இந்தத் தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.
***
இந்த உலகில் இருக்கும் மேலாளர்கள் பெரும்பாலானவர்கள் இருவகையில் அடங்கிவிடுவார்கள். இரண்டு வகையான மேலாளர்களையும் நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்த்திருக்கலாம். நீங்கள் ஒரு மேலாளர் என்றால் நீங்கள் எந்த வகையில் வருபவர் என்பதை உங்களால் எளிதாகச் சொல்லிவிடமுடியும். ஒரு வகை மேலாளர் மற்றொரு வகை மேலாளர் செய்வது போல் செய்ய முயன்றிருக்கலாம்; ஆனால் இயற்கையாக வரும் வகையிலேயே செல்வது எளிதாக இருப்பதைக் காணலாம். இரண்டு வகைகளிலும் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. அதனால் நமக்கு எது எளிதாக வருகிறது என்று பார்த்து அதன் தீமைகளைக் குறைக்க முயலும் மேலாளர்களும் உண்டு; நானும் அப்படி முயன்றிருக்கிறேன்.
முதல் வகை மேலாளர்களை உலகம் முழுவதும் பரவலாகப் பார்க்கலாம். மேலை நாடுகளில் இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாசூக்காக நடந்து கொள்வார்கள்; நம் நாட்டில் இவர்கள் நேரடியாகவே நடந்து கொள்வார்கள். அதனால் முதலில் நம்மவர்கள் எல்லோரும் இந்த வகைதான் என்று தோன்றும். கவனித்துப் பார்த்தால் உலகில் பெரும்பாலும் இந்த வகையினர் தான் என்று புரியும். மேலே சொன்னது போல் மேலை நாட்டவர்கள் மென்மையாக மறைமுக வழிகளில் அதனைச் செயல்படுத்துவார்கள்.
இந்த வகை மேலாளர்களைப் பார்த்தால் அவர்கள் செய்யும் பணி எல்லாம் திறம்பட நிறைவேறும்; நேரத்தோடு (on time), செலவு ஒதுக்கிய பணத்தை மீறாமல் (on budget), சொன்னதைச் சொன்னபடி (on scope) எல்லாப் பணியையும் இவர்கள் நிறைவேற்றுவார்கள். இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு மிக மிக நல்ல பெயர் இருக்கும். சொன்னதை சொன்னபடி செய்து முடிக்க வல்லவர் என்ற பெயர் இருக்கும். இவர்களால் இவர்கள் பணி புரியும் நிறுவனங்கள் பயன்பெறும்.
அதே நேரத்தில் இவர்களிடம் பணி புரிந்தவர்களைப் போய்ப் பாருங்கள். அவர்களுக்கு இவர்களைப் பிடிக்காது; இவர்களிடம் வேலை செய்வதைப் பெரும் தண்டனையாகக் கருதுவார்கள். சிலர் வேறு பணியைத் தேடிச் சென்றிருப்பார்கள். எளிதாக வேலை கிடைக்காத துறையென்றால் பல்லைக் கடித்துக் கொண்டு தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள். நிறைய பேர் நோய்வாய்ப்படுவதற்குக் கூட அவர்களின் மேலாளர்கள் காரணமாக இருந்ததுண்டு.
இந்த முதல் வகை மேலாளர்கள் சர்வாதிகார மேலாண்மை வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களால் நிறுவனம் பயன்பெறலாம்; ஆனால் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பயன் அடைவதில்லை.
இரண்டாம் வகை மேலாளர்களையும் நீங்கள் நிறைய இடங்களில் பார்க்கலாம். ஆனால் என்ன அவர்கள் ரொம்ப நாள் ஒரு நிறுவனத்தில் தங்குவதில்லை. அதனால் அந்த வகையினரைப் பார்ப்பது அரிதாக இருப்பது போல் தோன்றும். ஆனால் சரி பாதி இந்த வகையினர் என்பது என் அனுபவம்.
இவர்களிடம் பணிபுரிந்தவர்களும் புரிபவர்களும் இவர்களை மிகவும் மெச்சுவார்கள். மீண்டும் இவர்களிடம் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னர் இவர்களிடம் பணி புரிந்தவர்களும் இவர்களைப் பற்றிப் பேசும் போது 'மிக நல்லவர்; மிகத் திறமையானவர்' என்றெல்லாம் பேசுவார்கள்.
ஆனால் இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு நல்ல பெயர் இருக்காது. இவர்கள் செய்யும் பணிகள் ஏதோ ஒரு வகையில் குறையுடையதாக இருக்கும் - ஒன்று நேரத்தோடு பணிகள் முடியாது; அல்லது ஒதுக்கிய பணத்தை விட அதிக செலவு பிடிக்கும்; அல்லது சொன்னதை சொன்னபடி செய்திருக்கமாட்டார்கள் - சில நேரங்களில் இவற்றில் ஒன்றிற்கும் மேற்பட்ட குறைகளும் இருக்கலாம். இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு நல்ல பெயர் இல்லாததால் இவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.
இந்த இரண்டாம் வகை மேலாளர்கள் மக்களாட்சி மேலாண்மை வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களால் மக்கள் பயன்பெறுவார்கள்; ஆனால் நிறுவனம் பயன்பெறுவதில்லை.
இப்படி இருக்கும் மேலாளர்கள் எல்லாம் 'பாதி மேலாண்மை' செய்பவர்கள் தான். பணியையும் மேலாண்மை செய்ய வேண்டும்; பணிபுரிபவர்களையும் மேலாண்மை செய்ய வேண்டும். மேலாண்மை என்றால் தகுந்த முறைப்படி எல்லாவற்றையும் செய்வது. அதனால் மக்களைக் கவனிக்காமல் பணியை மட்டுமே கவனிப்பதும் தவறு. பணியைக் கவனிக்காமல் மக்களை மட்டுமே கவனிப்பதும் தவறு.
நான் எந்த வகையாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் என்றும் சொல்லுங்கள். நான் இதில் ஒரு வகை என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் இருக்கும் தீமைகளைக் குறைக்க முயல்வதுண்டு. பல நேரம் வெற்றி பெற்றதுண்டு. சில நேரம் வெற்றி பெற்றதில்லை.
நீங்களும் இதில் எந்த வகை என்பதைச் சொல்லுங்கள்.
Showing posts with label ஒரு நிமிட மேலாளர். Show all posts
Showing posts with label ஒரு நிமிட மேலாளர். Show all posts
Sunday, May 06, 2007
Saturday, April 28, 2007
ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) - பகுதி 1
ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) என்றொரு புத்தகத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். படித்தவுடன் அந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்து மிகவும் பிடித்தது.
நான்கு ஒரு நிமிட மேலாண்மைக் கருத்துகளை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல் (One Minute Goal Setting)
ஒரு நிமிடத்தில் நிலை அறிதல் (One Minute Status)
ஒரு நிமிடத்தில் பாராட்டுதல் (One Minute Appreciation)
ஒரு நிமிடத்தில் தவறுகளைச் சுட்டுதல் (One Minute Reprimand)
1. ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்:
இது மிக முக்கியமான ஒன்று. பல மேலாளர்கள் செய்யத் தவறுவது. பல முறை நான் செய்ய மறந்து பின்னர் தவறுகள் நேரும் போது சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லாவிட்டால் எப்படி அந்தக் குறிக்கோளை அடைய முடியும்?
சிலர் குறிக்கோளைச் சொல்கிறேன் என்று நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். இந்த 'ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்' முறையில் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் போதும். அப்படியென்றால் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுக்க முடியாது; குறுகிய காலக் குறிக்கோளைத் தான் வரையறுக்க முடியும் என்று சில மேலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படியில்லை. முதலில் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுத்துவிட்டு பின்னர் அந்தக் குறிக்கோளை அடைய குறுகிய காலக் குறிக்கோள்களைப் பற்றிப் பேசலாம்.
குறிக்கோளைப் பற்றிப் பேசுதல் என்றால் மேலாளருக்கு மட்டுமே குறிக்கோள் தெளிவாகப் புரிதல் இல்லை. நம்முடன் வேலை பார்த்து அந்தக் குறிக்கோளை அடைய உதவுபவர்களும் அந்தக் குறிக்கோளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இதில் பல முறை கோட்டை விட்டு பின்னர் சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தால் தான் வேலை சரியாக சரியான நேரத்தில் நடந்து முடியும். வேலை செய்பவருக்குக் குறிக்கோள் புரியாமல் இருந்தால் அவர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையின் முக்கியத்துவமும் நேரத்தோடு செய்து முடிக்க வேண்டிய கட்டாயமும் புரியாது. அப்படி நடந்தால் வேலை நேரத்துக்கு நடக்காமல் மேலாளரும் கடைசி நிமிடத்தில் அந்த வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் யாரை நொந்து என்ன பயன்?
ஒரு நிமிடத்தில் (சரி ஐந்து நிமிடத்தில் என்றே சொல்வோம்) குறிக்கோளைக் குறித்துப் பேசும் போது வேலை செய்பவர்களுக்கும் அந்த குறிக்கோள் புரிந்ததா, அந்தக் குறிக்கோளின் முக்கியத்துவம் புரிந்ததா, அந்த வேலையைச் செய்வதால் எடுத்துக்கொண்ட பணிக்கு என்ன பயன் என்று புரிந்ததா, வேலை செய்யும் தங்களுக்கு அதனால் என்ன நன்மை என்று புரிந்ததா என்று அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு குறிப்பான கேள்விகளை (Pointed Questions) அவர்களிடம் அந்த ஐந்து நிமிடங்களிலேயே கேட்கலாம். பல முறை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் இன்னும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அப்படி முதன்முறையிலேயே குறிக்கோளை பணி புரிபவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டால் மேலாளருக்கு அப்புறம் வேலையே இல்லை; அவர்களே அந்த வேலைக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டு தானாகவே வேலையை முடித்துவிடுவார்கள்.
அடுத்த மூன்று 'ஒரு நிமிடத்தில்' கோட்பாடுகளை தொடர் இடுகைகளாக இடுகிறேன்.
இந்த இடுகைகள் மேலாளர்களுக்கு மட்டும் இல்லை. இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் மூலமாக வேலையை இங்கிருந்த படியே ஒருங்கிணைக்கும் மென்பொருளாளர்களும் (Onsite Coordinator), சிறு தொகுப்புத் தலைவர்களும் (Module Leader) இந்த கோட்பாடுகளைப் பயன்படுத்தலாம். நண்பர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசினால் இந்தத் தொடர் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
நான்கு ஒரு நிமிட மேலாண்மைக் கருத்துகளை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல் (One Minute Goal Setting)
ஒரு நிமிடத்தில் நிலை அறிதல் (One Minute Status)
ஒரு நிமிடத்தில் பாராட்டுதல் (One Minute Appreciation)
ஒரு நிமிடத்தில் தவறுகளைச் சுட்டுதல் (One Minute Reprimand)
1. ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்:
இது மிக முக்கியமான ஒன்று. பல மேலாளர்கள் செய்யத் தவறுவது. பல முறை நான் செய்ய மறந்து பின்னர் தவறுகள் நேரும் போது சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லாவிட்டால் எப்படி அந்தக் குறிக்கோளை அடைய முடியும்?
சிலர் குறிக்கோளைச் சொல்கிறேன் என்று நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். இந்த 'ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்' முறையில் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் போதும். அப்படியென்றால் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுக்க முடியாது; குறுகிய காலக் குறிக்கோளைத் தான் வரையறுக்க முடியும் என்று சில மேலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படியில்லை. முதலில் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுத்துவிட்டு பின்னர் அந்தக் குறிக்கோளை அடைய குறுகிய காலக் குறிக்கோள்களைப் பற்றிப் பேசலாம்.
குறிக்கோளைப் பற்றிப் பேசுதல் என்றால் மேலாளருக்கு மட்டுமே குறிக்கோள் தெளிவாகப் புரிதல் இல்லை. நம்முடன் வேலை பார்த்து அந்தக் குறிக்கோளை அடைய உதவுபவர்களும் அந்தக் குறிக்கோளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இதில் பல முறை கோட்டை விட்டு பின்னர் சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தால் தான் வேலை சரியாக சரியான நேரத்தில் நடந்து முடியும். வேலை செய்பவருக்குக் குறிக்கோள் புரியாமல் இருந்தால் அவர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையின் முக்கியத்துவமும் நேரத்தோடு செய்து முடிக்க வேண்டிய கட்டாயமும் புரியாது. அப்படி நடந்தால் வேலை நேரத்துக்கு நடக்காமல் மேலாளரும் கடைசி நிமிடத்தில் அந்த வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் யாரை நொந்து என்ன பயன்?
ஒரு நிமிடத்தில் (சரி ஐந்து நிமிடத்தில் என்றே சொல்வோம்) குறிக்கோளைக் குறித்துப் பேசும் போது வேலை செய்பவர்களுக்கும் அந்த குறிக்கோள் புரிந்ததா, அந்தக் குறிக்கோளின் முக்கியத்துவம் புரிந்ததா, அந்த வேலையைச் செய்வதால் எடுத்துக்கொண்ட பணிக்கு என்ன பயன் என்று புரிந்ததா, வேலை செய்யும் தங்களுக்கு அதனால் என்ன நன்மை என்று புரிந்ததா என்று அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு குறிப்பான கேள்விகளை (Pointed Questions) அவர்களிடம் அந்த ஐந்து நிமிடங்களிலேயே கேட்கலாம். பல முறை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் இன்னும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அப்படி முதன்முறையிலேயே குறிக்கோளை பணி புரிபவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டால் மேலாளருக்கு அப்புறம் வேலையே இல்லை; அவர்களே அந்த வேலைக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டு தானாகவே வேலையை முடித்துவிடுவார்கள்.
அடுத்த மூன்று 'ஒரு நிமிடத்தில்' கோட்பாடுகளை தொடர் இடுகைகளாக இடுகிறேன்.
இந்த இடுகைகள் மேலாளர்களுக்கு மட்டும் இல்லை. இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் மூலமாக வேலையை இங்கிருந்த படியே ஒருங்கிணைக்கும் மென்பொருளாளர்களும் (Onsite Coordinator), சிறு தொகுப்புத் தலைவர்களும் (Module Leader) இந்த கோட்பாடுகளைப் பயன்படுத்தலாம். நண்பர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசினால் இந்தத் தொடர் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)