Tuesday, November 28, 2006

மேரே பாபா ஸ்ரீ சத்ய சாயீ!


12 comments:

VSK said...

ஒரு முறை மன்னிப்பாயாக என்று எத்தனை முறை சொல்லுகிறோம்?
அத்தனை முறையும் மன்னித்து, நம்மை ஆட்கொள்பவர்க்கு நன்றி கலந்த வந்தனங்கள்!
ஜெய் சாயிராம்!

Anonymous said...

சாய் ராம்!

கால்கரி சிவா said...

வாழ்க உமது தொண்டு

Anonymous said...

பாபா செய்யும் சேவைகளுக்கு என் வணக்கம். ஆனால் வாயிலிருந்து லிங்கம் எடுப்பதுபோன்ற உட்டாலக்கடியெல்லாம் அவசியம் தானா? YouTube ல் இந்த விஷயம் மற்றும் விபூதி எடுக்கும் வித்தையெல்லாம் காட்டுகிறார்களே, என்ன நினைக்கிறீர்கள்?

குமரன் (Kumaran) said...

சரியாகச் சொன்னீர்கள் எஸ்.கே. இந்த ஒரு முறை மன்னித்துவிடு என்று எத்தனை முறை கேட்கிறோம். தாயினும் சாலப் பரிந்து அத்தனை முறையும் நம்மை ஏற்றுக் கொள்ளும் சுவாமியை என்றும் வணங்கவேண்டும்.

ஜெய் சாயிராம்.

குமரன் (Kumaran) said...

சாய்ராம் கனக்ஸ்

குமரன் (Kumaran) said...

நன்றி சிவா அண்ணா.

குமரன் (Kumaran) said...

பெயர் சொல்ல விரும்பாத நண்பரே. நீங்கள் சொல்கின்ற இறைவனின் அறிமுக அட்டைகள் (அப்படித் தான் சுவாமி தன்னுடைய அற்புதங்களைப் பற்றி சொல்கிறார்) உட்டாலக்கடி வேலை என்பதும் வித்தைகள் என்பதும் அவரவர் பார்வையைப் பொறுத்தது. தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் வெறும் சிலை தான். உண்டென்றால் அது உண்டு. இல்லையென்றால் அது இல்லை.

Anonymous said...

அய்யா,

ஒரு பகவானின் அறிமுக அட்டையே ஏமாற்றுவேலையாக இருந்தால் அவரை பகவான் என்று எப்படி ஏற்றுக்கொள்வது? உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். ஆனால் இவ்வளவு தெளிவாக கைக்குட்டையிலிருந்து லிங்கத்தை வாயில் போட்டு துப்புவதை விடியோவில் பார்த்தபின் என்னையே என்னால் ஏமாற்றிக்கொள்ள முடியவில்லையே? இதற்கு ஏதாவது விளக்கம் இருக்கிறதா? அல்லது கண்மூடித்தனமாக, கேள்வி எதும் கேட்காமல் நம்புவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா?

குமரன் (Kumaran) said...

கண்மூடித்தனமாகக் கேள்வியே கேட்காமல் ஏற்பதை எதிர்பார்க்கவில்லை நண்பரே. அடியேனின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தான் நம்புகிறேன். அந்த அனுபவங்களுக்கு முன்னால் வீடியோவில் காட்டப்படுபவை அடிபட்டுப் போகின்றன. அந்த அனுபவங்கள் என்ன என்று கேட்டீர்களானால் அவற்றை இப்போது வலைப்பூவில் சொல்ல விரும்பவில்லை. அப்படியும் தெரிந்து கொள்ள ஆவல் என்றால் எனக்குத் தனிமடல் அனுப்புங்கள். நேர விரயம் இல்லை என்றும் நீங்கள் உண்மையிலேயே அறிந்து கொள்ளும் ஆவலுடன் கேட்கிறீர்கள் என்றும் அடியேனுக்குத் தோன்றினால் உங்களுக்குச் சொல்கிறேன். இல்லை. நீங்களே கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொள்ளுங்கள். கரையோரமாய் நின்று வரும் அலைகளில் நுரைகளையும் அந்த அலைகள் ஒதுக்கும் அழுக்குகளையும் பார்த்துவிட்டு கடலைக் குறை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

தருமி said...

படம் வரவில்லையே .. எனக்கு மட்டுமா?

குமரன் (Kumaran) said...

எனக்கும் வரவில்லை தருமி ஐயா. என்ன மாயமோ மந்திரமோ? :-)