Tuesday, November 21, 2006

500 ரூபாய் யானைப்படம்

:-)))

13 comments:

பொன்ஸ்~~Poorna said...

சீ.. பாவம்.. யக்காவுக்குத் தில் இல்லைன்னு ஆனையத் தப்பு சொல்றாங்க!! :(

இலவசக்கொத்தனார் said...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். அதே போல் ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை.......

வல்லிசிம்ஹன் said...

குமரன்
என்ன சொல்லலாம்?
வருத்தம்மாத் தானிருக்கு.

இன்வான்ங்அ ஊர்லேய்யும்மே
ஏமாடத்தரவங்க இல்லீயா என்ன?

குமரன் (Kumaran) said...

பொன்ஸு. யானை பதிவு போட்டாதேன் நம்ம பதிவு பக்கமே வர்றீக. அப்புடியே வந்தாலும் பேசாம போயிட்றீக போல. எப்டியோ பதிவு பக்கம் வந்து பேசிட்டு போனீகளே. ரொம்ப நன்றி. :-)

ஆனைய ஆரு தப்பு சொன்னா? ஆனைப் பாகன் தான் அப்டி பண்ணிப்புட்டாருன்னு சொல்றாக அக்கா. அதுவும் கடேசியில அந்த படத்துக்கு 500 ரூவா குடுக்கலாம்னு சொல்லிட்டாகள்ல.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். என்ன முட்டை, கோழி தத்துவம் சொல்ல முயற்சி பண்றீங்களா? :-)

குமரன் (Kumaran) said...

வருத்தப்படறதுக்கு ஒன்னுமில்லை வல்லியம்மா. அவுருதான் அம்பது ரூபான்னு சொன்னாருல்ல. இந்தம்மா ஐந்நூறைக் கொடுத்தா? அதான் பறந்துட்டாரு. :-)

எல்லா ஊர்லயும் ஏமாத்தறவங்க உண்டு தான். இங்கேயும் ஒரு தடவை ஒரு பிச்சைக்காரருக்கு (வெள்ளைக்காரரா இருக்காரா, நம்ம அடிமைத் தன்னிலை பிச்சைக்காரன்னு சொல்ல விடமாட்டேங்குது) ஒரு டாலர் குடுக்கலாம்னு பாத்தா அஞ்சு டாலர் நோட்டு தான் இருக்கு. சரி அவர்கிட்டேயே சில்லறை வாங்கிக்கலாம்னா அஞ்சு டாலர் குடுத்தவுடனே 'ஐயா. சாமி. நீ நல்லா இருக்கணும்'ன்னு கால்ல விழுந்து வாழ்த்திட்டு உடனே மெக்டொனாட்ஸ்குள்ள நொளஞ்சுட்டாரு. பின்னாடியே விடாம போனேன். அவரு வாங்கித்தின்னது 4.50 டாலருக்கு. எத்தனை நாளாச்சோ அவரும் சாப்புட்டு. ஏமாத்திட்டான்யான்னு பின்னாடியே போனவன் சரி சாப்புட்டுட்டுப் போகட்டும்ன்னு வந்துட்டேன்.

குமரன் (Kumaran) said...

என்னடா இவன் மதுர பாசையில திடீர்ன்னு பேசரானேன்னு பாக்குறீகளா? ஒன்னுமில்லேங்க. இப்பத் தான் தேவர் மகன் படம் பாத்தேன். அம்புட்டுதேன்.

துளசி கோபால் said...

நீங்க என்னாங்க, பிச்சை கேக்கறவங்க உலகம் பூராவும் இருக்காங்கதான்.
போன மாசம் சிட்னி போயிருந்தப்ப, சிட்டி மால்க்குப் பக்கத்துலே நல்லா
மடக்கு ஸ்டூல் போட்டு உக்கார்ந்துக்கிட்டு, முன்னாலே ஒரு போர்டு எழுதி
வச்சுக்கிட்டு ஒருத்தர் உக்காந்துருந்தார். அந்த போர்டுலே,

" நான் குடிக்கறதுக்காகவோ, மயக்க மருந்து வாங்கவோ, சூதாடவோ பணம்
கேக்கலை. எனக்குப் பணத்தேவை இருக்கு"

இப்படி எழுதி இருந்துச்சு.


ஆனா, இந்த யானைக்காரர் செஞ்சது சரியில்லை(-:
'கணேசு'க்குக் கெட்டபேரை வாங்கிவச்சுட்டார்(-:

சரி......போட்டும், இன்னிக்கு எப்படியோ உங்க புண்ணியத்துலே 'யானை தரிசனம்'
ஆச்சு:-))))

குமரன் (Kumaran) said...

ஆனை உங்களையும் கூட்டிக்கிட்டு வந்திருச்சா துளசி அக்கா? :)

கணேசுக்கு எங்கேங்க கெட்ட பேரு வந்துச்சு? அந்தம்மா தான் கடைசியில 500 ரூபாய்க்கு ஒர்த் தான் இந்த யானைப் படம்ன்னு சொல்லீட்டாங்களே!

வல்லிசிம்ஹன் said...

மதுரைத் தமிழ் பார்த்ததில் மகிழ்ச்சி குமரன்:-0)
அங்கன இங்கன கிடையாதா??

ஆஹா இன்னிக்கு தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததுனு கூட மனாசை சமாதானப்
படுத்திக்கலாம்/!

Anonymous said...

அன்புக் குமரா!
பாகன் ;செய்தது தவறு!!!;அவர் வறுமை அப்படிச் செய்ய வைத்துவிட்டது. பணம் படைத்த பலரே!!ஏமாற்றுகிறார்கள். அந்தப் படத்திற்கு ,அப் பெண் கொடுக்கலாம்.அவரே!!அந்த மனநிலைக்கு வந்து விட்டார்.
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

அங்கன இங்கன கிடையாது வல்லியம்மா. அங்கிட்டும் இங்கிட்டும் உண்டு. :-)

குமரன் (Kumaran) said...

சரியா சொன்னீங்க யோகன் ஐயா. :-)