழுவைத் தான்!
* தி. ரா. ச.(T.R.C.)
* வெட்டிப்பயல்
* மடல்காரன்
* மலைநாடான்
* Raghavan
* "முருகனருள்" கோ.இராகவன்
* dubukudisciple
* குமரன் (Kumaran)
* ஷைலஜா
* kannabiran, RAVI SHANKAR (KRS)