Monday, October 14, 2024

பாட்டி மேல் ஒரு ஸ்லோகம்

அக்டோபர் 11ம் தேதி மறைந்த என் தாய்வழிப் பாட்டி திருமதி. சந்திரா அவர்களின் பிறந்தநாள் . இன்று அவர் மேல் ஒரு வடமொழிப் போற்றுதலை எழுதும் பேறு கிடைத்தது.

மந்த ஸ்மித முகீம்
மதுர ஸுக பாஷிநீம்
குப்பார்ய க்ருஹிநீம்
கீதாம்ருத வர்ஷிநீம்
பஞ்ச கன்யா தாத்ரீம்
ஏக புத்ர ஜனநீம்
மம மாதாமஹீம்
சந்த்ராம்பாம் ஆச்ரயே!
பொருள்:

எப்போதும் புன்னகையுடன் கூடிய முகத்தை உடையவர். இனிய நற்சொற்களைப் பேசுபவர். திரு. குப்புசாமி அவர்களின் மனைவியார்.
பகவத் கீதை உபன்யாசம் செய்து மக்களிடம் பரப்பியவர். கீதை என்னும் அமிர்தத்தை மழை போல் பொழிபவர்.
ஐந்து பெண்களின் தாயார். ஒரு மகனைப் பெற்றவர் .
எனது அம்மாவின் அம்மா திருமதி. சந்திரா அம்மையாரை பணிகிறேன்.

No comments: