Friday, November 23, 2007

தமிழின் பாதுகாப்பில் சௌராஷ்ட்ரம் - சாகித்ய அகாடமி தலைவர் பாராட்டு


சாகித்ய அகாடமி விருது பெற்ற இரு சௌராஷ்ட்ர அறிஞர்களைப் பாராட்டி மதுரையில் நடந்த சாகித்ய அகாடமியின் கூட்டத்தில் சாகித்ய அகாடமியின் தலைவர் திரு. கோபி சந்த் நராங்க் சொன்னவை ஹிந்து இதழில் வந்திருக்கிறது.

திரு. தாடா சுப்ரமணியன் அவர்களும், திரு.கே.ஆர். சேதுராமன் அவர்களும் சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றதைப் பற்றி முன்பொரு இடுகை இட்டிருந்தேன். சென்ற செவ்வாயன்று மதுரையில் அகாடமி தலைவர் திரு.கோபி சந்த் நராங்க் தலைமையில் இவர்கள் இருவரையும் பெருமைப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.

அரசியல் சட்டத்தில் 13ம் பட்டியலில் இருக்கும் மொழிகளைத் தவிர்த்து இந்தியாவில் குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையால் பேசப்படும், இலக்கணமும் இலக்கியமும் உடைய சிறுபான்மை மொழிகள் நிறைய இருக்கின்றன. அம்மொழியில் இருக்கும் இலக்கிய படைப்பாளர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த பாஷா சம்மான் விருதுகள் 1996ல் இருந்து வழங்கப்படுகின்றன என்று அகாடமி தலைவர் சொன்னார்.

அந்த விழாவில் அகாடமி தலைவர் சொன்னது: Mr. Narang commended the liberalism and pluralism of Tamils for protecting and helping Sourashtra language flourish reflecting the spirit of the nation.


நன்றி: தி ஹிந்து

5 comments:

சிவமுருகன் said...

Good News.

pathykv said...

nalla toDakkam.
Pathy.

G.Ragavan said...

அருமை. சௌராஷ்ட்டிர மொழி தமிழகத்தில் பேசப்பட்டாலும் தமிழ் மொழியின் பாதுகாப்பில் உள்ளது என்பது மிகப் பொருத்தம். என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவமுருகன் & பதி ஐயா.

குமரன் (Kumaran) said...

உண்மை இராகவன். நன்றிகள்.