Thursday, April 28, 2011

ஐயப்பா என்று அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்!



மணியான ஒரு பாடல் வேண்டும்! - அது
மணிகண்டன் மீதிருக்க வேண்டும்! (மணியான)

துணையாக அவன் இருக்க வேண்டும்! - சபரி
மலை ஏற அருள் செய்ய வேண்டும்! (மணியான)

நடுக்காட்டில் துணையாக வேண்டும்! - நல்ல
வழிகாட்டியாய் இருக்க வேண்டும்!
அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்! - ஐயப்பா என்று
அவன் நாமம் நான் சொல்ல வேண்டும்! - மனம்
அருள் தேட வழி செய்ய வேண்டும் (மணியான)


Tuesday, April 12, 2011

அதுவும் அவன் பேரு தான்!

காலையில எந்திரிச்சதுல இருந்து ஒரே குதூகலமா இருக்கு மனசு. இராமநவமின்னாலே ஒவ்வொரு வருஷமும் மனசு சந்தோசத்துல குதிக்குது. நாள்பூரா பொழுது போறதே தெரியாம சொந்தக்காரங்களோட பொழுது போக்கலாம்.

எங்க பாட்டிவீட்டுக்காரங்க இராமநவமி அன்னிக்கு ஒவ்வொரு வருஷமும் (மதுரை சௌராஷ்ட்ர) ஹைஸ்கூல் எதிர்ல இருக்குற இராமர் கோவில்ல சாமி புறப்பாடு செய்வாங்க. அனுமார் வால் கோட்டை கட்டிக்கிட்டு மேலே உக்காந்திருக்கிற மாதிரி கோபுரம் இருக்குமே அந்த கோவில் தான். ஹைஸ்கூல்ல படிச்சவுங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஹைஸ்கூல்ன்னா கல் பள்ளிக்கூடம்; பசங்க பள்ளிக்கூடம். அனுப்பானடியில இருக்குற (சௌராஷ்ட்ர) பெண்கள் பள்ளிக்கூடம் இல்லை.



கோவிலுக்கு எல்லாரும் வந்துட்டாங்க. கல்யாணம் ஆனபின்னாடி புதுப் பொண்டாட்டியோட நான் வர்ற முதல் இராமநவமி திருவிழா இது. அதனால எங்க ரெண்டு பேருக்கும் சொந்தக்காரங்ககிட்ட கவனிப்பு கொஞ்சம் அதிகமா இருக்கு.

சாமி அலங்காரம் எல்லாம் முடிஞ்சு புறப்பாட்டுக்கு தயாரா இருக்கு. அய்யர், கோவில்காரங்க எல்லாரும் இருக்காங்க. ஆனா யாரையோ எதிர்பார்த்துக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு. ஒரு சித்தப்பா இன்னும் வரலை. வீட்டு மாப்பிள்ளை வராம எப்படி சாமி புறப்பாடு செய்றது. அதனால எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க. கோவில்ல போன் இல்லை. பக்கத்துவீட்டுக்காரங்க தெரிஞ்சவங்க தான். மாமாக்கள் மாத்தி மாத்தி போயி சித்தப்பாவுக்கு போன் பண்ணிட்டு வர்றாங்க. இந்த சித்தப்பா இப்படித் தான். கொஞ்சம் பிகு பண்ணிக்குவார். நான் வராம நீங்க சாமி புறப்பாடு பண்ணிடுவீங்களான்னு ஒரு நினைப்பு. பத்து மணி ஆனபின்னாடி மெதுவா அந்த சித்தப்பா வந்துட்டார். "என்ன மாப்பிள்ளை? உங்களுக்காக எம்புட்டு நேரம் காத்திருக்கிறது? எங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா?"ன்னு பெரியப்பாக்கள் எல்லாம் சிரிச்சுக்கிட்டே சத்தம் போடறாங்க. "போகட்டும் பாவா. பத்து மணி தானே ஆகுது'ன்னு சித்தப்பா சிரிச்சுக்கிட்டே பதில் சொல்றார்.

"ஆகட்டும் அய்யரே. ஆகட்டும் ஆகட்டும். எல்லாரும் வந்தாச்சு. சாமி புறப்பாடு செய்யலாம்"ன்னு தாத்தா அவசரப்படறார். அய்யரும் அவங்க அவசரத்துக்கு ஏத்தமாதிரி எல்லார்கிட்டயும் பேரு நட்சத்திரம் கேட்டு வேகவேகமா அர்ச்சனை பண்றார்.



சாமி புறப்பாடு ஆனபின்னாடி சாமி கூட கொஞ்ச தூரம் போயிட்டு, பஸ், ஸ்கூட்டர், ஆட்டோன்னு ஏறி எல்லாரும் பாட்டிவீட்டுக்கு வந்துட்டாங்க. வீட்டு அய்யர் (வாத்தியார்) வந்து தயாரா இருக்கார். மாமாக்கள், மாமிகள் எல்லாரும் கச்சம் வச்சுக் கட்டிக்கிட்டு ஹோமத்துக்குத் தயார் ஆகிட்டாங்க. தசரத மகாராஜன் குழந்தைங்க வேணும்ன்னு புத்ரகாமேஷ்டி யாகம் செஞ்சாரில்லையா? அந்த மாதிரி ஒரு ஹோமம் ஒவ்வொரு வருஷமும் எங்க பாட்டிவீட்டுல செய்வாங்க. முன்னாடி எல்லாம் தாத்தாக்கள் பாட்டிகள் ஹோமத்துல உட்காருவாங்க. இப்ப ரெண்டு மூணு வருஷமா மாமாக்கள் உட்கார்றாங்க.

புதுமாப்பிள்ளைன்னு என்னை பெரியப்பா சித்தப்பாக்களோட முன்னாடி உக்கார வச்சிட்டாங்க. சாமி விஷயம்ன்னா எனக்கு சின்ன வயசுல இருந்து பிடிக்குங்கறதால நானும் முன்னாடி உக்காந்துக்கிட்டு அய்யர் சொல்ற மந்திரமெல்லாம் கவனிச்சு கேட்டுக்கிட்டு இருக்கேன்.

மணி பன்னெண்டு ஆச்சு. எல்லாருக்கும் பசிக்கத் தொடங்கியாச்சு. "ஆகட்டும் அய்யரே. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?"ன்னு பாவாக்கள் கேட்கத் தொடங்கிட்டாங்க. "இதோ ஆச்சு"ன்னு அய்யர் வேகமா மந்திரம் சொல்றாரு.

திடீர்ன்னு "பகவான் பொறந்தாச்சு. இராமர் பொறந்தாச்சு"ன்னு அய்யர் சொன்னவுடனே, ஊர் கதையெல்லாம் பேசிக்கிட்டு இருந்த சொந்தக்காரங்க எல்லாரும் ஹோமத்தைக் கவனிக்கத் தொடங்கிட்டாங்க. "இராமரைத் தூளியில போட்டு ஆட்டனும். யாரு சாமிக்கு மாமாவா இருக்க போறீங்க?"ன்னு அய்யர் கேட்டவுடனே, பெரிய மாமா " தம்பிக்கு இப்பத் தான் கல்யாணம் ஆயிருக்கு. அவனே பெருமாளை தூளியில போட்டு ஆட்டட்டும்"ன்னு சொல்லி என்னைக் கூப்புட்டாங்க. நானும் சந்தோஷமா போயி மாமா குடுத்த வேட்டியைத் தோள்ல தூளியா போட்டுக்கிட்டு வீட்டுல கும்புடற பெருமாள் விக்ரஹத்தை தூளியில வைச்சு ஆட்டத் தொடங்கினேன். "யாராவது பொண்ணுங்க பாட்டு பாடுங்க"ன்னு அய்யர் சொன்னவுடனே எல்லா பொண்ணுகளும் ஒவ்வொருத்தர் முகத்தைப் பாக்குறாங்களே ஒழிய யாரும் பாடலை. கொஞ்ச நேரம் தயங்கிட்டு நான் பாட்டுப் பாடத் தொடங்கினேன்.

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!


எல்லாரும் கவனிச்சுக் கேக்குறாங்கன்னு தெரியுது. நானும் சாவகாசமா பாட்டு பாடினேன். போதுமா இன்னும் ஒரு சரணம் பாடலாமான்னு நினைச்சுக்கிட்டே இருக்கிறப்ப அய்யர் "போதும்பா"ன்னு சொல்லிட்டார். "நல்லா இருந்துச்சுப்பா. யாரு எழுதுன பாட்டு?"ன்னு அய்யர் கேட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சி. இது குலசேகராழ்வார் பாசுரம்ன்னு அய்யருக்குக் கூட தெரியலையேன்னு. "எங்க பையனே பாட்டெல்லாம் நல்லா எழுதுவான்'னு இதுல பாட்டி வேற சொல்றாங்க. "இல்லை பாட்டி. இது நான் எழுதுனது இல்லை. குலசேகராழ்வார் பாசுரம்"ன்னு நான் சொல்ல வேண்டியிருந்தது. என்ன பண்றது? காலம் இப்படி ஆயிருச்சு.

"இப்ப பேரு வைக்கணும். என்ன பேரு வைக்கலாம்"ன்னு அய்யர் கேக்குறார். தாத்தா "ராமசந்த்ரமூர்த்தி'ன்னு சொன்னார். "அந்த பேரு ஒவ்வொரு வருஷமும் வைக்கிறது தானே தாத்தா. காகுஸ்தன்னு வைக்கலாம்"ன்னு சொல்லிட்டு நான் பெருமையா என் புதுப்பொண்டாட்டி பக்கம் பார்த்தேன். யாருக்கும் தெரியாம அவ மெதுவா தலையில அடிச்சுக்கிறா.

"இல்லைப்பா. எப்பவுமே ராமசந்த்ரமூர்த்தின்னு தான் பேரு வக்கிறது வழக்கம்"ன்னு பெரிய பெரியப்பா சொல்றார். "தெரியும் பெரியப்பா. என் மனசுல இந்த பேரு முன்னாடி வந்து நிக்குது. அதனால தான் சொல்றேன்"ன்னு சொன்னேன். 'புது மாப்பிள்ளை சொல்றான். ஆழ்வார் பாசுரம் எல்லாம் பாடறான். இவன் சொல்ற பேரு வைக்கிறதா பெரியவங்க சொல்ற பேரு வைக்கிறதா'ன்னு எல்லாரும் யோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அய்யர் "அதுவும் அவன் பேரு தான். அந்த பேரே வைக்கலாம்"ன்னு சொல்லிட்டு "தம்பீ. நீயே பேரு வைச்சுருப்பா"ன்னு சொன்னார். நான் பெருமாள் காதுல மூணு தடவை "காகுஸ்த காகுஸ்த காகுஸ்த"ன்னு சொன்னேன்.



எல்லாரும் சாப்புட போனபின்னாடி அய்யர் தனியா என்கிட்ட "காகுஸ்தன்னா என்ன அர்த்தம்பா"ன்னு கேட்டதும் இந்த பேரு என் மனசுல எதுக்கு வந்ததுங்கறதை பின்னாடி நான் கண்டுபிடிச்சதையும் நான் உங்ககிட்ட சொல்லப் போறதில்லை!

**

முந்தைய இடுகையான 'தெல்லெ மெல்லி தெகொ நாவுஸ்!' என்ற சௌராஷ்ட்ர கதையின் மொழிபெயர்ப்பு.

Monday, April 11, 2011

தெல்லெ மெல்லி தெகொ நாவுஸ்!

ஸொலொபா4ர் ஹுடெ3வேள் ர்ஹி ஒன்டே3 குதூ3ஹலம்க3னூஸ் ஸே மொன்னு. ராமநவமி மெனெதி3ஸ் ஒக்க ஒக்கொ ஒர்ஸு மொன்னு ஸொந்தோ3ஸும் து4ங்க3ரஸ். விளுக்கு தி3ன்னு ஜாரியோஸ் களனாத்தக் சொந்த3ம் மென்க்யான் ஸெங்கா3டி தி3ன்னு க3வ்ன்டுவாய்.

அவ்ர அயிங்கே4ர்தெனு ராமநவமி தெந்தூ3ஸ் ஒக்க ஒக்கொ ஒர்ஸு ஹைஸ்கூல் வெது3ர் சே2த்த ராமர் த4வ்ராம் தே3வ் நிகு3ளடன். ஹன்மந்து3 புஸிடி கோட்டை ப3ந்தி3லி ஹொல்லொ பிஸிர்ய சோ3ன் கொபு3ர் ர்ஹாய் ந்ஹா தெல்ல த4வ்ரோஸ். ஹைஸ்கூலும் சொவ்த்3யாதெங்க பூரா கலய்யிர்ஹாய். ஹைஸ்கூல் மெனெதி3 தெ3ய்டா3 பொல்ட3ம். பெட்கானு பொல்ட3ம். அன்பனடிம் ஸேத்த பெட்கினு பொல்ட3ம் ந்ஹா.



த4வ்ராக் அஸ்கிதெனு அவ்டி3ராஸ். ஹொராட் ஹொயத்தெர் நொவ்ரி ஸெங்கா3டி மீ அவர்ய முது3ல்லா ராமநவமி எல்லெ. தெகஹால்தி3 அம்க தீதெங்கொ3 சொந்த3ம் மென்க்3யான் ஜொவள் க3ம்சினி ருவ்வொ வேன் ஸே.

தே3வ் அலங்கா3ர் ஹொயி நிகு3ளத்தக் தயார்கெ3ன் ஸே. அய்யான், த4வ்ரா கெரின் அஸ்கிதெனு ஸே. ஹொயெதி கொங்கக்கீ எது3ர்ஸிலேத் ஸேத்தெ ஸோன் லக3ரஸ். ஒன்டெ3 மௌஸபோ4 அங்குன் அவ்ரானி. கொ3ம்மா ஜொமயி அவ்னாத்தக் கோனக் தே3வ் நிகு3ளடத்தே. தெகோ3 ஹால்தி3 அஸ்கிதெனு ரஹ்கிலேத் ஸே. த4வ்ராம் ஃபோன் ந்ஹீ. லெகுத்தா கொ3ம்மொ கலயத்தெனூஸ். மமான் மச்சி மச்சி ஜீ மௌஸபா4க் ஃபோன் கெத்தி அவராஸ். எல்ல மௌஸபோ4 கொப்4பி4மூஸ் இஸோஸ். ருவ்வொ பி3கு3 கெர்ல்லன். மீ அவ்நாத்தக் துமி தே3வ் நிகு3ளட்டன் யா மெனி ஒன்ட3 ஹட்வன். தெ3ஸ்ஸு கெ3ண்டொ ஹொயத்தெர் ஹல்லு தெல்ல மௌஸபோ4 அவ்டியா. "காய் மௌளெ? துரவுச்சி இக்க கெ3டி ரஹ்க்க2த்தெ? அம்கொ3 பூரா துஸுர காம் ந்ஹியா?" மெனி மொட3 மௌஸபா4ன் பூரா ஹஸிலேத் கெ3டி பொ3வராஸ். "வெகோ3 ப4வா. தெ3ஸ்ஸு கெ4ண்டோ4 ந்ஹா ஹோரெஸ்" மெனி அவெ மௌஸபோ4 ஹஸிலேத் ஜெவாவ் ஸங்க3ராஸ். 'அமி பூரா அவ்ர பெ4ய்லல்னுக் த4க்கிலி சுரும் அவ்டியா. ஸொஸுரானுக் ரஹ்க்க2டத்தக் யெனோதீ3 ஸேனா' மெனி துஸுர மௌஸான் மொன்னும் மெல்லர்ய சொக்கட் களாரஸ்.

"வெகோ3 அய்யானு. வெகோ3 வெகோ3. அஸ்கிதெ3னு அவ்டி3ரியோ. தே3வ் நிகி3ளடெங்கோ' மெனி அய்ங்கெர்போ4 அவ்ஸர் பொட3ராஸ். அய்யான் மெள்ளி தெங்க3 அவ்சருக் தயதா3னுக் அஸ்கிதெங்கொ3 ஜொவள் நாவ் நெட்சத்துரு புஸி பி3ஸ்ஸொ அர்ச்சனொ கெரராஸ்.



தே3வ் நிகி3ளத்தெர் தே3வ் ஸெங்காடி ருவ்வ து3தூ3ர் ஜேடிகி3ன் பஸ்ஸுமு ஸ்கூட்டருமூ ஆட்டோம் மெனி அஸ்கிதெனு அய்ங்கே4ர் அவ்டியா. கொ3ம்மா அய்யொ அவி தயார்கொ3ன் ஸே. மமான் மமின் ஸெங்கா2டி கஸ்ட தயி பி2ல்லி ஹோமுக் தயார் கெல்யாஸ். த3சரத மஹரஜோ பிள்ளல்னு பஜெ மெனி புத்ரகாமேஷ்டி யாகு3 கெரயோ ந்ஹ்யா? த்யெ மாதிரி ஒன்டே ஹோம் ஒக்கொக்கொ ஒர்ஸு அவ்ர அயிங்கே4ர் கெரன். முந்த3டி3ம் அயிங்கெ4ர் பா4ன் அயிங்கெ3ர் அம்பா3ன் ஹோமுக் பி3ஸன். அத்தொ ஒண்டெ3 தி3ஸின் ஒர்ஸு தோன் மமான் பி3ஸர்யோ.

நொவொ நொவ்ரொ மெனி மொகொ4 மௌஸான் ஸெங்கா4டி சொம்மலொ பிஸட்யா. தே3வ் தெ4ரும் மெனத் மொகொ3 ந:ன்ன ஒர்ஸும் ர்ஹி ஒப்பாய் ஹால்தி மீ மெல்லி சொம்மலோ பிஸி அய்யான் சங்க3ர்ய மொந்துர்னு அஸ்கி க3ம்சி அய்கிலேத் ஸே.

கெ4ண்டோ பா3ரெ ஹொய்யொ. அஸ்கிதெங்கோ பூ3க் கெர மொல்லிட்யொ. "வெகொ3 அய்யானு அங்கு3ன் இக்கொ கெ4டி ஹோய்?" மெனி ப3வான் புஸ மொல்ட்யா. "யெலா ஹொய்யோ" மென்தி3 அய்யான் பி3ஸ்ஸோ மொந்துர் சங்க3ராஸ்.

திடீ3ர் கெரி "பக3வான் ஹுஜிலிட்ர்யோ. ராமர் ஹிஜிலிட்ர்யோ" மெனி அய்யான் ஸங்கு3னாத்திக்காம் கா3மு கெ2னின் அஸ்கி வத்தெ கெல்லேத் ஹொதெ3 சொந்த3ம் மென்க்3யான் அஸ்கி ஹோமுக் கம்ச்ச மொல்டியா. "ராமருக் பல்லாம் க3லி ஹிந்த3ல்னோ ஹோர்ய. கோன் தே3வுக் மமோ கோன் ரா:ன் ஜார்யோ" மெனி அய்யான் புஸுனாத்திக்காம், மொ:ட்டொ மமோ "ப3பு3க் அத்தோஸ் ஹொராட் ஹொய்ர்யோ. தெனோஸ் பெருமாளுக் பல்லாம் க3லி ஹிந்த3லந்தொக்" மெனி மொகொ3 பொ3வ்த்3யா. மீ மெல்லி ஸொந்தோ3ஷ்க3ன் ஜீ மமோ தி3யெ வேட் கா2ந்துர் பல்லக3ன் தய்லி கொ4ம்மொ பாய்ம்பொடர்யோ பெருமாள் விக்ரஹம் பல்லாம் தொ2வி ஹிந்த3லத்தக் நிகி3லெஸ். "கோன்ந்தி3 அம்மான் கீ3த் க3வோ" மெனி அய்யான் மென்னாதிக்காம் அம்மான் அஸ்கி ஓக்கு ஓக்கு தோன் ஸாராஸ் ஜதோ3 கொன்னி கீ3த் க3வரானி. ரொவ்வ கெ3டி பஸ்தொக்கிதி3 மீ கீ3த் க3வத்தெக் நிகி3லெஸ்.

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!


அஸ்கி தெனு க3ம்சி அய்கராஸ் மெனி களாரஸ். மீ மெல்லி ஸவ்கா3ஸ்கென் கீ3த் க3வெஸ். பி2ஜ்ஜாய்கி அங்குன் ஒன்டெ சரணம் க3வெங்கோ3 மெனி மெல்லெத் ர:தோ அய்யானு "பி2ஜ்ஜாய் பா3" மென்ந்த்யா. "சொக்கட் ஹொதெஸ் பா3. கோன் லிக்கெ கீ3த்?" மெனி அய்யான் புஸ்யாஸ். மொகொ3 ஒன்டே3 அதி3ர்ச்சி. எல்லே குலசேகராழ்வார் பாஸுரம் மெனி அய்யானுக் மெல்லி களாரனினா மெனி. "அவ்ர ப3பூ3ஸ் கீ3துன் அஸ்கி சொக்கட் லிக்கெய்" மெனி எமாம் அய்ங்கெ4ரம்போ4 வேற ஸங்க3ராஸ். “ந்ஹீ அங்கெ4ர் அம்பா4. எல்லெ மீ லிக்கெயொ ந்ஹா. குலசேகராழ்வார் பாசுரம்" மெனி மீ சங்குனொ ஹொயெஸ். காய் கெரத்தெ. கலம் இஸொ ஹொய்யோ.

"அத்தொ நாவ் க3ல்னோ. காய் நாவ் தொவெங்கோ3" மெனி அய்யான் புஸராஸ். அய்ங்கெர் போ4 'ராமசந்த்ர மூர்த்தி' மெனாஸ். "த்யெ நாவ் ஒக்கொக்கொ ஒர்ஸு தொவர்யோ ந்ஹா அங்கெர்பா4. காகு3ஸ்தன் மெனி தொவெங்கெ3ன்" மெனி சங்கி3தி மீ பெருமைக3ன் மொர நொவ்ரி பொக்கட் ஸியெஸ். கொங்கிக் களனாத்தக் தெனொ ஹல்லு தொ3ஸ்கர் ஹல்லரிஸ்.

“ந்ஹீ பா4. கொப்3பி3மூ ராமசந்த்ர மூர்த்தி மெனிஸ் நாவ் தொவத்தெ வட்க" மெனி மொ:ட்டொ மௌஸொ ஸங்க்யாஸ். "களாய் மௌஸபா4. மொர மொன்னும் எல்லெ நாவ் சொம்மலொ அவி ஹிப்4பி4ரஸ். தெகொ3 ஹால்தீ3ஸ் ஸங்க3ர்யோ" மெனெஸ். 'நொவொ நொவ்ரோ ஸங்க3ரஸ். ஆழ்வார் பாசுரம் பூரா க3வரஸ். யென ஸங்கெ3 நாவ் தொவத்தெ கீ3 மொட்டான் ஸங்கெ நாவ் தொவத்தே' மெனி அஸ்கிதெனு யோசன கெல்லேத் ஸே. அய்யான் “தெல்லெ மெல்லி தெகொ நாவுஸ்" மென்தி3 “தெல்ல நாவுஸ் தொவங்கோ3" மெனி மென்தி3 "ப3பூ3. தூஸ் நாவ் தோவ் பா5" மெனாஸ். மீ பெருமாள் கானும் தீன் வாள் “காகு3ஸ்த காகு3ஸ்த காகு3ஸ்த” மெனி மெனெஸ்.




அஸ்கிதெனு கா2த்தக் ஜியெத்தெர் அய்யான் தனிகொ3ன் மொர ஜொவள் “காகு3ஸ்தன் மெனத் காய் அர்த்து பா4" மெனி புஸெய கி3ன் எல்ல நாவ் மொர மொன்னும் க3க3 அவயே மெனி பல்ஸாதுக் மீ தெ3க்கி தெ3ரய தி3ய்யோ மீ துரொ ஜொவள் ஸங்கு3னி!

Saturday, April 09, 2011

Murugalaya pattu Salem



முருகாலயாவின் இந்த விளம்பரத்தில் மூன்று மொழிகள் வருகின்றன. எந்த மொழிகள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்! :-)