யார் இந்தத் தொடர் வலைப்பின்னல் பதிவினைத் தொடங்கியவர் என்று தெரியவில்லை. அண்மையில் சில நண்பர்கள் பதிவுகளில் இதனைக் கண்டபோது விரைவில் நமக்கும் அழைப்பு வரும்; ஆனால் அது சில நாட்களிலா வாரங்களிலா மாதங்களிலா என்று பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சில நாட்களிலேயே வந்துவிட்டது. ஜி.ரா., கோ.ரா, இராகவன் (இராஜேஷ்) தான் அழைத்தது. எப்போதும் போல் வலைப்பின்னல் இடுகை இட அழைப்பு வந்து ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து இடாமல் இந்த முறை உடனே இட்டுவிடலாம் என்று இடுகிறேன். :-)
***
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?
எங்க குலக்கடவுள் திருப்பரங்குன்றத்துறைவோன். எங்க அம்மா முருக பக்தை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அன்னை அங்கயற்கண்ணியின் இடப்புறம் கோவில் கொண்டிருக்கும் 'கூடல் குமரனை' ஒவ்வொரு சஷ்டியன்றும் சென்று வழிபடுவார்கள். அத்தோடு நான் பிறந்தது பங்குனி உத்திரமாகவும் அமைந்து விட்டதால் 'குமரன்' என்ற பெயரை வைத்துவிட்டார்கள். என் வயதுக்குழுவில் மதுரையில் நிறைய குமரன்கள் உண்டு. என் பள்ளி வகுப்பில் என்னுடன் ஐந்து குமரன்கள் படித்தார்கள்.
என்னிடமிருந்து மின்னஞ்சல் பெற்றவர்கள் என் பெயரின் பிற்பகுதியான 'மல்லி' என்பதைப் பார்த்திருப்பார்கள். அது பரம்பரையாக எங்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் பெயர். சௌராட்டிரர்கள் ஒவ்வொருவருக்கும் அப்படி ஒரு குடும்பப் பெயர் உண்டு.
என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். என் நண்பர்கள் பலருக்கும் (இராகவன், இரவிசங்கர்,...) வடமொழிப்பெயர் அமைந்துவிட எனக்கு முழுக்க முழுக்கத் தமிழ்ப்பெயராக அமைந்ததில் அதுவும் தமிழ்க்கடவுள் முருகனின் பெயர் அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
இராகவன் கண்களால் அழுவதையும் மனத்தால் அழுவதையும் பற்றி சொல்லியிருந்தார். எனக்கும் அப்படி சொல்லத் தோன்றுகிறது.
கண்ணீர் விட்டது அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் 'சூப்பர் சிங்கர் 2008'ன் இறுதி நாளில் அஜீஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது. என்னைப் பொறுத்தவரை வெற்றி பெறத் தகுந்தவர் இரவி தான். அதனால் அஜீஷ் வெற்றி பெற்றதில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் கண்ணீர் விடக் காரணம் அந்த வெற்றிச் செய்தியைக் கேட்ட போது அஜீஷின் தாயார் மிகவும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டதும் குழைந்த குரலில் நன்றி உரைத்ததும் கண்ட போது. ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதனை நேரில் கண்ட நெகிழ்ச்சி. அத்தோடு என்னை ஈன்றவளும் உயிருடன் இருந்திருந்தால் இப்படித் தானே என் வாழ்வினைக் கண்டு மகிழ்ந்திருப்பாள் என்ற நினைவு. அஜீஷின் அன்னையிடம் என் அன்னையைக் கண்டேன் போலும்.
மனத்தால் அழுது கொண்டிருப்பது வயதான தந்தையை எண்ணி. எழுபது வயதாகும் அவருக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் சிறுநீரக அறுவை மருத்துவம் செய்தார்கள். இரு நாட்களுக்கு முன்னர் அவக்கரமாக கட்டிலில் இருந்து எழுந்தவர் தரையில் இருந்த போர்வை தடுக்கி விழுந்து இடுப்பு எழும்பு விலகிவிட்டது. மீண்டும் நேற்று அறுவை மருத்துவம் செய்து சரி செய்திருக்கிறார்கள். முனைப்புக் கவனிப்பில் (ICU) வைத்திருக்கிறார்கள். தம்பி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறான். செவ்வாய் கிழமை தான் அவருடன் பேச இயலும் என்றும் சொல்கிறான்.
3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
கையெழுத்து என்றால் Handwritingஆ Signatureஆ என்று புரியவில்லை. நாம் தான் இரண்டையும் கையெழுத்து என்றே சொல்கிறோமே? Handwriting என்றால் பரவாயில்லாமல் இருக்கும். Signature என்றால் யார் வேண்டுமானால் போடும் படி எளிமையாக இருக்கும். இரண்டுமே பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லும் நிலையில் தான் இருக்கின்றன.
4. பிடித்த மதிய உணவு என்ன?
எண்ணெய் பருப்புப் பொடி சாதம், மட்டன்/சிக்கன் குழம்பு, வத்தற்குழம்பு, தயிர்சாதத்துடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலைத் துவையல்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
தொடர்ந்து பேசவேண்டும்; பழகவேண்டும் என்றில்லாமல் ஒத்த சிந்தனை, செயல்பாடு என்று இருக்கும் நண்பர்கள் பலர் உண்டு. இரவிசங்கரும் இராகவனும் போல். இப்போது இருக்கும் இடத்திலும் நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை; முன்பிருந்த நெருங்கிய நண்பர்களுடனும் அடிக்கடி தொலைபேசுவது கூட இல்லை.
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
இரண்டுமே பிடிக்கும். கடல் என்றால் திருச்செந்தூர் கடல் பிடிக்கும். அருவி என்றால் பழைய குற்றால அருவி பிடிக்கும்.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முழுமையான தோற்றத்தின் கவர்ச்சி.
8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது என் தமிழார்வம். பிடிக்காதது தற்புகழ்ச்சியும் புகழ்ச்சிக்கு மயங்குதலும்.
9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?
Pass...
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்பா. அவருடன் மதுரையில் இருக்க இயலவில்லை.
11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெண்ணிற பனியனும் காக்கி நிற இடையாடையும்.
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவை நினைத்து எனக்குத் தூக்கம் வரவில்லை. யார் தூக்கத்தையும் கெடுக்காமல் எதையும் கேட்காமல் அமைதியாக இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?
நீல நிறம். வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்.
14. பிடித்த மணம்?
புளிக்காய்ச்சல் காயும் மணம். எனக்கு மிக மிகப் பிடித்த உணவு புளியோதரை.
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
முனைவர் நா. கண்ணன்: தமிழ் மரபு அறக்கட்டளையை நிறுவி பாடுபடுபவர். தமிழுக்காக அவர் ஆற்றும் தொண்டுகள் மிகச் சிறந்தவை.
மௌலி: ஆழ்ந்த சமயப் பற்றும் சமய ஒழுக்கமும் மிக்கவர்.
கவிநயா அக்கா: எளிமையும் இனிமையும் உடையவர்.
கீதாம்மா: கல்விக் கடல். கற்றதை அள்ளித் தரும் வண்மை.
யோகன் ஐயா: எளிமையும் அன்பும் மிக்கவர். வெகு நாட்களாக என் பதிவுகள் பக்கம் இவரைக் காணவில்லை.
இராகவ்: பண்பும் பணிவும் மிக்கவர்.
சிவமுருகன்: செயல்திறன் மிக்கவர். மீனாட்சி அம்மன் கோவில் படங்களைத் தொகுத்தவர்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ஒவ்வொன்றும் பிடிக்கும். மிகவும் பிடித்தது 'பொற்சிலையும் சொற்குவையும்'.
17. பிடித்த விளையாட்டு:
எதுவும் இல்லை.
18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம். ஆனால் பெரும்பாலும் தொடுவில்லை (Contact Lens) அணிந்திருப்பேன்.
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நகைச்சுவை, வரலாறு, புராணம்.
20. கடைசியாகப் பார்த்த படம்?
Night in the Museum - திரையரங்கில் என் இரு குழந்தைகளுடன்.
21. பிடித்த பருவகாலம் எது?
பருவகாலமா? +2 படிக்கும் போது நிறைய வாங்கினேன். அதில் எந்த இதழ் பிடித்தது என்று இப்போது நினைவில்லை. :-)
ஓ. பெரும்பொழுதுகளைப் பற்றி கேட்டீர்களா? இளவேனில் தான் மிகவும் பிடிக்கும். :-)
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
கலித்தொகை - புலியூர்க் கேசிகன் உரை.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்போதாவது. தோன்றும் போது.
24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது: கீசு கீசு என்று எங்கும் பறவைகள் தமக்குள் கலந்து பேசும் பேச்சு அரவம்.
பிடிக்காதது: பேரிரைச்சல்.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
தற்போது வாழும் இடம்.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
உண்டு. ஆனால் சொல்ல இயலாது. :-)
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
யாராவது அரைகுறையாக ஒன்றைப் படித்துவிட்டு அதுவே அறுதியானது என்று பேசும் போது.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சினம். இந்த சேர்ந்தாரைக் கொல்லி வீட்டை விட்டு வெளியே அவ்வளவாக வருவதில்லை. அதனால் வீட்டில் உள்ளோருக்கு மட்டுமே இதன் வேகம் தெரியும். மனைவி, மக்கள், அப்பா, தம்பி, பாட்டி என்று இவர்களிடம் மட்டுமே இது பாய்ந்திருக்கிறது இது வரை. அண்மைக் காலமாக அவ்வளவாக வெளிப்படவில்லை. அதனால் மனைவியும் மக்களும் வருத்தமின்றி இருக்கிறார்கள்.
29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
நயாகரா.
30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?
மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று ஆசை.
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
பதிவுகள் எழுதுவதும் படிப்பதும்.
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
ஒருவன் மற்றவரை நேசிப்பது மற்றவருக்காக இல்லை; தனக்காகவே.
தானே தமக்குச் சுற்றமும்; தானே தமக்கு விதிவகையும்.
Showing posts with label சொந்தக் கதை சோகக் கதை. Show all posts
Showing posts with label சொந்தக் கதை சோகக் கதை. Show all posts
Sunday, June 14, 2009
Sunday, May 03, 2009
மாதமிழில் சொல்லேதும் இல்லை!
ஏக்கம் கொண்டேனடி உன் மேல்!
இணைந்திருப்பது நாம் எக்காலம்?
தூக்கம் இல்லாமல் உழல்கின்றேன்!
தாங்கமுடியவில்லை என் மோகம்!
பார்த்ததுண்டு எத்தனையோ பெண்கள்!
பார்த்ததில்லை உன் போலே எங்கும்!
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கண்கள்
பெற்ற உன்னைப் பார்க்கிறேனே எங்கும்!
உயர்வான தமிழ்ச்சொல்லைக் கொண்டு
உன்னழகைப் போற்றிடவே எண்ணம்!
மயர்வுற்று நிற்கின்றேன் இன்று
மாதமிழில் சொல்லேதும் இல்லை!
கண் கொண்ட பயன் அன்று பெற்றேன்
கண்டு கொண்டேன் கன்னி உனை அன்று!
பெண் கொண்ட பேரழகை எல்லாம்
பருகி உளம் நிறைவு பெறல் என்று?
கொண்டேனோ நான் உன் மேல் காதல்
கொதிக்கிறதே தினமும் என் தேகம்!
பெண் உந்தன் மேனி தனைக் கண்டால்
பெற்றிடுவேன் நான் ராசபோகம்!
***
மாமாவும் அத்தையும் நாளை இங்கே வருகிறார்கள். ஆறு மாத காலம் இங்கே தங்குவார்கள். அவர்களுக்காக ஒரு அறையை ஒழித்துக் கொடுப்பதற்காக அந்த அறையில் இருந்ததை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது 28 மே 1998ல் எழுதிய இந்தக் கவிதை கண்ணில் பட்டது. அட நல்லா இருக்கே என்று நினைத்துக் கொண்டு இங்கே பதிந்து வைக்கிறேன். :-)
இணைந்திருப்பது நாம் எக்காலம்?
தூக்கம் இல்லாமல் உழல்கின்றேன்!
தாங்கமுடியவில்லை என் மோகம்!
பார்த்ததுண்டு எத்தனையோ பெண்கள்!
பார்த்ததில்லை உன் போலே எங்கும்!
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கண்கள்
பெற்ற உன்னைப் பார்க்கிறேனே எங்கும்!
உயர்வான தமிழ்ச்சொல்லைக் கொண்டு
உன்னழகைப் போற்றிடவே எண்ணம்!
மயர்வுற்று நிற்கின்றேன் இன்று
மாதமிழில் சொல்லேதும் இல்லை!
கண் கொண்ட பயன் அன்று பெற்றேன்
கண்டு கொண்டேன் கன்னி உனை அன்று!
பெண் கொண்ட பேரழகை எல்லாம்
பருகி உளம் நிறைவு பெறல் என்று?
கொண்டேனோ நான் உன் மேல் காதல்
கொதிக்கிறதே தினமும் என் தேகம்!
பெண் உந்தன் மேனி தனைக் கண்டால்
பெற்றிடுவேன் நான் ராசபோகம்!
***
மாமாவும் அத்தையும் நாளை இங்கே வருகிறார்கள். ஆறு மாத காலம் இங்கே தங்குவார்கள். அவர்களுக்காக ஒரு அறையை ஒழித்துக் கொடுப்பதற்காக அந்த அறையில் இருந்ததை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது 28 மே 1998ல் எழுதிய இந்தக் கவிதை கண்ணில் பட்டது. அட நல்லா இருக்கே என்று நினைத்துக் கொண்டு இங்கே பதிந்து வைக்கிறேன். :-)
Friday, January 23, 2009
எனக்குள் ஒரு கதை சொல்லி
இது ஒரு சுய ஆய்வு என்று சொல்லலாம். (சுய தம்பட்டம் என்று நினைத்தாலும் சரியே). என்னுள் இருக்கும் ஒரு திறன் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறும் போது அடையும் வளர்ச்சிகளையும் தடைகளையும் எழுத்தில் வடிக்க எண்ணும் ஒரு முயற்சி இது. எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறேன் என்பதை இக்கட்டுரையை எழுதி முடித்த பின் பார்க்க வேண்டும்.
ஒரு காலத்தில் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். ஆன்மிகம், தமிழ் இலக்கியம், தன் திறன் வளர்ச்சி (Self Development) போன்ற தலைப்புகளில் பேசத் தொடங்கினால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன். அப்படிப் பேசும் போதெல்லாம் கேட்டவர்கள் நான் சொல்லும் கருத்துகளை ஏற்றுக் கொள்பவர்கள்; கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்கள்; மறுத்து பேசாதவர்கள். நான் சொன்ன கருத்துகளில் (முக்கால்வாசி கடன் பெற்ற கருத்துகள் - இலக்கியங்களில் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும்) மயங்கியா அவற்றை நான் சொன்ன விதத்தில் மயங்கியா, எந்த விதத்தில் அவர்களுக்கு என் பேச்சைக் கேட்க விருப்பமாக இருந்தது என்ற ஐயம் இப்போதும் உண்டு. ஆனால் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க வந்தார்கள். மீண்டும் மீண்டும் பேசச் சொன்னார்கள்.
சில நேரங்களில் மாற்றுக் கருத்துகள் கொண்டவர்களும் கேட்க வருவார்கள். அவர்கள் தங்களது மாற்றுக் கருத்துகளைச் சொல்லும் போது அந்தப் பேச்சு ஒரு கலந்துரையாடலாக மாறும். கலந்துரையாடல் என்றால் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் நிறைய உண்டு. அதனால் அப்படிப் பட்ட கலந்துரையாடல்களை மிகவும் விரும்பினேன். சில நேரங்களில் அந்தக் கலந்துரையாடல் விதண்டா வாதங்களாக மாறத் தொடங்கும். மாற்றுக் கருத்தினைச் சொன்னவருக்கு ஏற்ற மறுப்பினைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சொன்ன பின்னரும் தடம் மாறித் தடம் மாறி புலனங்களை மாற்றி மாற்றிப் பேசி வேண்டா விவாதமாகச் சென்று கொண்டிருக்கும். யாரும் யாரிடமிருந்தும் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிந்தவுடன் பேசுவதை அப்போதே நிறுத்திவிட்டுக் கேட்கத் தொடங்கிவிடுவேன். அவர்களின் கருத்து அவர்களின் அனுபவங்களில் இருந்து வருகின்றது என்பதால் கருத்துகள் தவறென்று தோன்றினாலும் அந்த அனுபவங்களில் இருந்து ஏதேனும் கற்றுக் கொள்ள முடியுமா என்று பார்க்கத் தொடங்கிவிடுவேன்.
பள்ளி இறுதி வகுப்பில் தொடங்கிய இந்த 'பேசுதல்' முதுநிலை பட்டப்படிப்பு வரை தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த முதல் வருடமும் சென்னையில் அது தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த இரண்டாம் வருடம் அமெரிக்கா வந்துவிட்டேன். அதே வருடம் திருமணமும் நடந்தது. பேசுவது நின்றுவிட்டது. அமெரிக்கா வந்ததால் தான் என்று நினைக்கிறேன். திருமணத்தால் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.
சில வருடங்கள் (மனைவியைத் தவிர்த்து மற்றவரிடத்தில்) மணிக்கணக்கில் பேசுவது என்பதே இன்றிப் போனது. சில நேரங்களில் சில பக்தி இலக்கியஙகளுக்கும் சுலோகங்களுக்கும் ஆங்கிலத்தில் பொருள் சொல்லி மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புவேன். இப்படியே சென்று கொண்டிருக்கும் போது வலைப்பதிவு தென்பட்டது. இத்தனை நாட்களும் பேசாமல் இருந்த வேகத்தில் நினைத்ததைப் பற்றி எல்லாம் எழுத ஒவ்வொரு பதிவாகத் தொடங்கி நிறைய பதிவுகள் தொடங்கினேன். எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு காலத்தில் பேசிக் கொண்டிருந்தவன் இப்போது அவ்வளவாகப் பேசாமல் எழுதும் போது என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, புதிதாக ஏதேனும் தென்படுகின்றதா என்று இப்போது ஆய்ந்து பார்த்தால் ஒரு விதயம் கண்ணுக்குத் தென்பட்டது.
ஒரு நல்ல கதை சொல்லி என்னுள் இருக்கிறான். பேசும் போது நன்கு சுவையாகக் கதை சொல்லத் தெரிந்த அவனுக்கு எழுதும் போதும் அதே சுவையும் அழகும் வரும்படி எழுதத் தெரிந்திருக்கிறது (வரும்படி எதுவும் வரவில்லை இதுவரை). பேசும் போது எப்படி கதை கேட்பவர்களைத் தொடர்ந்து கேட்கும் படி செய்கிறேனோ அதே போல் எழுதும் போதும் படிப்பவர்களைத் தொடர்ந்து படிக்கும் படி செய்கிறேன். இது வரை எழுதிய தொடர்கதைகளிலும் சிறுகதைகளிலும் இது நன்றாகத் தெரிகிறது.
தொடர்கதைகள் எழுதும் போது சில உத்திகளையும் பயன்படுத்தியிருக்கிறேன். 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதை எழுதும் போது 'எப்போது கதையின் முக்கிய பகுதி வரப்போகிறது?' என்று நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதை நிறைவு பெற்றுவிட்டது. நிறைந்த பின்னர் கதையை இன்னொரு முறை படித்துப் பார்த்தால் கதையின் முழுவடிவம் தென்படும். அந்தக் கதையில் உண்மை நிகழ்வுகளை வைத்து எழுதியதால் நிறைவு செய்வது எளிதாக வந்தது.
வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலான புனைவுக் கதைகளையும் தொடர்கதைகளாகச் சொல்லிச் செல்வது எளிதாக வருகின்றது. கோதையின் கதை, பெரியாழ்வார் கதை, பாரி வள்ளல்/கபிலர் கதையான 'உடுக்கை இழந்தவன் கை' போன்றவை எடுத்துக்காட்டுகள். பேசும் போது இருந்த அழகும் வருணனைகளும் கற்பனைகளும் எழுதும் போது இன்னும் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காண்கிறேன். ஆனால் ஒரு பெரும் தடையை கதைகளை 'எழுதும்' போது காண்கிறேன். கதையின் உச்சக்கட்டத்தை அடையும் போதும் புலனம் மாறும் போதும் ஒரு தடுமாற்றம் ஏற்படுகின்றது. பெரியாழ்வார் கதையின் உச்சக்கட்டமான பல்லாண்டு பாடிய நிகழ்வினைச் சொல்லிவிட்டு புலனம் மாறி அவருடைய பாசுரங்களைப் பற்றி பேச வேண்டிய நேரத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது. கோதையின் கதையின் உச்சக்கட்டமான திருப்பாவை நோன்பு நோற்கும் நிகழ்வினைச் சொல்லும் போது புலனம் மாறி திருப்பாவையின் பொருளுரையைப் பேச வேண்டிய தருணத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது. 'உடுக்கை இழந்தவன் கை' கதையின் உச்சக்கட்டமான கபிலர் பாரி மகளிரை மலையமானுக்கு மணம் செய்து கொடுக்கும் நிகழ்வினை எழுதும் போது ஒரு தடுமாற்றம் வருகிறது. இது வரை எழுதி வந்ததின் அழகு மாறாமல் அதே நேரத்தில் புலனம் மாறுவதும் கதையின் உச்சக்கட்டத்தை அடைவதையும் படிப்பவர்கள் உணர்ந்தும் உணராத வகையில் எப்படி சொல்வது என்பது புரியவில்லை போலும். முயன்றால் முடியும் என்று தெரிகிறது. ஆனால் முயல்வதற்கு கை முன்வரவில்லை. அதனால் அவை மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் முன்னேறாமல் முடங்கி நிற்கின்றன.
இன்னொன்றையும் கவனிக்கிறேன். புத்தம் புதிதான புனைவை எழுத இயலவில்லை. தரவுகள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு தரவுகளின் அடிப்படையில் என் கற்பனையைக் கலந்து விரித்து எழுதுவது தான் வருகிறதே ஒழிய முழுக்க முழுக்கக் கற்பனை செய்து எழுதும் திறன் இல்லாதது போல் தோன்றுகிறது. அப்படித் தொடங்கினால் என்னவோ தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் தொங்குவது போல் ஒரு உணர்வு. தரவுகள் என்ற தரை இல்லாமல் என்னால் கதை சொல்ல இயலவே இயலாது போலும்.
ஒரு காலத்தில் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். ஆன்மிகம், தமிழ் இலக்கியம், தன் திறன் வளர்ச்சி (Self Development) போன்ற தலைப்புகளில் பேசத் தொடங்கினால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன். அப்படிப் பேசும் போதெல்லாம் கேட்டவர்கள் நான் சொல்லும் கருத்துகளை ஏற்றுக் கொள்பவர்கள்; கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்கள்; மறுத்து பேசாதவர்கள். நான் சொன்ன கருத்துகளில் (முக்கால்வாசி கடன் பெற்ற கருத்துகள் - இலக்கியங்களில் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும்) மயங்கியா அவற்றை நான் சொன்ன விதத்தில் மயங்கியா, எந்த விதத்தில் அவர்களுக்கு என் பேச்சைக் கேட்க விருப்பமாக இருந்தது என்ற ஐயம் இப்போதும் உண்டு. ஆனால் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க வந்தார்கள். மீண்டும் மீண்டும் பேசச் சொன்னார்கள்.
சில நேரங்களில் மாற்றுக் கருத்துகள் கொண்டவர்களும் கேட்க வருவார்கள். அவர்கள் தங்களது மாற்றுக் கருத்துகளைச் சொல்லும் போது அந்தப் பேச்சு ஒரு கலந்துரையாடலாக மாறும். கலந்துரையாடல் என்றால் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் நிறைய உண்டு. அதனால் அப்படிப் பட்ட கலந்துரையாடல்களை மிகவும் விரும்பினேன். சில நேரங்களில் அந்தக் கலந்துரையாடல் விதண்டா வாதங்களாக மாறத் தொடங்கும். மாற்றுக் கருத்தினைச் சொன்னவருக்கு ஏற்ற மறுப்பினைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சொன்ன பின்னரும் தடம் மாறித் தடம் மாறி புலனங்களை மாற்றி மாற்றிப் பேசி வேண்டா விவாதமாகச் சென்று கொண்டிருக்கும். யாரும் யாரிடமிருந்தும் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிந்தவுடன் பேசுவதை அப்போதே நிறுத்திவிட்டுக் கேட்கத் தொடங்கிவிடுவேன். அவர்களின் கருத்து அவர்களின் அனுபவங்களில் இருந்து வருகின்றது என்பதால் கருத்துகள் தவறென்று தோன்றினாலும் அந்த அனுபவங்களில் இருந்து ஏதேனும் கற்றுக் கொள்ள முடியுமா என்று பார்க்கத் தொடங்கிவிடுவேன்.
பள்ளி இறுதி வகுப்பில் தொடங்கிய இந்த 'பேசுதல்' முதுநிலை பட்டப்படிப்பு வரை தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த முதல் வருடமும் சென்னையில் அது தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த இரண்டாம் வருடம் அமெரிக்கா வந்துவிட்டேன். அதே வருடம் திருமணமும் நடந்தது. பேசுவது நின்றுவிட்டது. அமெரிக்கா வந்ததால் தான் என்று நினைக்கிறேன். திருமணத்தால் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.
சில வருடங்கள் (மனைவியைத் தவிர்த்து மற்றவரிடத்தில்) மணிக்கணக்கில் பேசுவது என்பதே இன்றிப் போனது. சில நேரங்களில் சில பக்தி இலக்கியஙகளுக்கும் சுலோகங்களுக்கும் ஆங்கிலத்தில் பொருள் சொல்லி மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புவேன். இப்படியே சென்று கொண்டிருக்கும் போது வலைப்பதிவு தென்பட்டது. இத்தனை நாட்களும் பேசாமல் இருந்த வேகத்தில் நினைத்ததைப் பற்றி எல்லாம் எழுத ஒவ்வொரு பதிவாகத் தொடங்கி நிறைய பதிவுகள் தொடங்கினேன். எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு காலத்தில் பேசிக் கொண்டிருந்தவன் இப்போது அவ்வளவாகப் பேசாமல் எழுதும் போது என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, புதிதாக ஏதேனும் தென்படுகின்றதா என்று இப்போது ஆய்ந்து பார்த்தால் ஒரு விதயம் கண்ணுக்குத் தென்பட்டது.
ஒரு நல்ல கதை சொல்லி என்னுள் இருக்கிறான். பேசும் போது நன்கு சுவையாகக் கதை சொல்லத் தெரிந்த அவனுக்கு எழுதும் போதும் அதே சுவையும் அழகும் வரும்படி எழுதத் தெரிந்திருக்கிறது (வரும்படி எதுவும் வரவில்லை இதுவரை). பேசும் போது எப்படி கதை கேட்பவர்களைத் தொடர்ந்து கேட்கும் படி செய்கிறேனோ அதே போல் எழுதும் போதும் படிப்பவர்களைத் தொடர்ந்து படிக்கும் படி செய்கிறேன். இது வரை எழுதிய தொடர்கதைகளிலும் சிறுகதைகளிலும் இது நன்றாகத் தெரிகிறது.
தொடர்கதைகள் எழுதும் போது சில உத்திகளையும் பயன்படுத்தியிருக்கிறேன். 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதை எழுதும் போது 'எப்போது கதையின் முக்கிய பகுதி வரப்போகிறது?' என்று நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதை நிறைவு பெற்றுவிட்டது. நிறைந்த பின்னர் கதையை இன்னொரு முறை படித்துப் பார்த்தால் கதையின் முழுவடிவம் தென்படும். அந்தக் கதையில் உண்மை நிகழ்வுகளை வைத்து எழுதியதால் நிறைவு செய்வது எளிதாக வந்தது.
வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலான புனைவுக் கதைகளையும் தொடர்கதைகளாகச் சொல்லிச் செல்வது எளிதாக வருகின்றது. கோதையின் கதை, பெரியாழ்வார் கதை, பாரி வள்ளல்/கபிலர் கதையான 'உடுக்கை இழந்தவன் கை' போன்றவை எடுத்துக்காட்டுகள். பேசும் போது இருந்த அழகும் வருணனைகளும் கற்பனைகளும் எழுதும் போது இன்னும் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காண்கிறேன். ஆனால் ஒரு பெரும் தடையை கதைகளை 'எழுதும்' போது காண்கிறேன். கதையின் உச்சக்கட்டத்தை அடையும் போதும் புலனம் மாறும் போதும் ஒரு தடுமாற்றம் ஏற்படுகின்றது. பெரியாழ்வார் கதையின் உச்சக்கட்டமான பல்லாண்டு பாடிய நிகழ்வினைச் சொல்லிவிட்டு புலனம் மாறி அவருடைய பாசுரங்களைப் பற்றி பேச வேண்டிய நேரத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது. கோதையின் கதையின் உச்சக்கட்டமான திருப்பாவை நோன்பு நோற்கும் நிகழ்வினைச் சொல்லும் போது புலனம் மாறி திருப்பாவையின் பொருளுரையைப் பேச வேண்டிய தருணத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது. 'உடுக்கை இழந்தவன் கை' கதையின் உச்சக்கட்டமான கபிலர் பாரி மகளிரை மலையமானுக்கு மணம் செய்து கொடுக்கும் நிகழ்வினை எழுதும் போது ஒரு தடுமாற்றம் வருகிறது. இது வரை எழுதி வந்ததின் அழகு மாறாமல் அதே நேரத்தில் புலனம் மாறுவதும் கதையின் உச்சக்கட்டத்தை அடைவதையும் படிப்பவர்கள் உணர்ந்தும் உணராத வகையில் எப்படி சொல்வது என்பது புரியவில்லை போலும். முயன்றால் முடியும் என்று தெரிகிறது. ஆனால் முயல்வதற்கு கை முன்வரவில்லை. அதனால் அவை மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் முன்னேறாமல் முடங்கி நிற்கின்றன.
இன்னொன்றையும் கவனிக்கிறேன். புத்தம் புதிதான புனைவை எழுத இயலவில்லை. தரவுகள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு தரவுகளின் அடிப்படையில் என் கற்பனையைக் கலந்து விரித்து எழுதுவது தான் வருகிறதே ஒழிய முழுக்க முழுக்கக் கற்பனை செய்து எழுதும் திறன் இல்லாதது போல் தோன்றுகிறது. அப்படித் தொடங்கினால் என்னவோ தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் தொங்குவது போல் ஒரு உணர்வு. தரவுகள் என்ற தரை இல்லாமல் என்னால் கதை சொல்ல இயலவே இயலாது போலும்.
Tuesday, June 17, 2008
கவிநயா அக்கா, வாத்தியார் ஐயா, பரிசல்காரன், கோவி.கண்ணன் - அனைவருக்கும் வணக்கம் (கேள்வி பதில் 2)
பாராட்டுகளை அள்ளி வழங்கக் கற்றுக் கொள்ள வேண்டுமா? உணர்ச்சிப் பெருக்கில் உருக வேண்டுமா? அப்படி உருகக் கற்றுக் கொள்ள வேண்டுமா? ஒரு பதிவர் எழுதுவது பிடித்துவிட்டால் அவர் ஒரு இடுகை இட்டு பத்தே நிமிடத்தில் படித்துப் பின்னூட்டம் இடக் கற்றுக் கொள்ள வேண்டுமா? இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு 'ஆம்' என்று உங்கள் மனத்திற்குள்ளேயே பதில் சொல்லிக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டியவை கவிதாயினி கவிநயா அக்காவின் பதிவினையும் பின்னூட்டங்களையுமே. :-)
இதோ அக்கா கேட்ட கேள்விகளும் தம்பியேன் சொல்லும் பதில்களும்:
அக்கா முதல் கேள்வியாக செல்வன் கேட்ட கேள்விகளில் ஒன்றையே கேட்டார். அதற்கான விடை சென்ற இடுகையிலே சொல்லியிருக்கிறேன்.
2. உங்களுக்கு சங்க இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் எப்போது ஆர்வம் ஏற்பட்டது? ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பினாலா, இல்லை தனித்தனியாக ஏற்பட்டதா?
ஆன்மிகத்தில/சமயத்தில/மதத்தில/பக்தியில ஈடுபாடு வந்தது குட்டியூண்டு வயசிலே. ( நீங்க ஆன்மிகத்திலன்னு தான் கேட்டீங்க. மத்ததையும் சொல்லாட்டி உஷா கோவிச்சுக்குவாங்க போலிருக்கு. :-) )
முதல் காரணம் அம்மம்மா சந்திரா அம்மாள். இந்தப் பாட்டியைப் பத்தி முந்தையப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அவங்க நேரடியா எதுவுமே சொல்லித் தரலை. ஆனா புத்தகப்புழுவா சின்ன வயசுலயே இருந்த எனக்குப் படிக்க நிறைய புத்தகங்களை வச்சிருந்தார். என் பதிவுகளைப் பத்தி தினமலர்ல வந்தப்ப அவங்க தான் அதை முதல்ல பார்த்து என் தம்பிக்கிட்ட சொன்னாங்க. அமெரிக்காவுல இருந்துக்கிட்டு அபிராமி அந்தாதியும் நாயகி சுவாமிகள் பாட்டும் எழுதுனா வெள்ளைக்காரன் இதெல்லாம் படிக்கிறானான்னு நான் அதுக்கப்புறம் மதுரைக்குப் போனபோது கேட்டாங்க. பாட்டி இதெல்லாம் நம்ம ஊரு ஆளுங்க படிக்கிறதுக்குத் தான் எழுதிக்கிட்டு இருக்கேன்னா அவங்களுக்குப் புரியலை. இன்னைக்குப் போயி சொன்னாலும் புரியாதுன்னு நினைக்கிறேன். ஏதோ பேரன் அமெரிக்காவுல பொட்டி தட்டிக்கிட்டு நிறைய சம்பாரிச்சுகிட்டு அப்பப்ப கம்ப்யூட்டர் பொட்டியில அபிராமி அந்தாதியும் எழுதிக்கிட்டு இருக்கான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க வச்சுக்கிட்டு இருந்த புத்தங்களைப் படிச்சு 7 (அ) 8 வயசுல அவங்ககிட்ட கீதையில ஐயம் கேட்டுக்கிட்டு இருந்தது நினைவிருக்கு. புரியாம மகாபாரதம் பெரிய புத்தகம் படிச்சதும் நினைவிருக்கு. ராமாயணம் படிக்கிறப்ப அகலிகைக்கு ஏன் கௌதமர் சாபம் குடுத்தாருன்னு புரியாம பாட்டிக்கிட்ட கேட்டதும் நினைவிருக்கு. ஆனா அவங்க என்ன பதில் சொன்னாங்கங்கறது மட்டும் மறந்திருச்சு. :-)
ரெண்டாவது காரணம் நான் பத்தாப்பு படிக்கிறப்ப டாடா சொல்லாம செத்துப் போன அம்மா. பகவத் கீதையெல்லாம் படிச்சு ரொம்ப அறிவாளியா நினைச்சுக்கிட்டு அம்மா செத்ததுக்கு அன்னைக்கு அழலை. ஆனா கல்லூரிக்காலத்துல இருந்து இன்னை வரைக்கும் அழுதுக்கிட்டு இருக்கேன். இப்ப இதை எழுதுறப்பவும் கண்ணுல தண்ணி கட்டுது. சரி சரி. எதையோ சொல்ல வந்து வேற எதையோ சொல்றேன். எங்கம்மா சுசிலா பெரிய முருக பக்தை. திருப்பரங்குன்றத்துக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கூடல் குமரன் சன்னிதிக்கும் அடிக்கடி (தினமும் ஒரு முறைன்னு சொல்ல முடியாது; வாரத்துக்கு ஒரு முறைன்னும் சொல்ல முடியாது - ரெண்டுக்கும் நடுவுல) கூட்டிக்கிட்டு போயி திருப்புகழும் 'சண்முக நாயகன் தோன்றிடுவான்' பாட்டும் நல்லா சொல்லிக் குடுத்தாங்க. அன்னைக்குத் தொடங்குனது தெய்வத் தமிழின் மேல் காதல்.
அம்மாவோட மறைவுக்குப் பிறகு அந்த தெய்வப் பாடல்களின் மேல் இருந்த காதல் கீதையின் மேல் திரும்பியது. அப்ப எல்லாம் கீதைக்கு எத்தனை உரைகள் இருக்கோ அத்தனையையும் வாங்கி ஒவ்வொரு சுலோகமா ஒப்பீடு செஞ்சே படிச்சேன். அப்படிப் படிச்சது தான் வடமொழி. பள்ளிக்கூடத்துல தமிழ் படிச்சது மாதிரி யாருக்கிட்டயும் முறையா வடமொழி படிக்கலை. அதனால என்னோட வடமொழி அறிவு கேள்வியறிவு மட்டுமேன்னு சொல்லலாம்; அரைகுறை அறிவுன்னும் சொல்லலாம். :-) உங்க அடுத்த கேள்வியான '3. வடமொழியும் நீங்களே ஆர்வத்தால் கற்றுக் கொண்டீர்களா?'க்கும் பதில் சொல்லியாச்சு. ரெண்டாவது கேள்விக்கான பதில் தொடருது.
கல்லூரிக்காலத்தில கீதையை எந்தளவுக்குப் படிச்சேனோ அந்த அளவுக்கு ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கத் தொடங்குனது வேலை பாக்கத் தொடங்குனப்ப. அதுக்கு இணையத்துல இருக்கிற வைணவ குழுமங்கள் (பக்தி, ஒப்பிலியப்பன், சரணாகதி) தான் காரணம். அப்ப பழந்தமிழ் இலக்கியங்கள் மேல இன்னும் பழக்கம் கூடிச்சு.
2005ல பதிவுகள்ல எழுதத் தொடங்குன பிறகு தான் சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்தது. 2006 ஜனவரியில 'மாலவனும் தமிழ்க்கடவுள்' என்ற விவாதம் என்னோட நட்சத்திர வாரத்துல வந்தது. நான் அந்தக் கருத்தை வைக்க இராகவன் மறுத்தார். பலவகையில என் கருத்தைச் சொன்னேன். ஆனா தரவுகளோட சொன்னா இன்னும் பலமா என் கருத்தை வைக்கலாம்ன்னு தோணிச்சு. அப்பத் தொடங்குனது 'இலக்கியத்தில் இறை' என்ற தொடருக்கான எண்ணம். ஆனா நான் விரும்புற கருத்துக்குத் தரவுகளைத் தேடாம திறந்த மனத்தோடு தான் சங்க இலக்கியங்களை அணுகுகிறேன். அதனால் கடைசியில் மாலவன் தமிழ்க்கடவுள் என்று சொல்ல சரியான தரவுகள் கிடைக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவும் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவும் தயக்கங்கள் இல்லை.
சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்ததுக்கு இன்னொரு காரணமும் உண்டு. வடமொழி வேதங்கள், நூற்கள் ஆராயப்பட்ட அளவிற்குத் தமிழிலக்கியங்கள் ஆராயப்படவில்லை என்ற எண்ணம் உண்டு. திராவிடம், ஆரியம், தமிழ், வடமொழி போன்ற கருத்தாங்கள் எல்லாம் வடமொழி நூற்களை அடிப்படையாகக் கொண்டே இருப்பதாக ஒரு எண்ணம். தமிழிலக்கியங்களில் அதற்கு ஏற்பவோ எதிர்ப்பாகவோ தரவுகள் இருக்கிறதா என்று பார்க்க ஆசை. சில தரவுகள் கிடைத்து அவற்றை கூடலில் (முக்கியமாக பாரி வள்ளல் தொடர்கதையில்) வைத்திருக்கிறேன். எத்தனை பேர் படித்தார்களோ தெரியாது.
***
இணையத்தில் ஒரே ஒரு வாத்தியார் தான்; ஒரே ஒரு வாத்தியார் அம்மா தான். ரெண்டு பேருக்கும் அறிமுகம் தேவையில்லை. வாத்தியார் அம்மாவை நான் அக்கான்னு தான் கூப்புடறது. வாத்தியார் ஐயா எழுத வந்த நாள்ல இருந்து தொடர்ந்து படிச்சுக்கிட்டு தான் வர்றேன். பின்னூட்டங்களும் முடிஞ்ச வரைக்கும் இட்டுக்கிட்டு வர்றேன். வாத்தியார் ஐயா கேட்ட கேள்வியும் என்னோட பதிலும் இங்கே.
இறைவனைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?
நல்ல கேள்வி வாத்தியார் ஐயா. பதில் சொல்லக் கடினமான கேள்வியும். எந்தப் பதில் சொன்னாலும் முழுமையாக இருக்காது.
இப்போதைக்கு ரெண்டு பதில்கள் இருக்கிறது. இரண்டையுமே சொல்கிறேன்.
உங்க கேள்வியை நீங்க கேட்டவுடனே படிச்சப்ப ஒரு பதில் தோணிச்சு. அது: சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து படிச்சு எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சுக்கிற அறிவு வேணும். அப்படி படிச்சுப் புரிஞ்சிக்கிட்டதைத் தெளிவா மத்தவங்களுக்குச் சொல்ற வல்லமையும் வேணும். (ஏன் இந்த வரம்ன்னு போன பத்தியில சொல்லியிருக்கேன்)
இந்தக் கேள்விக்குப் பதில் எழுத உக்காந்தப்ப இதைப் பத்தி சிந்திச்சேன். அப்ப தோணினது: எங்குமுளன் கண்ணன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இப்ப எனக்குக் கிடைச்ச இந்தக் காட்சி என்றென்றைக்கும் தொடர்ந்து கிடைக்கணும். எந்த எந்த வகையில உனக்குத் தொண்டு செய்ய முடியுமோ அந்த அந்த வகையில தொண்டு செய்யும் வாய்ப்பும் வசதியும் வல்லமையும் கிடைக்க வேண்டும். நீ எங்கு எந்த நிலையில் என்னை வைக்கிறாயோ அந்த நிலையில் உன் நினைவோட நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கணும். (இதெல்லாம் சொல்லுதல் யார்க்கும் எளிய கதை. கடவுள் காட்சி தரும் போது இவற்றைத் தான் கேப்பேனாங்கறது ஐயமே)
***
என் பதிவுக்குப் புதுசா வந்து கேள்வி கேட்ட பரிசல்கார கிருஷ்ணகுமாரை வரவேற்கிறேன். அவர் கேட்ட கேள்வியும் அதற்குரிய பதிலும்:
எனது கேள்வி..
உங்களுக்கு எங்களையெல்லாம் பத்தா பாவமா இல்லையா?
கிருஷ்ணகுமார். பதிவுகள்ல எழுதுறதே சில நேரம் மத்தவங்களைக் கொடுமைபடுத்துற மாதிரி தான். குடும்பத்தோட செலவழிக்க வேண்டிய நேரத்துல பதிவு எழுதுறதால குடும்பத்தைக் கொடுமைபடுத்துறோம். இந்த மாதிரி கேள்வி கேளு கேள்வி கேளுன்னு நச்சரிச்சு உங்களை மாதிரி பதிவர்களைக் கொடுமைபடுத்துறோம். என்னங்க செய்றது - கொடுமையே கொடுந்தொழில்ன்னு ஆகிப் போச்சு வாழ்க்கை. :-)
***
கோவி.கண்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. வெள்ளம் போல் பெருகும் அவரது கருத்துகளே அவரை நன்கு அறிமுகம் செய்து விடும். அந்தக் கருத்துகள் அவருக்கு என்ன பட்டப்பெயரை வாங்கித் தந்ததுங்கறதை மட்டும் நான் சொல்ல மாட்டேன். :-)
அவர் 'கேள்விகள் தயாராகின்றன'ன்னு முன்னோட்டம் கொடுத்தபோது சரி வழக்கம் போல விவகாரமா தான் எதாச்சும் கேப்பாருன்னு நினைச்சேன். அப்புறம் அவர் கேட்ட ஒரே கேள்வியைப் பாத்தவுடனே சப்புன்னு ஆயிருச்சு. அப்படி கேட்ட ஒரே கேள்விக்கு முன்னாடியும் ஒரு பாராட்டுரைங்கற பாறாங்கல்லு. எதுக்குன்னு தெரியலை. :-)
ஆன்மிகம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம்,சமஸ்கிரதம் ஆகியவற்றை கரைத்துக் குடித்து இருக்கிறீர்கள்.
ஆன்மிகம் தொடர்புடைய கேள்வி - பதில் பகுதியை ஆரம்பிக்கலாமே... இது பற்றி உங்கள் எண்ணம் ?
கண்ணன்,
எதையும் இன்னும் கரைத்தெல்லாம் குடிக்கவில்லை. அப்படி செய்ய வெகுகாலம் செல்லும். அதற்கெல்லாம் காலம் தான் கை கொடுக்க வேண்டும்.
ஆன்மிகம் தொடர்பா கேள்வி - பதில் தொடங்கலாம்ன்னு இரவிசங்கரோட விண்மீன் வாரத்துல பாபா சொல்லியிருந்தார். நீங்களும் இப்ப அதைக் கேக்குறீங்க. அப்படி ஒன்னு தொடங்குறதா எண்ணம் இல்லை. காரணங்கள் இரண்டு.
1. ஆன்மிகத்தில் கேள்வி பதில் தொடங்கும் அளவிற்கு ஒன்றும் தெரியாது. உஷா சொல்வது போல் இந்து மதத்தைப் பற்றித் தான் எழுதுகிறேன்; அதனால் மதப்பதிவர் தான் என்றாலும் இந்து மதத்தைப் பற்றி கேள்வி பதில் நடத்தும் அளவிற்கு அறிவில்லை. அறிந்தவன் என்ற எண்ணமும் இல்லை.
2. அப்படியே அரைகுறை அறிவோடு தொடங்கினாலும் உஷா பட்டியல் இட்ட ஒவ்வொருவரும் ஒரே கேள்விக்கு ஒவ்வொரு விதமாக பதில் சொல்வார்கள்/சொல்வோம். அது அப்புறம் கேள்வி பதிலாக இருக்காது; பெரும் சர்ச்சையாக முடியும். ஏற்கனவே விளையாட்டாகச் சிலர் தொடங்கிய சர்ச்சைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் போது இது வேற தேவையா? :-)
எனக்கு ஏன் இந்த எண்ணம் இல்லைங்கறதுக்குத் தான் காரணங்கள் சொன்னேன். வேற எவராவது 'கேள்வி - பதில்' தொடங்கும் எண்ணம் இருந்தா கட்டாயம் அவங்க செய்யலாம்; அது அவங்களோட உரிமை.
இதோ அக்கா கேட்ட கேள்விகளும் தம்பியேன் சொல்லும் பதில்களும்:
அக்கா முதல் கேள்வியாக செல்வன் கேட்ட கேள்விகளில் ஒன்றையே கேட்டார். அதற்கான விடை சென்ற இடுகையிலே சொல்லியிருக்கிறேன்.
2. உங்களுக்கு சங்க இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் எப்போது ஆர்வம் ஏற்பட்டது? ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பினாலா, இல்லை தனித்தனியாக ஏற்பட்டதா?
ஆன்மிகத்தில/சமயத்தில/மதத்தில/பக்தியில ஈடுபாடு வந்தது குட்டியூண்டு வயசிலே. ( நீங்க ஆன்மிகத்திலன்னு தான் கேட்டீங்க. மத்ததையும் சொல்லாட்டி உஷா கோவிச்சுக்குவாங்க போலிருக்கு. :-) )
முதல் காரணம் அம்மம்மா சந்திரா அம்மாள். இந்தப் பாட்டியைப் பத்தி முந்தையப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அவங்க நேரடியா எதுவுமே சொல்லித் தரலை. ஆனா புத்தகப்புழுவா சின்ன வயசுலயே இருந்த எனக்குப் படிக்க நிறைய புத்தகங்களை வச்சிருந்தார். என் பதிவுகளைப் பத்தி தினமலர்ல வந்தப்ப அவங்க தான் அதை முதல்ல பார்த்து என் தம்பிக்கிட்ட சொன்னாங்க. அமெரிக்காவுல இருந்துக்கிட்டு அபிராமி அந்தாதியும் நாயகி சுவாமிகள் பாட்டும் எழுதுனா வெள்ளைக்காரன் இதெல்லாம் படிக்கிறானான்னு நான் அதுக்கப்புறம் மதுரைக்குப் போனபோது கேட்டாங்க. பாட்டி இதெல்லாம் நம்ம ஊரு ஆளுங்க படிக்கிறதுக்குத் தான் எழுதிக்கிட்டு இருக்கேன்னா அவங்களுக்குப் புரியலை. இன்னைக்குப் போயி சொன்னாலும் புரியாதுன்னு நினைக்கிறேன். ஏதோ பேரன் அமெரிக்காவுல பொட்டி தட்டிக்கிட்டு நிறைய சம்பாரிச்சுகிட்டு அப்பப்ப கம்ப்யூட்டர் பொட்டியில அபிராமி அந்தாதியும் எழுதிக்கிட்டு இருக்கான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க வச்சுக்கிட்டு இருந்த புத்தங்களைப் படிச்சு 7 (அ) 8 வயசுல அவங்ககிட்ட கீதையில ஐயம் கேட்டுக்கிட்டு இருந்தது நினைவிருக்கு. புரியாம மகாபாரதம் பெரிய புத்தகம் படிச்சதும் நினைவிருக்கு. ராமாயணம் படிக்கிறப்ப அகலிகைக்கு ஏன் கௌதமர் சாபம் குடுத்தாருன்னு புரியாம பாட்டிக்கிட்ட கேட்டதும் நினைவிருக்கு. ஆனா அவங்க என்ன பதில் சொன்னாங்கங்கறது மட்டும் மறந்திருச்சு. :-)
ரெண்டாவது காரணம் நான் பத்தாப்பு படிக்கிறப்ப டாடா சொல்லாம செத்துப் போன அம்மா. பகவத் கீதையெல்லாம் படிச்சு ரொம்ப அறிவாளியா நினைச்சுக்கிட்டு அம்மா செத்ததுக்கு அன்னைக்கு அழலை. ஆனா கல்லூரிக்காலத்துல இருந்து இன்னை வரைக்கும் அழுதுக்கிட்டு இருக்கேன். இப்ப இதை எழுதுறப்பவும் கண்ணுல தண்ணி கட்டுது. சரி சரி. எதையோ சொல்ல வந்து வேற எதையோ சொல்றேன். எங்கம்மா சுசிலா பெரிய முருக பக்தை. திருப்பரங்குன்றத்துக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கூடல் குமரன் சன்னிதிக்கும் அடிக்கடி (தினமும் ஒரு முறைன்னு சொல்ல முடியாது; வாரத்துக்கு ஒரு முறைன்னும் சொல்ல முடியாது - ரெண்டுக்கும் நடுவுல) கூட்டிக்கிட்டு போயி திருப்புகழும் 'சண்முக நாயகன் தோன்றிடுவான்' பாட்டும் நல்லா சொல்லிக் குடுத்தாங்க. அன்னைக்குத் தொடங்குனது தெய்வத் தமிழின் மேல் காதல்.
அம்மாவோட மறைவுக்குப் பிறகு அந்த தெய்வப் பாடல்களின் மேல் இருந்த காதல் கீதையின் மேல் திரும்பியது. அப்ப எல்லாம் கீதைக்கு எத்தனை உரைகள் இருக்கோ அத்தனையையும் வாங்கி ஒவ்வொரு சுலோகமா ஒப்பீடு செஞ்சே படிச்சேன். அப்படிப் படிச்சது தான் வடமொழி. பள்ளிக்கூடத்துல தமிழ் படிச்சது மாதிரி யாருக்கிட்டயும் முறையா வடமொழி படிக்கலை. அதனால என்னோட வடமொழி அறிவு கேள்வியறிவு மட்டுமேன்னு சொல்லலாம்; அரைகுறை அறிவுன்னும் சொல்லலாம். :-) உங்க அடுத்த கேள்வியான '3. வடமொழியும் நீங்களே ஆர்வத்தால் கற்றுக் கொண்டீர்களா?'க்கும் பதில் சொல்லியாச்சு. ரெண்டாவது கேள்விக்கான பதில் தொடருது.
கல்லூரிக்காலத்தில கீதையை எந்தளவுக்குப் படிச்சேனோ அந்த அளவுக்கு ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கத் தொடங்குனது வேலை பாக்கத் தொடங்குனப்ப. அதுக்கு இணையத்துல இருக்கிற வைணவ குழுமங்கள் (பக்தி, ஒப்பிலியப்பன், சரணாகதி) தான் காரணம். அப்ப பழந்தமிழ் இலக்கியங்கள் மேல இன்னும் பழக்கம் கூடிச்சு.
2005ல பதிவுகள்ல எழுதத் தொடங்குன பிறகு தான் சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்தது. 2006 ஜனவரியில 'மாலவனும் தமிழ்க்கடவுள்' என்ற விவாதம் என்னோட நட்சத்திர வாரத்துல வந்தது. நான் அந்தக் கருத்தை வைக்க இராகவன் மறுத்தார். பலவகையில என் கருத்தைச் சொன்னேன். ஆனா தரவுகளோட சொன்னா இன்னும் பலமா என் கருத்தை வைக்கலாம்ன்னு தோணிச்சு. அப்பத் தொடங்குனது 'இலக்கியத்தில் இறை' என்ற தொடருக்கான எண்ணம். ஆனா நான் விரும்புற கருத்துக்குத் தரவுகளைத் தேடாம திறந்த மனத்தோடு தான் சங்க இலக்கியங்களை அணுகுகிறேன். அதனால் கடைசியில் மாலவன் தமிழ்க்கடவுள் என்று சொல்ல சரியான தரவுகள் கிடைக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவும் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவும் தயக்கங்கள் இல்லை.
சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்ததுக்கு இன்னொரு காரணமும் உண்டு. வடமொழி வேதங்கள், நூற்கள் ஆராயப்பட்ட அளவிற்குத் தமிழிலக்கியங்கள் ஆராயப்படவில்லை என்ற எண்ணம் உண்டு. திராவிடம், ஆரியம், தமிழ், வடமொழி போன்ற கருத்தாங்கள் எல்லாம் வடமொழி நூற்களை அடிப்படையாகக் கொண்டே இருப்பதாக ஒரு எண்ணம். தமிழிலக்கியங்களில் அதற்கு ஏற்பவோ எதிர்ப்பாகவோ தரவுகள் இருக்கிறதா என்று பார்க்க ஆசை. சில தரவுகள் கிடைத்து அவற்றை கூடலில் (முக்கியமாக பாரி வள்ளல் தொடர்கதையில்) வைத்திருக்கிறேன். எத்தனை பேர் படித்தார்களோ தெரியாது.
***
இணையத்தில் ஒரே ஒரு வாத்தியார் தான்; ஒரே ஒரு வாத்தியார் அம்மா தான். ரெண்டு பேருக்கும் அறிமுகம் தேவையில்லை. வாத்தியார் அம்மாவை நான் அக்கான்னு தான் கூப்புடறது. வாத்தியார் ஐயா எழுத வந்த நாள்ல இருந்து தொடர்ந்து படிச்சுக்கிட்டு தான் வர்றேன். பின்னூட்டங்களும் முடிஞ்ச வரைக்கும் இட்டுக்கிட்டு வர்றேன். வாத்தியார் ஐயா கேட்ட கேள்வியும் என்னோட பதிலும் இங்கே.
இறைவனைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?
நல்ல கேள்வி வாத்தியார் ஐயா. பதில் சொல்லக் கடினமான கேள்வியும். எந்தப் பதில் சொன்னாலும் முழுமையாக இருக்காது.
இப்போதைக்கு ரெண்டு பதில்கள் இருக்கிறது. இரண்டையுமே சொல்கிறேன்.
உங்க கேள்வியை நீங்க கேட்டவுடனே படிச்சப்ப ஒரு பதில் தோணிச்சு. அது: சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து படிச்சு எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சுக்கிற அறிவு வேணும். அப்படி படிச்சுப் புரிஞ்சிக்கிட்டதைத் தெளிவா மத்தவங்களுக்குச் சொல்ற வல்லமையும் வேணும். (ஏன் இந்த வரம்ன்னு போன பத்தியில சொல்லியிருக்கேன்)
இந்தக் கேள்விக்குப் பதில் எழுத உக்காந்தப்ப இதைப் பத்தி சிந்திச்சேன். அப்ப தோணினது: எங்குமுளன் கண்ணன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இப்ப எனக்குக் கிடைச்ச இந்தக் காட்சி என்றென்றைக்கும் தொடர்ந்து கிடைக்கணும். எந்த எந்த வகையில உனக்குத் தொண்டு செய்ய முடியுமோ அந்த அந்த வகையில தொண்டு செய்யும் வாய்ப்பும் வசதியும் வல்லமையும் கிடைக்க வேண்டும். நீ எங்கு எந்த நிலையில் என்னை வைக்கிறாயோ அந்த நிலையில் உன் நினைவோட நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கணும். (இதெல்லாம் சொல்லுதல் யார்க்கும் எளிய கதை. கடவுள் காட்சி தரும் போது இவற்றைத் தான் கேப்பேனாங்கறது ஐயமே)
***
என் பதிவுக்குப் புதுசா வந்து கேள்வி கேட்ட பரிசல்கார கிருஷ்ணகுமாரை வரவேற்கிறேன். அவர் கேட்ட கேள்வியும் அதற்குரிய பதிலும்:
எனது கேள்வி..
உங்களுக்கு எங்களையெல்லாம் பத்தா பாவமா இல்லையா?
கிருஷ்ணகுமார். பதிவுகள்ல எழுதுறதே சில நேரம் மத்தவங்களைக் கொடுமைபடுத்துற மாதிரி தான். குடும்பத்தோட செலவழிக்க வேண்டிய நேரத்துல பதிவு எழுதுறதால குடும்பத்தைக் கொடுமைபடுத்துறோம். இந்த மாதிரி கேள்வி கேளு கேள்வி கேளுன்னு நச்சரிச்சு உங்களை மாதிரி பதிவர்களைக் கொடுமைபடுத்துறோம். என்னங்க செய்றது - கொடுமையே கொடுந்தொழில்ன்னு ஆகிப் போச்சு வாழ்க்கை. :-)
***
கோவி.கண்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. வெள்ளம் போல் பெருகும் அவரது கருத்துகளே அவரை நன்கு அறிமுகம் செய்து விடும். அந்தக் கருத்துகள் அவருக்கு என்ன பட்டப்பெயரை வாங்கித் தந்ததுங்கறதை மட்டும் நான் சொல்ல மாட்டேன். :-)
அவர் 'கேள்விகள் தயாராகின்றன'ன்னு முன்னோட்டம் கொடுத்தபோது சரி வழக்கம் போல விவகாரமா தான் எதாச்சும் கேப்பாருன்னு நினைச்சேன். அப்புறம் அவர் கேட்ட ஒரே கேள்வியைப் பாத்தவுடனே சப்புன்னு ஆயிருச்சு. அப்படி கேட்ட ஒரே கேள்விக்கு முன்னாடியும் ஒரு பாராட்டுரைங்கற பாறாங்கல்லு. எதுக்குன்னு தெரியலை. :-)
ஆன்மிகம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம்,சமஸ்கிரதம் ஆகியவற்றை கரைத்துக் குடித்து இருக்கிறீர்கள்.
ஆன்மிகம் தொடர்புடைய கேள்வி - பதில் பகுதியை ஆரம்பிக்கலாமே... இது பற்றி உங்கள் எண்ணம் ?
கண்ணன்,
எதையும் இன்னும் கரைத்தெல்லாம் குடிக்கவில்லை. அப்படி செய்ய வெகுகாலம் செல்லும். அதற்கெல்லாம் காலம் தான் கை கொடுக்க வேண்டும்.
ஆன்மிகம் தொடர்பா கேள்வி - பதில் தொடங்கலாம்ன்னு இரவிசங்கரோட விண்மீன் வாரத்துல பாபா சொல்லியிருந்தார். நீங்களும் இப்ப அதைக் கேக்குறீங்க. அப்படி ஒன்னு தொடங்குறதா எண்ணம் இல்லை. காரணங்கள் இரண்டு.
1. ஆன்மிகத்தில் கேள்வி பதில் தொடங்கும் அளவிற்கு ஒன்றும் தெரியாது. உஷா சொல்வது போல் இந்து மதத்தைப் பற்றித் தான் எழுதுகிறேன்; அதனால் மதப்பதிவர் தான் என்றாலும் இந்து மதத்தைப் பற்றி கேள்வி பதில் நடத்தும் அளவிற்கு அறிவில்லை. அறிந்தவன் என்ற எண்ணமும் இல்லை.
2. அப்படியே அரைகுறை அறிவோடு தொடங்கினாலும் உஷா பட்டியல் இட்ட ஒவ்வொருவரும் ஒரே கேள்விக்கு ஒவ்வொரு விதமாக பதில் சொல்வார்கள்/சொல்வோம். அது அப்புறம் கேள்வி பதிலாக இருக்காது; பெரும் சர்ச்சையாக முடியும். ஏற்கனவே விளையாட்டாகச் சிலர் தொடங்கிய சர்ச்சைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் போது இது வேற தேவையா? :-)
எனக்கு ஏன் இந்த எண்ணம் இல்லைங்கறதுக்குத் தான் காரணங்கள் சொன்னேன். வேற எவராவது 'கேள்வி - பதில்' தொடங்கும் எண்ணம் இருந்தா கட்டாயம் அவங்க செய்யலாம்; அது அவங்களோட உரிமை.
Labels:
கேள்வி பதில்,
சொந்தக் கதை சோகக் கதை,
பொது
Subscribe to:
Posts (Atom)