Saturday, April 10, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 6

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் ஆறாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் ஐந்து பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா. இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண - ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு. காற்றே வா. எமது உயிர் - நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு செய். சக்தி குறைந்து போய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம். உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். உன்னை வழிபடுகின்றோம்.

----------
எனது உரை: இங்கு உயிராகிய காற்று நீண்ட நாள் நிலைக்கவேண்டும் என்று வேண்டுகிறார்.

4 comments:

sundari said...

Good evening sir,

It is so much nice i like it so much
sundari.p

குமரன் (Kumaran) said...

Thanks Sundari!

Unknown said...

nice one.....done a good job....priyanka(11th std)20.06.2010

குமரன் (Kumaran) said...

Thanks Priyanka