Sunday, January 13, 2013

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்!






வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

பெரிய கப்பல்கள் செல்லும் கடலை கடைந்த திருமகள் கணவனான மாதவனை, அழகிய திருமுடியை உடைய கேசவனை, சந்திரனைப் போன்ற அழகிய முகத்தை உடைய அழகிய பெண்கள் சென்று வணங்கி, அங்கே அவனிடம் வேண்டியதெல்லாம் பெற்ற வரலாற்றை

அழகிய வில்லிபுத்தூரில் வாழும் புத்தம் புதிய தாமரை மாலையை அணிந்த பட்டர்பிரான் ஆன பெரியாழ்வாரின் திருமகள் கோதை சொன்ன இந்த சங்கத் தமிழ் மாலை முப்பதையும் தவறாமல் உரைப்பவர்கள்

இரண்டு இரண்டு - ஈரிரண்டு - நான்கு மயக்கும் அழகுடைய மலை போன்ற திருத்தோள்களை உடைய, சிவந்த திருக்கண்களும் அழகிய திருமுகமும் உடைய செல்வத் திருமாலின் திருவருள் பெற்று எங்கும் என்றும் இன்புற்று வாழ்வார்கள்.

No comments: