Friday, March 13, 2009

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே!

கேட்கும் தோறும் மனத்தை உருக்கும் பாடல்.
காணும் தோறும் வயிற்றைப் பிசையும் காட்சி.

***

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே!

பிண்டம் என்னும்
எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் (பிச்சை)




அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
இம்மையை நான் அறியாததா?
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட (பிச்சை)

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்!
நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்?
பெரும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்!
அதன் சூத்திரம் உள்ளதோ உன்னிடத்தில்!

ஒரு முறையா? இரு முறையா?
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்!
புது வினையா? பழ வினையா?
கணம் கணம் தினம் எனைத் துடிக்க வைத்தாய்!

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே!
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே !
அருள் விழியால் நோக்குவாய்!
மலர்ப் பதத்தால் தாங்குவாய்!
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனது அருள் பெற (பிச்சை)