Friday, May 04, 2007

சுந்தரத்தோளனின் (கள்ளழகரின்) தசாவதாரக் காட்சிகள்

கள்ளழகரின் சித்திரத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்ச்சி இரவு முழுவதும் நிகழும் இந்த தசாவதாரக் காட்சிகள் தான். வைகைக்கரையில் இருக்கும் இராமராயர் மண்டபத்தில் இரவு முழுவதும் பத்து விதமான அவதார அலங்காரங்களில் பவனி வந்து காட்சி தருவார் கள்ளழகர். அதிகாலையில் மோகினி அவதாரம் கொண்டு குலுங்கிக்கொண்டு வரும் பவனியை மட்டுமே இதுவரைக் காணக் கொடுத்து வைத்திருக்கிறேன். மற்றத் திருக்கோலங்களையும் தினமலரின் தயவால் வருடாவருடம் கண்டு வருகிறேன். இதோ இந்த வருட தசாவதாரத் திருக்கோலங்களில் சில - தினமலரின் தயவால்.



13 comments:

Anonymous said...

எத்தனை வருடங்களாயிற்று இந்த தசாவதாரக் காட்சிகளை தரிசித்து......நன்றி குமரன்.

/மதுரையம்பதி...

சிவமுருகன் said...

அடடா, இப்போது தான் இந்த மோகன ரங்கனின் இரு பாடலை பதித்தேன், மீண்டும் ஒரு முறை தரிசனம் தந்து விட்டான் இந்த திருமாலிஞ்சோலை அழகன்.

நன்றி.

சிவமுருகன் said...

see this too http://nigalvukal.blogspot.com/2006/05/133.html

குமரன் (Kumaran) said...

நீங்களும் இந்தத் திருக்காட்சியைக் கண்டு பல வருடங்கள் ஆகிவிட்டதா மௌலி ஐயா. எவ்வளவு நாட்கள் ஆனாலும் முன்பு கண்டவை பசுமையாக நினைவில் இருக்கின்றனவே.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். மோகனரங்கனின் பாடலைப் படித்தேன். மிக நல்ல பாடல் அது.

குமரன் (Kumaran) said...

இந்த வருடமும் இன்னொரு முறை உங்கள் பதிவில் இருக்கும் தசாவதாரக் காட்சிகளைக் கண்டேன் சிவமுருகன். நன்றி.

jeevagv said...

இந்த மோகினி அவதாரம் என்பது என்ன அவதாரம் குமரன்?

வல்லிசிம்ஹன் said...

நன்றி குமரன்.
சித்திரா பௌர்ணமினு சொல்லிட்டு
நான் மாத்திரம் கற்பனை செய்து கொள்வேன்.
மற்றவர்களுக்கு மதுரை நினைவுகள் இல்லாததால் சுவாரசியம் இருக்காது.
அழகனைக் கண்டதிலும் நினைத்ததிலும் மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

ஜீவா, பாற்கடல் கடைந்த போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடுவே அமுதத்திற்காக வந்த போட்டியின் போது எடுத்த அவதாரம் மோகினி அவதாரம்.

குமரன் (Kumaran) said...

மிக்க மகிழ்ச்சி வல்லியம்மா.

Geetha Sambasivam said...

ellathaiyum parthutu perumoochu than vidanum. mmmmmmmmmm

Geetha Sambasivam said...

mogini avatharathai pathi niraiya iruke Kumaran? surukama mudichirikingale? :)

குமரன் (Kumaran) said...

ஆமாம் கீதாம்மா. சுருக்கமா சொல்லிட்டு விட்டுட்டேன்.