முன்பு 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன' என்று ஒரு இடுகை இட்டு நண்பர்கள் கேள்விகள் கேட்க பதில்கள் சொல்லியிருந்தேன். அப்போதெல்லாம் கேட்காமல் மிக மிகத் தயங்கிப் பின்னர் கடைசியில் சில கேள்விகளைக் கேட்டார் இராகவ். 'சரி. குமரன் பதில் சொல்லப் போவதில்லை. மறந்துவிட்டார்' என்றே அவர் எண்ணியிருப்பார். அவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. மறக்கவில்லை. ஆனால் அவர் தயங்கித் தயங்கிக் கேட்டதைப் போல் நானும் பதில் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தேன்.
தயக்கம் மட்டுமின்றி இன்னொரு வேலையும் இருந்தது. மே மாதத்திலிருந்து படிக்கவென்று சேர்த்து வைத்திருந்த நண்பர்களின் இடுகைகள் குவிந்திருந்தன. அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து இப்போது தான் அக்டோபருக்கு வந்திருக்கிறேன். விரைவில் எல்லாவற்றையும் படித்து முடித்துவிடுவேன் என்று நம்புகிறேன். :-)
இதோ தயங்கித் தயங்கி இராகவன் கேட்ட கேள்விகள்!
குமரன், இதோ என்னுடைய கேள்விகள்.. முன்னரே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனாலும் தயக்கம் இருந்ததால் கேக்கவில்லை. கேள்விகளில் வார்த்தைகள் தவறாக இருப்பின் சரி செய்து விடையளிக்கவும்.
1. அன்னை பார்வதி, திருமாலின் தங்கை என்பது எந்த வகையில். எனக்கு தெரிந்து எந்த வைஷ்ணவரும் இதை ஒத்துக் கொண்டதாக தெரியவில்லை. நாராயணண், நான்முகனை படைத்தான், நான்முகன் சங்கரனை படைத்தான் என்ற பாசுர அளவில் மட்டும் எனக்கு தெரியும்.
2. பிராம்மணன் என்பவர் யார்? சற்று விரிவாக விளக்க வேண்டுகிறேன்.
3. என் தாய்மொழி தமிழாக இருந்தும், 23 வயது வரை பள்ளியில், நண்பர்கள் அனைவருடனும் செளராஷ்ட்ர மொழி பேசியே வளர்ந்ததால் தமிழ் சில நேரங்களில் தடுமாறும். நீங்க இப்புடி தமிழ்ல கலக்குறீங்களே எப்புடி (கொஞ்சம் காமெடியா சொல்லலாமே)
4. பலவிதமான பேச்சுத்தமிழ் புழக்கத்தில் உள்ளது போலவே, செளராஷ்ட்ரமும் உள்ளதே ஏன்?? உதாரணத்திற்கு எமனேஸ்வரம் செளராஷ்ட்ர பேச்சை மதுரை மக்கள் கேலி செய்வர். செந்தமிழ் என்பது போல் செம்மையான செளராஷ்ட்ரா மொழி உள்ளதா ?
ஒவ்வொன்றாகப் பதில் சொல்கிறேன். முடிந்த வரை சிரிச்சுவையுடன். நீங்களும் சிரிச்சு வையுங்கள். :-)
1. தமிழக வைணவர் எவரும் பார்வதியின் அண்ணன் திருமால் என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை இராகவ். இரவிசங்கரிடம் கேட்டால் அப்படி ஏற்றுக் கொண்டதற்குத் தரவுகள் தரலாம். ஆனால் தமிழக சைவ, சாக்த சமயங்களில் எல்லாம் அந்தக் கருத்து வலுவாக இருக்கிறது. இந்தக் கருத்து சமய ஒற்றுமைக்காக ஆதிசங்கரரிடமிருந்து தொடங்கியிருக்கலாம். ஸ்மார்த்தத்தின் வழியே தமிழகத்திலும் அந்தக் கருத்து வலுப்பெற்று சைவ சாக்த சமயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் வெறும் ஊகங்களே.
ஆழ்வார்கள் யாரும் பார்வதிக்கும் திருமாலுக்கும் உள்ள உடன்பிறந்தோர் உறவைப் பற்றி பேசவில்லை. ஆனால் பெருமாளின் உடலில் 'பிரம்மன், சிவன், திருமகள்' மூவருக்கும் இடமுண்டு என்று பாடியிருக்கிறார்கள். அப்போது பெருமாளின் வலப்புறமே சிவனுக்குரியது என்று பாடியிருக்கிறார்கள். அது சங்கரநாராயண உருவத்தில் சிவன் வலப்புறத்திலும் திருமால் இடப்புறத்திலும் இருப்பதை ஒத்திருப்பதைப் பார்க்கலாம். சங்கரநாராயண உருவத்தை அருத்தநாரீசுவர உருவத்திற்கு ஒப்பிட்டால் அதே இடப்பக்கத்தில் அம்மை இருப்பதைக் காணலாம். அதனால் நாயன்மாரில் ஒருவர் சொன்ன 'அரியலால் தேவியில்லை ஐயன் ஐயனாருக்கே' என்ற கருத்து வலுப்படுவதைக் காணலாம்.
இந்தக் கேள்விக்கு இன்னும் விரிவாக விடை தரலாம். அதனை நம் நண்பர் இரவிசங்கர் செய்தால் இன்னும் விரிவாகவும் சுவையாகவும் இருக்கும். நேரமும் தேவையும் அமைந்தால் அவர் எழுதலாம்.
2. இதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்னர் பாரதியார் உபநிடதங்களின் கருத்தினை தொகுத்துத் தந்திருப்பதைத் தருகிறேன்.
'பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்று பரிசோதிக்கத் தக்கதாகும்... பிராமணன் வெள்ளை நிறமுடையவன்; ஷத்திரியன் செந்நிறமுடையவன்; வைசியன் மஞ்சள் நிறமுடையவன்; சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று. ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துகளுக்குப் பிறந்திருக்கிறார்கள். ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று.
அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.'
இதன் படி பார்த்தால் பிராமணன் என்று நாம் தற்போது அறிந்தவர்களில் யாருமே இல்லை. நம்மிடமிருந்து மறைந்து வாழ்கிறார்களோ என்னவோ? :-)
3. எழுதுறது வேற; பேசுறது வேற இராகவ். என்னுடன் தொலைபேசிய பதிவுலக நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். நானும் எப்படி தயங்கித் தயங்கி பேசுகிறேன் என்று. :-)
ஆமா. நீங்க 23 வயது வரை பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தீர்களா? சொல்லவே இல்லை? ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை வருடம் படித்தீர்கள்? :-)
என்னுடைய தமிழார்வத்திற்கு எனக்கு அமைந்த தமிழாசிரியர்கள் தான் காரணம் இராகவ். நானும் பள்ளி இறுதி வகுப்பு வரை பள்ளியில் நண்பர்களுடன் சௌராஷ்ட்ரம் பேசியே தான் வளர்ந்தேன். ஏதாவது ஒரு குறை இருந்தால் இன்னொன்றில் அதனை இட்டு நிரப்புவார்கள் என்று கேள்விபட்டிருப்பீர்களே. எனக்கு விளையாட்டுகளில் பள்ளிக் காலத்தில் ஈடுபாடு வரவில்லை. அதனால் சமயம், மொழி என்று ஈடுபாடு சென்றது. அதில் நான் தனித்தன்மை உடையவனாகக் 'காட்டி'க் கொள்ள முடிந்ததால் அதில் ஆர்வம் இன்னும் கூடியது. ஆசிரியர்களும் நன்றாகத் தூண்டிவிட்டார்கள். :-)
இப்போது கூட நீங்கள் யாரும் படிக்கவில்லை என்றால் நான் எழுத மாட்டேன். எல்லாம் வெளி வேடம் தான். பெயருக்கும் புகழுக்கும் தான் எல்லாம். :-)
4. செந்தமிழ், செங்கிருதம் போல் செந்தரப்பட்ட சௌராஷ்ட்ரம் இல்லை இராகவ். அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் 'இதெல்லாம் எதற்கு? மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் தானே' என்ற எண்ணம் சௌராஷ்ட்ரர்களில் மிகப் பெரும்பான்மையினருக்கு இருக்கிறது. அதனால் யாரும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
வட்டார வழக்கு சௌராஷ்ட்ரத்தில் இருப்பது இயற்கை தானே. ஊர் மாற்றி ஊர் திருமணம் செய்து கொடுப்பதே இப்போது தான் கொஞ்சம் தொடங்கியிருக்கிறது. சென்ற தலைமுறை வரை அது மிக மிக அரிதாகவே நடந்தது. வெளியூரில் பெண் எடுத்தாலோ கொடுத்தாலோ கேவலமாக எண்ணப்பட்டது. அப்படி கொடுக்கல் வாங்கல் தொடர்பு கூட இல்லாத போது தனித்தனியான பேச்சு வழக்கு ஏற்படுவது இயற்கை தானே. இதனைப் பற்றி எழுதத் தொடங்கினால் நிறைய எழுத வேண்டும். இன்னொரு தருணத்தில் அதனைப் பார்க்கலாம். :-)
Showing posts with label கேள்வி பதில். Show all posts
Showing posts with label கேள்வி பதில். Show all posts
Monday, December 01, 2008
Wednesday, September 24, 2008
வடகரை வேலன், தேவராஜன் ஐயா, சங்குமுகம் மூவருக்கும் வணக்கம் (கேள்வி பதில் 8)
ஜூன் மாதத்தில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இப்பத் தான் பதில் சொல்ல முடிந்தது. மன்னித்துக் கொள்ளுங்கள்.
இந்த இடுகையோடு இது வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை சொல்லிவிட்டேன். இனி மேல் 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன - 2' என்று ஒரு இடுகை இட்டுத் தான் கேள்விகளை வாங்க வேண்டும். :-)
முதலில் வடகரை வேலன் கேட்ட கேள்வியைப் பார்ப்போம்.

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை வேறு ஒருவராக இடம் மாறி வாழ வாய்ப்பு கிடைத்தால் யாராக மாற ஆசைப்படுகிறீர்கள்?
இதென்ன கேள்விங்க? ரொம்ப பொதுவா கேட்டுபுட்டீங்க? சரி. பதில் சொல்ல முயல்கிறேன்.
தற்போது வாழும் வாழ்க்கையை அப்படியே வாழத்தான் ஆசை. நீங்களும் அது மாறணும்ன்னு சொல்லலை போல. அது மாறாம ஆளு மட்டும் மாறணும்ன்னா உடல் மட்டும் மாறுதுன்னு சொல்லுங்க. அது எனக்குப் பொருத்தம் தான். ரொம்ப குண்டா இருக்கேன்னு தெரியுது. ஆனா நாக்கைக் கட்டுப்படுத்தி சாப்பாட்டைக் குறைக்க முடியலை; உடற்பயிற்சியும் செய்யுறதில்லை. அதனால இன்னொருவருடைய உடல் எனக்குக் கிடைக்கணும்ன்னு நான் நினைக்கிறது உண்டு. அந்த உடல் 'இதுவரைக்கும் நன்கு உழைத்து இனிமேல் எந்த உயற்பயிற்சியும் செய்ய வேண்டாம் என்ற வகையில் உடல் இருகிப் போயிருக்கும் யாரோ ஒருவருடைய உடல்'. அம்புட்டுத் தான். :-)
***
இப்ப தேவராஜன் ஐயா கேட்ட கேள்வி:

அன்பரே, சங்க நூல்களில் காணப்படும் தெய்வ வழிபாடு, புராணச் செய்திகள் குறித்த பதிவெல்லாம் எங்கிருந்து பெறலாம்?
நிறைய புத்தகங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன் ஐயா. குறிப்பாக முனைவர் திரு. பி.எஸ். சோமசுந்தரன் அவர்கள் எழுதிய 'முக்கண்ணனும் முகில்வண்ணனும்' என்ற நூலில் முதலத்தியாயங்களில் சங்க இலக்கியத்தில் இருக்கும் இரு பெரும் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். இந்த நூல் சென்னை தி.நகரில் இருக்கும் பல பதிப்பகங்களிலும் கிடைக்கின்றது. வேறு நூற்களும் பதிவுகளும் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஹரியண்ணாவின் (திரு. ஹரிகிருஷ்ணன்) சில நூற்களை கிழக்கு பதிப்பகம் சில நூற்களை வெளியிட்டிருக்கலாம். இணையத்தில் அப்படி தொகுக்கப்பட்டவை இருக்கின்றதா தெரியவில்லை.
அடியேன் அந்த முயற்சியில் இருக்கிறேன். இந்தப் பதிவின் வலப்பக்கத்தில் இருக்கும் வகைகளில் 'இலக்கியத்தில் இறை' என்ற வகையைப் பிடித்துச் சென்றால் இதுவரை இந்த முயற்சியில் வந்த இடுகைகளைப் படிக்கலாம். இந்த முயற்சி தொடர்கின்றது.
***
இனி சங்குமுகம் கேட்ட கேள்வி:

இந்து மதத்தில் உள்ள எல்லாத் தெய்வங்களைப் பற்றியும் பக்தி சிரத்தையாக எழுதுகிறீர்கள். படிக்கும் எனக்கு இவருக்கு சாமியே கிடையாதா என்பதுவே.
இப்படி எல்லாசாமிக்கும் அரோகரா போட்டால், எந்த சாமிதான் உங்களை நம்புவார்?
Hinduism does have polytheism at lower levels. It says as man grows up in his spirituality, he reaches a level of having one Ultimate Reality, the Supreme Being, nameless and formless.
If you continue with polytheism, does it not indicate that you are still at the lowest level of polytheism!
You could clarify.
உங்கள் கேள்விகளுக்குப் பல நிலைகளில் பதில் சொல்லவேண்டும். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.
என் பெயர் குமரன். என் பெற்றோர் 'மகனே' என்று அழைக்கிறார்கள்; என் மக்கள் 'அப்பா' என்று அழைக்கிறார்கள். என் மாமனார் 'மாப்பிள்ளை' என்று அழைக்கிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் குமரனா மகனா அப்பாவா மாப்பிள்ளையா? எல்லாமும் தானே. இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பதால் நான் வெவ்வேறு ஆளாகிவிடுவேனா?
இந்து மதம் என்று இன்று அறியப்படும் மதத்தில் பலவிதமான நம்பிக்கைகளும் சமயங்களும் இருக்கின்றன. அவை சொல்லும் கடவுளர்கள் மட்டுமின்றி வேறு மதங்கள் என்று அறியப்படும் கிறிஸ்தவம், இஸ்லாம், சமணம், பௌத்தம், பார்சி என்று பல மதங்களும் சொல்லும் கடவுளர்களும் எனக்கு வணங்கத் தக்கவர்களே. அவர்களைப் பற்றியும் எழுதுவேன். அப்படி பலவித உருவங்களும் பெயர்களும் ஒருவருக்கே என்பதில் எந்த வித ஐயமும் எனக்கு இல்லை என்பதால்.
எல்லா உருவங்களும் பெயர்களும் ஒருவருடையதே என்னும் போது எந்தப் பெயரில் அழைத்தால் என்ன எந்த உருவத்தை வணங்கினால் என்ன அந்த ஒருவர் தானே குறிப்பிடப்படுகிறார். அப்படி இருக்கும் போது 'எல்லா சாமிகளுக்கும் அரோகரா போட்டால் எந்த சாமி தான் உங்களை நம்புவார்' என்ற கேள்வி பொருளற்றது. :-)
(எல்லா சாமிகளுக்கும் அரோகரா போடுகிறேனே. நீங்கள் இடம் மாற்றி வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். முருகனுக்கும் அண்ணாமலையாருக்கும் அரோகரா போட்டிருப்பேன். வேறு இறைப்பெயர்களுக்கும் 'அரோகரா' போடுவது எங்கள் இரவிசங்கர் கண்ணபிரான் மட்டுமே. :-) அவர் தான் 'ஏடுகொண்டலவாடா வேங்கடரமணா அரோகரா' என்று சொல்லுவார். இன்னொரு நண்பரும் சொல்லுவார் - ஆனால் அவர் அதனைச் சொல்லும் போது அதற்கு வேறு பொருள். :-) )
இந்து மதம் என்பது பல விதமான நம்பிக்கைகளை உடையது என்று சொன்னேன். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். 'பல கடவுளர்களை வணங்குவது கீழ்நிலை; ஒரே இறைவனை வணங்குவது மேல்நிலை' என்று சில இந்து மதப் பிரதிநிதிகளாக எண்ணப்படும் சில பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிவேன். அதனைத் தான் நீங்கள் இங்கே சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் பெரியவர்கள் கருத்துப்படி நான் கீழ் நிலையில் இருப்பவனாக இருக்கலாம்; அன்றி எல்லா பெயர்களும் உருவங்களும் ஒரே இறையுடையதே என்ற புரிதல் இருப்பதால் மேல் நிலையில் இருப்பவனாக இருக்கலாம். தற்போதைக்கு எந்த நிலையில் இருக்கிறேன் என்று அறிவதில் ஆர்வம் இல்லை; கவலையும் இல்லை. 'பல கடவுளர்களை வணங்குவது கீழ் நிலை; ஒரே கடவுளை வணங்குவது மேல் நிலை' என்ற கருத்தில் முழு ஒப்புதலும் இல்லை. :-)
கீழ் நிலை என்று சொல்லப்படுவதில் இருக்கும் பெயர், உருவம், குணம் இவற்றை அனுபவித்திலேயே என் மனம் இப்போது ஈடுபட்டிருக்கிறது. பெயரில்லா உருவமில்லா குணமில்லா இறை சுவைக்கவில்லை. என்னுடைய 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையைப் படித்துப் பாருங்கள். வலப்பக்கத்தில் 'வகைகள்' என்ற தலைப்பின் கீழ் சுட்டி இருக்கின்றது. அந்தக் கதையில் கதைப்போக்கில் என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன்.
***
என்ன நண்பர்களே. அடுத்த இடுகையாக 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன - 2' போட்டுவிடவா? கேள்விகளைக் கேட்பீர்களா? :-)
இந்த இடுகையோடு இது வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை சொல்லிவிட்டேன். இனி மேல் 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன - 2' என்று ஒரு இடுகை இட்டுத் தான் கேள்விகளை வாங்க வேண்டும். :-)
முதலில் வடகரை வேலன் கேட்ட கேள்வியைப் பார்ப்போம்.

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை வேறு ஒருவராக இடம் மாறி வாழ வாய்ப்பு கிடைத்தால் யாராக மாற ஆசைப்படுகிறீர்கள்?
இதென்ன கேள்விங்க? ரொம்ப பொதுவா கேட்டுபுட்டீங்க? சரி. பதில் சொல்ல முயல்கிறேன்.
தற்போது வாழும் வாழ்க்கையை அப்படியே வாழத்தான் ஆசை. நீங்களும் அது மாறணும்ன்னு சொல்லலை போல. அது மாறாம ஆளு மட்டும் மாறணும்ன்னா உடல் மட்டும் மாறுதுன்னு சொல்லுங்க. அது எனக்குப் பொருத்தம் தான். ரொம்ப குண்டா இருக்கேன்னு தெரியுது. ஆனா நாக்கைக் கட்டுப்படுத்தி சாப்பாட்டைக் குறைக்க முடியலை; உடற்பயிற்சியும் செய்யுறதில்லை. அதனால இன்னொருவருடைய உடல் எனக்குக் கிடைக்கணும்ன்னு நான் நினைக்கிறது உண்டு. அந்த உடல் 'இதுவரைக்கும் நன்கு உழைத்து இனிமேல் எந்த உயற்பயிற்சியும் செய்ய வேண்டாம் என்ற வகையில் உடல் இருகிப் போயிருக்கும் யாரோ ஒருவருடைய உடல்'. அம்புட்டுத் தான். :-)
***
இப்ப தேவராஜன் ஐயா கேட்ட கேள்வி:

அன்பரே, சங்க நூல்களில் காணப்படும் தெய்வ வழிபாடு, புராணச் செய்திகள் குறித்த பதிவெல்லாம் எங்கிருந்து பெறலாம்?
நிறைய புத்தகங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன் ஐயா. குறிப்பாக முனைவர் திரு. பி.எஸ். சோமசுந்தரன் அவர்கள் எழுதிய 'முக்கண்ணனும் முகில்வண்ணனும்' என்ற நூலில் முதலத்தியாயங்களில் சங்க இலக்கியத்தில் இருக்கும் இரு பெரும் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். இந்த நூல் சென்னை தி.நகரில் இருக்கும் பல பதிப்பகங்களிலும் கிடைக்கின்றது. வேறு நூற்களும் பதிவுகளும் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஹரியண்ணாவின் (திரு. ஹரிகிருஷ்ணன்) சில நூற்களை கிழக்கு பதிப்பகம் சில நூற்களை வெளியிட்டிருக்கலாம். இணையத்தில் அப்படி தொகுக்கப்பட்டவை இருக்கின்றதா தெரியவில்லை.
அடியேன் அந்த முயற்சியில் இருக்கிறேன். இந்தப் பதிவின் வலப்பக்கத்தில் இருக்கும் வகைகளில் 'இலக்கியத்தில் இறை' என்ற வகையைப் பிடித்துச் சென்றால் இதுவரை இந்த முயற்சியில் வந்த இடுகைகளைப் படிக்கலாம். இந்த முயற்சி தொடர்கின்றது.
***
இனி சங்குமுகம் கேட்ட கேள்வி:

இந்து மதத்தில் உள்ள எல்லாத் தெய்வங்களைப் பற்றியும் பக்தி சிரத்தையாக எழுதுகிறீர்கள். படிக்கும் எனக்கு இவருக்கு சாமியே கிடையாதா என்பதுவே.
இப்படி எல்லாசாமிக்கும் அரோகரா போட்டால், எந்த சாமிதான் உங்களை நம்புவார்?
Hinduism does have polytheism at lower levels. It says as man grows up in his spirituality, he reaches a level of having one Ultimate Reality, the Supreme Being, nameless and formless.
If you continue with polytheism, does it not indicate that you are still at the lowest level of polytheism!
You could clarify.
உங்கள் கேள்விகளுக்குப் பல நிலைகளில் பதில் சொல்லவேண்டும். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.
என் பெயர் குமரன். என் பெற்றோர் 'மகனே' என்று அழைக்கிறார்கள்; என் மக்கள் 'அப்பா' என்று அழைக்கிறார்கள். என் மாமனார் 'மாப்பிள்ளை' என்று அழைக்கிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் குமரனா மகனா அப்பாவா மாப்பிள்ளையா? எல்லாமும் தானே. இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பதால் நான் வெவ்வேறு ஆளாகிவிடுவேனா?
இந்து மதம் என்று இன்று அறியப்படும் மதத்தில் பலவிதமான நம்பிக்கைகளும் சமயங்களும் இருக்கின்றன. அவை சொல்லும் கடவுளர்கள் மட்டுமின்றி வேறு மதங்கள் என்று அறியப்படும் கிறிஸ்தவம், இஸ்லாம், சமணம், பௌத்தம், பார்சி என்று பல மதங்களும் சொல்லும் கடவுளர்களும் எனக்கு வணங்கத் தக்கவர்களே. அவர்களைப் பற்றியும் எழுதுவேன். அப்படி பலவித உருவங்களும் பெயர்களும் ஒருவருக்கே என்பதில் எந்த வித ஐயமும் எனக்கு இல்லை என்பதால்.
எல்லா உருவங்களும் பெயர்களும் ஒருவருடையதே என்னும் போது எந்தப் பெயரில் அழைத்தால் என்ன எந்த உருவத்தை வணங்கினால் என்ன அந்த ஒருவர் தானே குறிப்பிடப்படுகிறார். அப்படி இருக்கும் போது 'எல்லா சாமிகளுக்கும் அரோகரா போட்டால் எந்த சாமி தான் உங்களை நம்புவார்' என்ற கேள்வி பொருளற்றது. :-)
(எல்லா சாமிகளுக்கும் அரோகரா போடுகிறேனே. நீங்கள் இடம் மாற்றி வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். முருகனுக்கும் அண்ணாமலையாருக்கும் அரோகரா போட்டிருப்பேன். வேறு இறைப்பெயர்களுக்கும் 'அரோகரா' போடுவது எங்கள் இரவிசங்கர் கண்ணபிரான் மட்டுமே. :-) அவர் தான் 'ஏடுகொண்டலவாடா வேங்கடரமணா அரோகரா' என்று சொல்லுவார். இன்னொரு நண்பரும் சொல்லுவார் - ஆனால் அவர் அதனைச் சொல்லும் போது அதற்கு வேறு பொருள். :-) )
இந்து மதம் என்பது பல விதமான நம்பிக்கைகளை உடையது என்று சொன்னேன். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். 'பல கடவுளர்களை வணங்குவது கீழ்நிலை; ஒரே இறைவனை வணங்குவது மேல்நிலை' என்று சில இந்து மதப் பிரதிநிதிகளாக எண்ணப்படும் சில பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிவேன். அதனைத் தான் நீங்கள் இங்கே சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் பெரியவர்கள் கருத்துப்படி நான் கீழ் நிலையில் இருப்பவனாக இருக்கலாம்; அன்றி எல்லா பெயர்களும் உருவங்களும் ஒரே இறையுடையதே என்ற புரிதல் இருப்பதால் மேல் நிலையில் இருப்பவனாக இருக்கலாம். தற்போதைக்கு எந்த நிலையில் இருக்கிறேன் என்று அறிவதில் ஆர்வம் இல்லை; கவலையும் இல்லை. 'பல கடவுளர்களை வணங்குவது கீழ் நிலை; ஒரே கடவுளை வணங்குவது மேல் நிலை' என்ற கருத்தில் முழு ஒப்புதலும் இல்லை. :-)
கீழ் நிலை என்று சொல்லப்படுவதில் இருக்கும் பெயர், உருவம், குணம் இவற்றை அனுபவித்திலேயே என் மனம் இப்போது ஈடுபட்டிருக்கிறது. பெயரில்லா உருவமில்லா குணமில்லா இறை சுவைக்கவில்லை. என்னுடைய 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையைப் படித்துப் பாருங்கள். வலப்பக்கத்தில் 'வகைகள்' என்ற தலைப்பின் கீழ் சுட்டி இருக்கின்றது. அந்தக் கதையில் கதைப்போக்கில் என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன்.
***
என்ன நண்பர்களே. அடுத்த இடுகையாக 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன - 2' போட்டுவிடவா? கேள்விகளைக் கேட்பீர்களா? :-)
Friday, August 29, 2008
என் அருமை நண்பனுக்கு வணக்கம் (கேள்வி பதில் 7)
பதிவுலகில் எனக்கிருக்கும் மிகச்சில அருமை நண்பர்களில் இவரும் ஒருவர். ஆனால் அண்மைக்காலமாக என் பதிவுகளுக்கு அவர் வருவதில்லை. எப்போது கேட்டாலும் வேலை மிகுதி என்று காரணம் சொல்கிறார். ஆனால் வேறு இடங்களில் பின்னூட்ட கும்மியும் மின்னரட்டையும் அடித்துக் கொண்டிருக்கிறார். என் மேல் கடுஞ்சினம் இருந்தால் ஒழிய அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை. அதனால் அவருடைய கடுஞ்சினம் தீர்ந்து என் பதிவுகளுக்கு வந்து அவருடைய பொன்னான கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று எல்லாம் வல்ல பெருமாளை (விஷ்ணுவைன்னு விதப்பா சொல்லுன்னு அவர் சொல்லுவார் - ஆனாலும் வழக்கமா சொல்ற மாதிரி பெருமாளைன்னே சொல்லிட்டேன்) அழகனை தேசனை வணங்கிக் கொள்கிறேன். :-)
சௌராஷ்ட்ரத்தில் ராக் என்றால் சினம்; அவி என்றால் வந்து. என்னருமை நண்பரின் பெயரில் இரண்டுமே சேர்ந்து இருப்பதால் அவரை அப்பெயர் கொண்டு நான் அழைப்பதால் பெயரின் பொருளுக்கேற்ப சினம் வந்து இங்கே எட்டிப்பார்ப்பதில்லை போலும். :-)
அவரது சினம் தீர என்ன வழி என்று சிந்தித்ததில் அவர் எப்போதோ கேட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை சொல்லவில்லை என்று நினைவிற்கு வந்தது. சரி அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை சொன்னாலாவது வந்து பார்க்கிறாரா பார்ப்போம் என்று எழுதுகிறேன்.
அவர் கேட்ட கேள்விகளும் அதற்குரிய பதில்களும்:
குமரனிடம் கேள்விகளா? என்ன கேக்குறது? (என்ன கேக்குறதுன்னு என்னையே கேட்டா எப்படிங்க? அதான் டக்கு டக்குன்னு கேள்விகளா கொட்டியிருக்கே). :-)
1. உங்கள் கருத்துப்படி கோழிக்கறியில் எந்தப் பகுதி மிகவும் சுவையானது?
தொடைப்பகுதி. என் மக்களுக்கு கோழிக்கால் பிடிக்கும். :-)
2. ஆட்டாத கறியை ஏன் ஆட்டுக்கறி என்கிறார்கள்?
எனக்கு ஆட்டாத கறியை விட நுண்மையா அடிச்ச கறி பிடிக்கும். கைம்மான்னும் கொத்துக்கறின்னும் சொல்லுவாங்க. கொத்துக்கறி பாக்குறதுக்கு ஆட்டுன கறி மாதிரி இருக்குறதால ஆட்டுக்கறிங்கறாங்களோ என்னமோ? :-)
3. அமெரிக்கா இந்தியா தவிர்த்த ஏதாவது ஒரு நாட்டில்தான் இனிமேல் வாழவேண்டும் என்ற நிலை வந்தால் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவீர்கள்?
சிங்கப்பூர். அப்படித் தான் சொல்லணும்ன்னு மேலிடத்துக் கட்டளை. :-)
மேலிடம் யாருன்னா கேக்குறீங்க? அதெல்லாம் சொல்லிக்கிட்டேவா இருப்பாங்க? ;-)
4. தங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமை உங்கள் குழந்தைகளுக்குக்குக் கொடுக்கப்படுமா?
கட்டாயமா. இதுக்கு மேல ஏதாவது சொல்லி மாட்டிக்குவேனா என்ன? :-)
5. சின்னவீடு வைத்துக் கொள்வதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
குமரன்னு பேரு இருக்குறதால தானே இதைக் கேக்குறீங்க. உங்க பெயரை வச்சு உங்ககிட்ட அதைக் கேக்க முடியாதுன்னு ரொம்பவே துணிச்சல் தான். :-)
வீட்டில் நாங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி பேசுவது இது. இப்போதிருக்கிற நிலைமையில் ஒரு சின்ன வீடும் வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும் என்று. என் பொண்ணு தான் 'அப்ப இந்த பெரியவீட்டை வாடகைக்கு விட்டுட்டு நாம சின்னவீட்டுக்குப் போயிருவோமா அப்பா?'ன்னு கவலைப்படறா. :-)
தொலைக்காட்சியில என்னமோ பாட்டு வருதே. என்ன நீங்களும் பாக்கணுமா? இதோ பாருங்க.
சௌராஷ்ட்ரத்தில் ராக் என்றால் சினம்; அவி என்றால் வந்து. என்னருமை நண்பரின் பெயரில் இரண்டுமே சேர்ந்து இருப்பதால் அவரை அப்பெயர் கொண்டு நான் அழைப்பதால் பெயரின் பொருளுக்கேற்ப சினம் வந்து இங்கே எட்டிப்பார்ப்பதில்லை போலும். :-)
அவரது சினம் தீர என்ன வழி என்று சிந்தித்ததில் அவர் எப்போதோ கேட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை சொல்லவில்லை என்று நினைவிற்கு வந்தது. சரி அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை சொன்னாலாவது வந்து பார்க்கிறாரா பார்ப்போம் என்று எழுதுகிறேன்.
அவர் கேட்ட கேள்விகளும் அதற்குரிய பதில்களும்:
குமரனிடம் கேள்விகளா? என்ன கேக்குறது? (என்ன கேக்குறதுன்னு என்னையே கேட்டா எப்படிங்க? அதான் டக்கு டக்குன்னு கேள்விகளா கொட்டியிருக்கே). :-)
1. உங்கள் கருத்துப்படி கோழிக்கறியில் எந்தப் பகுதி மிகவும் சுவையானது?
தொடைப்பகுதி. என் மக்களுக்கு கோழிக்கால் பிடிக்கும். :-)
2. ஆட்டாத கறியை ஏன் ஆட்டுக்கறி என்கிறார்கள்?
எனக்கு ஆட்டாத கறியை விட நுண்மையா அடிச்ச கறி பிடிக்கும். கைம்மான்னும் கொத்துக்கறின்னும் சொல்லுவாங்க. கொத்துக்கறி பாக்குறதுக்கு ஆட்டுன கறி மாதிரி இருக்குறதால ஆட்டுக்கறிங்கறாங்களோ என்னமோ? :-)
3. அமெரிக்கா இந்தியா தவிர்த்த ஏதாவது ஒரு நாட்டில்தான் இனிமேல் வாழவேண்டும் என்ற நிலை வந்தால் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவீர்கள்?
சிங்கப்பூர். அப்படித் தான் சொல்லணும்ன்னு மேலிடத்துக் கட்டளை. :-)
மேலிடம் யாருன்னா கேக்குறீங்க? அதெல்லாம் சொல்லிக்கிட்டேவா இருப்பாங்க? ;-)
4. தங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமை உங்கள் குழந்தைகளுக்குக்குக் கொடுக்கப்படுமா?
கட்டாயமா. இதுக்கு மேல ஏதாவது சொல்லி மாட்டிக்குவேனா என்ன? :-)
5. சின்னவீடு வைத்துக் கொள்வதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
குமரன்னு பேரு இருக்குறதால தானே இதைக் கேக்குறீங்க. உங்க பெயரை வச்சு உங்ககிட்ட அதைக் கேக்க முடியாதுன்னு ரொம்பவே துணிச்சல் தான். :-)
வீட்டில் நாங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி பேசுவது இது. இப்போதிருக்கிற நிலைமையில் ஒரு சின்ன வீடும் வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும் என்று. என் பொண்ணு தான் 'அப்ப இந்த பெரியவீட்டை வாடகைக்கு விட்டுட்டு நாம சின்னவீட்டுக்குப் போயிருவோமா அப்பா?'ன்னு கவலைப்படறா. :-)
தொலைக்காட்சியில என்னமோ பாட்டு வருதே. என்ன நீங்களும் பாக்கணுமா? இதோ பாருங்க.
மதுரையம்பதிக்கு வணக்கம் (கேள்வி பதில் 6)
ஆன்மிகத்தில் எல்லையில்லா ஆர்வம் கொண்டவர், ஆசார்ய ஹ்ருதயத்தை அறிந்தவர், அன்னையின் அருட்பாலகர் மதுரையம்பதி வளர் சந்திரமௌலி அண்ணன் ஒரு அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
அத்வைதம் / விசிஷ்டாத்வைதம் / துவைதம் ஆகிய மூன்றில் எதை நீங்க உங்களுக்கு ஏற்றதாக நினைக்கிறீங்க? [ஏதேனும் ஒன்றை மட்டும் சொல்லவும்]. ஏன் அது உங்களுக்கு ஏற்றதுன்னு நினைக்கிறீங்க?
இது தான் அவருடைய கேள்வி.
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
என்று நம்மாழ்வார் அருளிய பாசுர வரிகள் தான் என் எண்ணமும். ஆனால் குறிப்பிட்டு ஒன்றை மட்டும் சொல்லவேண்டும் என்று பணித்திருப்பதால் சொல்கிறேன். அடியேன் சிறிய ஞானத்தன் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டுகிறேன். :-)
இப்போது சுருக்கமாக மூன்று தத்துவங்களைப் பற்றியும் சொல்லுகிறேன் - மௌலிக்காக இல்லை. மற்றவருக்காக. :-)
அத்வைதம் சொல்வது - இறை (ப்ரம்மம்), உயிர் (ஜீவன்) இரண்டும் ஒன்றே. இறையொன்றே இருக்கிறது. உலகம் பொய்த்தோற்றம். உயிர் தானே இறையாக இருப்பதை உணர்வதே விடுதலை (முக்தி/மோக்ஷம்).
ஒன்றே உண்டு; வேறொன்று இல்லை என்று சொல்வதால் இந்தத் தத்துவத்திற்கு அத்வைதம் (அல்லிருமை) என்று பெயர்.
விசிஷ்டாத்வைதம் சொல்வது - இறை, உயிர், உலகம் மூன்றுமே மெய்ப்பொருட்கள். உயிர்களும் உலகங்களும் இறையின் அங்கங்களாக இருக்கின்றன. அவ்வகையில் இறை ஒன்றே உண்டு. அங்கங்கள் முழுமைக்கு என்றும் அடங்கியவை என்று உயிர் உணர்ந்து தன் உண்மை உருவை அடையும் போது விடுதலை.
மூன்று பொருட்கள் உண்டு; ஆனால் அவற்றில் கடைசி இரண்டு முதலாவதான இறையின் அங்கங்கள் என்பதால் இறையொன்றே அங்கங்களுடன் உண்டு என்று சொல்வதால் இந்தத் தத்துவத்திற்கு விசிஷ்டாத்வைதம் (விதப்பொருமை) என்று பெயர்.
த்வைதம் சொல்வது - இறை, உயிர், உலகம் மூன்றுமே மெய்ப்பொருட்கள். மூன்றும் வெவ்வேறானவை. உயிர்களும் உலகங்களும் இறைக்கு அடங்கியவை.
இரண்டிரண்டாக எதையும் எதிர் எதிர் நிலையில் வைத்துச் சொல்லுவதால் இந்தத் தத்துவத்திற்கு த்வைதம் (இருமை) என்று பெயர்.
மூன்று தத்துவங்களும் தென்னாட்டில் தோன்றியவை. அந்தத் தத்துவங்கள் தென்னாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தவை. அவற்றை வெளிக்கொணர்ந்து வேத நெறியும் அத்தத்துவங்களையே சொல்கின்றன என்று நிலைநாட்டியவர்களையே இன்று நாம் அந்தத் தத்துவங்களைத் தோற்றுவித்தவர்களாக எண்ணிக் கொள்கிறொம்; ஆனால் அவை ஆதிசங்கரருக்கு முன்னரே, இராமானுஜருக்கு முன்னரே, மத்வருக்கு முன்னரே இருந்தவையே. இவர்கள் அந்த அந்த தத்துவங்களை தான் வேத நெறியின் முதன்மை நூற்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை மூன்றுமே சொல்கின்றன என்று நிலைநாட்டியவர்கள். அவர்கள் அவற்றைத் தோற்றுவித்தவர்கள் இல்லை.
இந்த மூன்று நூற்களிலும் இம்மூன்று தத்துவங்களையும் கூறும் கருத்துகள் இருக்கின்றன. அபேத ஸ்ருதிகள் என்னும் 'உயிர், உலகம், இறை இவற்றிற்கிடையே வேறுபாடின்மையைக் கூறும் வாக்கியங்கள்' இருக்கின்றன. பேத ஸ்ருதிகள் என்னும் 'உயிர், உலகம், இறை இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறும் வாக்கியங்கள்' இருக்கின்றன. கடக ஸ்ருதிகள் என்னும் 'வேறுபாடின்மையையும் வேறுபாடுகளையும் கூறும் வாக்கியங்களை இணைக்கும் வாக்கியங்கள்' இருக்கின்றன.
அத்வைதிகள் அபேத ஸ்ருதிகளையும் அவற்றின் நான்கு மஹாவாக்கியங்களையும் முதன்மையாகக் கொண்டு அத்வைதத்தை நிலை நாட்டுகிறார்கள். அவர்கள் பேத ஸ்ருதிகளுக்குப் பொருள் சொல்வதில்லை.
த்வைதிகள் பேத ஸ்ருதிகளை முதன்மையாகக் கொண்டு த்வைதத்தை நிலை நாட்டுகிறார்கள். அவர்கள் அபேத ஸ்ருதிகளுக்குப் பொருள் சொல்வதில்லை.
விசிஷ்டாத்வைதிகள் கடக ஸ்ருதிகளை முதன்மையாகக் கொள்வதால் அதற்கேற்ப பேத ஸ்ருதிகளுக்கும், அபேத ஸ்ருதிகளுக்கும் பொருள் கூறுகிறார்கள்.
இதுவரை இந்த மூன்று தத்துவங்களைப் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். அப்படிச் சொன்னதிலேயே என் மனத்திற்குகந்த தத்துவம் எது என்றும் அது ஏன் என்றும் குறிப்பாகச் சொல்லியிருக்கிறேன். இனி மேல் வெளிப்படையாகச் சொல்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தத்துவங்களில் ஈடுபாடு இல்லை. எங்கள் குடும்பம் சிருங்கேரி மடத்தின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் நேரடித் தொடர்பு பல காலமாக இல்லை. அதனால் பிறப்பால் நான் அத்வைதி என்று தொடக்கத்தில் நினைத்துக் கொண்டேன். குலக்கடவுள் முருகப்பெருமான். பள்ளிக்காலம் முடியும் வரை அன்னையின் முருக பக்தி ஆட்கொண்டிருந்தது. தத்துவங்களில் அந்த வயதில் இறங்கவில்லை.
அன்னையின் மறைவிற்குப் பிறகு கல்லூரிக்காலத்தில் கண்ணனின் அறிமுகம் கிட்டியது. கீதையின் அறிமுகம் கிட்டியது; நாலாயிரத்தின் அறிமுகம் கிட்டியது; கண்ணனிடம் நெருக்கம் ஏற்பட்டது. குலக்கடவுளின் ஈர்ப்பினை ஒத்த ஈர்ப்பாக கண்ணனின் ஈர்ப்பும் இருந்தது. அதனால் அவன் என் காமக்கடவுள் (இஷ்டதெய்வம்) என்றும் சொல்லத் தொடங்கினேன்.
கீதையைப் படிக்கத் தொடங்கியவுடன் தத்துவ ஆராய்ச்சி தொடங்கியது. அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைதங்களைப் படிக்கத் தொடங்கினேன். நாலாயிரத்தின் துணையுடன் அவற்றைப் படிக்கத் தொடங்கியதால் விசிஷ்டாத்வைதத்திலேயே மனம் பற்றுதல் கொண்டது. அத்வைதமும் த்வைதமும் மனத்திற்கு ஏற்புடையதாக இல்லை. அதற்குத் தமிழின் பால் கொண்ட பற்றுதலும் காரணமாக இருக்கலாம். அத்வைத த்வைத தத்துவங்களைப் படிக்க வடமொழி நூற்களே இருந்தன. நாலாயிரத்தைப் போல் தமிழ் கூறும் தத்துவம் இது என்று கூறும் வகையில் அவ்விரண்டும் இல்லை.
விசிஷ்டாத்வைதம் கடக ஸ்ருதிகளை எடுத்துக் கொள்வதால் முழுமையாக பேத அபேத ஸ்ருதிகளுக்கும் பொருள் சொல்கிறது. அதனால் இதுவே முழுமையான தத்துவம் என்ற எண்ணமும் உண்டு.
சைவ சித்தாந்தத்தையும் அந்தத் தமிழார்வம் என்ற வகையிலேயே படிக்கத் தொடங்கினேன். விசிஷ்டாத்வைதமும் சைவ சித்தாந்தமும் ஏறக்குறைய ஒரே தத்துவம் தான் என்று படிக்கப் படிக்கத் தோன்றியது. விசிஷ்டாத்வைதம் பக்திக்கு முதன்மை இடம் கொடுக்க சைவ சித்தாந்தம் யோகத்திற்கு முதன்மை இடம் கொடுத்தது. அது ஒன்று மட்டுமே வேறுபாடு. மற்ற படி தத்துவம் என்று பார்த்தால் இரண்டும் ஒன்றே. இன்னொரு வேறுபாடும் உண்டு. விசிஷ்டாத்வைதம் விஷ்ணு பரம் சொல்லும்; சைவசித்தாந்தம் சிவபரம் சொல்லும்.
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் மௌலி கேட்ட கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொன்னால் அந்த பதில்: விசிஷ்டாத்வைதம் தான் என் மனத்திற்கு உகந்ததாக தற்போது இருக்கிறது. :-)
அத்வைதம் / விசிஷ்டாத்வைதம் / துவைதம் ஆகிய மூன்றில் எதை நீங்க உங்களுக்கு ஏற்றதாக நினைக்கிறீங்க? [ஏதேனும் ஒன்றை மட்டும் சொல்லவும்]. ஏன் அது உங்களுக்கு ஏற்றதுன்னு நினைக்கிறீங்க?
இது தான் அவருடைய கேள்வி.
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
என்று நம்மாழ்வார் அருளிய பாசுர வரிகள் தான் என் எண்ணமும். ஆனால் குறிப்பிட்டு ஒன்றை மட்டும் சொல்லவேண்டும் என்று பணித்திருப்பதால் சொல்கிறேன். அடியேன் சிறிய ஞானத்தன் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டுகிறேன். :-)
இப்போது சுருக்கமாக மூன்று தத்துவங்களைப் பற்றியும் சொல்லுகிறேன் - மௌலிக்காக இல்லை. மற்றவருக்காக. :-)
அத்வைதம் சொல்வது - இறை (ப்ரம்மம்), உயிர் (ஜீவன்) இரண்டும் ஒன்றே. இறையொன்றே இருக்கிறது. உலகம் பொய்த்தோற்றம். உயிர் தானே இறையாக இருப்பதை உணர்வதே விடுதலை (முக்தி/மோக்ஷம்).
ஒன்றே உண்டு; வேறொன்று இல்லை என்று சொல்வதால் இந்தத் தத்துவத்திற்கு அத்வைதம் (அல்லிருமை) என்று பெயர்.
விசிஷ்டாத்வைதம் சொல்வது - இறை, உயிர், உலகம் மூன்றுமே மெய்ப்பொருட்கள். உயிர்களும் உலகங்களும் இறையின் அங்கங்களாக இருக்கின்றன. அவ்வகையில் இறை ஒன்றே உண்டு. அங்கங்கள் முழுமைக்கு என்றும் அடங்கியவை என்று உயிர் உணர்ந்து தன் உண்மை உருவை அடையும் போது விடுதலை.
மூன்று பொருட்கள் உண்டு; ஆனால் அவற்றில் கடைசி இரண்டு முதலாவதான இறையின் அங்கங்கள் என்பதால் இறையொன்றே அங்கங்களுடன் உண்டு என்று சொல்வதால் இந்தத் தத்துவத்திற்கு விசிஷ்டாத்வைதம் (விதப்பொருமை) என்று பெயர்.
த்வைதம் சொல்வது - இறை, உயிர், உலகம் மூன்றுமே மெய்ப்பொருட்கள். மூன்றும் வெவ்வேறானவை. உயிர்களும் உலகங்களும் இறைக்கு அடங்கியவை.
இரண்டிரண்டாக எதையும் எதிர் எதிர் நிலையில் வைத்துச் சொல்லுவதால் இந்தத் தத்துவத்திற்கு த்வைதம் (இருமை) என்று பெயர்.
மூன்று தத்துவங்களும் தென்னாட்டில் தோன்றியவை. அந்தத் தத்துவங்கள் தென்னாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தவை. அவற்றை வெளிக்கொணர்ந்து வேத நெறியும் அத்தத்துவங்களையே சொல்கின்றன என்று நிலைநாட்டியவர்களையே இன்று நாம் அந்தத் தத்துவங்களைத் தோற்றுவித்தவர்களாக எண்ணிக் கொள்கிறொம்; ஆனால் அவை ஆதிசங்கரருக்கு முன்னரே, இராமானுஜருக்கு முன்னரே, மத்வருக்கு முன்னரே இருந்தவையே. இவர்கள் அந்த அந்த தத்துவங்களை தான் வேத நெறியின் முதன்மை நூற்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை மூன்றுமே சொல்கின்றன என்று நிலைநாட்டியவர்கள். அவர்கள் அவற்றைத் தோற்றுவித்தவர்கள் இல்லை.
இந்த மூன்று நூற்களிலும் இம்மூன்று தத்துவங்களையும் கூறும் கருத்துகள் இருக்கின்றன. அபேத ஸ்ருதிகள் என்னும் 'உயிர், உலகம், இறை இவற்றிற்கிடையே வேறுபாடின்மையைக் கூறும் வாக்கியங்கள்' இருக்கின்றன. பேத ஸ்ருதிகள் என்னும் 'உயிர், உலகம், இறை இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறும் வாக்கியங்கள்' இருக்கின்றன. கடக ஸ்ருதிகள் என்னும் 'வேறுபாடின்மையையும் வேறுபாடுகளையும் கூறும் வாக்கியங்களை இணைக்கும் வாக்கியங்கள்' இருக்கின்றன.
அத்வைதிகள் அபேத ஸ்ருதிகளையும் அவற்றின் நான்கு மஹாவாக்கியங்களையும் முதன்மையாகக் கொண்டு அத்வைதத்தை நிலை நாட்டுகிறார்கள். அவர்கள் பேத ஸ்ருதிகளுக்குப் பொருள் சொல்வதில்லை.
த்வைதிகள் பேத ஸ்ருதிகளை முதன்மையாகக் கொண்டு த்வைதத்தை நிலை நாட்டுகிறார்கள். அவர்கள் அபேத ஸ்ருதிகளுக்குப் பொருள் சொல்வதில்லை.
விசிஷ்டாத்வைதிகள் கடக ஸ்ருதிகளை முதன்மையாகக் கொள்வதால் அதற்கேற்ப பேத ஸ்ருதிகளுக்கும், அபேத ஸ்ருதிகளுக்கும் பொருள் கூறுகிறார்கள்.
இதுவரை இந்த மூன்று தத்துவங்களைப் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். அப்படிச் சொன்னதிலேயே என் மனத்திற்குகந்த தத்துவம் எது என்றும் அது ஏன் என்றும் குறிப்பாகச் சொல்லியிருக்கிறேன். இனி மேல் வெளிப்படையாகச் சொல்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தத்துவங்களில் ஈடுபாடு இல்லை. எங்கள் குடும்பம் சிருங்கேரி மடத்தின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் நேரடித் தொடர்பு பல காலமாக இல்லை. அதனால் பிறப்பால் நான் அத்வைதி என்று தொடக்கத்தில் நினைத்துக் கொண்டேன். குலக்கடவுள் முருகப்பெருமான். பள்ளிக்காலம் முடியும் வரை அன்னையின் முருக பக்தி ஆட்கொண்டிருந்தது. தத்துவங்களில் அந்த வயதில் இறங்கவில்லை.
அன்னையின் மறைவிற்குப் பிறகு கல்லூரிக்காலத்தில் கண்ணனின் அறிமுகம் கிட்டியது. கீதையின் அறிமுகம் கிட்டியது; நாலாயிரத்தின் அறிமுகம் கிட்டியது; கண்ணனிடம் நெருக்கம் ஏற்பட்டது. குலக்கடவுளின் ஈர்ப்பினை ஒத்த ஈர்ப்பாக கண்ணனின் ஈர்ப்பும் இருந்தது. அதனால் அவன் என் காமக்கடவுள் (இஷ்டதெய்வம்) என்றும் சொல்லத் தொடங்கினேன்.
கீதையைப் படிக்கத் தொடங்கியவுடன் தத்துவ ஆராய்ச்சி தொடங்கியது. அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைதங்களைப் படிக்கத் தொடங்கினேன். நாலாயிரத்தின் துணையுடன் அவற்றைப் படிக்கத் தொடங்கியதால் விசிஷ்டாத்வைதத்திலேயே மனம் பற்றுதல் கொண்டது. அத்வைதமும் த்வைதமும் மனத்திற்கு ஏற்புடையதாக இல்லை. அதற்குத் தமிழின் பால் கொண்ட பற்றுதலும் காரணமாக இருக்கலாம். அத்வைத த்வைத தத்துவங்களைப் படிக்க வடமொழி நூற்களே இருந்தன. நாலாயிரத்தைப் போல் தமிழ் கூறும் தத்துவம் இது என்று கூறும் வகையில் அவ்விரண்டும் இல்லை.
விசிஷ்டாத்வைதம் கடக ஸ்ருதிகளை எடுத்துக் கொள்வதால் முழுமையாக பேத அபேத ஸ்ருதிகளுக்கும் பொருள் சொல்கிறது. அதனால் இதுவே முழுமையான தத்துவம் என்ற எண்ணமும் உண்டு.
சைவ சித்தாந்தத்தையும் அந்தத் தமிழார்வம் என்ற வகையிலேயே படிக்கத் தொடங்கினேன். விசிஷ்டாத்வைதமும் சைவ சித்தாந்தமும் ஏறக்குறைய ஒரே தத்துவம் தான் என்று படிக்கப் படிக்கத் தோன்றியது. விசிஷ்டாத்வைதம் பக்திக்கு முதன்மை இடம் கொடுக்க சைவ சித்தாந்தம் யோகத்திற்கு முதன்மை இடம் கொடுத்தது. அது ஒன்று மட்டுமே வேறுபாடு. மற்ற படி தத்துவம் என்று பார்த்தால் இரண்டும் ஒன்றே. இன்னொரு வேறுபாடும் உண்டு. விசிஷ்டாத்வைதம் விஷ்ணு பரம் சொல்லும்; சைவசித்தாந்தம் சிவபரம் சொல்லும்.
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் மௌலி கேட்ட கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொன்னால் அந்த பதில்: விசிஷ்டாத்வைதம் தான் என் மனத்திற்கு உகந்ததாக தற்போது இருக்கிறது. :-)
Wednesday, August 06, 2008
திண்டுக்கல் சர்தார், துரை தியாகராஜ் இருவருக்கும் வணக்கம் (கேள்வி பதில் 5)
சர்தார்,
உங்கள் கேள்விகளைப் படித்த போது கரகாட்டக்காரன் கவுண்டமணி செந்தில் நகைச்சுவைக் காட்சி தான் நினைவிற்கு வந்தது. 'எங்கிட்ட ஏன்டா கேட்ட?'ன்னு கவுண்டமணி செந்திலை திருப்பித் திருப்பிக் கேட்டு அடிப்பாரே அது. :-)
நீங்க கேட்டதெல்லாம் கேள்விகள் இல்லை. உங்கள் நம்பிக்கைகள். ஒவ்வொன்னா எடுத்துக்கிட்டு பதில் சொல்லலாம் தான். ஆனால் அதனால் எதுவும் பயனிருக்கப் போவதில்லை. எடுத்துக்காட்டிற்கு தசரதன் செய்தது அசுவமேத யாகம் இல்லை புத்திரகாமேஷ்டி யாகம் என்று சொன்னால் நீங்கள் கேட்கப் போவதில்லை. அது அசுவமேத யாகம் தான் என்று யாராவது எழுதியதை எடுத்துக்காட்டுவீர்கள்; இல்லையேல் புத்திரகாமேஷ்டியையும் கொச்சைப்படுத்த முடிந்தால் அதனையும் கொச்சைப்படுத்திக் காட்டுவீர்கள். அந்த நிலையில் பேசுவதில் பயனில்லை. சரி தானே? :-) அதனால் நீங்கள் பட்டியல் இட்ட அத்தனைக்கும் பதில் இவ்வளவு தான் என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். தவறாக நினைக்காதீர்கள். நன்றிகள். :-)
***
முதல் வருகைக்கு நன்றிகள் துரை தியாகராஜ். வரும் போதே 'நண்பா' என்று விளித்துக் கொண்டு வந்ததற்கும் நன்றிகள் நண்பரே. இதோ உங்கள் கேள்விகளும் அதற்குரிய பதில்களும்.
1. உங்கள் மனதில் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் விசயம் என்ன?
இது மாறிக் கொண்டே இருக்கும் இல்லையா? இது தான் எப்போதும் ஓடும் விதயம் என்று சொல்ல முடியாதே. இப்போது, இங்கே பதில் எழுதும் போது, ஓடிக் கொண்டிருப்பவை இரு விதயங்கள். ஒன்று அலுவலக வேலையைப் பற்றிய சிந்தனை. இரண்டாவது அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற சிந்தனை.
இதைத் தான் எதிர்பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டீர்களா?
2. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் 16..18..20..24..28..35..45..50..போதும் என்ன தோன்றும் (வயது) ?
பார்ப்பவனின் பார்வையைப் பொறுத்தது தானே இது. வயது என்பதை விட அந்தப் பெண்ணின் தோற்றமே மனத்தில் சலனத்தை ஏற்படுத்துகின்றது எனக்கு. பார்ப்பதற்கு அழகாக, கலையாக, இருக்கும் பெண்கள் எந்த வயதாக இருந்தாலும் இரண்டாவது முறை பார்க்க வைக்கிறார்கள். இதில் ஒவ்வொரு வயதாக, நீங்கள் பட்டியல் இட்டிருப்பதைப் போல் எடுத்துக் கொண்டு சொல்வதில் எதுவும் வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன்.
பெண்ணைப் பற்றி மட்டுமே நீங்கள் கேட்டிருந்தாலும் அழகான தோற்றம் கொண்ட ஆண்களைப் பார்க்கும் போதும் இது தான் எனக்கு ஏற்படுகிறது. அதனால் ஆணோ பெண்ணோ முதலில் அவர்களின் தோற்றம் தான் கவர்கிறது. பின்னரே தோற்றத்தைத் தாண்டிச் செல்ல முடிகிறது. இது அனைவருக்கும் பொதுவான ஒன்று என்று நினைக்கிறேன். ஆனால் அனைவரும் உணர்ந்த ஒன்றாக இருக்காது என்றும் நினைக்கிறேன் - ஆண்களுக்குப் பெண்கள் தங்களைக் கவர்வது அவர்களது தோற்றத்தால் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும்; ஆனால் மற்ற ஆண்களும் தங்களை அவர்களது தோற்றத்தால் தான் கவர்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள்; அப்படியே உணர்ந்திருந்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள். சரியா? :-)
3. நீங்கள் உங்கள் பெற்றோரை விட மிக எளிதாக பொருளாதார வசதி பெற்றதற்கு ஏதேனும் ஆசிர்வாதம் உள்ளதா?
இல்லை. காலத்தின் சுழற்சியில் மேலே செல்லும் பக்கத்தில் நான் இருக்கிறேன். மேலும் கீழும் சென்று வரும் காலமென்னும் அலையில் இப்போது நான் இருப்பது மேலெழும்பும் அலையில். அவ்வளவு தான். இந்தச் சுழற்சி இயற்கையானது. அதில் தனிப்பட்ட ஆசி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இதே கேள்வியை 'உங்களின் நண்பர்கள், உறவினர்கள் என்று வயதிலும், படிப்பிலும், திறமையிலும், வாய்ப்புகளிலும் ஒத்தவர்களை விட நீங்கள் மிக எளிதாக பொருளாதார வசதி பெற்றதற்கு ஏதேனும் ஆசிர்வாதம் இருக்கிறதா' என்று கேட்டிருந்தீர்கள் என்றால் என் பதில் 'ஆமாம்' என்று இருந்திருக்கும். :-)
4. முதலிரவில் நீங்கள் என்ன எண்ண ஓட்டத்தில் இருந்தீர்கள்...?
மறந்து போச்சே. ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகிவிட்டன. முதலிரவிற்குப் பின்னர் எத்தனையோ இரவுகள் வந்து சென்று விட்டன. அதனால் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன என்பதில் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏறக்குறைய என்ன உணர்வுகள் இருந்தன என்று கேட்டால் 'இம்ப்ரஸ் செய்ய வேண்டும்', 'அனுபவிக்க வேண்டும்', 'அவளது உணர்வுகளையும் உணர்ந்து செயல்படவேண்டும்', 'புதுமையாக இருக்கப் போகிறது' போன்ற கலவையான பல உணர்வுகள்/எண்ணங்கள்.
5. உங்கள் உறவினர் மத்தியில் உங்களைப்பற்றி என்ன அபிப்பிராயம் வைத்துள்ளார்கள்?
நல்லவன், அறிவாளி, அதிர்ஷ்டக்காரன், உறவினர்களையும் நண்பர்களையும் பொருட்படுத்தாதவன், அன்புள்ளவன், மரியாதையானவன், பக்திமான், சுயநலவாதி, மற்றவர்களுக்கு உதவுபவன், எடுத்துக்காட்டாக இருப்பவன் (நல்லா படிடா, அப்பத் தான் குமரனை மாதிரி அமெரிக்கா போயி நல்லா சம்பாதிக்கலாம்), .... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு மாதிரி. :-)
சீக்கிரம் சொல்லுங்கன்னு கேட்டிருந்தீங்க. ஆனால் நான் என்னோட வழக்கமான வழக்கத்தின் படி ரொம்ப நாள் கழித்துப் பதில் சொல்லியிருக்கிறேன். மன்னிச்சுக்கோங்க. :-)
உங்கள் கேள்விகளைப் படித்த போது கரகாட்டக்காரன் கவுண்டமணி செந்தில் நகைச்சுவைக் காட்சி தான் நினைவிற்கு வந்தது. 'எங்கிட்ட ஏன்டா கேட்ட?'ன்னு கவுண்டமணி செந்திலை திருப்பித் திருப்பிக் கேட்டு அடிப்பாரே அது. :-)
நீங்க கேட்டதெல்லாம் கேள்விகள் இல்லை. உங்கள் நம்பிக்கைகள். ஒவ்வொன்னா எடுத்துக்கிட்டு பதில் சொல்லலாம் தான். ஆனால் அதனால் எதுவும் பயனிருக்கப் போவதில்லை. எடுத்துக்காட்டிற்கு தசரதன் செய்தது அசுவமேத யாகம் இல்லை புத்திரகாமேஷ்டி யாகம் என்று சொன்னால் நீங்கள் கேட்கப் போவதில்லை. அது அசுவமேத யாகம் தான் என்று யாராவது எழுதியதை எடுத்துக்காட்டுவீர்கள்; இல்லையேல் புத்திரகாமேஷ்டியையும் கொச்சைப்படுத்த முடிந்தால் அதனையும் கொச்சைப்படுத்திக் காட்டுவீர்கள். அந்த நிலையில் பேசுவதில் பயனில்லை. சரி தானே? :-) அதனால் நீங்கள் பட்டியல் இட்ட அத்தனைக்கும் பதில் இவ்வளவு தான் என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். தவறாக நினைக்காதீர்கள். நன்றிகள். :-)
***
முதல் வருகைக்கு நன்றிகள் துரை தியாகராஜ். வரும் போதே 'நண்பா' என்று விளித்துக் கொண்டு வந்ததற்கும் நன்றிகள் நண்பரே. இதோ உங்கள் கேள்விகளும் அதற்குரிய பதில்களும்.
1. உங்கள் மனதில் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் விசயம் என்ன?
இது மாறிக் கொண்டே இருக்கும் இல்லையா? இது தான் எப்போதும் ஓடும் விதயம் என்று சொல்ல முடியாதே. இப்போது, இங்கே பதில் எழுதும் போது, ஓடிக் கொண்டிருப்பவை இரு விதயங்கள். ஒன்று அலுவலக வேலையைப் பற்றிய சிந்தனை. இரண்டாவது அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற சிந்தனை.
இதைத் தான் எதிர்பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டீர்களா?
2. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் 16..18..20..24..28..35..45..50..போதும் என்ன தோன்றும் (வயது) ?
பார்ப்பவனின் பார்வையைப் பொறுத்தது தானே இது. வயது என்பதை விட அந்தப் பெண்ணின் தோற்றமே மனத்தில் சலனத்தை ஏற்படுத்துகின்றது எனக்கு. பார்ப்பதற்கு அழகாக, கலையாக, இருக்கும் பெண்கள் எந்த வயதாக இருந்தாலும் இரண்டாவது முறை பார்க்க வைக்கிறார்கள். இதில் ஒவ்வொரு வயதாக, நீங்கள் பட்டியல் இட்டிருப்பதைப் போல் எடுத்துக் கொண்டு சொல்வதில் எதுவும் வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன்.
பெண்ணைப் பற்றி மட்டுமே நீங்கள் கேட்டிருந்தாலும் அழகான தோற்றம் கொண்ட ஆண்களைப் பார்க்கும் போதும் இது தான் எனக்கு ஏற்படுகிறது. அதனால் ஆணோ பெண்ணோ முதலில் அவர்களின் தோற்றம் தான் கவர்கிறது. பின்னரே தோற்றத்தைத் தாண்டிச் செல்ல முடிகிறது. இது அனைவருக்கும் பொதுவான ஒன்று என்று நினைக்கிறேன். ஆனால் அனைவரும் உணர்ந்த ஒன்றாக இருக்காது என்றும் நினைக்கிறேன் - ஆண்களுக்குப் பெண்கள் தங்களைக் கவர்வது அவர்களது தோற்றத்தால் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும்; ஆனால் மற்ற ஆண்களும் தங்களை அவர்களது தோற்றத்தால் தான் கவர்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள்; அப்படியே உணர்ந்திருந்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள். சரியா? :-)
3. நீங்கள் உங்கள் பெற்றோரை விட மிக எளிதாக பொருளாதார வசதி பெற்றதற்கு ஏதேனும் ஆசிர்வாதம் உள்ளதா?
இல்லை. காலத்தின் சுழற்சியில் மேலே செல்லும் பக்கத்தில் நான் இருக்கிறேன். மேலும் கீழும் சென்று வரும் காலமென்னும் அலையில் இப்போது நான் இருப்பது மேலெழும்பும் அலையில். அவ்வளவு தான். இந்தச் சுழற்சி இயற்கையானது. அதில் தனிப்பட்ட ஆசி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இதே கேள்வியை 'உங்களின் நண்பர்கள், உறவினர்கள் என்று வயதிலும், படிப்பிலும், திறமையிலும், வாய்ப்புகளிலும் ஒத்தவர்களை விட நீங்கள் மிக எளிதாக பொருளாதார வசதி பெற்றதற்கு ஏதேனும் ஆசிர்வாதம் இருக்கிறதா' என்று கேட்டிருந்தீர்கள் என்றால் என் பதில் 'ஆமாம்' என்று இருந்திருக்கும். :-)
4. முதலிரவில் நீங்கள் என்ன எண்ண ஓட்டத்தில் இருந்தீர்கள்...?
மறந்து போச்சே. ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகிவிட்டன. முதலிரவிற்குப் பின்னர் எத்தனையோ இரவுகள் வந்து சென்று விட்டன. அதனால் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன என்பதில் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏறக்குறைய என்ன உணர்வுகள் இருந்தன என்று கேட்டால் 'இம்ப்ரஸ் செய்ய வேண்டும்', 'அனுபவிக்க வேண்டும்', 'அவளது உணர்வுகளையும் உணர்ந்து செயல்படவேண்டும்', 'புதுமையாக இருக்கப் போகிறது' போன்ற கலவையான பல உணர்வுகள்/எண்ணங்கள்.
5. உங்கள் உறவினர் மத்தியில் உங்களைப்பற்றி என்ன அபிப்பிராயம் வைத்துள்ளார்கள்?
நல்லவன், அறிவாளி, அதிர்ஷ்டக்காரன், உறவினர்களையும் நண்பர்களையும் பொருட்படுத்தாதவன், அன்புள்ளவன், மரியாதையானவன், பக்திமான், சுயநலவாதி, மற்றவர்களுக்கு உதவுபவன், எடுத்துக்காட்டாக இருப்பவன் (நல்லா படிடா, அப்பத் தான் குமரனை மாதிரி அமெரிக்கா போயி நல்லா சம்பாதிக்கலாம்), .... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு மாதிரி. :-)
சீக்கிரம் சொல்லுங்கன்னு கேட்டிருந்தீங்க. ஆனால் நான் என்னோட வழக்கமான வழக்கத்தின் படி ரொம்ப நாள் கழித்துப் பதில் சொல்லியிருக்கிறேன். மன்னிச்சுக்கோங்க. :-)
Wednesday, July 16, 2008
எழுத்தாளினி ஏகாம்பரிக்கு ஏதுமறியாதவனின் பதில் (கேள்வி பதில் 4)

எழுத்தாளினி உஷா எப்பவோ கேட்ட கேள்விகள் இவை. கேள்விகளைக் கேட்ட அவருக்கே அந்தக் கேள்விகள் இன்னேரம் மறந்து போயிருக்கும். அவர் மறந்தாலும் மறக்கலாம்; நாங்கள் மறக்க மாட்டோம் என்று ஒரு சில நண்பர்கள் 'எங்கே மற்ற கேள்விகளுக்குப் பதில்கள்' என்று துளைத்து எடுக்கிறார்கள். அதனால் இதோ மீண்டும் பதில்களைச் சொல்லத் தொடங்கிவிட்டேன்.
உஷா கேட்ட கேள்விகளும் அதற்கு ஏதுமறியா பாலகனின் பதில்களும்:
1- ஆன்மீகம் என்றால் பதிவுலகில் குமரன்,கே ஆர் எஸ், கீதா, வல்லி, ஜீரா என்று வரிசைக்கட்டி சொல்கிறார்கள். ஆனால்
நீங்கள் எல்லாம் எழுதுவது பக்திசார்ந்த இந்து மத நம்பிக்கைகளை வலியுறுத்தி எழுதுவதில்லையா? மத நம்பிக்கை வேறு ஆன்மீகம் வேறு இல்லையா?
மதத்திற்கும் ஆன்மிகத்திற்கும் வேறுபாடுகளும் உள்ளன. ஒற்றுமைகளும் உள்ளன. ஆன்மிகத்தைச் சுற்றியே மதங்களும் அவற்றின் கோட்பாடுகளும் கட்டப்படுகின்றன. ஆன்மிகத்தைத் தவிர்த்து வெறும் வெளிச்சடங்குகளில் மட்டுமே நாட்டமும் வெறியும் கொள்ளும் போது அங்கே பெரும்கேடுகள் விளைகின்றன. வெளிச்சடங்குகளில் இருக்கும் ஆன்மிகக் கோட்பாடுகளை உணர்ந்து அவற்றில் நாட்டம் கொள்ளும் போது பெரும்நன்மைகள் விளைகின்றன. மதங்களைக் குறை சொல்பவர்களைப் பார்த்தால் தெரியும்; அவர்கள் எல்லோரும் பெரும் கேடுகளை விளைவிக்கும் ஆன்மிகம் தவிர்த்த வெளிச்சடங்குகளைத் தான் சொல்கிறார்கள் என்பது.
இங்கே நீங்கள் வரிசைப்படுத்தியிருக்கும் பதிவர்கள் வெளிச்சடங்குகளில் உறைந்திருக்கும் ஆன்மிகத்தைப் பேசுகிறார்கள். வெளிப்பார்வைக்கு வெறும் மதத்தைப் பற்றி மட்டுமே பேசுவது போல் தெரிந்தாலும் அவர்கள் பேசுவதெல்லாம் அந்த மதங்களில் இருக்கும் ஆன்மிகத்தையே. அதனால் அவர்களை ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்வதில் தவறில்லை. அப்படிச் சொல்வதில் தயக்கம் இருப்பவர்கள் அவர்களை இந்து மதப் பதிவர்கள் என்று சொன்னாலும் சரி தான். அவரவர் வசதிப்படி சொல்லிக் கொள்ள வேண்டியது தான்.
பக்தி சார்ந்த இந்து மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதுபவர்களை ஆன்மிகப்பதிவர்கள் என்று சொல்லக்கூடாது என்று நீங்கள் சொல்வது போல் தோன்றுகிறது. பக்தி சார்ந்த இந்து மத நம்பிக்கைகளை எழுதுவதாலேயே இவர்கள் எல்லாம் ஆன்மிகம் பேசுவதில்லை என்று ஆகிவிடுகிறதா?
மத நம்பிக்கை வேறு ஆன்மிகம் வேறு இல்லை. மதத்தில் ஆன்மிகமும் இருக்கிறது; அதைச் சுற்றி இருக்கும் சடங்குகளும் இருக்கின்றன; அவற்றின் மேல் எழுப்பப்பட்ட நிறுவனங்களும் இருக்கின்றன. அதே நேரத்தில் எந்த மதத்த்திலும் சேராமல் எந்த மத சடங்குகளிலும் ஈடுபடாமல் எந்த நிறுவனத்திலும் பங்கேற்காமலும் ஆன்மிக வழி நிற்க முடியும். இப்படி ஆன்மிகத்தைத் தவிர்த்து மதங்களின் சில பகுதிகளும் மதங்களைத் தவிர்த்து சில வேளைகளில் ஆன்மிகமும் இருப்பதால் அவை இரண்டும் வெவ்வேறு என்று சொல்ல இயலாது. அதனால் இந்து மத நம்பிக்கைகளையே பெரும்பான்மையாக எழுதுபவர்களையும் ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்லுவதிலும் தவறிருக்க முடியாது.
கீதாம்மாவிற்குப் பதில் சொன்ன பின்னூட்டத்தில் 'குரான், பைபிள் விஷயங்களைப் பேசும் பதிவுகளை ஏன் ஆன்மிகப் பதிவுகள் என்று சொல்வதில்லை' என்று கேட்டிருக்கிறீர்கள். அவர்களையும் ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்வதில் தவறில்லை.
2- உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் நம்பிக்கையை சொல்லி தருவீர்களா? குழந்தை மனதில் அது திணிப்பு/ முளைசலவையில்லையா?
சொல்லித் தந்து மட்டும் தான் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்களா? நாம் முனைப்போடு சொல்லித் தருபவற்றை விட அவர்கள் மிகுதியாகக் (அதிகமாக) கற்றுக் கொள்வது நம் நடத்தையில் இருந்து தானே? நம் செயல்கள் எல்லாமும் நம் அடிப்படை நம்பிக்கைகளையும் குணங்களையும் பொறுத்து அமையும் போது அவற்றில் இருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வதைத் தவிர்க்க முடியுமா? என் அனுபவத்தில் நான் சொல்லித் தந்து என் குழந்தைகள் கற்றுக் கொண்டதை விட பெற்றோர்களான எங்களின் செயல்களைக் கண்டு அவர்கள் கற்றுக் கொள்வதே அதிகம்.
எங்கள் வீட்டில் நான் ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்தாலும் தினமும் இறைவனை வணங்குவது, அடிக்கடி கோவில் செல்வது போன்றவற்றில் ஈடுபடுவதில்லை; ஆனால் பெரும்பாலும் இறைப்பாடல்களையே கேட்கிறேன். தங்கமணி எப்போதாவது இறைவனை வணங்குவார்; நாங்கள் எல்லோரும் கோவிலுக்குச் செல்லும் போது அவரும் செல்வார். பாடல்கள் என்றால் திரைப்பாடல்கள் மட்டுமே. குழந்தைகள் இருவரின் செயல்களைப் பார்த்தும் கற்றுக் கொள்கின்றன. எங்கள் இருவரில் யார் திணிக்கிறோம், மூளைச்சலவை செய்கிறோம் என்று சொல்ல முடியுமா?
இறை மறுப்பு, பெண்ணியம், சம உரிமை என்று ஒரு பட்டியலே இடலாம். பல நேரங்களில் இவையும் நம்பிக்கையின் பாற்பட்டவையே. அவற்றை ஒருவர் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் அது திணிப்பு ஆகுமா? அவர்களின் செயல்கள் மூலம் குழந்தைகள் கற்றுக் கொண்டால் அது திணிப்பு ஆகுமா?
எந்த ஒரு கருத்துமே அப்படித் தான் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குச் செல்கின்றன. அவற்றைத் தவிர்க்க இயலாது. ஆன்மிகம், மதம், மத நம்பிக்கை இவை தீண்டத்தகாதவையாக உங்களுக்குத் தோன்றுவதால் அவற்றை என் குழந்தைகள் என்னிடமிருந்து கற்றுக் கொண்டால் அது உங்களுக்கு திணிப்பாகவும் மூளைச்சலவையாகவும் தோன்றுகிறது. அதே நேரத்தில் அரசியலில் ஈடுபாடுடைய பெற்றோரின் குழந்தையும் அரசியலில் ஈடுபாடு கொள்வதையும், இறை மறுப்பு பேசுபவர் குழந்தையும் இறை மறுப்பு பேசுவதையும் கண்டால் அது இயற்கையாகப் படுகிறது. அங்கே திணிப்பு என்று தோன்றுவதில்லை. மாறியும் நடப்பதுண்டு. வாத்தியார் பையன் மக்கு என்பதைப் போல். அப்போது அங்கே என்ன நடந்தது? திணிப்பு நடக்கவில்லையா?
அவரவர் கருத்தின் படி அவரவர் நடக்கும் போது அவற்றிலிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வது தவிர்க்க முடியாமல் நடக்கும். அதனைத் திணிப்பென்றும் மூளைச்சலவை என்றும் சொல்வது அவரவர் அரசியல் சார்ந்ததொன்று. :-)
3-நம் புராணங்களில், வழி வழி வந்த நம்பிக்கைகளில் கடவுள்களுக்கு தந்த உருவங்கள் உண்மை என்று நம்புகிறீர்களா? ஆம்,
என்றால் இவர்கள் தேவலோகம்/ வைகுண்டம்... இவைகளில் ஆகாயத்தில் வசிக்கிறார்களா? ஆம் என்றால் சுவனம், ஹெவன்
ஆகாயத்தில் எங்கு உள்ளன?
என் தனிப்பட்ட நம்பிக்கையைக் கேட்டால் 'ஆமாம். இந்த இறை உருவங்கள் உண்மை' என்றே சொல்வேன். இறைவனுக்கு ஓருரு ஒரு பெயர் என்றில்லை. 'ஆணல்லன் பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன்' என்று சொன்ன நம்மாழ்வார் அதே பாசுரத்திலேயே 'பேணும் போது பேணும் உருவாகும் அல்லனுமாம்' என்பார். அதுவே என் நம்பிக்கையும். இறைவன் இந்த உருவங்கள் எல்லாமுமாகவும் இருக்கிறான். ஆனால் இந்த உருவங்களில் மட்டுமே அவன் நின்றுவிடுவதில்லை. கல்லூரிக் காலத்தில் நான் நண்பர்களுக்குச் சொன்ன கருத்து நினைவிற்கு வருகிறது. முருகன், கண்ணன், சிவன், ஐயப்பன், அம்பிகை, இயேசு என்று சமயங்கள் சொல்லும் உருவங்களை வணங்கினால் மட்டுமே இறையருள் கிட்டும் என்பதில்லை. புதிதாக ஏதோ ஒரு படத்தை எடுத்து வைத்துக் கொண்டு வணங்கினாலும் அதே பயன் கிட்டும். அந்த வகையில் சிறு தெய்வங்கள் என்று சொல்லப்படும் தெய்வங்களுக்கும் பெரும் தெய்வங்கள் என்று சொல்லப்படும் தெய்வங்களுக்கும் வேறுபாடு இல்லை. இறைவனின் திருவுருவங்கள் தான் இவை எல்லாம். இறைவன் எல்லா வல்லமையும் படைத்தவன் என்பதால் அடியவன் போற்றும் எல்லா திருவுருவங்களையும் தன்னுருவமாகக் கொள்ளும் வல்லமையும் படைத்தவன்.
இவர்கள் தேவலோகம்/வைகுண்டம் போன்ற இடங்களில் வசிக்கிறார்களா என்ற கேள்விக்கும் பதில் 'ஆமாம்'. தேவலோகமும் வைகுண்டமும் சிவலோகமும் பருப்பொருட்களாக (ஸ்தூல இடங்களாக) எண்ணிக் கொண்டாலும் சரி; ஒருவர் உடலிலும் உள்ளத்தில் இருக்கும் உட்பொருளாக (சூக்கும இடங்களாக) எண்ணிக் கொண்டாலும் சரி எல்லாம் வல்ல இறைவனால் அவற்றின் இருப்பையும் ஏற்படுத்த இயலாதா என்ன?
சுவனம், ஹெவன் ஆகாயத்தில் எங்கே இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. அவை ஆகாயத்தில் தான் இருக்கிறதா அன்றி காயத்தில் (உடலில்) தான் இருக்கிறதா என்றும் தெரியாது. ஈரேழு பதினாறு உலகங்களும் ஸ்தூல வடிவில் இருக்கின்றன என்றும் அவை உடலில் இருக்கும் சூக்கும உலகங்களே என்றும் ஆன்மிக நூற்கள் சொல்வதைப் படித்திருக்கிறேன். தேடிப் பார்க்க வேண்டும். கிடைத்தால் சொல்கிறேன். சொல்ல முடியுமா என்று தெரியவில்லை - கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் - என்றும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அதனால் நீங்களும் தேடிப் பாருங்கள். :-)
4- உலகைப் படைத்தவன் இறைவன் ( இங்கு எந்த பெயரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்) என்றால்
கடவுள் மகா சாடிஸ்ட் இல்லையா?
அப்படித் தான் தோன்றுகிறது. :-)
என் நம்பிக்கையைக் கேட்டால் இறைவனும் உலகங்களும் உயிர்களும் என்றுமே காலம் காலமாக இருப்பவர்கள். புதிதாகப் படைக்கப்படுபவர்கள் இல்லை. விளக்கத் தொடங்கினால் விரிவாகச் செல்லும். தத்துவம் கேட்கும் மனநிலை இருந்தால் சொல்லுங்கள். இன்னொரு வாய்ப்பில் பேசுகிறேன்.
Wednesday, June 25, 2008
சர்வேசனுக்கு வணக்கம் (கேள்வி பதில் 3)
'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன'ன்னு ஒரு இடுகை போட்டேன். அப்ப நிறைய பேர் கேள்விங்க கேட்டாங்க. ஒவ்வொன்னா பதில் சொல்லிக்கிட்டு வர்றேன். இதுக்கு முன்னாடி வந்த கேள்வி பதில் இடுகைகள் இங்கே: இடுகை1, இடுகை2

இப்ப இந்த இடுகையில சர்வேசன் கேட்ட கேள்விக்களுக்குப் பதில்கள்.
1) கடவுள் உண்மையிலேயே இருக்காருன்னு உங்களுக்கு எது சொல்லுது? கடவுள் உண்மையிலேயே இருக்கான்னு, தினம் தினம் தெருவோரத்தில் (ஒரு தவறும் பண்ணாத) வயிற்றுப் பசியுடன் பிச்சைக்காரனுக்கு எது சொல்லும்னு நெனைக்கறீங்க?
நல்லா மாட்டிவிட்டீங்க சர்வேசரே. இதுக்கு என்ன பதில் சொல்றது? டக்குன்னு தோணுன பதிலைச் சொல்றதா? சிந்திச்சு பதில் சொல்றதா?
டக்குன்னு தோணுன பதில்: கடவுள் இருக்காருன்னு எனக்கு எது சொல்லுதுன்னு எனக்குத் தெரியலைங்க. எதாவது நிச்சயமா சொல்லுதான்னே ஐயமா இருக்கு. :-)
பிச்சைக்காரருக்கு எது சொல்லும்ன்னு அவருகிட்ட தானுங்க கேக்கணும். தாயும் பிள்ளையும் ஆனாலுமே வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்றாங்களே. எனக்கே எது சொல்லுதுன்னு தெரியாதப்ப அவருக்கு எது சொல்லும்ன்னு எனக்கு எப்படி தெரியும்? :-)
சிந்திச்சப்ப வந்த பதில்: உள்ளுணர்வும் வருங்காலத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையும் கடவுளின் இருப்பைச் சொல்லும். எனக்கும் சரி தெருவோர பிச்சைக்காரருக்கும் சரி. :-)
2) உங்கள் வாழ்வின் மிக மிக மிகப் பெரீரீரீய திருப்புமுனை எதுன்னு சொல்லுங்க. அதுக்கு காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க. திருப்புமுனைல, வேர பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க. சுவாரஸ்யமா சொல்லுங்க. உண்மையே சொல்லுங்க.
இது வரைக்கும் இந்த மாதிரி சிந்திச்சதே இல்லீங்க. சிந்திச்சா குழப்பமா தான் இருக்கு.
நினைவுக்கு வந்த திருப்பங்களில் சில: சின்ன வயசுல படிக்கக் கிடைச்ச பாட்டியோட ஆன்மிக/சமய புத்தகங்கள், பத்தாவது படிக்கும் போது அம்மா இறந்தது, கல்லூரியில நுழைஞ்சவுடனே வந்த முதல் காதல், பி.இ.யில் இடம் கிடைத்தது, முதலாம் ஆண்டிலயே வந்த இரண்டாவது காதல் (அதுக்கப்புறமும் நிறைய காதல் வந்தன; ஆனா அதெல்லாம் திருப்பம் இல்லை:-) ), எம்.இ.யில் இடம் கிடைத்தது, டி.சி.எஸ்ஸில் வேலை கிடைத்தது, அமெரிக்கா வந்தது, திருமணம், மகள் பிறந்தது, தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்ந்தது, வலைப்பதிவிற்கு வந்தது, மகன் பிறந்ததுன்னு எல்லா நேரங்களிலேயும் வாழ்க்கை மாறியிருக்கு. இதுல பெரீரீரீய திருப்பம்ன்னா எதைச் சொல்றது? ம்ம்ம்ம்.
எம்.இ. கிடைத்தது தான் பெரிய திருப்பம்ன்னு நினைக்கிறேன். அது கிடைச்ச கதையைச் சொல்றதா? கிடைக்காம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்ன்னு சொல்றதா? ரெண்டையும் தானே கேட்டிருக்கீங்க? ரெண்டையும் சொல்றேன். சுவையா சொல்லணும்ன்னு கேட்டிருக்கீங்க. அது மட்டும் நமக்கு சுட்டு போட்டாலும் வராது.:-) உண்மையைச் சொல்லணும்ன்னு சொல்லியிருக்கீங்க. நீதிமன்றத்துல சொல்ற மாதிரி 'நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை'ன்னு ஏதாவது ஒரு புத்தகத்து மேல கையை வச்சுக்கிட்டு உறுதி மொழியெல்லாம் தரணும்ன்னு கேக்கலையே. அது வரைக்கும் மகிழ்ச்சி. :-) நெஞ்சாங்கூட்டுல என்ன இருக்கோ அதைச் சொல்றேன் - ஆனா கொஞ்சம் சொந்தப்பெருமையைப் பேசுற மாதிரி வந்ததுன்னா கோவிச்சுக்கக்கூடாது. ஏன்னா அது தானே உள்ளத்தில இருக்கு. :-)
அந்தத் திருப்புமுனைக்குக் காரணமானவங்க யாருன்னும் கேட்டிருக்கீங்க. அதுக்கு பதில் தான் கொஞ்சம் சிந்திக்கணும். சொல்லிக்கிட்டே வர்றேன். காரணங்கள் யார் யாருன்னு நீங்களே படிச்சுப் பாத்து சொல்லுங்க. :-)
பி.இ. படிக்கும் போது கலசலிங்கம் கல்லூரி ரொம்ப பிடிச்சுப் போச்சு. எல்லாருக்கும் அப்படித் தானே. அவங்க அவங்க கல்லூரின்னா ரொம்ப பிடிக்கும்ல. ரெண்டாம் ஆண்டுல தொடங்குன பஜனைக் குழு கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்தது. (நான் கல்லூரியை விட்டு வந்த பின்னாடியும் ரெண்டு மூனு வருடம் அந்தக் குழு இருந்தது. அப்புறம் புதுப்பசங்க வந்து 'உலகத்திலேயே பஜனைக்குழு இருக்கும் ஒரே பொறியியல் கல்லூரி'ங்கற பெருமையை கலசலிங்கம் இழக்குற மாதிரி பண்ணிப்புட்டங்க). வாராவாரம் சனிக்கிழமை கூட்டு வழிபாடுன்னு ஒரு கூட்டத்தை வச்சுக்கிட்டு சின்ன மடாதிபதியா நடந்துக்கிட்டதும் எங்க போனாலும் அந்தக் கூட்டத்தோடவே போய் அளப்பரை பண்ணுனதும் இன்னும் நினைவுல பசுமையா இருக்கு. விடுதியில இரவு உணவுக்கு ஒரு கூட்டமா இந்த பஜனைக் குழு 20, 25 பேர் நம்ம தலைமையில கிளம்புனாங்கன்னா சீனியர், ஜீனியர் எல்லாருமே 'டேய். குமரன் அடியாட்களோட கெளம்பிட்டான்டா. ஒதுங்கி வழி விட்றுங்க'ன்னு பவ்யமா ஒதுங்கி வழிவிட்டதும் நல்லா நினைவு இருக்கு. நடுவுல நாலு பேருக்கு நான் என் காதலைச் சொன்னதும் என் கவிதைகளைப் படித்து ஒரு பெண்ணும் என் கதைகளைப் படித்து ஒரு பெண்ணும் என்னிடம் தங்கள் காதலைச் சொன்னதும்ன்னு அதுவும் நடந்தது. அதுல யாரையும் நான் தொடர்ந்து காதலிக்கலை. திருமணம் வரைக்கும் அந்தக் காதல்கள் வரலை. :-) ரெண்டாம் ஆண்டு படிக்கிறப்ப தொடங்குன மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல ரெண்டாவது இடங்குறது கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்தது. (அதுல ஒரு மறைபொருள் - இரகசியம் இருக்கு. அதை உங்ககிட்ட மட்டும் சொல்றேன். வேற யாருக்கிட்டேயும் சொல்லாதீங்க. நான் படிக்கிறப்ப மதுரைப் பல்கலைக்கழகத்துக்குக் கீழ வர்ற கல்லூரிகள்ல எங்க கல்லூரியில மட்டும் தான் அளவியியல் & கட்டுப்பாட்டுப் பொறியியல் - Instrumentation and Control Engineering - இருந்தது. அதனால எங்க வகுப்புல ரெண்டாவது இடம்னாலே பல்கலைக்கழகத்துலயும் ரெண்டாவது இடம் தான். இன்னும் பல்கலைக்கழகத்துல ரெண்டாவது இடங்கற பொய்யான மெய்யைச் சொல்லிக்கிட்டு வர்றேன். நீங்களும் அப்படியே சொல்லிக்கிட்டு வாங்க. சரியா? )
இப்படி சொல்லத் தொடங்குனா சொல்லிக்கிட்டே போகலாம் கலசலிங்கம் வாழ்க்கையைப் பத்தி. அப்படி பேரும் புகழுமா வாழ்ந்து நல்லா அனுபவிச்சதால அங்கேயே வாழ்க்கை முழுக்க இருந்துரலாம்ன்னு ஒரு எண்ணம். கலசலிங்கத்துலேயே வாத்தியார் வேலைக்குச் சேர்ந்து கல்லூரி பக்கத்துலயே ஒரு பங்களா கட்டிக்கிட்டு குழந்தை குடும்பம்னு (இப்ப எல்லாம் யாராவது குழந்தை குட்டின்னு சொல்லுவாங்களா என்ன? அதான் குடும்பம்ன்னு சொல்லிட்டேன்) இருந்தா வாழ்க்கை அமைதியா போகும்ன்னு ஒரு கனவு. அந்த மாதிரியே செய்யறதுக்காக படிச்சு முடிச்ச பின்னாடி சென்னைக்குப் போய் திரு.கலசலிங்கம் ஐயாவைச் சந்திச்சேன். அதுக்கு முன்னாடியே நம்ம பஜனைக் குழு மூலமா செஞ்ச சில தொண்டு நடவடிக்கைகள் மூலம் ஐயாவோட அறிமுகம் இருந்தது. அவரோட சொந்த ஊருல இருக்கிற பள்ளி ஆண்டுவிழாவுல ஐயா தலைமை ஏத்து நடத்துறப்ப முதல், இரண்டு, மூன்றாம் நிலையைப் பெற்ற எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் நம்ம பணத்துல பரிசுகள் வழங்குனதுலயும் ஐயாகிட்ட நல்ல பேரு எனக்கு. அதனால உடனே வேலை போட்டுக் குடுக்க சம்மதம் தெரிவிச்சு பரிந்துரை கடிதம் குடுத்து அனுப்பிட்டாரு.
நான் கல்லூரிக்கு வந்து முதல்வரைப் பாக்குறதுக்கு முன்னாடி எங்க துறைத்தலைவரைப் போய் பாத்தேன். அவருக்கோ ஒரே அதிர்ச்சி. 'குமரா. நீ நல்லா படிக்கிற பையன். சரியா படிக்காம வேற எங்கையும் வேலை கிடைக்காம கடைசியில தான் இங்க வாத்தியார் வேலைக்கு வருவாங்க. நீ இந்த வேலைக்கு வந்தா உன்னோட ஜூனியர்கள் ரொம்ப நொந்து போயிடுவாங்க. உனக்கே வேலை கிடைக்கலையா வெளிய? நமக்கெல்லாம் எப்படி கிடைக்கும்ன்னு' அப்படி இப்படின்னு சொல்லத் தொடங்கிட்டாரு. என்ன என்னவோ சொல்லிப் பாக்குறேன். அவரு விடலை. கடைசியில 'அப்ப்டி நீ வாத்தியார் வேலைக்குத் தான் வருவேன்னா ஒன்னு செய். போய் எம்.இ. படிச்சுட்டு வா. எப்படியும் வாத்தியாரா தொடரணும்ன்னா எம்.இ. படிக்கணும். மொதல்ல அதை முடிச்சுட்டு வா. அப்புறம் வேலை குடுக்குறேன்'னு சொல்லிட்டார். அவர் சொன்னதும் சரின்னு பட்டதால முதல்வரைப் பாக்காமலேயே திரும்பி வந்துட்டேன்.
இப்ப எம்.இ. சேர்றதுக்காக GATE தேர்வுக்காகப் படிக்கணும். எனக்கோ வீட்டுல உக்காந்திருக்கப் பிடிக்கலை. அப்பத் தான் ஒரு நண்பன் புட்டபர்த்தியிலேயே தங்கியிருக்கான்னு தெரிஞ்சது. நானும் புட்டபர்த்திக்குப் போயிட்டேன். அங்கேயே ஒரு நாலு மாசம் தங்கியிருந்து தரிசனம் பார்த்த நேரம் போக மத்த நேரம் தேர்வுக்காகப் படிச்சேன். படிச்சு முடிச்சு வேலைக்குப் போவான்னு பாத்தா இப்படி புட்டபர்த்தியில போயி உக்காந்திருக்கானேன்னு எங்கப்பாவுக்கு கடுப்பு. யாரு அதையெல்லாம் கண்டுக்கிட்டாங்க? அப்பத் தான் நான் காதலிக்கிறேன்னு சும்மாவாச்சும் சொன்ன பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் திருமணமும் ஆச்சு. அதனால மனசு நொந்து நான் சாமியாரா போயிட்டேன்னு ஒரு நண்பன் வதந்தியை வேற கிளப்பிவிட்டுட்டான். :-) .
தேர்வு நேரமும் வந்து தேர்வும் எழுதி முடிந்து வெளியே வந்த போது எனக்குத் துளி கூட நம்பிக்கை இல்லை. ஒழுங்கா வீட்டுல இருந்து படிச்சிருந்தாலாவது நல்லா எழுதியிருக்கலாம். புட்டபர்த்துக்குப் போயி நேரத்தை வீணாக்கிட்டோம்ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா எம்.இ. முடிக்காம திரும்பவும் கலசலிங்கத்துக்கும் போக முடியாது; சரி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியிலாவது சேரலாம்ன்னு அங்கே முயற்சி செய்யத் தொடங்கினேன். நான் கலசலிங்கத்துல படிக்கிறப்ப வாராவாரம் திருநகர் வந்து ஒருத்தர்கிட்ட பகவத் கீதை கத்துக்கிட்டேன். அவர் தியாகராஜர்ல ஆசிரியரா இருக்கார். அவர் பரிந்துரையில வேலை கிடைச்சிரும்ன்னு நம்பிக்கை.
தேர்வு முடிவுகள் இன்னும் வரலை. ஆனா கல்லூரிக்களுக்கு விண்ணப்பிக்கும் நேரம் வந்துவிட்டது. அண்ணா பல்கலைக்கழகம், கோவை தொழிற்நுட்பக் கல்லூரி (CIT) ரெண்டு இடத்துலயும் விண்ணப்பப் படிவம் வாங்கிட்டேன். தேர்வு முடிவுகள் வர்றதுக்கு முன்னாடியே சிஐடியில விண்ணப்பிக்க வேண்டியதா இருந்ததால அதைச் செஞ்சுட்டேன். தேர்வு முடிவுகள் வந்த பின்னாடி மொத்தமா நம்பிக்கை இழந்ததால அண்ணா பல்கலைக்கழகப் படிவத்தை நண்பருக்குக் குடுத்துட்டேன். (அந்த நண்பருக்கு அண்ணாவுல இடம் கிடைச்சு எல்லாம் உன் கைராசின்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. அடப் போடா என் கைராசி எனக்குக் கைகுடுக்கலைன்னு நொந்துக்குவேன்).
சிஐடியில இருந்து நேர்முகத்துக்கு அழைப்பு வந்தது. சரி அழைப்பு வந்திருக்கே போகலாம்ன்னு போய் பாத்தா 4 இடங்களுக்கு 500 பேரு வந்திருக்காங்க. பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட பேச்சு குடுத்துப் பாத்தா ஒவ்வொருத்தரும் அருமையா மதிப்பெண்கள் வாங்கியிருக்காங்க. ஏன்டா என்னையெல்லாம் கூப்புட்டு வதைக்கிறாங்க இவங்கன்னு நெனைச்சுக்கிட்டு சரி கிளம்பிற வேண்டியது தான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கிறப்ப வந்தாரு குருராஜர். எம்.இ. ரெண்டாம் ஆண்டு படிக்கிற குருராஜன் தேர்வுக்கு எத்தனை பேரு வந்திருக்காங்க, யாரு யாரு வந்திருக்காங்கன்னு பாக்க வந்திருக்காரு. வந்து பக்கத்துல உக்காந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டு பேசத் தொடங்குனாரு. நான் அப்ப என்ன மனசுல ஓடிச்சோ அதை அவருகிட்ட சொன்னேன். வந்தது வந்துட்டே; நேர்முகம் முடிஞ்ச பிறகு போகலாம்ன்னு அவர் வற்புறுத்த நான் கிளம்பியே ஆகணும்ன்னு கிளம்புனேன். அவரு விடவே இல்லை. முதல் பார்வையிலேயே ஒரு நட்பு, பந்தம் வந்திருச்சு. அவர் சொல்றதைத் தட்ட முடியாம காத்திருந்து நேர்முகத்துக்கும் போனேன். உள்ள போனா சுத்தி ஆறு பேரு உக்காந்துக்கிட்டு கேள்விகளால வேள்வி செஞ்சாங்க. பாதி கேள்விகளுக்குத் தான் பதில் சொன்னேன். மீதிக்கு நல்லா முழிச்சேன்.
வெளியே வர்றப்ப கட்டாயம் நமக்கு இடம் கிடைக்காதுன்னு தோணியாச்சு. குருராஜன் 'சரி போகட்டும். வா. சாப்புட்ட பிறகு போகலாம்'ன்னு விடுதிக்குக் கூட்டிக்கிட்டு போயி சாப்பாடு போட்டார். நல்ல சாப்பாடு. சாப்புட்டு முடிச்சு 'சரி நான் கெளம்புறேங்க. இப்பக் கெளம்புனாத் தான் மருதமலைக்குப் போயிட்டு ராத்திரிக்குள்ள ஊரு போயி சேரலாம்'ன்னு சொன்னா 'இருப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல தேர்வு முடிவுகளைச் சொல்லிருவாங்க. அதுக்கப்புறம் போகலாம்'ன்னு நிறுத்தி வச்சாரு. அன்புத் தொல்லைக்காக நின்னேன். நேரம் ஆக ஆக 'வெட்டியா இங்க உக்காந்திருக்கோமே. மருதமலையானைப் பாக்க நேரம் இருக்காதோ'ன்னு குறுகுறுப்பு. புலம்பிக்கிட்டு இருந்தேன். நாலு மணி போல முதல்வர் வந்து ஒவ்வொரு பேரா கூப்பிட்டாரு. 'செந்தில் குமரன்' ஒல்லியா ஒரு பையன் வந்து முன்னாடி நின்னான். 'வேணுகோபால்' குண்டா உயரமா ஒரு பையன் (ஆளு?) வந்து நின்னாரு. 'நாகேஸ்வரராவ்' குள்ளமா (என்னை விட ஒரு இஞ்ச் தான் குள்ளமா இருப்பாரு. ஆனாலும் அவரைக் குள்ளம்ன்னு சொல்லுவோம்ல) ஒருத்தர் வந்து முன்னாடி நின்னாரு. 'குமரன்' யாரும் முன்னாடி வரலை 'எம்.என்.குமரன்' அட நம்ம பேரு தான்னு அப்ப தான் உறைச்சது. வேக வேகமா முன்னாடி போய் நின்னேன். 'நீங்க நாலு பேரும் முதல் மாடியில இருக்குற அலுவலகத்துக்குப் போங்க'ன்னு பத்திவிட்டாரு. நாலு பேரும் படிக்கட்டுல போறப்பவே ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் செஞ்சுக்கிட்டோம். யாருக்கும் எதுக்கு நாம மேல போறோம்ன்னு தெரியலை. வேணுகோபால் 'நான் ப்ராஜக்ட் ரிபோர்ட் கொண்டு வரலை. நீங்களும் அப்படித் தானா? அதுக்குத் தான் நம்மளை தனியா அனுப்பியிருக்காங்க'ன்னு சொல்றார். செந்திலோ 'எனக்கு ஒன்னும் புரியலைங்க. ஒரே குழப்பமா இருக்கு'ன்னு புலம்புறாரு. அலுவலகத்துக்கு வந்து இப்படி முதல்வர் எங்க நாலு பேரையும் அனுப்புனாருன்னு சொன்னா 'கட்டணப்பணம் கொண்டு வந்திருக்கீங்களா? எடுத்துக்கட்டுங்க'ங்கறாரு அலுவலர். அப்பவும் ஒன்னும் புரியல. 'கட்டணமா? எதுக்கு?'ன்னு கேட்ட பின்னாடி 'அடப்பாவிங்களா. உங்களுக்கு எம்.இ. இடம் கிடைச்சுருக்கு. அதுக்குத் தான் கட்டணம்'ன்னு சொல்றாரு. அப்பத் தான் புரியுது எல்லாருக்கும் ராவ்-க்கு மட்டும் ஏற்கனவே தெரியும் போல - இந்த தமிழாளுங்க கிட்ட நமக்கென்ன பேச்சுன்னு கமுக்கமா இருந்திருகாரு. செந்திலும் நானும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்காதது தான் குறை. அப்படி ஒரு மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லா கட்டணத்தைக் கட்டி வகுப்புல சேர்ந்தோம்.
இதையேன் பெரீரீரீய திருப்பம்ன்னு சொல்றேன்னு இன்னேரம் புரிஞ்சிருக்கும். இல்லியா? அதையும் விலாவாரியா சொல்லணும்ன்னா சொல்றேன். :-) ஆனா ஒன்னு. கலசலிங்கத்துல அதுக்கப்புறம் படிச்சப் பசங்க செஞ்ச புண்ணியம் தான் அவங்களை எங்கிட்ட இருந்து காப்பாத்தியிருக்குன்னு மட்டும் கட்டாயம் சொல்லலாம். :-)

இப்ப இந்த இடுகையில சர்வேசன் கேட்ட கேள்விக்களுக்குப் பதில்கள்.
1) கடவுள் உண்மையிலேயே இருக்காருன்னு உங்களுக்கு எது சொல்லுது? கடவுள் உண்மையிலேயே இருக்கான்னு, தினம் தினம் தெருவோரத்தில் (ஒரு தவறும் பண்ணாத) வயிற்றுப் பசியுடன் பிச்சைக்காரனுக்கு எது சொல்லும்னு நெனைக்கறீங்க?
நல்லா மாட்டிவிட்டீங்க சர்வேசரே. இதுக்கு என்ன பதில் சொல்றது? டக்குன்னு தோணுன பதிலைச் சொல்றதா? சிந்திச்சு பதில் சொல்றதா?
டக்குன்னு தோணுன பதில்: கடவுள் இருக்காருன்னு எனக்கு எது சொல்லுதுன்னு எனக்குத் தெரியலைங்க. எதாவது நிச்சயமா சொல்லுதான்னே ஐயமா இருக்கு. :-)
பிச்சைக்காரருக்கு எது சொல்லும்ன்னு அவருகிட்ட தானுங்க கேக்கணும். தாயும் பிள்ளையும் ஆனாலுமே வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்றாங்களே. எனக்கே எது சொல்லுதுன்னு தெரியாதப்ப அவருக்கு எது சொல்லும்ன்னு எனக்கு எப்படி தெரியும்? :-)
சிந்திச்சப்ப வந்த பதில்: உள்ளுணர்வும் வருங்காலத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையும் கடவுளின் இருப்பைச் சொல்லும். எனக்கும் சரி தெருவோர பிச்சைக்காரருக்கும் சரி. :-)
2) உங்கள் வாழ்வின் மிக மிக மிகப் பெரீரீரீய திருப்புமுனை எதுன்னு சொல்லுங்க. அதுக்கு காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க. திருப்புமுனைல, வேர பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க. சுவாரஸ்யமா சொல்லுங்க. உண்மையே சொல்லுங்க.
இது வரைக்கும் இந்த மாதிரி சிந்திச்சதே இல்லீங்க. சிந்திச்சா குழப்பமா தான் இருக்கு.
நினைவுக்கு வந்த திருப்பங்களில் சில: சின்ன வயசுல படிக்கக் கிடைச்ச பாட்டியோட ஆன்மிக/சமய புத்தகங்கள், பத்தாவது படிக்கும் போது அம்மா இறந்தது, கல்லூரியில நுழைஞ்சவுடனே வந்த முதல் காதல், பி.இ.யில் இடம் கிடைத்தது, முதலாம் ஆண்டிலயே வந்த இரண்டாவது காதல் (அதுக்கப்புறமும் நிறைய காதல் வந்தன; ஆனா அதெல்லாம் திருப்பம் இல்லை:-) ), எம்.இ.யில் இடம் கிடைத்தது, டி.சி.எஸ்ஸில் வேலை கிடைத்தது, அமெரிக்கா வந்தது, திருமணம், மகள் பிறந்தது, தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்ந்தது, வலைப்பதிவிற்கு வந்தது, மகன் பிறந்ததுன்னு எல்லா நேரங்களிலேயும் வாழ்க்கை மாறியிருக்கு. இதுல பெரீரீரீய திருப்பம்ன்னா எதைச் சொல்றது? ம்ம்ம்ம்.
எம்.இ. கிடைத்தது தான் பெரிய திருப்பம்ன்னு நினைக்கிறேன். அது கிடைச்ச கதையைச் சொல்றதா? கிடைக்காம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்ன்னு சொல்றதா? ரெண்டையும் தானே கேட்டிருக்கீங்க? ரெண்டையும் சொல்றேன். சுவையா சொல்லணும்ன்னு கேட்டிருக்கீங்க. அது மட்டும் நமக்கு சுட்டு போட்டாலும் வராது.:-) உண்மையைச் சொல்லணும்ன்னு சொல்லியிருக்கீங்க. நீதிமன்றத்துல சொல்ற மாதிரி 'நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை'ன்னு ஏதாவது ஒரு புத்தகத்து மேல கையை வச்சுக்கிட்டு உறுதி மொழியெல்லாம் தரணும்ன்னு கேக்கலையே. அது வரைக்கும் மகிழ்ச்சி. :-) நெஞ்சாங்கூட்டுல என்ன இருக்கோ அதைச் சொல்றேன் - ஆனா கொஞ்சம் சொந்தப்பெருமையைப் பேசுற மாதிரி வந்ததுன்னா கோவிச்சுக்கக்கூடாது. ஏன்னா அது தானே உள்ளத்தில இருக்கு. :-)
அந்தத் திருப்புமுனைக்குக் காரணமானவங்க யாருன்னும் கேட்டிருக்கீங்க. அதுக்கு பதில் தான் கொஞ்சம் சிந்திக்கணும். சொல்லிக்கிட்டே வர்றேன். காரணங்கள் யார் யாருன்னு நீங்களே படிச்சுப் பாத்து சொல்லுங்க. :-)
பி.இ. படிக்கும் போது கலசலிங்கம் கல்லூரி ரொம்ப பிடிச்சுப் போச்சு. எல்லாருக்கும் அப்படித் தானே. அவங்க அவங்க கல்லூரின்னா ரொம்ப பிடிக்கும்ல. ரெண்டாம் ஆண்டுல தொடங்குன பஜனைக் குழு கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்தது. (நான் கல்லூரியை விட்டு வந்த பின்னாடியும் ரெண்டு மூனு வருடம் அந்தக் குழு இருந்தது. அப்புறம் புதுப்பசங்க வந்து 'உலகத்திலேயே பஜனைக்குழு இருக்கும் ஒரே பொறியியல் கல்லூரி'ங்கற பெருமையை கலசலிங்கம் இழக்குற மாதிரி பண்ணிப்புட்டங்க). வாராவாரம் சனிக்கிழமை கூட்டு வழிபாடுன்னு ஒரு கூட்டத்தை வச்சுக்கிட்டு சின்ன மடாதிபதியா நடந்துக்கிட்டதும் எங்க போனாலும் அந்தக் கூட்டத்தோடவே போய் அளப்பரை பண்ணுனதும் இன்னும் நினைவுல பசுமையா இருக்கு. விடுதியில இரவு உணவுக்கு ஒரு கூட்டமா இந்த பஜனைக் குழு 20, 25 பேர் நம்ம தலைமையில கிளம்புனாங்கன்னா சீனியர், ஜீனியர் எல்லாருமே 'டேய். குமரன் அடியாட்களோட கெளம்பிட்டான்டா. ஒதுங்கி வழி விட்றுங்க'ன்னு பவ்யமா ஒதுங்கி வழிவிட்டதும் நல்லா நினைவு இருக்கு. நடுவுல நாலு பேருக்கு நான் என் காதலைச் சொன்னதும் என் கவிதைகளைப் படித்து ஒரு பெண்ணும் என் கதைகளைப் படித்து ஒரு பெண்ணும் என்னிடம் தங்கள் காதலைச் சொன்னதும்ன்னு அதுவும் நடந்தது. அதுல யாரையும் நான் தொடர்ந்து காதலிக்கலை. திருமணம் வரைக்கும் அந்தக் காதல்கள் வரலை. :-) ரெண்டாம் ஆண்டு படிக்கிறப்ப தொடங்குன மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல ரெண்டாவது இடங்குறது கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்தது. (அதுல ஒரு மறைபொருள் - இரகசியம் இருக்கு. அதை உங்ககிட்ட மட்டும் சொல்றேன். வேற யாருக்கிட்டேயும் சொல்லாதீங்க. நான் படிக்கிறப்ப மதுரைப் பல்கலைக்கழகத்துக்குக் கீழ வர்ற கல்லூரிகள்ல எங்க கல்லூரியில மட்டும் தான் அளவியியல் & கட்டுப்பாட்டுப் பொறியியல் - Instrumentation and Control Engineering - இருந்தது. அதனால எங்க வகுப்புல ரெண்டாவது இடம்னாலே பல்கலைக்கழகத்துலயும் ரெண்டாவது இடம் தான். இன்னும் பல்கலைக்கழகத்துல ரெண்டாவது இடங்கற பொய்யான மெய்யைச் சொல்லிக்கிட்டு வர்றேன். நீங்களும் அப்படியே சொல்லிக்கிட்டு வாங்க. சரியா? )
இப்படி சொல்லத் தொடங்குனா சொல்லிக்கிட்டே போகலாம் கலசலிங்கம் வாழ்க்கையைப் பத்தி. அப்படி பேரும் புகழுமா வாழ்ந்து நல்லா அனுபவிச்சதால அங்கேயே வாழ்க்கை முழுக்க இருந்துரலாம்ன்னு ஒரு எண்ணம். கலசலிங்கத்துலேயே வாத்தியார் வேலைக்குச் சேர்ந்து கல்லூரி பக்கத்துலயே ஒரு பங்களா கட்டிக்கிட்டு குழந்தை குடும்பம்னு (இப்ப எல்லாம் யாராவது குழந்தை குட்டின்னு சொல்லுவாங்களா என்ன? அதான் குடும்பம்ன்னு சொல்லிட்டேன்) இருந்தா வாழ்க்கை அமைதியா போகும்ன்னு ஒரு கனவு. அந்த மாதிரியே செய்யறதுக்காக படிச்சு முடிச்ச பின்னாடி சென்னைக்குப் போய் திரு.கலசலிங்கம் ஐயாவைச் சந்திச்சேன். அதுக்கு முன்னாடியே நம்ம பஜனைக் குழு மூலமா செஞ்ச சில தொண்டு நடவடிக்கைகள் மூலம் ஐயாவோட அறிமுகம் இருந்தது. அவரோட சொந்த ஊருல இருக்கிற பள்ளி ஆண்டுவிழாவுல ஐயா தலைமை ஏத்து நடத்துறப்ப முதல், இரண்டு, மூன்றாம் நிலையைப் பெற்ற எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் நம்ம பணத்துல பரிசுகள் வழங்குனதுலயும் ஐயாகிட்ட நல்ல பேரு எனக்கு. அதனால உடனே வேலை போட்டுக் குடுக்க சம்மதம் தெரிவிச்சு பரிந்துரை கடிதம் குடுத்து அனுப்பிட்டாரு.
நான் கல்லூரிக்கு வந்து முதல்வரைப் பாக்குறதுக்கு முன்னாடி எங்க துறைத்தலைவரைப் போய் பாத்தேன். அவருக்கோ ஒரே அதிர்ச்சி. 'குமரா. நீ நல்லா படிக்கிற பையன். சரியா படிக்காம வேற எங்கையும் வேலை கிடைக்காம கடைசியில தான் இங்க வாத்தியார் வேலைக்கு வருவாங்க. நீ இந்த வேலைக்கு வந்தா உன்னோட ஜூனியர்கள் ரொம்ப நொந்து போயிடுவாங்க. உனக்கே வேலை கிடைக்கலையா வெளிய? நமக்கெல்லாம் எப்படி கிடைக்கும்ன்னு' அப்படி இப்படின்னு சொல்லத் தொடங்கிட்டாரு. என்ன என்னவோ சொல்லிப் பாக்குறேன். அவரு விடலை. கடைசியில 'அப்ப்டி நீ வாத்தியார் வேலைக்குத் தான் வருவேன்னா ஒன்னு செய். போய் எம்.இ. படிச்சுட்டு வா. எப்படியும் வாத்தியாரா தொடரணும்ன்னா எம்.இ. படிக்கணும். மொதல்ல அதை முடிச்சுட்டு வா. அப்புறம் வேலை குடுக்குறேன்'னு சொல்லிட்டார். அவர் சொன்னதும் சரின்னு பட்டதால முதல்வரைப் பாக்காமலேயே திரும்பி வந்துட்டேன்.
இப்ப எம்.இ. சேர்றதுக்காக GATE தேர்வுக்காகப் படிக்கணும். எனக்கோ வீட்டுல உக்காந்திருக்கப் பிடிக்கலை. அப்பத் தான் ஒரு நண்பன் புட்டபர்த்தியிலேயே தங்கியிருக்கான்னு தெரிஞ்சது. நானும் புட்டபர்த்திக்குப் போயிட்டேன். அங்கேயே ஒரு நாலு மாசம் தங்கியிருந்து தரிசனம் பார்த்த நேரம் போக மத்த நேரம் தேர்வுக்காகப் படிச்சேன். படிச்சு முடிச்சு வேலைக்குப் போவான்னு பாத்தா இப்படி புட்டபர்த்தியில போயி உக்காந்திருக்கானேன்னு எங்கப்பாவுக்கு கடுப்பு. யாரு அதையெல்லாம் கண்டுக்கிட்டாங்க? அப்பத் தான் நான் காதலிக்கிறேன்னு சும்மாவாச்சும் சொன்ன பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் திருமணமும் ஆச்சு. அதனால மனசு நொந்து நான் சாமியாரா போயிட்டேன்னு ஒரு நண்பன் வதந்தியை வேற கிளப்பிவிட்டுட்டான். :-) .
தேர்வு நேரமும் வந்து தேர்வும் எழுதி முடிந்து வெளியே வந்த போது எனக்குத் துளி கூட நம்பிக்கை இல்லை. ஒழுங்கா வீட்டுல இருந்து படிச்சிருந்தாலாவது நல்லா எழுதியிருக்கலாம். புட்டபர்த்துக்குப் போயி நேரத்தை வீணாக்கிட்டோம்ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா எம்.இ. முடிக்காம திரும்பவும் கலசலிங்கத்துக்கும் போக முடியாது; சரி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியிலாவது சேரலாம்ன்னு அங்கே முயற்சி செய்யத் தொடங்கினேன். நான் கலசலிங்கத்துல படிக்கிறப்ப வாராவாரம் திருநகர் வந்து ஒருத்தர்கிட்ட பகவத் கீதை கத்துக்கிட்டேன். அவர் தியாகராஜர்ல ஆசிரியரா இருக்கார். அவர் பரிந்துரையில வேலை கிடைச்சிரும்ன்னு நம்பிக்கை.
தேர்வு முடிவுகள் இன்னும் வரலை. ஆனா கல்லூரிக்களுக்கு விண்ணப்பிக்கும் நேரம் வந்துவிட்டது. அண்ணா பல்கலைக்கழகம், கோவை தொழிற்நுட்பக் கல்லூரி (CIT) ரெண்டு இடத்துலயும் விண்ணப்பப் படிவம் வாங்கிட்டேன். தேர்வு முடிவுகள் வர்றதுக்கு முன்னாடியே சிஐடியில விண்ணப்பிக்க வேண்டியதா இருந்ததால அதைச் செஞ்சுட்டேன். தேர்வு முடிவுகள் வந்த பின்னாடி மொத்தமா நம்பிக்கை இழந்ததால அண்ணா பல்கலைக்கழகப் படிவத்தை நண்பருக்குக் குடுத்துட்டேன். (அந்த நண்பருக்கு அண்ணாவுல இடம் கிடைச்சு எல்லாம் உன் கைராசின்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. அடப் போடா என் கைராசி எனக்குக் கைகுடுக்கலைன்னு நொந்துக்குவேன்).
சிஐடியில இருந்து நேர்முகத்துக்கு அழைப்பு வந்தது. சரி அழைப்பு வந்திருக்கே போகலாம்ன்னு போய் பாத்தா 4 இடங்களுக்கு 500 பேரு வந்திருக்காங்க. பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட பேச்சு குடுத்துப் பாத்தா ஒவ்வொருத்தரும் அருமையா மதிப்பெண்கள் வாங்கியிருக்காங்க. ஏன்டா என்னையெல்லாம் கூப்புட்டு வதைக்கிறாங்க இவங்கன்னு நெனைச்சுக்கிட்டு சரி கிளம்பிற வேண்டியது தான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கிறப்ப வந்தாரு குருராஜர். எம்.இ. ரெண்டாம் ஆண்டு படிக்கிற குருராஜன் தேர்வுக்கு எத்தனை பேரு வந்திருக்காங்க, யாரு யாரு வந்திருக்காங்கன்னு பாக்க வந்திருக்காரு. வந்து பக்கத்துல உக்காந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டு பேசத் தொடங்குனாரு. நான் அப்ப என்ன மனசுல ஓடிச்சோ அதை அவருகிட்ட சொன்னேன். வந்தது வந்துட்டே; நேர்முகம் முடிஞ்ச பிறகு போகலாம்ன்னு அவர் வற்புறுத்த நான் கிளம்பியே ஆகணும்ன்னு கிளம்புனேன். அவரு விடவே இல்லை. முதல் பார்வையிலேயே ஒரு நட்பு, பந்தம் வந்திருச்சு. அவர் சொல்றதைத் தட்ட முடியாம காத்திருந்து நேர்முகத்துக்கும் போனேன். உள்ள போனா சுத்தி ஆறு பேரு உக்காந்துக்கிட்டு கேள்விகளால வேள்வி செஞ்சாங்க. பாதி கேள்விகளுக்குத் தான் பதில் சொன்னேன். மீதிக்கு நல்லா முழிச்சேன்.
வெளியே வர்றப்ப கட்டாயம் நமக்கு இடம் கிடைக்காதுன்னு தோணியாச்சு. குருராஜன் 'சரி போகட்டும். வா. சாப்புட்ட பிறகு போகலாம்'ன்னு விடுதிக்குக் கூட்டிக்கிட்டு போயி சாப்பாடு போட்டார். நல்ல சாப்பாடு. சாப்புட்டு முடிச்சு 'சரி நான் கெளம்புறேங்க. இப்பக் கெளம்புனாத் தான் மருதமலைக்குப் போயிட்டு ராத்திரிக்குள்ள ஊரு போயி சேரலாம்'ன்னு சொன்னா 'இருப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல தேர்வு முடிவுகளைச் சொல்லிருவாங்க. அதுக்கப்புறம் போகலாம்'ன்னு நிறுத்தி வச்சாரு. அன்புத் தொல்லைக்காக நின்னேன். நேரம் ஆக ஆக 'வெட்டியா இங்க உக்காந்திருக்கோமே. மருதமலையானைப் பாக்க நேரம் இருக்காதோ'ன்னு குறுகுறுப்பு. புலம்பிக்கிட்டு இருந்தேன். நாலு மணி போல முதல்வர் வந்து ஒவ்வொரு பேரா கூப்பிட்டாரு. 'செந்தில் குமரன்' ஒல்லியா ஒரு பையன் வந்து முன்னாடி நின்னான். 'வேணுகோபால்' குண்டா உயரமா ஒரு பையன் (ஆளு?) வந்து நின்னாரு. 'நாகேஸ்வரராவ்' குள்ளமா (என்னை விட ஒரு இஞ்ச் தான் குள்ளமா இருப்பாரு. ஆனாலும் அவரைக் குள்ளம்ன்னு சொல்லுவோம்ல) ஒருத்தர் வந்து முன்னாடி நின்னாரு. 'குமரன்' யாரும் முன்னாடி வரலை 'எம்.என்.குமரன்' அட நம்ம பேரு தான்னு அப்ப தான் உறைச்சது. வேக வேகமா முன்னாடி போய் நின்னேன். 'நீங்க நாலு பேரும் முதல் மாடியில இருக்குற அலுவலகத்துக்குப் போங்க'ன்னு பத்திவிட்டாரு. நாலு பேரும் படிக்கட்டுல போறப்பவே ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் செஞ்சுக்கிட்டோம். யாருக்கும் எதுக்கு நாம மேல போறோம்ன்னு தெரியலை. வேணுகோபால் 'நான் ப்ராஜக்ட் ரிபோர்ட் கொண்டு வரலை. நீங்களும் அப்படித் தானா? அதுக்குத் தான் நம்மளை தனியா அனுப்பியிருக்காங்க'ன்னு சொல்றார். செந்திலோ 'எனக்கு ஒன்னும் புரியலைங்க. ஒரே குழப்பமா இருக்கு'ன்னு புலம்புறாரு. அலுவலகத்துக்கு வந்து இப்படி முதல்வர் எங்க நாலு பேரையும் அனுப்புனாருன்னு சொன்னா 'கட்டணப்பணம் கொண்டு வந்திருக்கீங்களா? எடுத்துக்கட்டுங்க'ங்கறாரு அலுவலர். அப்பவும் ஒன்னும் புரியல. 'கட்டணமா? எதுக்கு?'ன்னு கேட்ட பின்னாடி 'அடப்பாவிங்களா. உங்களுக்கு எம்.இ. இடம் கிடைச்சுருக்கு. அதுக்குத் தான் கட்டணம்'ன்னு சொல்றாரு. அப்பத் தான் புரியுது எல்லாருக்கும் ராவ்-க்கு மட்டும் ஏற்கனவே தெரியும் போல - இந்த தமிழாளுங்க கிட்ட நமக்கென்ன பேச்சுன்னு கமுக்கமா இருந்திருகாரு. செந்திலும் நானும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்காதது தான் குறை. அப்படி ஒரு மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லா கட்டணத்தைக் கட்டி வகுப்புல சேர்ந்தோம்.
இதையேன் பெரீரீரீய திருப்பம்ன்னு சொல்றேன்னு இன்னேரம் புரிஞ்சிருக்கும். இல்லியா? அதையும் விலாவாரியா சொல்லணும்ன்னா சொல்றேன். :-) ஆனா ஒன்னு. கலசலிங்கத்துல அதுக்கப்புறம் படிச்சப் பசங்க செஞ்ச புண்ணியம் தான் அவங்களை எங்கிட்ட இருந்து காப்பாத்தியிருக்குன்னு மட்டும் கட்டாயம் சொல்லலாம். :-)
Tuesday, June 17, 2008
கவிநயா அக்கா, வாத்தியார் ஐயா, பரிசல்காரன், கோவி.கண்ணன் - அனைவருக்கும் வணக்கம் (கேள்வி பதில் 2)
பாராட்டுகளை அள்ளி வழங்கக் கற்றுக் கொள்ள வேண்டுமா? உணர்ச்சிப் பெருக்கில் உருக வேண்டுமா? அப்படி உருகக் கற்றுக் கொள்ள வேண்டுமா? ஒரு பதிவர் எழுதுவது பிடித்துவிட்டால் அவர் ஒரு இடுகை இட்டு பத்தே நிமிடத்தில் படித்துப் பின்னூட்டம் இடக் கற்றுக் கொள்ள வேண்டுமா? இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு 'ஆம்' என்று உங்கள் மனத்திற்குள்ளேயே பதில் சொல்லிக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டியவை கவிதாயினி கவிநயா அக்காவின் பதிவினையும் பின்னூட்டங்களையுமே. :-)
இதோ அக்கா கேட்ட கேள்விகளும் தம்பியேன் சொல்லும் பதில்களும்:
அக்கா முதல் கேள்வியாக செல்வன் கேட்ட கேள்விகளில் ஒன்றையே கேட்டார். அதற்கான விடை சென்ற இடுகையிலே சொல்லியிருக்கிறேன்.
2. உங்களுக்கு சங்க இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் எப்போது ஆர்வம் ஏற்பட்டது? ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பினாலா, இல்லை தனித்தனியாக ஏற்பட்டதா?
ஆன்மிகத்தில/சமயத்தில/மதத்தில/பக்தியில ஈடுபாடு வந்தது குட்டியூண்டு வயசிலே. ( நீங்க ஆன்மிகத்திலன்னு தான் கேட்டீங்க. மத்ததையும் சொல்லாட்டி உஷா கோவிச்சுக்குவாங்க போலிருக்கு. :-) )
முதல் காரணம் அம்மம்மா சந்திரா அம்மாள். இந்தப் பாட்டியைப் பத்தி முந்தையப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அவங்க நேரடியா எதுவுமே சொல்லித் தரலை. ஆனா புத்தகப்புழுவா சின்ன வயசுலயே இருந்த எனக்குப் படிக்க நிறைய புத்தகங்களை வச்சிருந்தார். என் பதிவுகளைப் பத்தி தினமலர்ல வந்தப்ப அவங்க தான் அதை முதல்ல பார்த்து என் தம்பிக்கிட்ட சொன்னாங்க. அமெரிக்காவுல இருந்துக்கிட்டு அபிராமி அந்தாதியும் நாயகி சுவாமிகள் பாட்டும் எழுதுனா வெள்ளைக்காரன் இதெல்லாம் படிக்கிறானான்னு நான் அதுக்கப்புறம் மதுரைக்குப் போனபோது கேட்டாங்க. பாட்டி இதெல்லாம் நம்ம ஊரு ஆளுங்க படிக்கிறதுக்குத் தான் எழுதிக்கிட்டு இருக்கேன்னா அவங்களுக்குப் புரியலை. இன்னைக்குப் போயி சொன்னாலும் புரியாதுன்னு நினைக்கிறேன். ஏதோ பேரன் அமெரிக்காவுல பொட்டி தட்டிக்கிட்டு நிறைய சம்பாரிச்சுகிட்டு அப்பப்ப கம்ப்யூட்டர் பொட்டியில அபிராமி அந்தாதியும் எழுதிக்கிட்டு இருக்கான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க வச்சுக்கிட்டு இருந்த புத்தங்களைப் படிச்சு 7 (அ) 8 வயசுல அவங்ககிட்ட கீதையில ஐயம் கேட்டுக்கிட்டு இருந்தது நினைவிருக்கு. புரியாம மகாபாரதம் பெரிய புத்தகம் படிச்சதும் நினைவிருக்கு. ராமாயணம் படிக்கிறப்ப அகலிகைக்கு ஏன் கௌதமர் சாபம் குடுத்தாருன்னு புரியாம பாட்டிக்கிட்ட கேட்டதும் நினைவிருக்கு. ஆனா அவங்க என்ன பதில் சொன்னாங்கங்கறது மட்டும் மறந்திருச்சு. :-)
ரெண்டாவது காரணம் நான் பத்தாப்பு படிக்கிறப்ப டாடா சொல்லாம செத்துப் போன அம்மா. பகவத் கீதையெல்லாம் படிச்சு ரொம்ப அறிவாளியா நினைச்சுக்கிட்டு அம்மா செத்ததுக்கு அன்னைக்கு அழலை. ஆனா கல்லூரிக்காலத்துல இருந்து இன்னை வரைக்கும் அழுதுக்கிட்டு இருக்கேன். இப்ப இதை எழுதுறப்பவும் கண்ணுல தண்ணி கட்டுது. சரி சரி. எதையோ சொல்ல வந்து வேற எதையோ சொல்றேன். எங்கம்மா சுசிலா பெரிய முருக பக்தை. திருப்பரங்குன்றத்துக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கூடல் குமரன் சன்னிதிக்கும் அடிக்கடி (தினமும் ஒரு முறைன்னு சொல்ல முடியாது; வாரத்துக்கு ஒரு முறைன்னும் சொல்ல முடியாது - ரெண்டுக்கும் நடுவுல) கூட்டிக்கிட்டு போயி திருப்புகழும் 'சண்முக நாயகன் தோன்றிடுவான்' பாட்டும் நல்லா சொல்லிக் குடுத்தாங்க. அன்னைக்குத் தொடங்குனது தெய்வத் தமிழின் மேல் காதல்.
அம்மாவோட மறைவுக்குப் பிறகு அந்த தெய்வப் பாடல்களின் மேல் இருந்த காதல் கீதையின் மேல் திரும்பியது. அப்ப எல்லாம் கீதைக்கு எத்தனை உரைகள் இருக்கோ அத்தனையையும் வாங்கி ஒவ்வொரு சுலோகமா ஒப்பீடு செஞ்சே படிச்சேன். அப்படிப் படிச்சது தான் வடமொழி. பள்ளிக்கூடத்துல தமிழ் படிச்சது மாதிரி யாருக்கிட்டயும் முறையா வடமொழி படிக்கலை. அதனால என்னோட வடமொழி அறிவு கேள்வியறிவு மட்டுமேன்னு சொல்லலாம்; அரைகுறை அறிவுன்னும் சொல்லலாம். :-) உங்க அடுத்த கேள்வியான '3. வடமொழியும் நீங்களே ஆர்வத்தால் கற்றுக் கொண்டீர்களா?'க்கும் பதில் சொல்லியாச்சு. ரெண்டாவது கேள்விக்கான பதில் தொடருது.
கல்லூரிக்காலத்தில கீதையை எந்தளவுக்குப் படிச்சேனோ அந்த அளவுக்கு ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கத் தொடங்குனது வேலை பாக்கத் தொடங்குனப்ப. அதுக்கு இணையத்துல இருக்கிற வைணவ குழுமங்கள் (பக்தி, ஒப்பிலியப்பன், சரணாகதி) தான் காரணம். அப்ப பழந்தமிழ் இலக்கியங்கள் மேல இன்னும் பழக்கம் கூடிச்சு.
2005ல பதிவுகள்ல எழுதத் தொடங்குன பிறகு தான் சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்தது. 2006 ஜனவரியில 'மாலவனும் தமிழ்க்கடவுள்' என்ற விவாதம் என்னோட நட்சத்திர வாரத்துல வந்தது. நான் அந்தக் கருத்தை வைக்க இராகவன் மறுத்தார். பலவகையில என் கருத்தைச் சொன்னேன். ஆனா தரவுகளோட சொன்னா இன்னும் பலமா என் கருத்தை வைக்கலாம்ன்னு தோணிச்சு. அப்பத் தொடங்குனது 'இலக்கியத்தில் இறை' என்ற தொடருக்கான எண்ணம். ஆனா நான் விரும்புற கருத்துக்குத் தரவுகளைத் தேடாம திறந்த மனத்தோடு தான் சங்க இலக்கியங்களை அணுகுகிறேன். அதனால் கடைசியில் மாலவன் தமிழ்க்கடவுள் என்று சொல்ல சரியான தரவுகள் கிடைக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவும் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவும் தயக்கங்கள் இல்லை.
சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்ததுக்கு இன்னொரு காரணமும் உண்டு. வடமொழி வேதங்கள், நூற்கள் ஆராயப்பட்ட அளவிற்குத் தமிழிலக்கியங்கள் ஆராயப்படவில்லை என்ற எண்ணம் உண்டு. திராவிடம், ஆரியம், தமிழ், வடமொழி போன்ற கருத்தாங்கள் எல்லாம் வடமொழி நூற்களை அடிப்படையாகக் கொண்டே இருப்பதாக ஒரு எண்ணம். தமிழிலக்கியங்களில் அதற்கு ஏற்பவோ எதிர்ப்பாகவோ தரவுகள் இருக்கிறதா என்று பார்க்க ஆசை. சில தரவுகள் கிடைத்து அவற்றை கூடலில் (முக்கியமாக பாரி வள்ளல் தொடர்கதையில்) வைத்திருக்கிறேன். எத்தனை பேர் படித்தார்களோ தெரியாது.
***
இணையத்தில் ஒரே ஒரு வாத்தியார் தான்; ஒரே ஒரு வாத்தியார் அம்மா தான். ரெண்டு பேருக்கும் அறிமுகம் தேவையில்லை. வாத்தியார் அம்மாவை நான் அக்கான்னு தான் கூப்புடறது. வாத்தியார் ஐயா எழுத வந்த நாள்ல இருந்து தொடர்ந்து படிச்சுக்கிட்டு தான் வர்றேன். பின்னூட்டங்களும் முடிஞ்ச வரைக்கும் இட்டுக்கிட்டு வர்றேன். வாத்தியார் ஐயா கேட்ட கேள்வியும் என்னோட பதிலும் இங்கே.
இறைவனைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?
நல்ல கேள்வி வாத்தியார் ஐயா. பதில் சொல்லக் கடினமான கேள்வியும். எந்தப் பதில் சொன்னாலும் முழுமையாக இருக்காது.
இப்போதைக்கு ரெண்டு பதில்கள் இருக்கிறது. இரண்டையுமே சொல்கிறேன்.
உங்க கேள்வியை நீங்க கேட்டவுடனே படிச்சப்ப ஒரு பதில் தோணிச்சு. அது: சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து படிச்சு எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சுக்கிற அறிவு வேணும். அப்படி படிச்சுப் புரிஞ்சிக்கிட்டதைத் தெளிவா மத்தவங்களுக்குச் சொல்ற வல்லமையும் வேணும். (ஏன் இந்த வரம்ன்னு போன பத்தியில சொல்லியிருக்கேன்)
இந்தக் கேள்விக்குப் பதில் எழுத உக்காந்தப்ப இதைப் பத்தி சிந்திச்சேன். அப்ப தோணினது: எங்குமுளன் கண்ணன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இப்ப எனக்குக் கிடைச்ச இந்தக் காட்சி என்றென்றைக்கும் தொடர்ந்து கிடைக்கணும். எந்த எந்த வகையில உனக்குத் தொண்டு செய்ய முடியுமோ அந்த அந்த வகையில தொண்டு செய்யும் வாய்ப்பும் வசதியும் வல்லமையும் கிடைக்க வேண்டும். நீ எங்கு எந்த நிலையில் என்னை வைக்கிறாயோ அந்த நிலையில் உன் நினைவோட நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கணும். (இதெல்லாம் சொல்லுதல் யார்க்கும் எளிய கதை. கடவுள் காட்சி தரும் போது இவற்றைத் தான் கேப்பேனாங்கறது ஐயமே)
***
என் பதிவுக்குப் புதுசா வந்து கேள்வி கேட்ட பரிசல்கார கிருஷ்ணகுமாரை வரவேற்கிறேன். அவர் கேட்ட கேள்வியும் அதற்குரிய பதிலும்:
எனது கேள்வி..
உங்களுக்கு எங்களையெல்லாம் பத்தா பாவமா இல்லையா?
கிருஷ்ணகுமார். பதிவுகள்ல எழுதுறதே சில நேரம் மத்தவங்களைக் கொடுமைபடுத்துற மாதிரி தான். குடும்பத்தோட செலவழிக்க வேண்டிய நேரத்துல பதிவு எழுதுறதால குடும்பத்தைக் கொடுமைபடுத்துறோம். இந்த மாதிரி கேள்வி கேளு கேள்வி கேளுன்னு நச்சரிச்சு உங்களை மாதிரி பதிவர்களைக் கொடுமைபடுத்துறோம். என்னங்க செய்றது - கொடுமையே கொடுந்தொழில்ன்னு ஆகிப் போச்சு வாழ்க்கை. :-)
***
கோவி.கண்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. வெள்ளம் போல் பெருகும் அவரது கருத்துகளே அவரை நன்கு அறிமுகம் செய்து விடும். அந்தக் கருத்துகள் அவருக்கு என்ன பட்டப்பெயரை வாங்கித் தந்ததுங்கறதை மட்டும் நான் சொல்ல மாட்டேன். :-)
அவர் 'கேள்விகள் தயாராகின்றன'ன்னு முன்னோட்டம் கொடுத்தபோது சரி வழக்கம் போல விவகாரமா தான் எதாச்சும் கேப்பாருன்னு நினைச்சேன். அப்புறம் அவர் கேட்ட ஒரே கேள்வியைப் பாத்தவுடனே சப்புன்னு ஆயிருச்சு. அப்படி கேட்ட ஒரே கேள்விக்கு முன்னாடியும் ஒரு பாராட்டுரைங்கற பாறாங்கல்லு. எதுக்குன்னு தெரியலை. :-)
ஆன்மிகம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம்,சமஸ்கிரதம் ஆகியவற்றை கரைத்துக் குடித்து இருக்கிறீர்கள்.
ஆன்மிகம் தொடர்புடைய கேள்வி - பதில் பகுதியை ஆரம்பிக்கலாமே... இது பற்றி உங்கள் எண்ணம் ?
கண்ணன்,
எதையும் இன்னும் கரைத்தெல்லாம் குடிக்கவில்லை. அப்படி செய்ய வெகுகாலம் செல்லும். அதற்கெல்லாம் காலம் தான் கை கொடுக்க வேண்டும்.
ஆன்மிகம் தொடர்பா கேள்வி - பதில் தொடங்கலாம்ன்னு இரவிசங்கரோட விண்மீன் வாரத்துல பாபா சொல்லியிருந்தார். நீங்களும் இப்ப அதைக் கேக்குறீங்க. அப்படி ஒன்னு தொடங்குறதா எண்ணம் இல்லை. காரணங்கள் இரண்டு.
1. ஆன்மிகத்தில் கேள்வி பதில் தொடங்கும் அளவிற்கு ஒன்றும் தெரியாது. உஷா சொல்வது போல் இந்து மதத்தைப் பற்றித் தான் எழுதுகிறேன்; அதனால் மதப்பதிவர் தான் என்றாலும் இந்து மதத்தைப் பற்றி கேள்வி பதில் நடத்தும் அளவிற்கு அறிவில்லை. அறிந்தவன் என்ற எண்ணமும் இல்லை.
2. அப்படியே அரைகுறை அறிவோடு தொடங்கினாலும் உஷா பட்டியல் இட்ட ஒவ்வொருவரும் ஒரே கேள்விக்கு ஒவ்வொரு விதமாக பதில் சொல்வார்கள்/சொல்வோம். அது அப்புறம் கேள்வி பதிலாக இருக்காது; பெரும் சர்ச்சையாக முடியும். ஏற்கனவே விளையாட்டாகச் சிலர் தொடங்கிய சர்ச்சைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் போது இது வேற தேவையா? :-)
எனக்கு ஏன் இந்த எண்ணம் இல்லைங்கறதுக்குத் தான் காரணங்கள் சொன்னேன். வேற எவராவது 'கேள்வி - பதில்' தொடங்கும் எண்ணம் இருந்தா கட்டாயம் அவங்க செய்யலாம்; அது அவங்களோட உரிமை.
இதோ அக்கா கேட்ட கேள்விகளும் தம்பியேன் சொல்லும் பதில்களும்:
அக்கா முதல் கேள்வியாக செல்வன் கேட்ட கேள்விகளில் ஒன்றையே கேட்டார். அதற்கான விடை சென்ற இடுகையிலே சொல்லியிருக்கிறேன்.
2. உங்களுக்கு சங்க இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் எப்போது ஆர்வம் ஏற்பட்டது? ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பினாலா, இல்லை தனித்தனியாக ஏற்பட்டதா?
ஆன்மிகத்தில/சமயத்தில/மதத்தில/பக்தியில ஈடுபாடு வந்தது குட்டியூண்டு வயசிலே. ( நீங்க ஆன்மிகத்திலன்னு தான் கேட்டீங்க. மத்ததையும் சொல்லாட்டி உஷா கோவிச்சுக்குவாங்க போலிருக்கு. :-) )
முதல் காரணம் அம்மம்மா சந்திரா அம்மாள். இந்தப் பாட்டியைப் பத்தி முந்தையப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அவங்க நேரடியா எதுவுமே சொல்லித் தரலை. ஆனா புத்தகப்புழுவா சின்ன வயசுலயே இருந்த எனக்குப் படிக்க நிறைய புத்தகங்களை வச்சிருந்தார். என் பதிவுகளைப் பத்தி தினமலர்ல வந்தப்ப அவங்க தான் அதை முதல்ல பார்த்து என் தம்பிக்கிட்ட சொன்னாங்க. அமெரிக்காவுல இருந்துக்கிட்டு அபிராமி அந்தாதியும் நாயகி சுவாமிகள் பாட்டும் எழுதுனா வெள்ளைக்காரன் இதெல்லாம் படிக்கிறானான்னு நான் அதுக்கப்புறம் மதுரைக்குப் போனபோது கேட்டாங்க. பாட்டி இதெல்லாம் நம்ம ஊரு ஆளுங்க படிக்கிறதுக்குத் தான் எழுதிக்கிட்டு இருக்கேன்னா அவங்களுக்குப் புரியலை. இன்னைக்குப் போயி சொன்னாலும் புரியாதுன்னு நினைக்கிறேன். ஏதோ பேரன் அமெரிக்காவுல பொட்டி தட்டிக்கிட்டு நிறைய சம்பாரிச்சுகிட்டு அப்பப்ப கம்ப்யூட்டர் பொட்டியில அபிராமி அந்தாதியும் எழுதிக்கிட்டு இருக்கான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க வச்சுக்கிட்டு இருந்த புத்தங்களைப் படிச்சு 7 (அ) 8 வயசுல அவங்ககிட்ட கீதையில ஐயம் கேட்டுக்கிட்டு இருந்தது நினைவிருக்கு. புரியாம மகாபாரதம் பெரிய புத்தகம் படிச்சதும் நினைவிருக்கு. ராமாயணம் படிக்கிறப்ப அகலிகைக்கு ஏன் கௌதமர் சாபம் குடுத்தாருன்னு புரியாம பாட்டிக்கிட்ட கேட்டதும் நினைவிருக்கு. ஆனா அவங்க என்ன பதில் சொன்னாங்கங்கறது மட்டும் மறந்திருச்சு. :-)
ரெண்டாவது காரணம் நான் பத்தாப்பு படிக்கிறப்ப டாடா சொல்லாம செத்துப் போன அம்மா. பகவத் கீதையெல்லாம் படிச்சு ரொம்ப அறிவாளியா நினைச்சுக்கிட்டு அம்மா செத்ததுக்கு அன்னைக்கு அழலை. ஆனா கல்லூரிக்காலத்துல இருந்து இன்னை வரைக்கும் அழுதுக்கிட்டு இருக்கேன். இப்ப இதை எழுதுறப்பவும் கண்ணுல தண்ணி கட்டுது. சரி சரி. எதையோ சொல்ல வந்து வேற எதையோ சொல்றேன். எங்கம்மா சுசிலா பெரிய முருக பக்தை. திருப்பரங்குன்றத்துக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கூடல் குமரன் சன்னிதிக்கும் அடிக்கடி (தினமும் ஒரு முறைன்னு சொல்ல முடியாது; வாரத்துக்கு ஒரு முறைன்னும் சொல்ல முடியாது - ரெண்டுக்கும் நடுவுல) கூட்டிக்கிட்டு போயி திருப்புகழும் 'சண்முக நாயகன் தோன்றிடுவான்' பாட்டும் நல்லா சொல்லிக் குடுத்தாங்க. அன்னைக்குத் தொடங்குனது தெய்வத் தமிழின் மேல் காதல்.
அம்மாவோட மறைவுக்குப் பிறகு அந்த தெய்வப் பாடல்களின் மேல் இருந்த காதல் கீதையின் மேல் திரும்பியது. அப்ப எல்லாம் கீதைக்கு எத்தனை உரைகள் இருக்கோ அத்தனையையும் வாங்கி ஒவ்வொரு சுலோகமா ஒப்பீடு செஞ்சே படிச்சேன். அப்படிப் படிச்சது தான் வடமொழி. பள்ளிக்கூடத்துல தமிழ் படிச்சது மாதிரி யாருக்கிட்டயும் முறையா வடமொழி படிக்கலை. அதனால என்னோட வடமொழி அறிவு கேள்வியறிவு மட்டுமேன்னு சொல்லலாம்; அரைகுறை அறிவுன்னும் சொல்லலாம். :-) உங்க அடுத்த கேள்வியான '3. வடமொழியும் நீங்களே ஆர்வத்தால் கற்றுக் கொண்டீர்களா?'க்கும் பதில் சொல்லியாச்சு. ரெண்டாவது கேள்விக்கான பதில் தொடருது.
கல்லூரிக்காலத்தில கீதையை எந்தளவுக்குப் படிச்சேனோ அந்த அளவுக்கு ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கத் தொடங்குனது வேலை பாக்கத் தொடங்குனப்ப. அதுக்கு இணையத்துல இருக்கிற வைணவ குழுமங்கள் (பக்தி, ஒப்பிலியப்பன், சரணாகதி) தான் காரணம். அப்ப பழந்தமிழ் இலக்கியங்கள் மேல இன்னும் பழக்கம் கூடிச்சு.
2005ல பதிவுகள்ல எழுதத் தொடங்குன பிறகு தான் சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்தது. 2006 ஜனவரியில 'மாலவனும் தமிழ்க்கடவுள்' என்ற விவாதம் என்னோட நட்சத்திர வாரத்துல வந்தது. நான் அந்தக் கருத்தை வைக்க இராகவன் மறுத்தார். பலவகையில என் கருத்தைச் சொன்னேன். ஆனா தரவுகளோட சொன்னா இன்னும் பலமா என் கருத்தை வைக்கலாம்ன்னு தோணிச்சு. அப்பத் தொடங்குனது 'இலக்கியத்தில் இறை' என்ற தொடருக்கான எண்ணம். ஆனா நான் விரும்புற கருத்துக்குத் தரவுகளைத் தேடாம திறந்த மனத்தோடு தான் சங்க இலக்கியங்களை அணுகுகிறேன். அதனால் கடைசியில் மாலவன் தமிழ்க்கடவுள் என்று சொல்ல சரியான தரவுகள் கிடைக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவும் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவும் தயக்கங்கள் இல்லை.
சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்ததுக்கு இன்னொரு காரணமும் உண்டு. வடமொழி வேதங்கள், நூற்கள் ஆராயப்பட்ட அளவிற்குத் தமிழிலக்கியங்கள் ஆராயப்படவில்லை என்ற எண்ணம் உண்டு. திராவிடம், ஆரியம், தமிழ், வடமொழி போன்ற கருத்தாங்கள் எல்லாம் வடமொழி நூற்களை அடிப்படையாகக் கொண்டே இருப்பதாக ஒரு எண்ணம். தமிழிலக்கியங்களில் அதற்கு ஏற்பவோ எதிர்ப்பாகவோ தரவுகள் இருக்கிறதா என்று பார்க்க ஆசை. சில தரவுகள் கிடைத்து அவற்றை கூடலில் (முக்கியமாக பாரி வள்ளல் தொடர்கதையில்) வைத்திருக்கிறேன். எத்தனை பேர் படித்தார்களோ தெரியாது.
***
இணையத்தில் ஒரே ஒரு வாத்தியார் தான்; ஒரே ஒரு வாத்தியார் அம்மா தான். ரெண்டு பேருக்கும் அறிமுகம் தேவையில்லை. வாத்தியார் அம்மாவை நான் அக்கான்னு தான் கூப்புடறது. வாத்தியார் ஐயா எழுத வந்த நாள்ல இருந்து தொடர்ந்து படிச்சுக்கிட்டு தான் வர்றேன். பின்னூட்டங்களும் முடிஞ்ச வரைக்கும் இட்டுக்கிட்டு வர்றேன். வாத்தியார் ஐயா கேட்ட கேள்வியும் என்னோட பதிலும் இங்கே.
இறைவனைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?
நல்ல கேள்வி வாத்தியார் ஐயா. பதில் சொல்லக் கடினமான கேள்வியும். எந்தப் பதில் சொன்னாலும் முழுமையாக இருக்காது.
இப்போதைக்கு ரெண்டு பதில்கள் இருக்கிறது. இரண்டையுமே சொல்கிறேன்.
உங்க கேள்வியை நீங்க கேட்டவுடனே படிச்சப்ப ஒரு பதில் தோணிச்சு. அது: சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து படிச்சு எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சுக்கிற அறிவு வேணும். அப்படி படிச்சுப் புரிஞ்சிக்கிட்டதைத் தெளிவா மத்தவங்களுக்குச் சொல்ற வல்லமையும் வேணும். (ஏன் இந்த வரம்ன்னு போன பத்தியில சொல்லியிருக்கேன்)
இந்தக் கேள்விக்குப் பதில் எழுத உக்காந்தப்ப இதைப் பத்தி சிந்திச்சேன். அப்ப தோணினது: எங்குமுளன் கண்ணன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இப்ப எனக்குக் கிடைச்ச இந்தக் காட்சி என்றென்றைக்கும் தொடர்ந்து கிடைக்கணும். எந்த எந்த வகையில உனக்குத் தொண்டு செய்ய முடியுமோ அந்த அந்த வகையில தொண்டு செய்யும் வாய்ப்பும் வசதியும் வல்லமையும் கிடைக்க வேண்டும். நீ எங்கு எந்த நிலையில் என்னை வைக்கிறாயோ அந்த நிலையில் உன் நினைவோட நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கணும். (இதெல்லாம் சொல்லுதல் யார்க்கும் எளிய கதை. கடவுள் காட்சி தரும் போது இவற்றைத் தான் கேப்பேனாங்கறது ஐயமே)
***
என் பதிவுக்குப் புதுசா வந்து கேள்வி கேட்ட பரிசல்கார கிருஷ்ணகுமாரை வரவேற்கிறேன். அவர் கேட்ட கேள்வியும் அதற்குரிய பதிலும்:
எனது கேள்வி..
உங்களுக்கு எங்களையெல்லாம் பத்தா பாவமா இல்லையா?
கிருஷ்ணகுமார். பதிவுகள்ல எழுதுறதே சில நேரம் மத்தவங்களைக் கொடுமைபடுத்துற மாதிரி தான். குடும்பத்தோட செலவழிக்க வேண்டிய நேரத்துல பதிவு எழுதுறதால குடும்பத்தைக் கொடுமைபடுத்துறோம். இந்த மாதிரி கேள்வி கேளு கேள்வி கேளுன்னு நச்சரிச்சு உங்களை மாதிரி பதிவர்களைக் கொடுமைபடுத்துறோம். என்னங்க செய்றது - கொடுமையே கொடுந்தொழில்ன்னு ஆகிப் போச்சு வாழ்க்கை. :-)
***
கோவி.கண்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. வெள்ளம் போல் பெருகும் அவரது கருத்துகளே அவரை நன்கு அறிமுகம் செய்து விடும். அந்தக் கருத்துகள் அவருக்கு என்ன பட்டப்பெயரை வாங்கித் தந்ததுங்கறதை மட்டும் நான் சொல்ல மாட்டேன். :-)
அவர் 'கேள்விகள் தயாராகின்றன'ன்னு முன்னோட்டம் கொடுத்தபோது சரி வழக்கம் போல விவகாரமா தான் எதாச்சும் கேப்பாருன்னு நினைச்சேன். அப்புறம் அவர் கேட்ட ஒரே கேள்வியைப் பாத்தவுடனே சப்புன்னு ஆயிருச்சு. அப்படி கேட்ட ஒரே கேள்விக்கு முன்னாடியும் ஒரு பாராட்டுரைங்கற பாறாங்கல்லு. எதுக்குன்னு தெரியலை. :-)
ஆன்மிகம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம்,சமஸ்கிரதம் ஆகியவற்றை கரைத்துக் குடித்து இருக்கிறீர்கள்.
ஆன்மிகம் தொடர்புடைய கேள்வி - பதில் பகுதியை ஆரம்பிக்கலாமே... இது பற்றி உங்கள் எண்ணம் ?
கண்ணன்,
எதையும் இன்னும் கரைத்தெல்லாம் குடிக்கவில்லை. அப்படி செய்ய வெகுகாலம் செல்லும். அதற்கெல்லாம் காலம் தான் கை கொடுக்க வேண்டும்.
ஆன்மிகம் தொடர்பா கேள்வி - பதில் தொடங்கலாம்ன்னு இரவிசங்கரோட விண்மீன் வாரத்துல பாபா சொல்லியிருந்தார். நீங்களும் இப்ப அதைக் கேக்குறீங்க. அப்படி ஒன்னு தொடங்குறதா எண்ணம் இல்லை. காரணங்கள் இரண்டு.
1. ஆன்மிகத்தில் கேள்வி பதில் தொடங்கும் அளவிற்கு ஒன்றும் தெரியாது. உஷா சொல்வது போல் இந்து மதத்தைப் பற்றித் தான் எழுதுகிறேன்; அதனால் மதப்பதிவர் தான் என்றாலும் இந்து மதத்தைப் பற்றி கேள்வி பதில் நடத்தும் அளவிற்கு அறிவில்லை. அறிந்தவன் என்ற எண்ணமும் இல்லை.
2. அப்படியே அரைகுறை அறிவோடு தொடங்கினாலும் உஷா பட்டியல் இட்ட ஒவ்வொருவரும் ஒரே கேள்விக்கு ஒவ்வொரு விதமாக பதில் சொல்வார்கள்/சொல்வோம். அது அப்புறம் கேள்வி பதிலாக இருக்காது; பெரும் சர்ச்சையாக முடியும். ஏற்கனவே விளையாட்டாகச் சிலர் தொடங்கிய சர்ச்சைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் போது இது வேற தேவையா? :-)
எனக்கு ஏன் இந்த எண்ணம் இல்லைங்கறதுக்குத் தான் காரணங்கள் சொன்னேன். வேற எவராவது 'கேள்வி - பதில்' தொடங்கும் எண்ணம் இருந்தா கட்டாயம் அவங்க செய்யலாம்; அது அவங்களோட உரிமை.
Labels:
கேள்வி பதில்,
சொந்தக் கதை சோகக் கதை,
பொது
Friday, June 13, 2008
உலகின் புதிய கடவுளுக்கு வணக்கம்! (கேள்வி பதில் 1)

உலகின் புதிய கடவுளாம் நமது செல்வன் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் இங்கே.
***
என்னங்க முனைவர். செல்வன்? முதல் கேள்வியைன்னு ஒற்றையில் சொல்லிட்டு மொத்தம் ஐந்து கேள்விகள் கேட்டிருக்கீங்க? சரி. சரி. நெற்றிக்கண்ணைத் திறக்காதீங்க. ஐந்துக்கும் பதில்கள் சொல்றேன். :-)
1) கல்லூரியில் படிக்கும்போது ஜாலியாக சராசரி பசங்களை போல் இருந்தீர்களா அல்லது ரொம்ப நல்ல பையனாக இருந்தீர்களா?
அப்ப சராசரி பசங்கன்னா நல்ல பசங்க இல்லைன்னு சொல்றீங்களா? எந்த அம்மா அப்பாகிட்ட கேட்டாலும் அவங்க அவங்க பசங்க நல்ல பசங்க தான். கூட இருக்கிற பசங்க தான் கெடுத்துவுட்டுர்றாங்க. இல்லியா? :-)
சராசரி பசங்கன்னா தம், தண்ணி இதெல்லாம்ன்னா இன்னைக்கும் இதெல்லாம் கிடையாது. ஒரு தடவை இந்தியாவுக்கு விமானத்துல வர்றப்ப சுவைச்சுப் பார்க்கலாம்ன்னு பீர் கேன் வாங்கி குடிச்சுப் பார்த்தேன். பாதிக்கு மேல எறங்கலை. திருப்பிக் குடுத்தா அந்த விருந்தோம்பி அக்கா வாங்கிக்க மாட்டேன்னுட்டாங்க 'யூ கேன் டூ இட் மேன்'ன்னுட்டு போயிட்டாங்க. ரெண்டு மூனு தடவை குடுத்தும் இதே கதை தான். மூக்கைப் பிடிச்சுக்கிட்டு 'யூ கேன், ஐ கேன், பீர் கேன்'ன்னு சொல்லிக்கிட்டே குடிச்சு முடிச்சேன். அன்றும் இன்றும் என்றும் நாள்தோறும் (திங்கள் - எங்க முருகனுக்கும் சிவனுக்கும் உரிய நாள் தவிர) கோழி, ஆடு, மீன், எறா, அப்பப்ப மாடு, அப்பப்ப பன்னின்னு தின்னுக்கிட்டு தான் இருக்கேன்.
பள்ளிக்கூடத்துல படிக்கிறப்பவே செக்ஸ் மாத இதழ்கள் எல்லாம் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். கல்லூரியில படிக்கிறப்ப கொஞ்சம் முன்னேறி 'மனைவியை மகிழ்விப்பது எப்படி'ங்கற லேனா தமிழ்வாணனோட புத்தகம் படிச்சேன். இப்ப அப்பப்ப தொலைக்காட்சியிலயும் இணையத்திலயும் பாக்குற திரைப்படங்கள், நகர்படங்கள்ன்னு தொடருது.
இப்ப நீங்களே சொல்லுங்க. நான் நல்ல பையனா இருந்திருக்கேனா/இருக்கேனா இல்லையா? உங்க வரையறைபடி ஜாலியா இருந்திருக்கேனா இல்லையா? :-)
2) ஆன்மிகம் உங்கள் பர்சனல் வாழ்க்கையில் என்ன பங்காற்றுகிறது?
ஆன்மிகம்ன்னாலே தனிப்பட்டது தான்னு ஒரு வரையறையை இப்ப நெறைய பேரு சொல்லத் தொடங்கிட்டாங்க. எனக்கு அது சரி தானான்னு தெரியலை. 'கூடியிருந்து குளிர்ந்து'ன்னு எங்க அக்கா கோதை சொன்னதைத் தான் சரின்னு நெனைச்சுகிட்டு கூட்டத்துல கோவிந்தா போட்டுகிட்டு இருக்கேன். நல்லவங்க கூட்டத்து நடுவுல ஒரு கெட்டவன் நல்லவனைப் போல வேடம் கட்டிக்கிட்டு இருந்தா அவனையும் நல்லவன்னு சொல்லிடுவாய்ங்க இல்ல அது மாதிரி இருக்கேன். ஆனா இந்தக் கூட்டத்து நடுவுலயும் ஒவ்வொருத்தர் உள்ளேயும் ஒரு பெருங்கள்வன் இருந்துக்கிட்டு எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு தெரிஞ்சுக்கிறான்னும் தெரியும். ஆனா ஏமாத்துறது நடந்துக்கிட்டு தான் இருக்கு.
பர்சனல் வாழ்க்கையை இரு பிரிவா பிரிச்சுக்கிறேன். ஒன்னு என்னளவுல தனிப்பட்ட தனிமனித வாழ்க்கை. அதுல 100% ஆன்மிகம் தான் பங்காற்றுது. அப்படி மொத்தமா பொய் சொல்லக்கூடாதுன்னு தடுத்தீங்கன்னா 85, 90%ன்னு சொல்லுவேன். அதுவும் பொய் தான்னு சொல்றீங்களா? உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வந்தேன் பாருங்க. என்னை புதூச்செருப்பால தான் அடிக்கணும். :-)
குடும்ப வாழ்க்கையின்னு சொல்ல வந்தா 30% தான். தெனமும் காலையில எந்திருச்சு சாமி கும்புடறது கூட கிடையாது. அவக்கர அவக்கரமா (அவசர அவசரமா) எழுந்து 1 மணி நேரம் பிளாக்கிவிட்டு அவக்கர அவக்கரமா குளிச்சு பணியாலயத்துக்குப் போறதுக்கே சரியா இருக்கு. செய்யும் தொழிலே தெய்வம் இல்லியா? :-)
மனைவியும் மகளும் ஆன்மிகவாதிகளும் இல்லை; பக்தியாளர்களும் இல்லை; இன்னும் என்ன என்ன இல்லைன்னு சொல்லலாமோ அதெல்லாம் இல்லை. மகனைப் பத்தி இனி மேல தான் தெரியும். இப்ப என்னைக் கொஞ்சம் காப்பியடிக்கிறான். ஆ, ஊன்னா கையைத் தூக்கி கும்புடறான். சன் தொலைக்காட்சி திருவிளையாடல் வர்றப்ப தலைப்புப்பாடல் முடியுற வரைக்கும் அவனும் சரி; நானும் சரி கைகளை கும்புட்ட மேனிக்காவே வச்சுக்கணும். இல்லாட்டி இழுத்து புடிச்சு வச்சிருவான். அவன் என்னைப் போல வந்திருவானோன்னு வீட்டுல ஒரே கவலை. :-) அப்படியெல்லாம் ஆகாதுன்னு ஆதரவா நாலு வார்த்தை சொல்லிக்கிட்டு இருக்கேன். :-)
3) $4.10 காலன் பெட்ரோல் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவந்துள்ளது?
திரும்புன பக்கம் எல்லாம் இதே தான் பேச்சு. பெட்ரோல் விலையேறிப்போச்சு உணவு விலை ஏறிப்போச்சுன்னு. அடிவாங்குறவங்க எல்லாம் பாவம் தான் இல்லை? :-(
என்னைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இதுவரைக்கும் வரலை. சேமிச்சு வக்கிறது கொஞ்சம் குறையுதோ என்னவோ கவனிக்கணும். அம்புட்டுத் தான்.
4) இதுவரை சுற்றி பார்த்ததில் மறக்க முடியாத சுற்றுலா தளம் எது?
இன்னா கேள்விய்யா இது? ஒன்னா ரெண்டா? எத்தனையோ சுற்றுலா தளங்களும் தலங்களும் இருக்கின்றனவே. எதை என்று சொல்வது? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் வருமே. சரி. இன்றைக்குத் தோன்றும் இடம் 'கருநாடகத்தில் இருக்கும் தருமஸ்தலா'. ஏன் என்று கேட்காததால் அதை சொல்லப் போவதில்லை. :-)
5) இத்தனை கடவுள்களை பற்றி எழுதுகிறீர்களே..இதில் உங்கள் ஃபேவரைட் யார்? ஏன்? (ஒருத்தர் பேரை தான் சொல்லவேண்டும்)
கடவுள்களா? நானா? எழுதவில்லையே. ஒரே கடவுளைப் பற்றித் தானே எழுதுகிறேன்?! ஒருத்தர் பெயரை மட்டுமே சொல்லணும்ன்னு சொன்னதால அந்த ஒருத்தரின் பெயர்களைச் சொல்றேன். சொல்லி முடியாது அந்த பெயர்கள். ஆயிரக்கணக்கில உண்டு. நானோ கணக்கில் சிறுவயசுல (அதாவது கல்லூரியில் படிக்கும் வரை) பலமா இருந்தேன். இப்போதோ கணக்குடன் எனக்குப் பிணக்கு. முடிஞ்சவரைக்கும் சொல்றேன்.
கண்ணன், கேசவன், மாதவன், கோவிந்தன், சிவன், சந்திரமௌலி, ஏழைப்பங்காளன், பசுபதி, முருகன், கந்தன், வள்ளி மணாளன், தேவசேனாபதி, பிள்ளையார், கணபதி, சித்திவிநாயகன், ஐங்கரன், கொற்றவை, குமரி, சிவசங்கரி, கருணாகரி,..... இப்படி நிறைய பெயர்கள் அந்த ஒருத்தருக்கு உண்டு. என்னால் சொல்லி முடியாது.
Thursday, June 12, 2008
கேள்விகள் வரவேற்கப்படுகின்றன!!!

இதை யாரு தொடங்கினாங்கன்னு தெரியலை. சிறில் பதிவுல தான் முதல்ல பார்த்தேன். சரி நானும் முயற்சி செய்யலாமே என்று முயல்கிறேன். எவ்வளவு நாள் தான் மறுபதிவாகவே போட்டுக் கொண்டிருப்பது?
உங்களுக்கு அடியேனிடம்/என்னிடம் (யாருக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்) ஏதாவது கேள்விகள் கேட்கும் எண்ணம் இருந்தால் அவற்றை பின்னூட்டத்திலோ மின்னஞ்சலிலோ தாருங்கள். முடிந்த வரை சுவையாகப் பதில் சொல்கிறேன். (எல்லாம் ஒரு முயற்சி தான். சுவையாக எழுதுறது தான் நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராதுல்ல).
எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை. என் பெயரில் இருக்கும் பதிவுகள் குறைந்து கொண்டு வருகின்றன. 'படித்ததில் பிடித்தது', 'கேட்டதில் பிடித்தது', 'சொல் ஒரு சொல்', 'சின்ன சின்ன கதைகள்', 'விவேக சிந்தாமணி' போன்ற பதிவுகளில் இருந்த இடுகைகளை எல்லாம் கூடலுக்கு மாற்றிவிட்டு அவற்றை எல்லாம் அழித்துவிட்டேன். இன்னும் சில பதிவுகளும் இங்கே வந்துவிடும். 'எத்தனை இடத்துக்குத் தான் போவது? ஒரே இடத்தில் எழுது' என்று என்னை விரட்டும் நண்பர்கள் மகிழ்வார்கள் என்று நினைக்கிறேன். :-)
Subscribe to:
Posts (Atom)