Monday, December 18, 2023

21 நாள் வைகுண்ட வாசல் தொறப்பாங்களா?

 'குமரா. சொர்க்க வாசலுக்கும் பரமபத வாசலுக்கும் வித்தியாசம் சொன்னே. ஆனா இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி இல்லையே. அதைப் பத்தி சொல்லு'


'மாதவா. வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு வைகுண்ட வாசல் தொறப்பாங்கங்கறது சரி தான். ஆனா அன்னைக்கு மட்டும் இல்லை, இருபத்திவொரு நாள் தொறப்பாங்கன்னு தெரியமா?'


'அப்படியா?! தெரியாம போச்சே. வைகுண்ட ஏகாதசிக்கு கோவில்ல கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கும். 21 நாள் தொறப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா கூட்டம் இல்லாத நேரம் கோவிலுக்கு போயிருப்பேனே'


'இப்ப என்ன. இனிமே கூட்டம் இல்லாத நேரம் போயி வைகுண்ட வாசல் தொறக்குறத தரிசனம் பண்ணு'


'சரி தான். இன்னும் விவரம் சொல்லு. அப்பத்தானே அத செய்ய முடியும்'


'சொல்றேன் சொல்றேன். வைகுண்ட ஏகாதசிக்கு பத்து நாள் முன்னாடி இருந்து, அதாவது அமாவாசைக்கு மறு நாள்ல இருந்து, ஒவ்வொரு நாளும் காலையில வைகுண்ட வாசல் தொறப்பாங்க. வைகுண்ட வாசல் வழியா பெருமாள் வெளியே வந்து, கோவிலுக்கு பக்கத்துல இருக்கிற பந்தல்லயோ மண்டபத்திலேயோ உக்காந்து, எதிர்ல ஆழ்வார்கள் ஆசாரியர்கள் எல்லாரும் உக்காந்திருக்க, பாசுரம் கேப்பாரு. இந்த பத்து நாளை என்ன சொல்லுவாங்கன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்'


'நீ சொல்றது பகல் பத்து உற்சவமா?'


'ஆமா. பகல் பத்து உற்சவம் தான். 


ஆழ்வார்கள் பாடுன நாலாயிர திவ்ய பிரபந்தந்துல இருந்து பாசுரம் எல்லாம் பாடுவாங்க'


'நாலாயிரம் பாட்டும் ஒவ்வொரு நாளும் பாடுவாங்களா என்ன?'


'இல்லை. மொத்தமா 21 நாளுக்கும் சேர்த்து நாலாயிரம் பாடுவாங்க'


'ஓ சரி சரி. நீ பகல் பத்து உற்சவம் பத்தி சொன்னே. அதே மாதிரி இராப்பத்து உற்சவமும் இருக்கு. சரிதானே'


'ஆமா. உற்சவத்தோட பேரு சொல்ற மாதிரி பத்து நாள் இரவு பெருமாள் பரமபத வாசல் வழியா வந்து, ஆழ்வார்கள் ஆசார்யர்களோட உட்கார்ந்து பாசுரம் கேப்பார்'. 


'சரி தான். வைகுண்ட ஏகாதசிக்கு முன்னாடி பத்து நாள், பின்னாடி பத்து நாள், வைகுண்ட ஏகாதசி ஒரு நாள். ஆக மொத்தம் 21 நாள். சரியா?'


'அது தான் இல்லை'


(தொடரும்) 

No comments: