Tuesday, August 19, 2008

*நட்சத்திரம்* - நான் தோமா கிறித்தவன் ஆகப் போகிறேன்!!!

எத்தனை பேர் என் அறிவுக்கண்ணைத் திறந்து வைத்த இந்த அற்புதமான ஆய்வினைப் பற்றி படித்தீர்களோ தெரியாது. நட்சத்திர இடுகையாக இதனை இட்டால் இன்னும் நிறைய பேரின் அறிவுக்கண்ணைத் திறக்குமே என்று இங்கே இடுகிறேன்.

மூன்று விதமான 'முழுமுதல் உண்மை'யைப் பற்றி நான் சொல்ல விரும்புகிறேன்.

முதல் வகை முழுமுதல் உண்மை:

வேத உபநிடத பிரம்மசூத்திர கீதைகளிலேயே உலகத்தின் எல்லா அறிவும் அடங்கியிருக்கிறது. வேறு எந்த மொழியிலும் மதத்திலும் இருக்கும் எல்லா அறிவிற்கும் அடிப்படை இந்த நூற்களில் தான் இருக்கிறது. இப்படி ஒரு 'உண்மை' மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதைப் படித்திருக்கிறேன்.

இரண்டாம் வகை முழுமுதல் உண்மை:

உலகத்தில் இருக்கும் தீமைகளுக்கெல்லாம் காரணம் வடமொழி நூற்கள் தான்; எல்லா தீமைகளும் ஆரியர்களிடமிருந்தே வந்தன. உலகத்தில் இருக்கும் எல்லா நல்லவைகளுக்கும் காரணம் தமிழ் நூற்கள் தான்; எல்லா நல்லவைகளுக்கும் அடிப்படை திராவிடர்கள் தான். இப்படி ஒரு 'உண்மை'யும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதைப் படித்திருக்கிறேன்.

இரண்டையும் மிஞ்சும் விதமாக 'உண்மையிலும் உண்மையாக' ஒரு 'உண்மை'யை அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவில் படித்தேன். அவர் எழுதியதை அவருடைய பதிவிற்கே சென்று படிப்பது தான் சரி என்பதால் அந்த நீண்ட கட்டுரைக்கு சுட்டியை மட்டும் இங்கே தருகிறேன். அதனைப் படித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் - நான் தோமா கிறித்தவனாக மாறிவிடவா? அப்படி மாறும் போது நீங்களும் என்னுடன் சேர்ந்து தோமா கிறித்தவனாக மாறிவிடுகிறீர்களா?

இந்த மூன்று விதமான 'முழுமுதல் உண்மை'களில் எந்த உண்மையை நீங்கள் 'மனதார நம்புகிறீர்கள்' என்பதை உங்களிடமே கேட்டுப் பாருங்கள். :-)

51 comments:

Thangamani said...

குமரன்

இது ஒன்றும் புதிய முயற்சி அல்லவே! ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு பெருவெற்றி அடைந்த முயற்சியின் இன்னொரு வடிவம் தாம் அனைத்து வகையான இறையியல் கருத்துக்களும் கிறிஸ்த்துவத்தின் பாதிப்பால் வந்தன என்பதும். இதை வரலாறாக தோற்றமளிக்க உண்மையான மனிதர்கள் வேண்டுமல்லவா? அதற்காகவே தாமஸ்.

பழைய, வெற்றி அடைந்த முயற்சியினை எடுத்துக்கொண்டால், தமிழின் எல்லா சிந்தனைகளும், தத்துவம், மருத்துவம், கட்டிட, சிற்பக்கலை எல்லாம் வடமொழியில் இருந்தே வந்தது, ஏன் தமிழ் மொழியே வடமொழியில் இருந்தே வந்தது என்ற கருத்து கடைவிரிக்கப்பட்டு, ஊர் பெயர்கள், கடவுள் பெயர்கள், இடத்தின் பெயர்கள் எல்லாம் வெ(ற்)றிகரமாக நிறுவப்படவில்லையா? பாரதியாரே ஒரு வங்காளி தமிழே சமஸ்கிருதத்தின் வழிவந்ததுதான் எனச் சொல்லக்கேட்டு கொதித்துபோய் தனித்தமிழில் பட்டு எழுதவில்லையா? தமிழர்களுக்கு என்று சொந்தமாக மொழி மட்டுமல்ல எழுத்துவடிவம் கூட இல்லையே? அப்படித்தானே நிறுவப்பட்டிருக்கிறது. இன்றளவும் ஆரியத்தில் இருந்து தானே அரிசி என்ற சொல்லே வந்தது என்று மதன் போன்ற அறிஞர்கள் (இந்தவார விகடன்) நிறுவுகிறார்கள். ஏன் சில வருடங்கள் முன்புவரை சதிராட்டமாய் இருந்து பரதநாட்டியமான நடனம், திடிரென்று பரதமுனிவரால் தான் உருவாக்கப்பட்டது என்று பரதமுனிக்கு பத்மா சுப்ரமணியம் தமிழகத்தின் தலைநகரிலேயே கோவில் கட்டவில்லையா? யாராவது பரதமுனிதான் இந்த நாட்டியத்தை உருவாகினாரா என்று கேள்வி கேட்டோமா?

ராமர் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலமே கண்ணுக்குத் தெரிந்து அது நாட்டையும், கோர்ட்டையும் உலுக்கும் போது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தாமஸ் வந்ததா அதிசயம்? இராமர் பிறந்து தொப்புள் கொடி அறுத்துப்போட்ட இடமே அடையளம் கண்டு பிடிக்கப்படுகையில் தேடிப்பார்த்தால் தாமஸ் நடந்து வந்த காலடித்தடங்களை கண்டுபிடிக்கமுடியாதா? குறைந்த பட்சம் அவரது காலடிகளை! நாசா புகைப்படம் எடுத்த பாலம் போல, நாசா கர்பன் டேடிங்க் செய்து காலடியின் காலத்தைச் சொல்ல முடியாதா?

திடிரென்று 61 ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் தவிர, சமணர்கள், பெளத்தர்கள், பழங்குடிகள் உள்ளிட்ட அணைவரும் இந்துக்களாக அறிவிக்கப்பட்டது போல ஒரு அமெரிக்க ஆட்சி வந்து தமிழர்கள் தோமா வழி கிறிஸ்துவர்கள்தான் என்றால் நாம் என்ன செய்வோம்? அப்போதும் பாடுவதற்கும், புகழ்வதற்கும், சண்டையிடுவதற்கும் ஏதாவது இருக்கும். கவலை வேண்டாம்.

குமரன் (Kumaran) said...

தங்கமணி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள். 'முதல் வகை முழுமுதல் உண்மை'யினால் விளைந்த விளைவுகளைப பற்றி விலாவாரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். 'இரண்டாம் வகை முழுமுதல் உண்மை'யைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது தான் நீங்கள் 'நம்புவதா'? அன்றி அதனால் விளைந்த விளைவுகளையும் பட்டியல் இட இயலுமா?

எனக்கு இந்த மூன்று விதமான 'முழுமுதல் உண்மை'களிலும் நம்பிக்கை இல்லை. இதனை நீங்கள் என் இடுகைகளை அவ்வப்போது படித்திருந்தாலே தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். :-)

ambi said...

கொத்தனார் காமடி ட்ரை பண்ண சொன்னார்.

அதுக்காக இப்படியா? :)))

ஜோ/Joe said...

//எனக்கு இந்த மூன்று விதமான 'முழுமுதல் உண்மை'களிலும் நம்பிக்கை இல்லை.//

அப்படியென்றால் நீங்கள் ஏன் தோமா கிறிஸ்தவனாக ஆக வேண்டும்?

தருமி said...

//உலகத்தில் இருக்கும் எல்லா நல்லவைகளுக்கும் காரணம் தமிழ் நூற்கள் தான்; எல்லா நல்லவைகளுக்கும் அடிப்படை திராவிடர்கள் தான். இப்படி ஒரு 'உண்மை'யும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதைப் படித்திருக்கிறேன். //

குமரன்,
கொஞ்சம் சொல்லுங்களேன் எங்கே படித்தீர்கள் என்று. நானும் படித்துப் பார்த்துக் கொள்கிறேனே!

Thangamani said...

// 'இரண்டாம் வகை முழுமுதல் உண்மை'யைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது தான் நீங்கள் 'நம்புவதா'? அன்றி அதனால் விளைந்த விளைவுகளையும் பட்டியல் இட இயலுமா? //

எல்லா ஆக்கிரமிப்பும் ஒரே விதமான உத்தியைத்தான் கையாளுகின்றன. அவ்வளவுதான் என் கருத்து. இதில் ஒன்றை உவந்து ஏற்பதும் மற்றொன்றைக் கண்டு பீதியடைவதும் அவரவர் அரசியல் அதனால் விளையக்கூடிய சுயநலன். இது உங்களை முன்வைத்துச் சொல்லவில்லை. உங்களது ஆன்மீகப் பார்வை/ புரிந்துணர்வு இவைகளை நான் வாசித்த அளவில் அப்படியான புரிதலையே எனக்குத் தருகிறது. ஆனால் ஜெ.மோவின் கட்டுரையால் பீதியடைந்து ஒரு கண்ணைத் திறந்தவர்களைப் பற்றியே எனது குறிப்பு. :)

பட்டியல் கேட்டால்..
இரண்டாவது 'உண்மையால்'(கிறிஸ்துவத்தால்-தோமா கிறிஸ்த்துவ கதையாடலால் அல்ல), வந்த நல்லவையாக எல்லோருக்கும் கல்வி (இறையியல் சிந்தனை கிறிஸ்த்துவத்தால் வந்தது என்று சொல்வதற்குப் பதிலாக எல்லோருக்கும் பொதுவான கல்வி என்பதே இந்திய மரபுக்கு எதிரான கிறிஸ்த்துவ சிந்தனைதான் என்பதைச் சொன்னால் கூட உண்மையாய் இருக்கும்), எல்லோருக்கும் மருத்துவம், சில இடங்களில் சமத்துவம் போன்றவற்றைச் சொல்லலாம். பேரிழப்பாக பன்மைத்தன்மை இழப்பு, பக்தியைத் தவிர அனைத்துவகை ஆன்மீக வழிகளையும் இழத்தல் இவைகளைச் சொல்லலாம்.

நன்றி!

குமரன் (Kumaran) said...

தங்கமணி,

//இது ஒன்றும் புதிய முயற்சி அல்லவே!//

இது புதிய முயற்சி இல்லை; ஏற்கனவே ஒரு முறை இன்னொரு கூட்டத்தாரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டதொன்று என்பதால் இன்னொரு குழுவினரால் வரலாறு முழுக்க முழுக்க மாற்றி எழுதப்பட்டால் அதில் ஒன்றும் தவறில்லை என்று நீங்கள் கருதுவதாக நான் நம்பவில்லை. ஆனால் ஒரு சாராரால் ஏற்பட்ட தீய விளைவுகள் என்னலாம்படியானவற்றை 'மட்டுமே' பட்டியலிடுவதும் மற்றொரு சாராரால் ஏற்பட்ட நல்ல விளைவுகள் என்னலாம்படியானவற்றை 'மட்டுமே' பட்டியலிடுவதும் எனக்கு ஒரு வகை அரசியலைத் தான் காட்டுகின்றது. அது தவறான புரிதலாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

உண்மையாக வாழ்ந்த மனிதர் தாமஸ் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஏனெனில் ஏசுநாதரும் உண்மையாக வாழ்ந்தவர் என்று நானும் நம்புகிறேன். ஆனால் அவர் இந்தியாவிற்கு வந்திருந்தார் என்பதிலும் அப்படியே வந்திருந்தாலும் அவரது தாக்கம் இந்திய சிந்தனையில் இருந்தது என்பதையும் நம்ப முடியவில்லை.

என் நம்பிக்கைக்கு எதிரான சில எண்ணங்களையும் சொல்ல முடியும். இவை என் மனத்தில் நானே நிகழ்த்திக் கொள்ளும் சில விவாதங்கள்.

ஏசுநாதர் கூட சிலுவையில் மரணம் அடையவில்லை; திபெத்திலோ காஷ்மீரத்திலோ தான் மரணம் அடைந்தார் என்றொரு நம்பிக்கையும் அதற்குரிய தரவுகளும் காட்டப்படுகின்றனவே. அதே போல் தாமஸிற்கும் நிகழ்ந்திருக்கக் கூடாதா? அவர் இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடாதா?

புத்தரின், மகாவீரரின், ஆதிசங்கரரின் தாக்கத்தை நாம் இந்தியத் தத்துவங்களில் எல்லாம் பார்க்கிறோம். அப்படி தனிமனிதர்களின் தாக்கம் இன்று வரை தொடர்ந்து வரும்படி அமையும் போது தாமஸ் இந்தியாவிற்கு வந்து அவரது தாக்கம் இந்தியத் தத்துவங்களில் ஏற்பட்டது என்று சொன்னால் அதில் ஏற்பதில் என்ன தயக்கம்?

இப்போது இவற்றிற்கு மறுப்பாக ஒரு சிந்தனை: சரி. அவர் இந்தியாவிற்கு வந்திருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். புத்தர், மகாவீரர், சங்கரர் போன்றவர்கள் ஒரு பெரும் குழுவிற்கு அடிப்படையான சிந்தனைகளை வைத்துச் சென்றார்கள். சங்கம் வைத்து அந்தத் தத்துவங்கள் பரப்பப்பட்டன. அதற்கு மறுக்க இயலாத தரவுகள் இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் இருக்கின்றன. அப்படிப்பட்ட தரவுகள் தாமஸ் வரவைப் பற்றியும் அவரது தத்துவக் குழுக்களைப் பற்றியும் உள்ளதா?

இப்படி மாற்றி மாற்றிக் கேள்விகளை என் மனம் கேட்கிறது. இப்போதைக்கு மூன்றாவது 'முழுமுதல் உண்மை' என்று என்னால் கிண்டல் செய்யப்படும் வரலாற்று ஆய்வுகள் ஒத்துக்கொள்ளும் படியாக இல்லை. நாளை இன்னும் சில தரவுகள் கண்ட பின்னர் இதன் பகுதியை ஏற்றுக் கொண்டு மீதியை மறுக்கலாம்.

குமரன் (Kumaran) said...

இதுவரை மூவரே இந்த இடுகையில் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். ஒருவர் கத்தோலிக்கக் கிருத்தவர். இன்னொருவர் கிருத்தவராகப் பிறந்து இறை மறுப்புக் கொள்கை கொண்டவர். இன்னொருவரைப் பற்றிய புரிதல் இதுவரை 'அவர் இறை மறுப்புக் கொள்கை உடையவர்' என்பதாகவே இருந்தது; ஆனால் அவர் இட்டிருக்கும் இரு பின்னூட்டங்களால் 'அவர் கிறிஸ்தவ சார்புடையவரோ' என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதனால் இந்த டிஸ்கி.

என்னுடைய எண்ணங்களைத் தொடர்ந்து படித்தவர்களுக்கு என்ன விதமான எண்ணம் தோன்றியிருக்கும் என்பது தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். அது இயற்கை. ஆனால் இது வரை நான் கிறிஸ்தவத்திற்கு எதிரானவன் என்ற தோற்றத்தைத் தரவில்லை என்றே நம்புகிறேன். இப்போதும் கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் இடுகை இல்லை இது. அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்தால் என்னை மன்னிக்கவும்.

நான் பட்டியலிட்ட மூன்றுமே அவ்வவற்றின் ஆதரவாளர்களுக்கு முழுக்க முழுக்க உண்மைகளாகவே இருக்கின்றன. என்னால் அவற்றை முழுமுதல் உண்மைகளாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் சொல்லுவதில் முக்கியக் கருத்தையே அந்தக் கருத்தாக்கங்களின் எடுத்துக்காட்டாக இங்கே தந்திருக்கிறேன். ஆனால் அந்தக் கருத்தாக்கங்களில் பகுதிகள் உண்மை என்பதில் ஏற்புதல் உண்டு. அந்தப் பகுதிகளைக் கொண்டு முழுக்கருத்தாக்கமே உண்மை என்று அந்த ஆதரவாளர்கள் நம்புகிறார்கள் என்ற எண்ணத்தையே இந்த இடுகையில் சொல்லியிருக்கிறேன்.

எவருடைய மனமாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

குமரன் (Kumaran) said...

ஓ, அம்பியும் பின்னூட்டம் இட்டிருக்கிறாரா? அப்ப சரி. கவனிக்காம விட்டிருக்கிறேன். ஆனாலும் என் பயம் இன்னும் குறையவில்லை.

அம்பி, கொத்ஸ் சொன்னதற்காக முயன்ற நகைச்சுவை இல்லை இது. அவர் சொன்ன நகைச்சுவைக்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. பாலாஜி எழுதும் நகைச்சுவைகள் சில எடுத்துக்காட்டுகள். என் எழுத்துகள் இல்லை. :-)

suvanappiriyan said...

திரு ஜெயமோகனின் பதிவையும் உங்களின் பதிவையும் தங்கமணியின் பின்னூட்டத்தையும் பார்த்தேன். இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இந்த சர்ச்சை இருந்த வண்ணமே உள்ளது. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்ற டார்வினின் தத்துவத்தை இன்று வரை அறிவியல் துணை கொண்டு நிரூபிக்க முடியவில்லை. உலக மக்கள் அனைவரும் ஒரு தாயிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்பதை தற்போதய ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. அந்த ஒரு தாய்க்கு வந்த வேதம் காலப்போக்கில் மனிதர்களால் சிதைக்கப்பட்டு தனக்கு சாதகமானதை மட்டும் வேதத்திலிருந்து எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு வளர ஆரம்பித்தது. இவ்வாராக புலம் பெயர்ந்த மனித இனம் பல குழுக்களாகவும் பல மதங்களாகவும் பிரிய ஆரம்பித்தது. அவையே நாளடைவில் இந்து இஸ்லாம் கிறித்தவம் என்று உலகில் இன்னும் பல மதங்களும் மார்க்கங்களும் தோன்ற காரணமாயின. எனவேதான் உலக மதங்கள் அனைத்தின் வேதங்களையும் ஆராய்ந்தீர்கள் என்றால் அனைத்துக்கும் அடிப்படை ஒன்றாகவே இருக்கும். இந்த ஒற்றுமையைப் பார்த்து ஒரு சிலர் என் மதத்தின் கருத்தை ஒட்டியே உங்கள் மதமும் உள்ளது என்று பெருமைபட்டுக் கொள்வார்கள். அது போன்ற ஒன்றுதான் திரு ஜெயமோகனின் பதிவும்.

ஜோ/Joe said...

//நான் பட்டியலிட்ட மூன்றுமே அவ்வவற்றின் ஆதரவாளர்களுக்கு முழுக்க முழுக்க உண்மைகளாகவே இருக்கின்றன//

நீங்கள் கத்தோலிக்கத்தின் ஆதரவாளனைச் சொல்லுகிறீர்களா அல்லது 'தோமா கிறித்துவம்' என்ற அடைமொழிக்குள் சொல்லப்பட்டுள்ளவற்றை சொல்கிறீர்களா தெரியவில்லை . கத்தோலிக்கத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் 'தோமா கிறித்தவம்' என்ற புனையப்பட்ட கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் என்று நினைப்பது வெறும் அனுமானம் மட்டுமல்ல ,உண்மைக்கு புறம்பானதும் கூட.

ஒரு வாதத்துக்கு என்னை கத்தோலிக்க ஆதரவாளனாக எடுத்துகொண்டாலும் ,கண்டிப்பாக இந்த தோமா கிறித்துவம் என்பதன் கீழ் சொல்லப்பட்டுள்ள கரூத்துக்களை என்னால் ஏற்க முடியாது .

இன்னும் சொல்லப்போனால் தமிழ் கத்தோலிக்கரிடையே தோமாவை முன்னிறுத்தி பெரிதாக எதுவும் செய்ய முடியும் என தோன்றவில்லை ..கேராளாவில் தான் தோமையாருக்கு முக்கீயத்துவம் இருக்கிறது .அதிகமாக 'தாமஸ்' என்னும் பெயரை அங்கு காணலாம் ..தமிழக கத்தோலிக்கரிடையே அந்த பெயர் அந்தோனி ,சேவீயர் போல அதிகமாக வைக்கப்படுவதில்லை .இன்னும் சொல்லப்போனால் தோமையார் பற்றி ஒரு எதிர்மறை பிம்பமே கத்தோலிக்கரிடையே உள்ளது . இயேசு உயிர்த்தெழுந்து ,ஒரு அறையில் கூடியிருந்த சீடர்களிடையே தோன்றிய போது அனைவரும் அது யேசு தான் என விசுவசிக்க ,தோமையார் நம்பவில்லை ..இயேசுவின் காயங்களை தொட்டுப் பார்த்தால் தான் நம்புவேன் என்று சொல்ல ,இயேசுவும் அவரை தொடச்சொன்னார் .தொட்ட பிறகே அவர் நம்பினார் .எனவே விசுவாசக் குறைவின் அடையாளமாகவே வெகுஜன கத்தோலிக்கர்கள் அவரை பார்க்கிறார்கள் ..எங்கள் ஊரில் நாம் சொல்லுவதை ஒருவர் நம்பாவிடில் 'போடா விசுவாசம் கெட்ட தொம்ம' என்று சொல்வது சாதாரண வழக்கம் .

ஜோ/Joe said...

//இப்போதும் கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கும் இடுகை இல்லை இது. அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்தால் என்னை மன்னிக்கவும்//

கிறிஸ்தவ நம்பிக்கைகளை கேள்வி கேட்பது ஒன்றும் தவறில்லையே .அதற்காக மன்னிப்பு கேட்பதும் தேவையற்றது .ஆனால் ஏதோ மூன்று வழிமுறைகளை சொல்லி அதில் எதிலுமே நம்பிக்கையில்லை என் உள்ளே சொல்லும் நீங்கள் ,தலைப்பு வைத்திருக்கும் முறையில் முரண்படுகிறது .பரபரப்புக்காக தலைப்பு வைப்பவராக உங்களை நான் இதுவரை அறிந்ததில்லை.

Kavinaya said...

ஒண்ணும் புரியல. அந்த இடுகையையும் இன்னும் படிக்கல. மெதுவா வரேன்!

? said...

//உண்மையாக வாழ்ந்த மனிதர் தாமஸ் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஏனெனில் ஏசுநாதரும் உண்மையாக வாழ்ந்தவர் என்று நானும் நம்புகிறேன். //

Zeitgeist என்ற விவரணபடம் கண்டிருக்கின்றீரா?

பார்க்காதவர் கூகிள் வீடியோவில் பார்க்கலாம்.(நன்றி:pkp.blogspot)

கிறிஸ்துவ சிந்தனைகள்தாம் இந்துமத அடிப்படை என தமிழக கிறித்துவர் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் ஏசுவின் வாழ்க்கை கதை கிருஷ்னரின் வாழ்க்கை கதையிலிருந்து சுடப்பட்டது எனும் கருத்து மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களிடம் உண்டு. இவ்விவரணப் படம் எகிப்திய கிரேக்க மற்றும் பல பேகன் மத புராணங்களிலிருந்து கட்டப்பட்டதுதான் ஏசுவின் வாழ்க்கை கதை என்கிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கொத்தனார் காமடி ட்ரை பண்ண சொன்னார்.
அதுக்காக இப்படியா? :)))//

அம்பி அவர்களே
நீங்க குமரனைச் சொல்றீங்களா?
இல்லை திரு. ஜெயமோகனைச் சொல்றீங்களா? :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தமிழக கத்தோலிக்கரிடையே அந்த பெயர் அந்தோனி ,சேவீயர் போல அதிகமாக வைக்கப்படுவதில்லை//

உண்மை தான் ஜோ அண்ணா!
அடியேன் தொன் போஸ்கோ பள்ளி வாசத்தில் இது பற்றி புனிதத் தந்தையர்களிடம் பல முறை விவாதித்ததுண்டு!

சென்னையில் கூட தோமையர் ஆலயங்கள் மிகவும் கம்மி தான்!
தோமையர் மலை, தோமையர் தேவாலயம்...இன்னும் சில! அம்புட்டு தான்!

//இன்னும் சொல்லப்போனால் தோமையார் பற்றி ஒரு எதிர்மறை பிம்பமே கத்தோலிக்கரிடையே உள்ளது....
.....
.....தொட்ட பிறகே அவர் நம்பினார் .எனவே விசுவாசக் குறைவின் அடையாளமாகவே வெகுஜன கத்தோலிக்கர்கள் அவரை பார்க்கிறார்கள்//

உம்....
தமிழர்கள், உலகின் மற்ற இனத்தினர் போலவே, பல பண்பாட்டுக் கலப்புக்கு உட்பட்டாலும்...
அவர்களுக்கென்று உள்ள அடிப்படைக் குணமான காருண்யம், பெருங்கருணை, விசுவாசம், முழுமையான பற்றுதல், அதை விட்டாரில்லை! அதை ஒட்டியே தன் நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டார்கள் போலும்!

தமிழர் என்றோர் இனம் உண்டு!
"தனியே" அவர்க்கு ஒரு குணம் உண்டு!

குமரன் (Kumaran) said...

//தமிழின் எல்லா சிந்தனைகளும், தத்துவம், மருத்துவம், கட்டிட, சிற்பக்கலை எல்லாம் வடமொழியில் இருந்தே வந்தது, ஏன் தமிழ் மொழியே வடமொழியில் இருந்தே வந்தது என்ற கருத்து கடைவிரிக்கப்பட்டு, ஊர் பெயர்கள், கடவுள் பெயர்கள், இடத்தின் பெயர்கள் எல்லாம் வெ(ற்)றிகரமாக நிறுவப்படவில்லையா?//

இது தெரியும். இதனை இடுகையில் முதல் வகை 'முழுமுதல் உண்மை' என்று கிண்டலடித்திருக்கிறேன்.

//பாரதியாரே ஒரு வங்காளி தமிழே சமஸ்கிருதத்தின் வழிவந்ததுதான் எனச் சொல்லக்கேட்டு கொதித்துபோய் தனித்தமிழில் பட்டு எழுதவில்லையா? //

இது எனக்குத் தெரியாது. எந்தப் பாடல் அது தங்கமணி?

//தமிழர்களுக்கு என்று சொந்தமாக மொழி மட்டுமல்ல எழுத்துவடிவம் கூட இல்லையே?//

அட இதென்ன புதுக்கதை. பிராமி எழுத்துகளில் இருந்து தான் தமிழ் பிராமி எழுந்தது; தமிழ் பிராமியிலிருந்து பிராமி இல்லை - என்றொரு கருத்து இருக்கிறதே. அதைச் சொல்கிறீர்களா? இது வரை படித்த அளவில் தமிழ் பிராமியே பழமையானது என்று தோன்றுகிறது. அதை உறுதியாகச் சொல்லும் அளவிற்கு அந்தத் துறையில் பயிற்சி இல்லை.

குமரன் (Kumaran) said...

//இன்றளவும் ஆரியத்தில் இருந்து தானே அரிசி என்ற சொல்லே வந்தது என்று மதன் போன்ற அறிஞர்கள் (இந்தவார விகடன்) நிறுவுகிறார்கள். //

இது சிரிப்போ சிரிப்பு. இன்னும் முகம், மீன் போன்ற இன்னொரு பட்டியலும் உண்டு தானே. :-) மூன்று சொல்லை வைத்து நிறுவிவிட்டால் முழு மொழியே ஆரியத்தில் இருந்து வந்தது தான் என்று நிறுவிவிடலாமே என்ற நப்பாசை தான். :-)

சதிராட்டமாய் இருந்தது பரத நாட்டியமாக மாறி இப்போது மரியாதை மிக்கக் கலையாக மாறியிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அது எப்படி பரத நாட்டியம் பரத முனிவரால் ஏற்படுத்தப்படவில்லை (குறைந்தது இலக்கணம் வகுக்கப்படவில்லை) என்று ஆகும்? விளக்கமாகச் சொல்ல நேரம் இருப்பின் சொல்லுங்கள் தங்கமணி. தெரிந்து கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

//ராமர் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலமே கண்ணுக்குத் தெரிந்து அது நாட்டையும், கோர்ட்டையும் உலுக்கும் போது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தாமஸ் வந்ததா அதிசயம்? இராமர் பிறந்து தொப்புள் கொடி அறுத்துப்போட்ட இடமே அடையளம் கண்டு பிடிக்கப்படுகையில் தேடிப்பார்த்தால் தாமஸ் நடந்து வந்த காலடித்தடங்களை கண்டுபிடிக்கமுடியாதா? குறைந்த பட்சம் அவரது காலடிகளை! நாசா புகைப்படம் எடுத்த பாலம் போல, நாசா கர்பன் டேடிங்க் செய்து காலடியின் காலத்தைச் சொல்ல முடியாதா?//

அருமையா சொன்னீங்க. :-)

குமரன் (Kumaran) said...

//திடிரென்று 61 ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் தவிர, சமணர்கள், பெளத்தர்கள், பழங்குடிகள் உள்ளிட்ட அணைவரும் இந்துக்களாக அறிவிக்கப்பட்டது போல ஒரு அமெரிக்க ஆட்சி வந்து தமிழர்கள் தோமா வழி கிறிஸ்துவர்கள்தான் என்றால் நாம் என்ன செய்வோம்? அப்போதும் பாடுவதற்கும், புகழ்வதற்கும், சண்டையிடுவதற்கும் ஏதாவது இருக்கும். கவலை வேண்டாம்.//

இதுவும் அருமை. :-) ஆனால் 61 ஆண்டுகளுக்கு முன்பு தான் அது நடந்ததா அன்றி ஆங்கிலேயர் ஆட்சியிலேயே நடந்துவிட்டதா? அமெரிக்க ஆட்சியை இங்கே நீங்கள் குறிப்பிட்டிருப்பதால் ஆங்கிலேய ஆட்சியிலேயே இந்தப் பகுப்பு நடந்துவிட்டது; அதை ஒட்டியே 61 ஆண்டுகளுக்கு முன்னர் (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 58 ஆண்டுகளுக்கு முன்னர் - 1950 தான் இந்தியா குடியரசு ஆனது) அரசியல் சாசனம் வரையப்பட்டது என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா?

குமரன் (Kumaran) said...

//அப்படியென்றால் நீங்கள் ஏன் தோமா கிறிஸ்தவனாக ஆக வேண்டும்?//

ஜோ.

அது கிண்டலான தலைப்பு என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தோமா கிறிஸ்தவர்கள் எல்லா தமிழர்களும் தோமா கிறிஸ்தவர்களாக மாற வேண்டும்; அப்படி மாற்ற முயலவேண்டும் என்று சொல்லியிருப்பதாகப் படித்தேன். அதனை ஒட்டிய தலைப்பே அது. இதற்கு முந்தைய இடுகையைப் பார்த்தீர்களா? அங்கே இடுகையில் சொல்லிய கருத்திற்கு எதிரான கருத்தையே தலைப்பாக இட்டேன். இந்த இடுகைகளைப் பலரும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே அப்படி ஆவலைத் தூண்டும் தலைப்புகளை இடுவதற்குக் காரணம். தவறாக எண்ண வேண்டாம்.

//நீங்கள் கத்தோலிக்கத்தின் ஆதரவாளனைச் சொல்லுகிறீர்களா அல்லது 'தோமா கிறித்துவம்' என்ற அடைமொழிக்குள் சொல்லப்பட்டுள்ளவற்றை சொல்கிறீர்களா தெரியவில்லை . //

நான் கத்தோலிக்கத்தின் ஆதரவாளர்களைச் சொல்லவில்லை. தோமா கிறிஸ்தவர்களைத் தான் சொல்கிறேன். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சுவனப்பிரியன் said...
இந்த ஒற்றுமையைப் பார்த்து ஒரு சிலர் என் மதத்தின் கருத்தை ஒட்டியே உங்கள் மதமும் உள்ளது என்று பெருமைபட்டுக் கொள்வார்கள். அது போன்ற ஒன்றுதான் திரு ஜெயமோகனின் பதிவும்//

மிகவும் ரசித்தேன் சுவனப்பிரியன்!

தன்னைப் போல் இன்னொருவன் என்பது, மனித மனத்தின் அசைக்க முடியாத துணை தேடும் இயல்பு!

ஒரே சட்டை-ன்னு தொடங்கி, ஒரே மொழி, ஒரே இனம்-ன்னு எப்பமே பார்க்க முடியாத போது...
ரெண்டும் கொஞ்சம் கொஞ்சம் ஒன்னா இருக்குல்ல? என்று ஆறுதல் பட்டுக்கும்! - அது வரை ஓக்கே தான்!

ஆனா இந்தக் கலர்ச் சட்டையை நான் தான் மொதல்ல போட்டேன்! அப்பறம் தான் நீ! அப்பறம் தான் அவன்! சட்டையின் ஆதிச் சொத்து, தனிச் சொத்து நான் தான் என்று அகங்காரங்களும் சேரும் போது தான் பிரச்சனை!

இதுல வேடிக்கை என்னவென்றால் சட்டை சாயம் போவது பற்றிக் கூட கவலைப்படாமல், சட்டை என்னும் சொல்லை மட்டும் சட்டை செய்து கொண்டிருப்பார்கள்! :)

வெட்டிப்பயல் said...

இதை ஏன் நகைச்சுவை\நையாண்டில சேர்த்தீங்க :)

Thangamani said...

குமரன்:

என்னைக் கிறிஸ்த்துவ சார்புடைய-இறைமறுப்பாளன் என்று நினைத்திருந்தால் அதை மறுக்கிறேன். :) நான் என்னுடைய இரண்டாவது பின்னூட்டிலே ஆபிரகாமிய மதங்களின் விளைவாக ஆன்மீக சுதந்திரத்தின் இழப்பைக் குறிப்பிட்டுருக்கிறேன். ஒரு வரியில் இருப்பதால் அது உங்கள் கவனம் பெறவில்லையோ என்னவோ! அது ஒரு பேரிழப்பு என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனெனில் சுதந்திரம் என்பதல்லாமல் எந்த ஆன்மீகம முயற்சியும் இறுதியடைவதில்லை. அப்படி ஒரு இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சாதரண மனித உரிமைக்கே வழியில்லாத மக்களுக்கு இது அவ்வளவு முக்கியமில்லாததாகப் போகலாம்.

பாரதியின் பாடல் இப்போது கைவசம் இல்லை. அவரது கட்டுரைத்தொகுப்பில் இருக்கிறது. அரவிந்தரிடம் கூட இது குறித்து அவர் விவாதித்திருப்பார். நான் இந்தியா சென்றவுடன் உங்களுக்கு கட்டாயம் அனுப்புகிறேன்.

எந்த பழங்கலை வடிவமும் மக்களிடம் இருந்தே தோன்றுகின்றன. அதுவும் உழைக்கும் மக்களிடமிருதே. பெரும்பாலான கலைஞர்கள் விவசாயிகளாகவும், தொழிலாளர்களாகவும் இருப்பது ஆச்சர்யமான ஒன்றல்ல. அக்கலைவடிவம் ஒரு பாரிய அளவில் பயிலப்பட்டபிறகே அது சீர்திருத்தவோ, முறைப்படுத்தப்படவோ, அக்கலையின் கூறுகள் உறுதிப்படுத்தப்படுவதோ வெகுகாலம் சென்று யராவது ஒருவரால்/குழுவால் செய்யப்படும். இலக்கியங்கள் தோன்றிய பிறகு உருவாகும் இலக்கணம் போல. அப்படி இலக்கணம் உருவாக்கியவருக்கு மொழியையே உருவாக்கியவர் என்ற தகுதியைக் கொடுப்பதில்லை. இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் இந்தப்பதிவின் மையக்கருத்து என்ன? தாமஸின் மூலமே தமிழ் இறையியல் கருத்துகள் வித்திடப்பட்டதா என்பதுதான், இல்லையா? இது எப்படி ஒரு பொய்யோ அப்படியே பரத முனி விசயமும். மேலும் இந்த தாமஸ் விசயம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் முயற்சி. தமிழர்களின் இறையியல் கருத்துக்களை தங்களுடையதான் என்று சொல்வதன் அடியில் உள்ள நோக்கம் அதிகாரபரவலுக்கானதே. அப்படியே தமிழர்களின் எல்லா கலைகளுக்கும் ஒரு முனிவரை அதுவும் ஆரியத்தில் மட்டுமே எழுதிய முனிவர்களைச் சொல்வதும்.

நன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

////உலகத்தில் இருக்கும் எல்லா நல்லவைகளுக்கும் காரணம் தமிழ் நூற்கள் தான்; எல்லா நல்லவைகளுக்கும் அடிப்படை திராவிடர்கள் தான். இப்படி ஒரு 'உண்மை'யும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதைப் படித்திருக்கிறேன். //

குமரன்,
கொஞ்சம் சொல்லுங்களேன் எங்கே படித்தீர்கள் என்று. நானும் படித்துப் பார்த்துக் கொள்கிறேனே!//

தருமி ஐயா. கைப்புண்ணுக்குக் கண்ணாடி கேட்கிறீர்கள். பதிவுலகில் சிலரும் தமிழறிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும்/சொல்லிக் கொண்ட சிலரும் எழுதுவதைப் படித்தாலே அது தெரியுமே. அப்படிப்பட்டவரைப் பற்றி 'சங்க இலக்கியத்தில் அகலிகைக் கதை' இடுகையில் சொல்லியிருக்கிறேன். அதில் மாற்றுக் கருத்தைச் சொல்லுபவர் பேசுவதைப் படித்தாலே யார் எங்கே அப்படி பேசுகிறார்கள் என்று புரியும் என்று நினைக்கிறேன்.

பெயரையும் சுட்டியையும் நேரடியாகத் தர முடியாமைக்கு வருந்துகிறேன்.

குமரன் (Kumaran) said...

தங்கமணி. நான் இரண்டாம் வகை என்று சொன்னது இந்த இடுகையில் பேசப்பட்டிருக்கும் இரண்டாம் வகை 'முழுமுதல் உண்மை'யை. நீங்களும் தருமி ஐயாவைப் போல் அப்படி யார் எழுதியிருக்கிறார்கள்; காட்டுங்கள் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :-)

நம்மிடம் இருக்கும் எல்லா கெட்டதும் ஆரியர் கொண்டு வந்தது; நம்மிடம் இருக்கும் எல்லா நல்லதும் வெளியிலிருந்து வரவில்லை - நம்மிடமே காலம் காலமாக இருந்தது - இப்படி நேரடியாகச் சொல்லியும் சொல்லாமலும் பல கருத்துகள் தக்கத் தரவுகளின்றிச் சொல்லப்படுவதைப் பற்றியும் அதனால் விளைந்த விளைவுகளைப் பற்றியும் கேட்டிருந்தேன். நீங்கள் இந்து vs. கிறிஸ்தவம் என்று நான் கேட்பதாக எண்ணிக் கொண்டு பதில் சொல்லியிருக்கிறீர்கள். :-)

//இதில் ஒன்றை உவந்து ஏற்பதும் மற்றொன்றைக் கண்டு பீதியடைவதும் அவரவர் அரசியல் அதனால் விளையக்கூடிய சுயநலன்.//

இதனை முழுவதுமாக ஒத்துக் கொள்கிறேன். என் சுயநலத்தின் அடிப்படையிலான அரசியல் என்னிடம் உண்டு. நான் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் என் எண்ணங்களையும் செயல்களையும் அந்த அரசியல் தான் தீர்மானிக்கிறது. :-)

//இது உங்களை முன்வைத்துச் சொல்லவில்லை. உங்களது ஆன்மீகப் பார்வை/ புரிந்துணர்வு இவைகளை நான் வாசித்த அளவில் அப்படியான புரிதலையே எனக்குத் தருகிறது. //

இதற்கு என்ன பொருள் கொள்வது என்று புரியவில்லை. :-) எப்படியான புரிதல் அது?

கயல்விழி said...

அருமையான விவாதங்கள்!!!

வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை. மதத்தை சண்டை இல்லாமலும் அறிவுப்பூர்வமாக விவாதிக்க முடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. விவாதம் செய்த அனைவருக்கும்(முக்கியமாக தங்கமணி) என் பாராட்டுக்கள்.

Unknown said...

குமரன்

பதிவுலக பக்கம் வந்து பல நாட்களாகிவிட்டது.இன்றுதான் நீங்கள் மீண்டும் நட்சத்திரம் ஆனதை அறிந்தேன்.போனதரம் நீங்கள் நட்சத்திரம் ஆனபோது தான் அ.கு.மு.கவை துவக்கி அதன் பொருளாளராகவும் ஆனேன்:)..

எனிவே,,தாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள்.

தோமா கிறிஸ்தவமும் தமிழும் காமடி அருமை..ரூம் போட்டு யோசித்து உட்கார்ந்து கதை விடுவார்களோ என்னவோ?:-)

நான் கிறிஸ்தவத்தில் பலவகைகளை கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் தோமா கிறிஸ்தவம் என்பதை கேள்விப்பட்டதில்லை.அது கத்தோலிக்கம்,பாப்டிஸ்ட்,மார்மன் போல் போல் தனிபிரிவா?

அரவிந்தன் நீலகண்டன் said...

வடமொழியிலிருந்து அல்லது வேதங்களிலிருந்து அனைத்தும் வந்ததாக சிலர் கூறியிருக்கலாம். ஆனால் பொதுவான புரிதல் அவ்விதம் இல்லை. தமிழையும் வடமொழியையும் இரு கண்களாக அல்லது சிவனின் டமருவிலிருந்து உருவானதாக காணும் ஐதீகப் போக்கே வலுவாக உள்ளது. பாரதமெங்கும் கோவில்களில் வடமொழி பொதுமொழியாக பயன்படுத்தப்படுகிறது. நாராயணகுரு அம்பேத்கர் போன்றவர்கள் வடமொழியின் கலாச்சார முக்கியத்துவத்தை கூறியுள்ளனர். எனவே அது ஒரு சாதியின் அல்லது ஒரு பிராந்தியத்தின் மேன்மை மொழி அல்ல. நிற்க தமிழை சிலர் நீசமொழி என்றதாக கூறப்படுவது ஒரு urban legend என்கிற அளவை தாண்டி ஆதாரம் இருப்பதாக சொல்ல முடியவில்லை. அப்படி சொன்னதாக சொல்லப்படுகிறவர் எழுதிய ஆதாரபூர்வமான பதிவுகளிலேயே தமிழை தெய்வத்தமிழ் என்று சொல்லியிருப்பதை காணமுடிகிறது. மேலும் வடமொழி இலக்கியங்களிலேயே தாம் தமிழிலிருந்து கடன் பெற்றது எவ்வித தயக்கமும் இல்லாமல் பதியப்பட்டுள்ளது. இந்து என்கிற பதத்தை பொறுத்தவரையில் இது ஒன்றும் வலுக்கட்டாயமாக 61 ஆண்டுகளுக்கு முன்னால் திணிக்கப்பட்ட பதமல்ல. அம்பேத்கர் பௌத்த மதத்தையே 'protestant hinduism' என சொல்லியதையும் இங்கு குறிப்பிட வேண்டும். பாரசிகத்தின் தாரியஸ் கிமு ஆறாம் நூற்றாண்டில் இந்த பதத்தை பயன்படுத்த ஆரம்பித்த காலகட்டத்திலேயே இதற்கு சமய-பண்பாட்டு ரீதியிலான பொருள்படுத்தும் தன்மை வந்தாகிவிட்டது. நிச்சயமாக 19 ஆம் நூற்றாண்டின் காலனிய சூழ்நிலைகள் இந்து சமயம் என நாம் அழைக்கும் ஆன்மிக பாரம்பரிய கூட்டுத்தொகுதிக்கு - தாக்கங்களை ஏற்படுத்தின. 19 ஆம் நூற்றாண்டின் அத்தகைய தாக்கத்தினை அடையாத -அதனால் தன் பரிணாமத்தில் மாற்றம் அடையாத -ஏதாவது ஒரு மதத்தை காட்டமுடியுமாவெனில் அது இயலாது என்பது தான் உண்மை. ஆபிரகாமியல்லதாததும் பாரத-ஆன்மிக பாரம்பரியங்களின் கூட்டு பெயராகவும் இந்து என்பதனை நாராயணகுரு, அருட்ஜோதி வள்ளலார், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் ஏற்றுள்ளனர் இவர்கள் எவருமே அந்தணரல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட பாரத கொத்தடிமை தொழிலாளர்கள், இன்றைய மலேசிய இந்திய வம்சாவளியினர் இந்து எனும் category இன் அடிப்படையில் தங்கள் போராட்டங்களை அமைத்துள்ளமையும் இங்கு நோக்கப்படவேண்டும். சரி இனி தாமஸ¤க்கு வரலாம். அனைத்து பாரத பண்பாட்டு செழுமையும் தோமா கிறிஸ்தவத்திலிருந்து வந்தது என்பதற்காக இந்த 'ஆராய்ச்சியாளர்கள்' - கத்தோலிக்க சர்ச்சின் அதிகார பூர்வ ஆதரவுடன் களமிறங்கியுள்ள இந்த 'ஆராய்ச்சியாளர்கள்' காட்டும் ஆதாரங்களை குறிப்பிடாமல் இருப்பது நலம். சமஸ்கிருதம் கிபி இரண்டாம் நூற்றாண்டில் உருவானதாம், வேத வியாசர் தோமா கிறிஸ்தவ திராவிடராம், 'கோடாயுதத்தால் கொடுவினை களைந்து ' என விநாயகர் அகவலில் வரும் வரி ஏசு சிலுவையில் மரித்தததை காட்டுகிறதாம்...சிவலிங்கத்தில் முகத்தை செதுக்குவதே கிபியில் தோமா கிறிஸ்தவத்தால் உருவானதாம்...(உண்மையில் முகங்கள் கொண்ட சிவலிங்கங்கள் கிமுவில் கிடைக்கின்றன, சமஸ்கிருத கல்வெட்டு கிமுவில் கிடைக்கிறது.) சரி அடுத்ததாக திரு சுவனப்பிரியன் சொல்வதற்கு வருகிறேன்: //மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்ற டார்வினின் தத்துவத்தை இன்று வரை அறிவியல் துணை கொண்டு நிரூபிக்க முடியவில்லை. உலக மக்கள் அனைவரும் ஒரு தாயிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்பதை தற்போதய ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. // இது தெய்வநாயகம் காமெடி போல இல்லாமல் கொஞ்சம் டீலக்ஸ் காமெடி. பொதுவாக மூலக்கூறு மரபணு ஆராய்ச்சியின் மூலம் மானுட உதயத்தை ஆராய்பவர்கள் mitochondrial eve என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்கள் சகோதரர் சுவனப்பிரியன் போன்றவர்கள் இதனை தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள் போலும். ஜூலை 2008 இல் 'Human origins/Traces of a distant past' (Gary Stix) என சயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் இது குறித்து ஒரு அழகிய நீண்ட கட்டுரை வந்துள்ளது. சகோதரர் சுவனப்பிரியன் படித்து பயனடையலாம். அதிலிருந்து: "Despite Biblical allusion, this (mitochondrial) Eve was not the first woman: her lineage though is all that has survived." நிச்சயமாக சகோதர சுவனப்பிரியன் குரானுக்கும் ஹருன் யாஹியாவுக்கும் ஸாகிர் நாயக்குக்கும் வெளியில் சிந்திப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. மேலும் அறிவியல் மனிதனுக்கும் மற்ற குரங்கினங்களுக்குமான பரிணாம உறவினைக் காட்டவில்லை என்பது தவறானது. "More than a century ago Darwin and Huxley posited that humans share recent common ancestors with the African great apes. Modern molecular studies have spectacularly confirmed this prediction and have refined the relationships, showing that the common chimpanzee (Pan troglodytes) and bonobo (Pan paniscus or pygmy chimpanzee) are our closest living evolutionary relatives" என்பது 'Initial sequence of the chimpanzee genome and comparison with the human genome' என்ற தலைப்பில் செப்டம்பர் 2005 இல் Nature இல் வெளிவந்த ஆராய்ச்சி முடிவின் வாசகம். //அந்த ஒரு தாய்க்கு வந்த வேதம் காலப்போக்கில் மனிதர்களால் சிதைக்கப்பட்டு தனக்கு சாதகமானதை மட்டும் வேதத்திலிருந்து எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு வளர ஆரம்பித்தது. // எத்தனையோ மானுடவியல் அகழ்வாராய்ச்சி முடிவுகள் இதனை தெள்ளத்தெளிவாக ஒரு இறையியல் கற்பனை மட்டுமே என நிரூபிக்கின்றன. பற்பல மதங்கள் பற்பல சமுதாயங்களில் உருவாகியுள்ளன. அவற்றுக்கிடையே கொடுக்கல் வாங்கல்கள் உள்ளன. உதாரணமாக சுவனம் என்பதே பாரசீகத்தில் உருவாகி மேற்காசியா சென்றது என்பர். இந்தியாவில் குடியேற்றம் ஆப்பிரிக்காவிலிருந்துதான் இரு அலைகளில் வந்தது. ஆக, ஒற்றைப்பார்வை நேர்கோட்டு வரலாற்றாடல்கள் எப்போதும் அரசியல்-இறையியல் காரணங்களுக்காக உருவாக்கப்படுபவையே தவிர உண்மைத்தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்க முடியாது. கிறிஸ்தவத்தை பொறுத்தவரையில் தோமா கிறிஸ்தவம் ஒரு பெரிய இறையியல் பின்னடைவு. ஒரு காலத்தில் இந்த அமைப்பிலிருந்துதான் ஆண்டனி டி மெல்லா போன்ற இறையியலாளர்கள் உருவானார்கள் என நம்ப முடியாத அளவில் இந்த பின்னடைவு உள்ளது.

ஓகை said...

//நிற்க தமிழை சிலர் நீசமொழி என்றதாக கூறப்படுவது ஒரு urban legend என்கிற அளவை தாண்டி ஆதாரம் இருப்பதாக சொல்ல முடியவில்லை. அப்படி சொன்னதாக சொல்லப்படுகிறவர் எழுதிய ஆதாரபூர்வமான பதிவுகளிலேயே தமிழை தெய்வத்தமிழ் என்று சொல்லியிருப்பதை காணமுடிகிறது.//

அ.நீ அவர்களே, ஆதாரம் இருப்பதாக சொல்ல முடியல்லை என்பதையும் தாண்டி சம்பத்தப்பட்டவர்களிடமிருந்து தீவிரமான ஒரு மறுப்போ அல்லது ஆன்மிகப் பெரியவர்களிடமிருந்து பலத்த கண்டனமோ வந்திருக்க வேண்டுமென்பது என் கருத்து. இக்கருத்து ஒரு பரப்புரையாக்கப்பட்ட பிறகும் இதற்கான தீவிர மறுப்புகள் இல்லை என்பது ஆன்மிக ஈடுபாடு கொண்ட எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய மனவருத்தம்.

இதைத் தவிர மற்ற உங்கள் கருத்துகள் அற்புதமாக எடுத்து வைக்கப் பட்டிருக்கின்றன.

ஓகை said...

//இது ஒன்றும் புதிய முயற்சி அல்லவே! ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு பெருவெற்றி அடைந்த முயற்சியின் இன்னொரு வடிவம் தாம் அனைத்து வகையான இறையியல் கருத்துக்களும் கிறிஸ்த்துவத்தின் பாதிப்பால் வந்தன என்பதும். இதை வரலாறாக தோற்றமளிக்க உண்மையான மனிதர்கள் வேண்டுமல்லவா? அதற்காகவே தாமஸ்.//

ஏற்கனவே தவறுகள் நடந்திருப்பதாக நம்பிக்கொண்டிருப்பதால் தெரிந்தே நடக்கவிருக்கும் அதே போன்ற தவறுக்கு நீதி செய்யப்படுகிறது.

ஓகை said...

//இது ஒன்றும் புதிய முயற்சி அல்லவே! ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு பெருவெற்றி அடைந்த முயற்சியின் இன்னொரு வடிவம் தாம் அனைத்து வகையான இறையியல் கருத்துக்களும் கிறிஸ்த்துவத்தின் பாதிப்பால் வந்தன என்பதும். இதை வரலாறாக தோற்றமளிக்க உண்மையான மனிதர்கள் வேண்டுமல்லவா? அதற்காகவே தாமஸ்.//

ஏற்கனவே தவறுகள் நடந்திருப்பதாக நம்பிக்கொண்டிருப்பதால் தெரிந்தே நடக்கவிருக்கும் அதே போன்ற தவறுதான் என்று நீதி செய்யப்படுகிறது.

சுழியம் said...

வீரவேல் ! வெற்றி வேல் !

//எல்லா ஆக்கிரமிப்பும் ஒரே விதமான உத்தியைத்தான் கையாளுகின்றன. அவ்வளவுதான் என் கருத்து.//

ஆனால். ஒரே ஒரு ஆக்கிரமிப்பு இந்தியாவில் இருப்பதாகக் கூறிக்கொண்டு அதை மட்டுமே எதிர்த்து எப்போதும் எழுதுவதையும், பேசுவதையும், செயல்படுவதையும் கடமையாகக் கொண்டுள்ள தங்கமணி அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

//இதில் ஒன்றை உவந்து ஏற்பதும் மற்றொன்றைக் கண்டு பீதியடைவதும் அவரவர் அரசியல் அதனால் விளையக்கூடிய சுயநலன்.//

ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள்.

சுயநலன் பாராது அடுத்தவர் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்று கண்ணன் எனும் ஒரு தலித் பகவத்கீதையில் பகருகிறான். தன் ஜாதி, தன் மதம், தன் நாடு, தன் மொழி என்பதைத் தாண்டி ஒருவன் வாழவேண்டும் என சனாதன மதம் போதிக்கிறது. இவற்றிற்காக அரசியல் செய்பவர்களால் மனிதம் அழியும்.

இவர்களை எதிர்த்து அரசியல் செய்பவர்களால்தான் மனிதம் வாழுகிறது.

//பாரதியாரே ஒரு வங்காளி தமிழே சமஸ்கிருதத்தின் வழிவந்ததுதான் எனச் சொல்லக்கேட்டு கொதித்துபோய் தனித்தமிழில் பட்டு எழுதவில்லையா? //

அந்த வங்காளி எதனால் அப்படி சொன்னான்? என்பது போன்ற விஷயங்களை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாமே.

ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்த ஆரிய-திராவிட இனவெறி போதிக்கப்பட்டவன் அந்த வங்காளி. ஆங்கிலேயர் கொண்டு வந்த கல்வியைக் கற்றவன். ஆரிய இனம் உயர்ந்தது என்றும், திராவிடம் தாழ்ந்தது என்றும் ஆங்கிலேயர்கள் போதித்தார்கள். அந்த போதனையை அப்படியே நம்பிய அவன் தன்னை ஆரியனாகக் கற்பனை செய்துகொண்டான். உயர் இனமான ஆரியர்களிடமிருந்தே கலைகளும், இலக்கியங்களும், விஞ்ஞானமும் வந்தன என்று நம்பினான். அப்படி நம்புபவனுக்கு தமிழில் உள்ள உயர் கலைகளும் நுணுக்கங்களும் ஆரிய இனத்தில் இருந்தே வந்ததாகத் தெரிந்ததில் வியப்பென்ன. இப்படி நம்புபவர்கள் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றுதானே சொல்லி இருக்கிறார்கள்.

ஆரிய-திராவிட இனங்கள் இருந்தன என்று நம்புகிற அனைவரையும் போல அவனும் நம்பி மறத்தமிழன் பாரதியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டான். பாரதி உண்மையை சொல்லிய பின்பும் திருந்தினானா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இனவெறியும், சாதிவெறியும் பெரிய படிப்பாளிகளையும் மூடர்களாகவே வைத்திருக்கும்.

தமிழின் தோற்றத்தை சந்தேகித்த அந்த வங்காளிக்கும், ஆரிய-திராவிட இனவாதத்தை இப்போதும் நம்புகிறவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

//ஏன் சில வருடங்கள் முன்புவரை சதிராட்டமாய் இருந்து பரதநாட்டியமான நடனம், திடிரென்று பரதமுனிவரால் தான் உருவாக்கப்பட்டது என்று பரதமுனிக்கு பத்மா சுப்ரமணியம் தமிழகத்தின் தலைநகரிலேயே கோவில் கட்டவில்லையா? யாராவது பரதமுனிதான் இந்த நாட்டியத்தை உருவாக்கினாரா என்று கேள்வி கேட்டோமா? //

கேட்போமா? மாட்டோமே.

கேட்டால் மாட்டிக்கொள்வோம் என்பது தெரியும்போது நாங்கள் கேட்கவே மாட்டோம்.

தெரிந்துகொள்ள வேண்டிய விதயங்கள் உண்டு:

1. சதிராட்டமாக இருந்த போது, பரத முனிவரைப் பற்றிய குறிப்புகள் எங்கும் இல்லாமல் இருந்தனவா?

2. பத்மா சுப்ரமணியத்தின் பாட்டி காலத்தில்தான் பரத முனிவர் கண்டுபிடிக்கப்பட்டாரா?

3. பரத நாட்டியம் அல்லது சதிராட்டத்தை பரத முனிவர் தோற்றுவிக்கவில்லை என்பதற்கு யூகங்கள் தாண்டிய ஆதாரங்கள் இருக்கின்றனவா?

4. சதிராட்டத்தை பரத முனிவர் தோற்றுவித்திருந்ததாக நிரூபிக்கப்பட்டால், அது திராவிடர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்று எடுத்துக்கொள்ளப்படவேண்டுமா?

5. பரதமுனிவர் திராவிடன் இல்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?

6. ந்யூட்டன் கண்டு பிடித்ததற்கு முன்பே புவி ஈர்ப்பு விசை இந்த பூமியில் இருந்ததால், புவி ஈர்ப்பு விசை பற்றிய விதியை ந்யூட்டன் கண்டுபிடித்தார் என்று சொல்லுவது தவறா?

7. யோக சூத்திரத்தை உருவாக்கிய பதஞ்சலி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று வடநாட்டுக்காரர்களும் சொல்லிவருவது ஆரிய சூழ்ச்சியா?

8. யோக சூத்திரம் எழுதிய தமிழன் அதை தமிழில் எழுதினானா?

எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான்: இல்லை.

இந்தியாவின் பெரும்பாலான இடங்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் செங்கிருதமும் மிகுந்த புழக்கத்தில் இருந்தது. அதை எல்லா சாதியாரும், எல்லா வர்ணத்தாரும் கற்று பாடல்களும், கவிதைகளும் செய்தார்கள். அதே போலவே தமிழ் கவிதைகளும். சித்தர் பாடல்கள் எழுதியவர்களிலும், செங்கிருதத்தில் கவிதை வடித்தவர்களிலும் தலித்துகளும் உண்டு. கல்வி மறுக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களால் எப்படி பாடல் எழுத முடிந்திருக்கும்?

கல்வி, சம உரிமை, பெண் விடுதலை போன்றவை மறுக்கப்பட்ட நிகழ்வுகள் அந்நிய மதங்களும், ஆக்கிரமிப்பு அரசியலும் இந்தியாவில் நுழைந்தபின்பே நடந்தன.

ஏன் ஆங்கிலேயர் காலத்தில்கூட செங்கிருதத்தில் புலவர்களாக பல தலித்துகள் இருந்தனரே. இந்தியாவின் சனாதிபதியாக இருந்த மதிப்பிற்குரிய நாராயணனின் தந்தை செங்கிருதத்தில் புலவர். நாராயண குரு என்னும் தலித்திற்கு செங்கிருதம் கற்பித்தவர் ஒரு தலித். தமிழ்நாட்டு தலித் சிங்கம் ஐயன்காளியின் மருமகன் செங்கிருதத்தில் புலவர். இப்படி எத்தனையோ தலித்துகள் செங்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்களாக இருந்ததை வரலாறு சொல்லுகிறது.

இதிலிருந்து தெரிவது என்ன? ஆங்கிலேயர் காலத்தில்கூட தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு செங்கிருதம் கற்கும் உரிமையும், போராடும் வலிமையும் இருந்தது. ஆனால், திராவிட கழக ஆட்சியில் அவர்களுக்கு செங்கிருதம் மட்டும் அல்ல, தமிழ்வழி கல்விகூட கிடைப்பதில்லை. ஈவேரா வழிவந்த ஆரிய-திராவிட இனவாதிகளால் அவர்களுக்கு புகட்டுப்படுவது மனித சாணிதான். ஈவேரா பிறந்த மண்ணில் கீழ்வெண்மணிதான் அவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையாக இருக்கிறது.

காரணம் என்ன?

ஆரிய-திராவிட இனவெறியும் சாதி வெறியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஒன்று அழிந்தால் மற்றொன்றும் அழியும். சாதியை ஒழிக்க ஆரிய-திராவிட இனவாதம் ஒழிய வேண்டும். ஆரிய-திராவிட இனவாதம் ஒழிய சாதி ஒழிய வேண்டும். இவற்றில் ஒன்றை மட்டும் எதிர்ப்பவர்கள் தங்கள் சாதிக்கு மற்ற சாதிகள் அடிமைப்படவேண்டும் என்று விரும்புபவர்கள். ஆங்கிலேயர் தயாரித்த ஆரிய-திராவிட இனவாத நம்பிக்கையை இந்தியர்களுக்கு விற்றுப் பிழைக்கும் இவர்கள் தொழில் வேசிகளின் விற்பன்னர்கள் தொழிலிலும் கீழானது.

இப்படிப்பட்ட ஆரிய-திராவிட கற்பனைகளை மறுக்கும் சுயமரியாதை உள்ள பச்சைத் தமிழனான எனக்கு, பல காப்பியங்களை, கலைகளை, இலக்கியங்களை, அறிவியல், தத்துவ உண்மைகளை தமிழர்கள் செங்கிருதத்திலும் படைத்தார்கள் என்று சொல்லுவதில் பெருமையே.

அறிவையும், உழைப்பையும், ஞானத்தையும் நிராகரிப்பது ஆக்கிரமிப்பு வெறி பிடித்தவர்களின் குணம். அது மூதாதையர்களுடையதாக இருந்தாலும், சமகாலத்து பாட்டாளியாக இருந்தாலும் உழைப்பையும், அறிவையும் போற்ற வேண்டும்.

சமகாலத்து பாட்டாளிகளின் உழைப்பை சுரண்டுவது, பெற்ற மகளை வைத்து பிழைப்பதற்கு சமம். இறந்தவர்களின் உழைப்பை சுரண்டுவதும், அவர்களை ஏளனம் செய்வதும் பிணங்களை பெண்டாளுவதற்கு சமம்.

ஆரியர்களான வட நாட்டவர்களோ அல்லது ஒரு குழுவோ, எல்லா ஆன்மீக, இலக்கிய, விஞ்ஞான, தத்துவங்களையும் செங்கிருதத்திலும், தமிழிலும், ஈரோட்டு திராவிடன் லாட்ஜில், 786ம் நம்பர் ரூமில் சரக்குப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து பைபிளை எழுதியதுபோல உண்டாக்கினார்கள் என்று சொல்வது என் மூதாதையர்களின் அறிவை, உழைப்பை, ஞானத்தை கேவலப்படுத்தும் செயல்.

மாவோ போல ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் ஆயிரக்கணக்கில் கொலை செய்ததோ, செய்யத்தூண்டியதோ, அல்லது ஈவேரா போல பிராமணர்களை கொலை செய்யத் தூண்டியதோ, தலித்துகளை எரித்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதோ என் தமிழ் ரத்ததில் இல்லை. தெய்வீகத் தமிழ் எனக்கு இவற்றை போதிக்கவில்லை.


//இராமர் பிறந்து தொப்புள் கொடி அறுத்துப்போட்ட இடமே அடையளம் கண்டு பிடிக்கப்படுகையில் தேடிப்பார்த்தால் தாமஸ் நடந்து வந்த காலடித்தடங்களை கண்டுபிடிக்கமுடியாதா? //

//ராமர் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலமே கண்ணுக்குத் தெரிந்து அது நாட்டையும், கோர்ட்டையும் உலுக்கும் போது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தாமஸ் வந்ததா அதிசயம்?//

அது அதிசயம் இல்லை. ஆனால், ஏசுவின் சீடரான தாமஸ் இந்தியா மட்டுமல்ல, உலகின் மேலும் 7 இடங்களில் செத்துப் போய் புதைக்கப்பட்டிருப்பது அதிசயம் அல்லவா? உலக அதிசயங்கள் 7ஆக அவை அறிவிக்கப்படவேண்டும் அல்லவா?

ஒரே தாமஸ் எப்படி அய்யா ஒம்போது இடங்களில் செத்துப்போய் சமாதியானான்?

ஆனால், இந்த ராமனைப் பாருங்கள். உலகில் எத்தனையோ ராமாயணங்கள் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ராமன் அயோத்தியில்தான் பிறந்ததாக சொல்லுகின்றன. திராவிட கழகம் வெளியிட்ட கீமாயணம்கூட அப்படிச் சொல்லுவது ஆரிய சூழ்ச்சியாகவே இருக்கவேண்டும்.

வேண்டுமானால், வராத தாமஸ் பற்றி வந்திறங்கிய கதைகளைப்போல, தமிழறிஞர் தங்கமணி அவர்கள் புதிதாக ஒரு ராமாயண ஏட்டுச் சுவடிகளை அவர் வீட்டின் கொல்லைப்பக்கத்தில் குழி தோண்டும்போது கண்டுபிடித்ததாகவும், அதில் ராமன் ஈரானில் பிறந்ததாக சொல்லப்பட்டிருப்பதாகவும் சொல்லலாம்.

ராமர் பாலத்திற்காகவும், ராமர் கோயிலுக்காகவும் போராடுபவர்கள் அறிவியல் பூர்வமான அகழ்வாராய்ச்சி நடத்தவேண்டும் என்று போராடினார்கள். ஆனால், அவர்களை எதிர்க்கும் ஈவேரா வழிவந்த நாம், நம்முடைய கண்டுபிடிப்பான கொல்லைப்புற ராமாயண ஏட்டுச் சுவடிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பிற்போக்குவாதிகளாக மாறமாட்டோம்.

//திடிரென்று 61 ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் தவிர, சமணர்கள், பெளத்தர்கள், பழங்குடிகள் உள்ளிட்ட அணைவரும் இந்துக்களாக அறிவிக்கப்பட்டது போல //

அறிவித்தது யார் என்பதையும் சொல்லிவிடலாமே. சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. எதனால் அறிவித்தது? ஹிந்துக்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே என்று நிறுவ நடந்த முயற்சி அது. அப்போது, அண்ணல் அம்பேத்கார் முதலான ஆன்றோர்களின் வழிகாட்டுதலின்படி நீங்கள் சொல்லுகிற அறிவிப்பு வெளியானது.

இப்படி சொல்லுவதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்த தீர்ப்பிற்கு பின்பு, 61 ஆண்டுகளுக்கு முன்புதான் சமணர்களும், பௌத்தர்களும், பழங்குடிகளும் ஹிந்துக்களாக பெயர் சூட்டப்பட்டார்கள். அதுவரை அவர்கள் ஹிந்துக்களே இல்லை. அவர்களை ஹிந்துக்கள் என்று அறிவித்த இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய சதிவேலை என்கிறீர்கள் போலிருக்கிறது.

அப்படிப் பார்த்தால் தமிழை செம்மொழியாக 2004ல்தான் அறிவித்தார்கள். அதுவரை அது செம்மொழியாக இருந்ததே இல்லையா?

//எல்லோருக்கும் பொதுவான கல்வி என்பதே இந்திய மரபுக்கு எதிரான கிறிஸ்த்துவ சிந்தனைதான் என்பதைச் சொன்னால் கூட உண்மையாய் இருக்கும்), எல்லோருக்கும் மருத்துவம், சில இடங்களில் சமத்துவம் போன்றவற்றைச் சொல்லலாம். //

அடடே. நீங்கள் ஈவேரா வழிவந்த இனமான சிங்கம் போல் இருக்கிறது. கேழ்வரகு நெய்யில் நீங்கள் தயார் செய்யும் பதார்த்தங்கள் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன.

ஆங்கிலேயர்களது ஆரம்ப கால ஆட்சிவரை கல்விமுறை அனைவருக்கும் வழங்கப்பெற்றது. கல்லாதவர்கள் இந்தியாவில் மிகக் குறைவு. ஆனால், ஆங்கிலேயர்கள் இந்திய கல்வி முறையை அழித்து அங்கே கிருத்துவ மிசநரிகளின் கல்விமுறையைப் புகுத்தினர். எல்லா வகையிலும் இந்திய கல்விமுறையான குருகுலக் கல்விமுறை தலையெடுக்கவொட்டாமல் அழித்தனர். இத்தகைய இந்திய கல்வி முறையில் எந்த எந்த சாதிக்காரர்கள் கல்வி பெற்றார்கள், எத்தனை கல்வி நிலையங்கள் இருந்தன, அவற்றை ஆங்கிலேயர்கள் எப்படி அழித்தனர் என்பது குறித்து தரம்பால் என்பவர் மிகத் தெளிவாக ஆதாரங்களோடு நிறுவியுள்ளார். தேடிப் பிடித்துப் படியுங்கள்.

இப்படி அழித்த ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்? ஆரிய-திராவிட இனங்களை போதித்தார்கள். அதை நம்பிய வங்காளிகள் மறத்தமிழர்களிடம் சூடு பட்டுக்கொண்டார்கள்.

ஆரிய-திராவிட இனவாதம் போன்ற ஆப்பிரிக்காவிலும் ஹுடு-டுட்ஸி இனவாதத்தை அவர்கள் புகுத்தினார்கள். அவற்றை உங்களைப்போல நம்பிய ஆப்பிரிக்கர்கள் உருத்தெறியாமல் அழிகிறார்கள். இப்படி இந்தியர்களும் அழியவேண்டும் என்று எழுதுவதும் போராடுவதும்தான் முற்போக்கு வாதிகளின் பகுத்தறிவுப் பார்வையில் விளைந்த மனிதநேயம் போலும்.

ஆரிய-திராவிட இனவாதத்தை நம்புபவன் தன்னை அடிமை, அறிவிலி என்று ஒத்துக்கொள்கிறான், தனது அழிவிற்கு தானே குழி தோண்டிக்கொள்கிறான் என்பது சுரணையுள்ள, புத்தியுள்ள மறத்தமிழனுக்கு தெரியும்.


//எந்த பழங்கலை வடிவமும் மக்களிடம் இருந்தே தோன்றுகின்றன. அதுவும் உழைக்கும் மக்களிடமிருதே.//

உண்மை. சத்தியம். கலையும்-உழைப்பும் பிரிக்க முடியாதவை. உண்மையில் இரண்டும் ஒன்றே. கலையுணர்வற்ற உழைப்பு உழைப்பே அல்ல. உழைப்பில்லாவிட்டால் கலை உருவாகவே முடியாது.

உழைப்பாளிகளால்தான் கலையை உருவாக்க முடியும். உழைப்பாளிகளால்தான் கலையை ரசிக்க முடியும். அதிலும் தான் கண்டடைந்த உவகையை, உண்மையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற மனப்பான்மை உழைப்பவர்களுக்குத்தான் வரும். கலை குறித்த நுண்ணுணர்வு இதிலிருந்தே வளர்கிறது.

உழைக்க முடியாத சோம்பேறிகள் திராவிட கழகம் போன்ற கலை நுணுக்கமற்ற, நுண்ணுர்வற்ற இயக்கங்களையே உருவாக்குகிறார்கள். காசு கொடுக்கும்போது திட்டாமல் இருப்பதும், காசு கொடுக்காதபோது திட்டுவதுமாக ப்ளாக்மெயில் செய்வதை சமூக சேவையாகக் கொண்டார்கள் இந்த உழைப்பு திருடர்கள்.

கலைகளும், இலக்கியமும், மனித உறவுகளும் நுண்ணுணர்வு சார்ந்தவை. இவை குறித்த இந்த உழைப்பு திருடர்களின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் படியுங்கள். நுண்ணுணர்வு எனபதே அவர்களுக்கு கிடையாது என்பதும், உழைப்பில்லாமல் பிழைத்தவர்கள்/பிழைப்பவர்கள் அவர்கள் என்பதும் தெளிவாகத் தெரியும்.

வாழிய செந்தமிழ் ! வாழிய நற்றமிழர் !

வாழிய பாரத மணித்திருநாடு !

வந்தே மாதரம்.

சுழியம் said...

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் குருகுல பள்ளிகள் எந்த அளவு உயர்தர கல்வி அறிவை போதித்தன, சாதி வித்தியாசமின்றி அனைவருக்கும் கல்வி கிடைத்த வரலாறு, அத்தகைய மனித வெறுப்பை போதிக்காத கல்வி முறையை ஆங்கிலேயர்கள் எப்படி அழித்தார்கள் போன்றவற்றை அறிய தர்மபால் அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளைப் படிக்க வேண்டியது, ஒவ்வொரு இந்தியனின் கடமை.

அவரது எழுத்துக்களை படிக்க:

http://www.samanvaya.com/dharampal/

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன்!

//சகோதர சுவனப்பிரியன் குரானுக்கும் ஹருன் யாஹியாவுக்கும் ஸாகிர் நாயக்குக்கும் வெளியில் சிந்திப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. மேலும் அறிவியல் மனிதனுக்கும் மற்ற குரங்கினங்களுக்குமான பரிணாம உறவினைக் காட்டவில்லை என்பது தவறானது.//

நான் படித்துப் பார்ப்பது இருக்கட்டும். முதலில் டார்வினிஸ்டுகளிடம் ஹாருன் யஹ்யா வைக்கும் பல கேள்விகளில் ஒரு கேள்வியை உங்களிடம் வைக்கிறேன். முடிந்தால் பதிலளியுங்கள்.

பரிணாம கோட்பாட்டுக்காரர்களின் முன் வைக்கப்படும் முதல் கேள்வி 'உலகில் முதல் உயிரினம் எப்படி தோன்றியது ? ' என்பதுதான். அதற்கு கோட்பாட்டுக்காரர்களின் பதில்: உலகம் முழுவதிலும் உயிரற்ற பொருட்களான கற்பாறைகள், மண், வாயு ஆகியவையே நிரம்பி இருந்தபோது, காற்று, மழை மற்றும் மின்னல் ஆகியவற்றின் விளைவால் தற்செயலாக தானாகவே உலகின் முதல் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும். அதாவது, உயிரற்ற பல பொருட்களின் கூட்டு விளைவால் ஒரு உயிரினம் தோன்றியது. இந்த விளக்கம் 'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும் ' என்ற அடிப்படை உயிரியல் கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறது. பரிணாம கோட்பாடு சொல்வது உண்மை என்று ஒப்புக்கொண்டால், இன்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உயிரியல் கொள்கை பொய்யாகி விடும். இதற்கு பரிணாம கோட்பாடும், அதன் காதலரான அரவிந்தன் நீலகண்டனும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் ?

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள சுவனப்பிரியன்,

இதற்கு ஆகஸ்டு 22 2005 இலேயே நான் பதிலளித்திருக்கிறேன். ஹரூன் யாஹியாவின் முழுவாதத்தையும் இங்கே காணுங்கள்: http://parinamam.blogspot.com/2005/08/1.html
இதற்கான பதிலை இங்கே காணுங்கள்:
http://parinamam.blogspot.com/2005/08/1_22.html
பதிலிலிருந்து:
பரிணாம அறிவியல் எக்கால கட்டத்திலும் ஜடப்பொருளிலிருந்து தீடீரென உயிர் தோற்றம் (Spontaneous Generation or Abiogenesis) எனும் கருதுகோளை ஏற்றதில்லை. ஆதிப்பெருங்கடலில் பலகோடி வருடங்களாக கதிரியக்கமும் கரிம மூலக்கூறிழைகளுமாக, பழம் புவியின் வளிமண்டல இயக்கங்களுமாக படிப்படியாக உருவாக்கிய நிகழ்வொன்றினைக் குறித்து அறிவியல் பேசுவதை, அறிவியலால் பொய்ப்பிக்கப்பட்ட பழம் நம்பிக்கை ஒன்றுடன் இணைத்து பேசுவது அறியாமையின் விளைவாகும். இன்றைக்கு 400 கோடி ஆண்டுகளிலிருந்து 300 கோடி ஆண்டுகளாக இப்புவியில் நடந்த வேதிவினைகளை குறித்து நாம் சுருக்கமாக காணலாம். இப்பூமியின் முதல் ஒரு செல் உயிரிகளின் தோற்றம் ஏறத்தாழ 100 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பது நம் கவனத்தில் இருக்க வேண்டும். கார்பனும், ஆக்ஸிஜனும் நைட்ரஜனும் நேற்று இணைந்து இன்றைக்கு உயிராக - பாக்டீரியமாக அதன் அனைத்து புரதங்களுடன் -மாறிற்று என்பதல்ல பரிணாம அறிவியல். அப்படி நிகழ்ந்திருந்தால் அத்தகையதோர் நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு பெரும் சக்தியின் அறிவு பூர்வ படைப்பாக இருந்திருக்கலாம். மாறாக, அது நூறு கோடி ஆண்டுகளாக சிறு மூலக்கூறுகள், மூலக்கூறிழைகள், அவற்றால் உருவாகும் சங்கிலிகண்ணித் தொடரமைப்புகள், சிறு லிப்பிட் கோளங்கள், அதனால் உருவான உள்-வெளி அமைப்புகள் அதனுள் சிறு மீள்-உருவாக்குத் தன்மை கொண்ட மூலக்கூறுகளுடைய அமைப்புகள், இத்தகைய அமைப்புகளின் பரவல், ஒரு செல் உயிரினங்களின் மூதாதை அமைப்புகள் என ஒரு பல சாத்திய கூறுகளை, நாம் இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளாத மர்மங்களை, புரிந்து கொள்ள முயலும் படிக்கப்படாத பக்கங்களை கொண்டது. இவ்வாறு கூறியதும், "பார்த்தீர்களா பரிணாமம் உயிரின் உதயத்தை விளக்க முடியாது என்பதற்கு இதோ இன்னொரு வாக்குமூலம்." என்று சில படைப்புவாதிகள் கூறிவிடக் கூடும். ஆனால் இதற்கு பொருள் அதுவல்ல. உயிரின் உதயம் எனும் மர்மத்தை நாம் விளங்கிக் கொள்ள முயல்கிறோம். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளோம். பொதுவான சித்திரம் தெரிந்து விட்டது. இனி அதன் உள்-வழிகளை நாம் அறிய வேண்டும். அதையும் செய்யும் போதுதான் உயிரின் உதயம் குறித்த நம் சித்திரம் முழுமை பெறும். சற்றேறக்குறைய நூறு கோடி ஆண்டுகள் முற்றிலும் மாறுபட்ட வளிமண்டலம் கவிய இப்புவியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றை பரிசோதனை சாலையில் பரிசோதிப்பதிலும் அறிவியல் முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளது. யூரே மில்லர் (1953) மீத்தேன் அமோனியா நீராவி மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை கொண்ட வளிமண்டலத்தில் அடிக்கடி எழும் மின்சக்தியுடன் கூடியச் சூழலினை தம் பரிசோதனையில் உருவாக்கிய போது கிளைஸின், ஆல்பா-அலனைன், பீட்டா-அலனைன், அஸ்பார்ட்டிக் அமிலம் போன்ற அமினோ அமிலங்கள் தாமாகவே உருவாகின. ஹைட்ரஜன் சயனைடுடன் நீர் அமோனியா எனும் அமைவில் J.ஓரோ நடத்திய பரிசோதனை டி.என்.ஏ மூலக்கூறின் நைட்ரஜன் கார அமைப்பான அடினைனை அளித்தது. நைட்ரஜன் ஐயனிகள், நீர், கரியமில வாயு கார்பன் மோனாக்ஸைட் போன்றவை கொண்ட வளிமண்டலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பார்மால்டிகைட் கிடைத்துள்ளது (ஜே.பி.பிண்டால், 1980). முன்னரே குறிப்பிடப்பட்டவாறு உயிரின் உதயத்தில் லிப்பிட் (Lipid) கோளங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இவை ஆதிமுன்னோடி உயிரணுவின் மூதாதையாக இருந்திருக்க முடியும் என்பது பரிசோதனைச் சாலையில் நிரூபணமான விஷயம்.(லூயிகி லூயிஸி, 1994) வெப்ப இயங்கியல் விதிகளாலும் புறச்சூழல் விசைகளாலும் உந்தப்பட்டு லிப்பிட் கோளங்கள் தானாகவே செல் பிரிவின் முன்னோடிகளாக செயல்பட்டன.

அரவிந்தன் நீலகண்டன் said...

பல நேரங்களில் தங்களை சிந்தனையாளராகவும் பகுத்தறிவாளராகவும் நினைத்துக்கொள்பவர்களின் வரலாற்றுப் பார்வையின் ஆழத்தை பார்க்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. //எல்லோருக்கும் பொதுவான கல்வி என்பதே இந்திய மரபுக்கு எதிரான கிறிஸ்த்துவ சிந்தனைதான் என்பதைச் சொன்னால் கூட உண்மையாய் இருக்கும்),//ஜான் ரூல் என்பவரின் 'The laboring classes in early industrial england 1750-1850' என்கிற நூலை படித்து வருகிறேன். இக்காலகட்டமானது தொழில் புரட்சி, காலனிய குடியேற்றம், அடிமை ஊழியத்தின் மூலம் மூலதனப்பெருக்கம் என ஐரோப்பிய சமுதாயத்தை வளமாக்கிக்கொண்டிருந்த காலகட்டம். இந்த காலகட்டத்துக்கு பிறகுதான் கல்வி என்பது அனைவருக்கும் என்றானது. மட்டுமல்ல laboring classes என்பது மிகவும் கறாரான பிறப்படிப்படை பாகுபாடுகளால் உருவாக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிகிறது. 1807 இல் சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழ்பவர்களுக்கு கல்வி அளிப்பது குறித்த சட்டம் குறித்த விவாதம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் (Commons) நடந்த போது பேசப்பட்ட பேச்சின் ஒரு பகுதியிலிருந்து: "However specious in theory the project might be of giving education to the labouring classes of the poor, it would in effect be prejudicial to their morals and happiness: it would teach them to despise their lot in life, instead of making them good servantsto agriculture and other laborious employments to which their rank in society had detained them: instead of teaching them subordination it would render them factious and refractory as was evident in the manufacturing counties: it would enable them to read seditious pamphlets vicious books and publications against Christianity ..." இந்த பேச்சு நடத்தப்பட்ட காலகட்டத்துக்கு சற்று பிந்தையதோர் பிரசுரம் வர்த்தகமயமான நகரங்களில் அனைவருக்கும் கல்விக்கான வாய்ப்பு கிடைப்பதன் தீமைகளை பின்வருமாறு விளக்கியது: "...in commercial towns ...rising generations are training up in ignorance, wickedness and forgetfullness of God..." இதற்கு பின்னர்தான் சர்ச் இதனை counter செய்ய கல்விப்பணியில் இறங்கியது. "Fear of the new self-respect and confidence of self-educated trade union leaders...has been identified as underlying educational missionary activity in London's silk weaving district of Spital fields" (The labouring classes in Early Industrial England 1750-1850: Education for the labouring classes பக்.247) ஆக, எல்லோருக்கும் பொதுவான கல்வி என்பதே இந்திய மரபுக்கு எதிரான கிறிஸ்த்துவ சிந்தனைதான் என்பது பிரச்சார வாக்கியமேயன்றி வரலாற்று உண்மை அல்ல.

நாமக்கல் சிபி said...

எக்ஸ்கியூஸ்மீ!

என்ன நடக்குது இங்கே?

சுழியம் said...

// நாமக்கல் சிபி said...

எக்ஸ்கியூஸ்மீ!

என்ன நடக்குது இங்கே?

August 23, 2008 12:58 AM //


உண்மை விளக்கம்.

---------------------------

குமரன் போட்ட பதிவிற்கும், கேட்ட கேள்விகளுக்கும் உடனடியாக பதில் சொன்ன தங்கமணி அரவிந்தன் மற்றும் சுழியத்தின் கருத்துக்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன?

அரவிந்தன் மற்றும் சுழியம் சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று புரிந்துகொள்கிறாரா?

அல்லது

இவர்கள் சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்லுவது, தன்னுடைய அரசியல் மற்றும் விளையக்கூடிய சுயநலனுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் அமைதி காக்கிறாரா?

அல்லது

இப்போதைக்கு இந்த உரையாடலை ஆறப்போட்டுவிட்டால், மக்கள் மறந்துவிடுவார்கள். அவர்கள் மறந்துவிட்ட பின்னால், இதே புனைசுருட்டு வாதங்களை மீண்டும் வேறு இடங்களில் வைக்கலாம் என்று எண்ணுகிறாரா?

அல்லது

அல்லது

அல்லது

அல்லது

அல்லது

மௌனம் பல அர்த்தங்களையும் தரும் என்று செங்கிருதத்தில் தமிழர்கள் சொன்னது ஞாபகம் வருகிறது.


வீரவேல் ! வெற்றி வேல் !

வந்தே மாதரம்.

அருணகிரி said...

வெள்ளையடிக்கப்பட்டு விட்ட இதுபோன்ற விவரங்களை வெளியுலகம் காணச்செய்யும் அரவிந்தனுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். கோஷங்கள் மட்டுமே சிந்தனைகள் என்றாகி வரும் சூழலில் அரவிந்தனின் ஆய்வுபூர்வமான பதில்கள் பலரை அறிவுத்தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்யும். ஆனால் தூக்கத்தையே விரும்பிக் கண்மூடிக்கிடப்பவர்களுக்கு இது பொருந்தாதுதான்.

இந்தியாவுக்கு வரும் கிறித்துவ பணத்தில் ஆகப்பெரும் பகுதி கொட்டப்படும் இடம் தமிழ்நாடு. அதுவும் சென்னை. இந்தியாவைப்பொறுத்தவரை கிறித்துவ விசுவாசப்பரவல் வியாபாரத்தின் கேந்திர மையம் இன்று சென்னைதான்.தோமா கிறித்துவம் என்பது அதில் ஒரு புதிய பிராண்ட். தோமா கிறித்துவ மாநாடு என்ற ரோட் ஷோ இந்த விற்பனையில் ஒரு பகுதி. இதில் கலந்து கொண்ட அனைத்து தரப்பு விற்பனையாளர்களுக்கும் அவரவர்களுக்குள்ள அப்பம் கிடைத்து விடுகிறது.

அருணகிரி

சுழியம் said...

///
அருணகிரி said...
வெள்ளையடிக்கப்பட்டு விட்ட இதுபோன்ற விவரங்களை வெளியுலகம் காணச்செய்யும் அரவிந்தனுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். கோஷங்கள் மட்டுமே சிந்தனைகள் என்றாகி வரும் சூழலில் அரவிந்தனின் ஆய்வுபூர்வமான பதில்கள் பலரை அறிவுத்தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்யும். ///

நான் முற்றிலும் ஒப்புக்கொள்ளும் கருத்து.

திருவாளர் அரவிந்தன் அவர்கள் பிரச்சினைகளின் ஆழத்தை அறிய தேவையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, நன்கு புரிந்துகொண்ட பின்னரே பதிலளிக்கிறார். அதனால், நுணுக்கமான வித்தியாசங்களை அவரால் மிக எளிமையாக விளக்கமுடிகிறது.

அவர் யாரென்று தெரியாது. ஆனால், அவரைப் படிக்கும் அனைவரைப் போலவும், அவரை சந்திக்கும் ஆவல் என் மனத்தில் எழுகிறது.

வாழ்க நீ எம்மான் !

சுழியம் said...

புத்தகம்: பாரதி புதையல் பெருந்திரட்டு
தொகுத்தவர்: ரா.அ. பத்மநாபன்
வெளியீடு: வானதி பதிப்பகம்

18. இந்தியாவுக்குப் பொது பாஷை

[நம் பாரத நாட்டுக்குப் பொது மொழியாக எதைக் கொள்ளலாம் என்பதைப் பற்றித் தற்காலம் விவாதங்கள் பலமாயிருக்கின்றன. ஹிந்தியா, ஆங்கிலமா என்பது ஒரு வாதம். ஸம்ஸ்கிருதமே இருக்கலாம் என்றொரு பழைய வாதமும் உண்டு. "ஒளிர் மணிக் கோவை" என்ற தலைப்பில் "சுதேச மித்திர"னில் பாரதியார் எழுதி வந்த குறிப்புகளில், ஸம்ஸ்க்ருதத்தை இந்தியப் பொது மொழியாகக் கொள்ளலாமென்ற கட்சியை ஆதரித்து எழுதியுள்ளார்.

இக்கட்டுரை முதலி, "சுதேசமித்திர"னிலும், பிறகு 1942, ஜூன் மாதத்தில் "கலைமகள்" பத்திரிகையிலும் வெளிவந்தது. -ரா. அ. ப]

இந்தியாவுக்கு பொது பாஷையாக ஹிந்தியை வழங்கலாமென்று ஸ்ரீமான் காந்தி முதலிய பல பெரியோர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். ஆனால், பாரத தேச பக்த சிரோ ரத்தினமென்று கூறத்தக்க ஸ்ரீமான் அரவிந்த கோஷ் முதலிய வேறு பலர் ஸம்ஸ்கிருத பாஷையே இந்தியாவுக்குப் பொது பாஷையென்றும், நாம் அதைப் புதிதாக அங்கனம் சமைக்கவேண்டியதில்லை யென்றும், ஏற்கனவே ஆதிகாலந்தொட்டு அதுவே பொது பாஷையாக இயல் பெற்று வருகிறது என்றும் சொல்கிறார்கள். த்ருஷ்டாந்தமாக, ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இந்நாட்டில் ஏற்படு முன்னர் தமிழ் நாட்டில் இருந்த ஒரு தமிழரசன் குஜராத்திலிருந்த ஒரு கூர்ஜர மன்னனுக்குக் கடிதம் எழுத நேர்ந்தால் எந்த பாஷையில் எழுதியிருப்பான்? தமிழில் எழுதுவதென்றால் குஜராத்து மன்னனுக்கு ஸாத்யமல்ல. எனவே, இரண்டு நாட்டுப் பண்டிதர்களும் ராஜ குருக்களும் முக்கிய மந்திரிகளும் ஒருங்கே பயிற்சி பெற்றிருந்ததாகிய, ஸம்ஸ்கிருத பாஷையிலேயே அவர்களுக்குள் கடிதப் போக்குவரத்து நடந்ததென்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல விளங்குகின்றதன்றோ?

ஸம்ஸ்கிருத பாஷையில் படித்துத் தேர்ச்சி பெறுதல் கடினமாதலால், அதை தேச முழுமைக்கும் பொது பாஷையாகச் செய்தல் சௌகரியப்படாதென்று சிலர் சொல்கிறார்கள். பழைய வழிப்படி படிப்பதனால் இவர்கள் சொல்வது ஒருவாறு மெய்யெனலாம். ஆனால், இக்காலத்தில் அந்நிலைமை கடந்து சென்று விட்டது. இப்போது பண்டாரகர் என்னும் பம்பாய்ப் பண்டிதர், உபாத்தியாயரில்லாமலே ஸம்ஸ்கிருத பாஷையை ஏழெட்டு மாசங்களில் கற்றுக்கொள்ளும்படியான ஆரம்ப நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் முதல் புஸ்தகம் ஏற்கனவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அவ்வழியை இன்னும் சுலபமாகச் செய்யலாம். பஞ்சதந்திரத்தை அர்த்தத்துடன் மூன்று முறை உருப்போட்டால் எவனும் தடதடவென்று தட்டில்லாமல் ஸம்ஸ்கிருதம் பேசக்கூடிய திறமை பெற்றுவிடுவான். பாணன், பட்டி முதலிய புலவர்கள் வருந்திச் சமைத்த நடை பழகவே நாளாகும் நாடோடியாக வழங்குதற்குரிய பாஷை பழகுவதற்கு, இயற்கை நடையைத் தழுவி எழுதப்பட்ட பஞ்ச தந்திரம் முதலிய நூல்களே போதும்.

இந்தியாவின் சங்கீதம்

இந்தியாவுக்குப் பொது பாஷையாக எதிர்காலத்தில் ஸம்ஸ்கிருத பாஷையே விளங்கப் போகிறதென்று கண்டு கொண்ட மாத்திரத்தில் இந்தியா முழுமைக்கும் பொதுவான சங்கீதம் ஸம்ஸ்கிருத பாஷையிலே தான் அமைந்திருக்குமென்பது சொல்லாமலே விளங்கும். பாரத சங்கீத தேவியின் முதற் குமாரராகிய ஸ்ரீ முத்துச்வாமி தீஷிதரவர்கள் ஏற்கனவே அதி அற்புதமான கீர்த்தனங்கள் பல வடமொழியில் செய்தருளியிருக்கிறார். ஒருமுறை ஸ்ரீமான் அரவிந்த கோஷ், தீக்ஷிதர் கீர்த்தனம் ஒன்றைக் கேட்டுவிட்டு இதுபோல சொல்நயமும் இசை நயமும் ஒருங்கே இசைந்த பாட்டைத் தாம் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் தம் ஜன்ம முதல் கேட்டதே இல்லையென்று சொன்னார். இந்தத் தீக்ஷித பந்தாவைச் சென்னையில் நாட்டுவதற்கு நம்முடைய "சுதேசமித்திரன்" பத்திராதிபர் ஸ்ரீ ரங்கசாமி ஐயங்கார் உட்படச் சில மேதாவிகள் முயன்றுவருகிறார்களென்பது தெரிகிறது. இவர்களுடைய முயற்சி வெற்றியெய்துக.

ஜடாயு said...

அன்புள்ள குமரன்,

இந்த விவகாரம் பற்றிப் பதிவு எழுதியதற்கு மிக்க நன்றி, பாராட்டுக்கள். தோமா விவகாரம் மிகவும் அபாயகரமான கட்டம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது, ஜெயமோகன் கட்டுரை இதை மிகத் தெளிவாக சொல்கிறது. எனவே இது "ஏற்கனவே செய்யப் பட்டது தானே" என்ற கணக்கில் தங்கமணி மற்றும் சிலர் கூறி இந்த முக்கியமான பிரசினையை நீர்த்துப் போகச் செய்வது ஏன்? தமிழ்ப் பண்பாடு மீது குறைந்தபட்ச பற்றுக் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் எதிர்க்கவேண்டிய சமாசாரம் தாமஸ் புளுகு & அதை வைத்து நடக்கும் வரலாற்றுத் திரிபுகள் மற்றூம் கலாசார அழிப்பு.

நிற்க. பாரதி துவேஷிகள் அவ்வபோது சில கட்டுக்கதைகளை எடுத்துவிடுவது வழக்கம். பாரதியை (அல்லது எல்லாவற்றையுமே) ஏன் கருப்பு வெள்ளை ரீதியில் பார்க்கவேண்டும்? தமிழ்க் கவிஞன் சம்ஸ்கிருதம் படிக்கக் கூடாதா? அந்த மொழி பற்றிக் கொஞ்சம் கூட உயர்வாக நினைத்திருக்கவே கூடாதா? என்ன வெறித்தனம் இது!

வடமொழிக்குத் தமிழ் தாழ்ந்தது என்றும் பாரதி கருதியதில்லை; வடமொழிக்குச் சிறப்பில்லை என்ற கருத்தும் இருந்ததில்லை. இரண்டுமே இணையான மொழிகள் என்பதில் ஐயமும் இருந்ததில்லை. சுழியம் இங்கே எடுத்து அளித்துள்ள கட்டுரை இதற்குச் சான்று பகர்கிறது.

மேலும், இதையே கவிதையிலும் சொல்லியிருக்கிறார். தமிழ்த்தாயே கூறுவதாக அமைந்த கவிதை.

தமிழ்த்தாய் - தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்

ஆதிசிவன் பெற்று விட்டான் - எனனை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல்லன்பொடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.

Unknown said...

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 'இலக்கியம், மொழி, கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் - ஒரு மதிப்பீடு ' என்னும் தலைப்பில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வேட்டில் அதனுடைய ஆசிரியர் ப.கமலக்கண்ணன், ஈவேராவின் இலக்கிய ஆராய்ச்சியைப் பற்றி விவரித்து இருக்கிறார். இந்த ஆய்வேட்டிற்காக முனைவர் பட்டமும் கொடுக்கப் பட்டுள்ளது. ஈவேராவின் விசுவாசியான இவர் என்ன சொல்கிறார் தெரியுமா ?


பக்தி இலக்கியங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் என்று கூறும் பெரியார், எப்படி என்பதைப் பற்றி விரிவாகக் கூறவில்லை. கடவுளையும், பக்தியையும் அதிகம் பாடிய பாரதியார் ஒருமைப்பாட்டுக் கவிஞராகத் திகழ்கிறார். எனவே பெரியாரின் கருத்து முரண்பாடாகவே தோன்றுகிறது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இந்த மூன்று கருத்துக்கள் மட்டும் இலக்கியங்களில் இடம் பெற்றால் போதும் என்று கூறுகிறார். இந்த மூன்றை மட்டுமே இலக்கியங்கள் எனக் கூறத் தொடங்கினால் அந்த நூல ஓர் அறிவுரைக் களஞ்சியமாக இருக்குமே அல்லாமல் இலக்கியமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, பெரியாரின் அணுகுமுறை முன்னுக்குப்பின் முரணாகத் தெரிகிறது ' என்று கூறுகிறார்.


மேலும்,


மணிமேகலை - இது சமயச்சார்புடையது, ஆதலின் பயனளிக்காது (நூல்: மொழியும் அறிவும்) என்று ஈவேரா கூறியதை எடுத்துக்காட்டி அவர், 'இந்தக் காப்பியம் சமயச்சார்புடையதாக விளங்குவதால் எதையும் ஆராயாமல் இது பயனளிக்காது என்று பெரியார் கருதுவது ஒரு சார்புடைய கருத்தாகவே இருக்கிறது ' என்று கூறுகிறார்.


அதேபோல தமிழர்களின் மறையாகக் கொள்ளப்பெறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் திருமாலைக் கடவுளாகக் கற்பித்துப் பொய்யான அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உட்பட்ட கற்பனைக் கருத்துக்களைக் கொண்டு விளங்குகிறது. (பெரியார் களஞ்சியம் - தொகுதி I) என்று ஈவேரா சொன்னதை எடுத்துக்காட்டி 'பெரியாரின் இந்தக்கருத்து முழுமையான ஆராய்ச்சிப் போக்காய் இல்லாமல் மேலோட்டமானஒரு கருத்தாகவே இருக்கிறது ' என்று விமர்சனம் செய்கிறார்.


இப்படி ஈவேராவின் சீடரும், அவரை ஆராய்ச்சி செய்தவருமான ப.கமலக்கண்ணன், குருவின் இலக்கிய ஆராய்ச்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார்.

Unknown said...

Dear Thangamani sir,

//பாரதியின் பாடல் இப்போது கைவசம் இல்லை. அவரது கட்டுரைத்தொகுப்பில் இருக்கிறது. அரவிந்தரிடம் கூட இது குறித்து அவர் விவாதித்திருப்பார்.//

Please give the name of the book here.

We are so eager to read the pure tamil poem and also want to know his rebuttal with Aurobindo.

குமரன் (Kumaran) said...

சுவனப்பிரியன். தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

ஜோ.

டவுட்டிங்க் தாமஸ் என்ற சொற்றொடரை நானும் கேட்டிருக்கிறேன். கத்தோலிக்கர்கள் எல்லோரும் இந்தத் தோமா கிறித்தவ கருத்தாக்கத்தை ஏற்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை.

கிறித்தவ நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பது தவறில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் கேள்வி கேட்கவில்லை. கேள்விகள் இருந்தால் கேட்கிறேன். நான் கேள்வி கேட்கிறேன்; அதனால் கிறித்தவர்களுக்கு எதிரானவன் என்ற எண்ணம் தோன்றியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டேன்/கேட்கிறேன்.

பரபரப்புக்காக வைத்த தலைப்பு என்பதை விட இந்த இடுகையைப் பலரும் படிப்பதற்காக வைத்த தலைப்பு என்பதே பொருத்தம்.

DEVAPRIYA said...

எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர்.

கடல் வாணிகம் செய்யவில்லை.

ஜெருசலேம் என்பது ஒரு கால்பந்து மைதான அளவு தான்.

சாலைகள் தெருக்கள் என்பதெல்லாம் ஜெருசசேமில் கிடையாது.
Bible As Literature, Oxford University Press,
written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times.
The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
Page-77
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages bu not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
Pages- 87,88
Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.
Page-77
The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.
Pages 86-87.

BCE3ம் நூற்றாண்டில் கிரேக்க ஆளுமைக்குப் பின் தான் கட்டடங்கள் என எழுந்தன, என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.

பழைய ஏற்பாடு பல கடவுல் வழிபாடு கொண்டது. யகொவா என்பவர் இஸ்ரேலுக்கு ஆன சிறு எல்லை தெய்வமே.

பழைய ஏற்பாடு முழு முதல் கடவுல் பெயர் எல்சடை- இது தமிழ் ஆகும்.

இந்தியர்கள் உலகிற்கு நாகரிகம் தந்தவர்கள்.
தோமோ தந்தார் என்பது பேரன் பாட்டியைப் பெற்றவன் என்று கூறுவது போல ஆகும்.

DEVAPRIYA said...

From the Book-
திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை,
பேராசிரியர். Dr.சு.ராஜசேகரன்.,1989,
Doctral Thesis done in 1986, on the Same name at Madras University,
the Author was then working as Tamil Professor at Nandanam Govt. Arts
College, Chennai.

The Author Analyses various Stone Inscriptions and Archeological
findings from Kapalishwarar Temple and Santhome and gives his views.

இப்போதுள்ள கபாலிசுவரர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற பழைய
கபாலிசுவரர் கோயில் என்ற பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது.
ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த
புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் வேறு இடத்தில் இருந்திருக்க வேண்டும்
என்றும், பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையாக இருக்கலாம் என்றும் எண்ண
வேண்டியிருக்கிறது.. .. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள்
இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம்
கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.

1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய
அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும்
கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன.
கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர்
சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம்
கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக்
கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும்
உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது. மற்றொரு தானக் கல்வெட்டில்,
“திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய
கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்பது
புலனாகிறது.

அருணகிரிநாதர் திருப்புகளில் கபாலிசுவரர் கோயில் கடற்கரை அருகே இருந்தது
என்று குறிப்பிடுப்படுவதால், பழைய கோயில் கடற்கரையருகே இருந்திருக்க
வேண்டும் என்று கே.வி..இராமன் கருதிகிறார். பக்கம்287,288

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்ட சென்னை மாநிலக்
கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும்
கருத்துக்கள் :
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த
கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று
கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி, இப்போத்ள்ள கபாலிசுவரர்
கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப
முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும்.
(பக்-289 – Quotes Census of India-1961; Temples of Madras State, 1
Chingleput District and Madras City, P.204)

The Present Temple very clearly shows for Schoalrs that it was
constructed only in 17th Cen. CE, few Tamil Schloars maintained that
the Old Temple was in same place, and the Present Temple was
constructed above it. Another Set of Scholars maintained that the
Older Temple was in Sea Shore(Mostly the Present Santhome Cathedral)
and the Author analyses various books on Mylapur Temple and comes to
the Conclusion as below, and he before concluding quotes the Historic
fact-
போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு
இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப்
போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப்
பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில்
போர்த்துக்கீசியர்களால் .(Quotes from S.Kalyanasundaram-A Short History
of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
ஆகவே, முடிபாக, பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே
இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில்
போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம்
நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப
முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது என்பதையும்
தெற்றென உணரலாம். -பக்கம் 291 திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய,
வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.
Dr.சு.ராஜசேகரன்.,1989,

DEVAPRIYA said...

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும்
மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும்
இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரண தண்டனையில் கொன்றான்
என வருகிறது. மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all
the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert;

DEVAPRIYA said...

Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.
Rev. S.J.Rajamanikam was the H.O.D of Loyala College Tamil Dept, and
he was asked to present a Paper on –Presence of Christianity in
ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here
Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with
the important ideals of Christianity- and finally comes to
Deivanayagam and I quote-
” நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய
விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2.
ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர்
மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’
என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக் கின்றார்.

இக்கருத்த� �க்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான
கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர்
கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால் (அடியளந்தான்-610;அறவாழி-8;
தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84;
தாமரையினாள்-617), மூதேவி (தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081).பேய்(565), அலகை(850), கூற்று(375,765, 1050,1083; கூற்றம்-269,1085),
காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906),தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள்சுட்டப் படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.