Wednesday, October 25, 2006

கடவுளும் அவள் இடையும்

கடவுளும் அவள் இடையும் ஒன்று
சிலர் உண்டென்பர்
சிலர் இல்லையென்பர்

கல்லூரியில் நுழைந்தவுடன் எழுதியது (1989 - 1990)

20 comments:

கோழை said...

எழுதினது முக்கியம் இல்ல... யாரை(யாருடையதை)ப்பார்த்து எழுதினீங்க??

இலவசக்கொத்தனார் said...

என்ன நோ தங்கமணி எஞ்சாயா? நானும் பாக்கறேன், ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க.

வந்து எல்லாம் போட்டு குடுக்கறேன். அப்புறம் இடையாவது ஒண்ணாவது....

கோவி.கண்ணன் [GK] said...

இந்த விசயத்தில் இல்லையென்றாலும் எல்லோரும் ஆத்திகரே !
:)

bala said...

பலே, குமரனுக்குள்ளும் ஒரு Sigmund Freud.

பாலா

குமரன் (Kumaran) said...

ஆதவன். இதெல்லாம் கல்லூரியில் நுழைந்தவுடன் ஜோதியில் ஐக்கியமாகவதற்காக எழுதியது. அப்போதெல்லாம் ஒருவர் இருவரா யாரைப் பார்த்து எழுதினேன் என்று சொல்ல? உலகமே கடவுள் (??!!) மயமாகத் தெரியும் காலமல்லவா அந்தக் காலம்? :-)

உங்கள் முதல் வருகைக்கு நன்றி. விரைவாக உங்கள் பதிவைப் பார்த்தேன். சூப்பர் ஸ்டார் ஆசி வழங்க வந்தால் அவரை இந்த அளவுக்கு ஓட்டுகிறீர்களே? நியாயமா? பாவம் ஜோ.

குமரன் (Kumaran) said...

நான் என்ன கொத்ஸா 'நோ தங்கமணி எஞ்சாய்' என்று ஆட? இதெல்லாம் பக்கத்துலயே தங்கமணியை வச்சுக்கிட்டு பாடற பாட்டு அப்பூ. ஏதாவது கேட்டா சொல்றதுக்குத் தான் தயாரா ஒரு பதில் இருக்கே. அதெல்லாம் கற்பனைக் காதலி அம்முணி. உங்களைப் பாத்தவுடனே தான் என் கற்பனைக் காதலி கண்ணெதிரே நிக்கிறதைப் பாத்தேன்னு அடிச்சு விடவேண்டியது தானே?! :-)

இந்த 'மடக்கிப் போட்ட உரைநடையை' என் முதல் புதுக்கவிதைன்னு எத்தனை தடவை தங்கமணிக்கிட்ட சொல்லியிருப்பேன். என் கவிதைகள்லேயே அவங்களுக்கு புரிஞ்ச புடிச்ச ஒரே கவிதை இது மட்டும் தான். :-)
அதனால நீங்க வந்து போட்டும் குடுக்கமுடியாது எடுத்தும் குடுக்கமுடியாது. :-)

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன் ஐயா. மாட்டுனீங்களா? இந்த விதயத்தில்ன்னு சொல்லுங்க. இல்லை இராகவன் சொல்றமாதிரி இதுலன்னு சொல்லுங்க. சொல் ஒரு சொல் பாக்கலையா? விஷயம், விசயம் ங்கறது வடமொழின்னு அந்தப் பதிவுல சொல்லியாச்சு. :-)

குமரன் (Kumaran) said...

//இந்த விசயத்தில் இல்லையென்றாலும் எல்லோரும் ஆத்திகரே !//

ஹி ஹி கவிதைக்கெல்லாம் விளக்கம் கேக்கக் கூடாது தான். ஆனா என்னை மாதிரி மரமண்டையனுக்குப் புரியமாட்டேங்குதே?! ஐயா நீங்களோ புரிஞ்ச மத்த யாராவதோ கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கையா.

குமரன் (Kumaran) said...

பாலா. குமரனுக்குள்ள மட்டுமில்லை. எல்லாருக்குள்ளேயும் ஒரு சிக்மண்ட் ப்ருயட் உண்டு. (ப்ராட்ன்னு சொல்ல வந்தேன். பொருள் மாறுதே. அதான் ப்ருயட்ன்னு சொல்லிட்டேன்).

கோவி.கண்ணன் [GK] said...

//குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. மாட்டுனீங்களா? இந்த விதயத்தில்ன்னு சொல்லுங்க. இல்லை இராகவன் சொல்றமாதிரி இதுலன்னு சொல்லுங்க. சொல் ஒரு சொல் பாக்கலையா? விஷயம், விசயம் ங்கறது வடமொழின்னு அந்தப் பதிவுல சொல்லியாச்சு. :-)
//

குமரன் !

தவிறிவிட்டது ... அடுத்தமுறை கவனம் கொள்கிறேன்.

இந்த பார்வையில் என்று சொல்லியிருக்கலாம் ! ஹூம்
:(

கண்டுபிடித்த குருநாதர் குமரனுக்கு பாராட்டுக்கள் !
:)

பூங்குழலி said...

நான் கூட ஏதோ, கடவுள் என்ற ஒரு ஜந்துவை எல்லோரும் ஆணாகப் பாவிக்கிறார்களே..

நீங்கள் பெண்ணியப் பார்வையில், கடவுளும் அவளின் இடையும் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்றெண்ணி இங்கே வந்தால்..

அட கவிதை நன்றாயிருக்கிறது.

என்ன,
இங்கே கடவுளை விட்டுத்தள்ளிவிட்டு இடையை நோக்கினால்,
அது தன்னையே இல்லை இல்லை என ஆடிச் சொல்கிறது.

இதை எப்படியாவது மடக்கிப்போட்டு கவிதையாக்க முடியுமா?

உதவி செய்யுங்களேன்.
:))


நன்றி..

சிவமுருகன் said...

ஒரு வரின்னா அது அறிவுரை, இரு வரின்னா அது திருக்குறள், நாலு வரின்னா அது நாலடியார், ஒரு வாசகம்ன்னா அது திருவாசகம் அப்போ மூனு வரின்னா?

//இதெல்லாம் கல்லூரியில் நுழைந்தவுடன் ஜோதியில் ஐக்கியமாகவதற்காக எழுதியது. //

ஜோதியில்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட...

இல்லை என்று சொல்பவனும் இடையின் அழகைக் 'கண்டு' விட்டுத் தான் இல்லவே இல்லை என்று சாதிக்கிறான்!

('கண்டு' விட்டுவிற்குப் பதிலாக, 'தொட்டு' விட்டு, 'தடவி' விட்டு, 'கிள்ளி' விட்டு என்று அவரவர் வசதிக்கேற்ப எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள், தோழர்களே :-))

உண்டு என்று சொல்பவனும் இடையின் அழகைக் 'கண்டு' விட்டுத் தான், இது உண்டே என்று சாதிக்கிறான்!

ஆகவே
இடையில் வந்த மயக்கம் - கடவுள்
இடையில் தான் இட்டுச் செல்கிறது!
குமரன் பதிவில், இடையில் வந்த இடையே, இது உனக்கே நியாயமா?

bala said...

குமரன் அய்யா,

'இடையா அது இடையா அது இல்லாதது போல் இருக்குது'ன்னு நம்ம சிவாஜி, தேவிகா அம்மாவைப் பார்த்து பாடுவதாக கண்ணதாசன் எழுதிய பாட்டு ஞாபகம் வருது..
தேவிகாவை பார்த்து இந்த வரிகளை கண்ணதாசன் எழுதியது கிண்டலா..
அல்லது இது தான் poetic license என்று சொல்வதா?

பாலா

G.Ragavan said...

குமரன்...நீங்கள் இடையோடு சடையனை இணைத்திருக்கிறீர்கள். முன்பு கடவுளும் காதலும் கருத்தினில் ஒன்று என்று முடியும் ஆசிரியப்பா எழுதினேன். அதை இடுவதற்காக தேடித் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. ஆகையால் இனியும் காலந்தாழாது பின்னூட்டம் இடுகிறேன்.

அந்தக் கவித கெடைச்சா கண்டிப்பாப் போடுறேங்க.

ஆனா ஒங்க கவிதைல பொருட் குற்றம் இருக்கே......அவளோட இடைய ஏன் எல்லாரும் பாக்குறாங்க? கடவுள் எல்லாருக்கும் பொது. அந்தப் பொண்ணோட இடை? தெரிஞ்சிக்கிறதுக்குக் கேக்குறேனய்யா!

குமரன் (Kumaran) said...

பூங்குழலி. பெண்ணியப் பார்வையில் பார்க்க ஒன்று நான் பெண்ணாக இருக்க வேண்டும் இல்லை பாரதியாராய் இருக்க வேண்டும். வெறும் குமரன் தானே. அதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. :-)

'அட' கவிதை நன்றாயிருக்கிறதா? நன்றிகள். :-)

'அது தன்னையே இல்லை இல்லை என ஆடிச் சொல்கிறது.'

கடவுள் மட்டும் என்னவாம்? கீதை முதல் பல 'நகைச்சுவை' நூல்கள் மூலம் தான் 'இல்லை இல்லை' என்று தானே சொல்கிறாள். (பெண்ணியம் வந்தாச்சு பாருங்க. சொல்கிறான்னு சொல்லலை. சொல்கிறார்ன்னு சொல்லலை. சொல்கிறாள்ன்னு சொல்லியிருக்கேன். ) :-)

இதோ நீங்கள் கேட்ட கவிதை.

இங்கே
கடவுளை
விட்டுத் தள்ளி விட்டு
இடையை நோக்கினால்
அது தன்னையே
இல்லை இல்லை என
ஆடிச் சொல்கிறது

மூன்றாவது அடியையும் ஆறாவது அடியையும் பாருங்கள். ஒரே வரியில் விட்டு இருமுறை வந்துள்ளதையும் இல்லை இருமுறை வந்துள்ளதையும் கவனிக்கவும். அது தான் இந்தக் கவிதைக்கு ஒரு பெரிய + பாயிண்ட் :-) இதற்கு பெயர் 'வைகைப் புயல் அணி' என்று தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். விளக்கமும் சொல்லியிருக்கிறார் தொல்காப்பியத்தில். 'வேணாம் விட்று' என்பதும் 'இல்லப்பா இல்ல' என்பதும் அந்த அணியின் தற்கால மரூஉ என்கிறார் வைகைப் புயல் வடிவேலு அண்ணே.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்

//அப்போ மூனு வரின்னா?//

மூனு வரிகள்ன்னா அது முருகனருள். :-)

//ஜோதியில்?//

அப்பாவியா கேக்கறீங்களா விவகாரமா கேக்கறீங்களான்னு தெரியலையே? நம்ம அண்ணன் நாகேஷ் மாதிரி பொலம்ப விட்டுட்டீங்களே?!

எல்லாரும் செய்றதை நாமளும் செஞ்சு கூட்டத்தோட கும்மியடிக்கிறத 'ஜோதியில ஐக்கியமாறது'ன்னு சொல்லுவாகளே. அதைத் தான் நான் சொல்லியிருக்கேன். மத்தபடி 'ஜோதி'ங்கற பேர்ல எனக்கு வேற யாரையும் தெரியாதப்பா.

கொத்ஸே பரவாயில்லை போலிருக்கே. குரைக்கிற நாய் கடிக்காதுன்னு விட்றலாம். நீங்க அப்பாவியா கேள்வி கேட்டு குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிருவீங்க போலிருக்கே?

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். காணாததைக் (?!) கண்ட போது தான் இப்படி எல்லாம் உளரத் தோன்றும். அது தான் அந்த வயதில் எனக்குத் தோன்றியிருக்கிறது. அந்த வயதில் கண்டதோடு சரி. :-)

குமரன் (Kumaran) said...

பாலா. ஐயன் வள்ளுவன் முதல் இப்போதைய கவிப்பேரரசு வரை எல்லாரும் பாடியது தான் இது. :-)

'இடையோ இல்லை இருந்தால் முல்லை கொடி போல் மெல்ல அசையும்' கேட்டிருக்கீங்க இல்ல? :-)

குமரன் (Kumaran) said...

இராகவன். உங்க கவிதை கிடைச்சா சொல்லுங்க.

மீண்டும் தவறு செய்கிறீர்களோ? உவமை என்று சொல்லும் போது எந்தப் பொருத்தத்தில் சொல்கிறோமோ அதனை மட்டுமே பார்க்கவேண்டும். வேறு பொருத்தங்களையெல்லாம் பார்க்கக் கூடாது. உண்டு இல்லை என்ற வாதத்தின் படி இடைக்கும் இறைவனுக்கும் பொருத்தம் உண்டு. அவ்வளவு தான் அந்த உவமையின் வேலை. அத்துடன் அது முடிந்துவிட்டது. அதற்கு மேல் அதனை எடுத்துச் செல்லக் கூடாது. :) ஆதாலால் பொருட் குற்றம் இந்தப் பாடலில் இல்லை. சொல்ல வந்த பொருளை நன்றாகச் சொல்லியிருக்கிறது.