மதியம் சாப்பிட்டு விட்டு திண்ணையில் உட்கார்ந்து டொண்டக்க டொண்டக்க என்று கொட்டடித்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி. அந்தப் பக்கமாக அவசரமாக ஓடி வந்த செந்திலை நிறுத்தினார்.
"டேய் நாதஸ். எங்கடா வேகாத வெயில்ல வெந்த வெந்தயமா ஓடுற? இங்க வந்து நான் நலந்தானா வாசிக்கிறதக் கேளுடா...."
படக்கென நின்று மூச்சு விட்டபடியே பேசுகிறார் செந்தில். "அண்ணே, முக்கியமான வேலையாப் போறேன். தடுக்காதீங்கண்ணே!"
"(சத்தமாக) ஆமா.....இவரு புருனே சுல்தானு. தங்கத்தக் கொட்டி வெக்க எடமில்லாம தேனிக்குப் பக்கத்துல இருவது ஏக்கரா நெலம் வாங்கப் போறாரு. நில்றா....கிட்டக்க வா மகனே மொதல்ல."
பக்கத்தில் போகிறார். "வந்துட்ட்ட்டெண்ணே"
"(மெதுவாக) ஆமா..இவரு பெரிய அப்துல் கலாம். வந்ததும் வரவேற்கனுமாக்கும். (சாதாரணமாக) இப்பிடி வேர்க்க விறுவிறுக்க எங்க ஓடுற?"
தபதபவென இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டே..."அது வந்துண்ணே...அருணா....கொடி..."
"என்னதுதுதுதுதுது! அருணாவா? யாரு வெள்ளாவிக்குத் துணியெடுக்க வருவாளே அந்தக் கொடியிடை அருணாவா?" கவுண்டரின் பேச்சிலும் முகத்திலும் மலர்ச்சி தெரிகிறது.
"ஐயோ...ஏந்தா இப்பிடி இருக்கீங்களோ" தலையில் அடித்துக் கொள்கிறார் செந்தில். "அருணாக்கொடிண்ணே அருணாக்கொடி. இடுப்புல கட்டுற கருப்புக் கயிறுண்ணே."
கவுண்டரின் மூஞ்சி மாறுகிறது. நா தழதழத்துக் கொண்டே "ஏண்டா! இடுப்புல கட்டுற கயித்துக்குப் பேரு அருணாக்கொடியாடா? போன வாரம் இப்பிடித்தான் அந்த நோஞ்சா மூஞ்சி முருகேசு வந்து அண்ணாக் கயிறு வாங்கப் போறேன்னு சொன்னான். கட்சியில எதுவும் சேந்துட்டியா கண்ணான்னு கேட்டா ஒரு மாதிரி பாத்துட்டுப் போறான். வேண்டாம்டா...விட்டுருங்கடா!"
மிடுக்காக விரலை உயர்த்திச் சொல்கிறார் செந்தில். "அண்ணே நீங்க ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கனும். அருணாக்கொடியும் அண்ணாக்கயிறும் ஒன்னுதாண்ணே. இந்த அடிப்படை அறிவு கூட இல்லையேண்ணே. எப்படிப் பொழைக்கப் போறீங்களோ?"
"என்னது அடிப்படையா? அதெல்லாம் ஒனக்குத்தானடா பூந்தி வாயா! எனக்கேதுடா அடிப்படையும் சொறிப்படையும்! ஏதோ இந்த மேளம் இருக்கக்கண்டு பொழச்சுக்கிறேன்."
"சரிண்ணே...நீங்க இதையே டொக்கு டொக்குன்னு தட்டுங்க. நான் போய் அருணாக்கொடி வாங்கீயாரேன்."
சற்று ஆத்திரத்தோடு. "டேய் நில்லு. திரும்ப இன்னொருவாட்டி அருணாக்கொடி அண்ணாக்கயிறுன்னு ஒளறுன நாக்க அறுத்து எலிக்குப் போட்டுருவேன். அது அரைஞாண் கொடி அல்லது அரைஞாண் கயிறு. புரிஞ்சதா?"
"அண்ணே. அதை அருணாக்கொடின்னும் சொல்லலாம். அண்ணாக்கயிறுன்னும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னே." சொல்லி விட்டுக் கெக்கே பெக்கே எனச் சிரிக்கிறார் செந்தில். கவுண்டர் கடுகடுப்பாகிறார். செந்தில் தோளில் கை வைத்து உட்கார வைக்கிறார்.
"நாதஸ். இந்த அண்ணாக் கயிறு, தங்கச்சிக் கயிறு, தம்பிக் கயிறு எல்லாத்தையும் விட்டுரு. நான் நல்லாச் சொல்றேன் கேட்டுக்க. அரைனா இடுப்பு. எங்க சொல்லு."
"ஐயோ அண்ணே. அரைன்னா இடுப்பா..ஹெக்ஹெக்ஹெக். அரைன்னா அரையறுதுன்னே. அதுல நீங்க எஸ்பேட்டாச்சே. அரைன்னா அரையறுது. அறையின்னா ரூம்புன்னே."
"அடேஏஏஏஏஏஏய். வாய மூடு. இதுக்கு மேல ஏதாவது பேசுன.......(கோவத்தைக் கட்டுப்படுத்துகிறார்.) இங்க பாருப்பா. சுந்தரரு என்ன சொல்லீருக்காரு?"
"என்ன சொல்லீருக்காரு?"
"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்துன்னு சிவபெருமானைப் பத்திப் பாடியிருக்காரு."
"அண்ணே ஒரு சந்தேகம்னே. சிவபெருமான் புலித்தொலியக் கொண்டு யாரண்ணே அரஞ்சாரு?"
"இப்ப நாந்தான் ஒன்ன அரையப் போறேன். முழுசாக் கேளுடா முள்ளங்கி மூக்கா. பொன்னார் மேனியன்னா....தங்கம் போல பளபளன்னு இருந்தாராம் சிவன். புலித்தோலை அரைக்கிசைத்துன்னா...இடுப்புல புலித்தோலைக் கட்டியிருந்தாராம். இசைத்துன்னா கட்டிக்கிறதுன்னும் சொல்லலாம். அதுல வர்ர அரைக்கு இடுப்புன்னு பொருள். அப்படி இருப்புல கட்டுற கயித்துக்குத்தான் அரைஞாண்னு பேரு. பின்னூட்டங்கள மொதல்ல படி. அதுல ஜெயஸ்ரீ ஞாண்னா கயிறுன்னு அழகா எடுத்துச் சொல்லீருக்காங்க பாரு. இடுப்புக்கான கயிறு அரைஞாண். புரிஞ்சதா?"
தலையை ஆட்டுகிறார் செந்தில். "புரிஞ்சிருச்சின்னே. நீங்க தெய்வம்னே. இந்தத் தமிழு எங்கிருந்துண்ணே வந்துச்சு."
கவுண்டரின் முகம் பெருமிதப்படுகிறது. "டேய். அதெல்லாம் மதுரைல இருந்து நேரா டாக்சி வச்சிக்கிட்டு வர்ரது. நான் என்ன மெயில்ல ஜிரா சொல்றதக் கேட்டா தெரிஞ்சிக்கிறேன். தானா வர்ரது. போறது. ஹெ ஹெ ஹெஹ்ஹஹே."
"சரின்னே நான் கடைக்குப் போயி அரைஞாண் வாங்கியாந்துர்ரெண்ணே." கையசைத்து விடை கொடுக்கிறார் கவுண்டமணி.
சிறிது நேரம் கழித்து செந்திலை ஒரு கூட்டமே துரத்திக் கொண்டு வருகிறது. தலை தெறிக்க ஓடுகிறார் செந்தில். துரத்தியோடும் ஒருவனை நிறுத்திக் கேட்கிறார். "ஏம்ப்பா இப்பிடி அவனத் தொரத்துறீங்க?"
"அந்தக் கொடுமைய....இவன் கடைக்குப் போயி அரைஞாண்னு என்னவோ ஒரு கயிறக் கேட்டிருக்கான். கடையில இருந்த பெருசு...இவன் ஏதோ சூனியம் வெக்க கயிறு கேக்குறான்னு ஊரக் கூட்டீட்டாரு. அப்புறந்தான் தெரிஞ்சது அவன் கேட்டது அருணாக்கொடின்னு. அத ஏன்டா அரைஞான் கயிறுன்னு சொல்றன்னு கேட்டா.....தெனாவெட்டா அது தமிழு. மதுரைல இருந்து டாக்சி வெச்சிக்கிட்டு வந்ததுன்னு சொல்றான். அதான்ன தொரத்துறோம்." சொல்லி விட்டு ஓடுகிறார் துரத்துகிறார். கவுண்டமணி முகத்தை ஒரு பக்கமாக இழுத்தாற்போல வைத்துக் கொள்கிறார்.
அன்புடன்,
கோ.இராகவன்
Thursday, June 05, 2008
Wednesday, June 04, 2008
நீ சாமியா பூதமா ஒன்னும் புரியலை ரெண்டும் புரியலையே
கோலிகுண்டு கண்ணு கோவைப்பழ உதடு
பாலைப்போல பல்லு படிய வச்ச வகிடு
ஆளைத்தின்னும் கன்னம் அலட்டிக்காத கையி
சோளத்தட்டைக் காலு சொக்கவைக்கும் வாயி
தேளு தொட்ட ஒன்னை தேடி வந்தேன் தாயி
ஏய்...நீ எதுக்குப் பொறந்தியோ என் உசிர வாங்குற
ஜே...நீ எதுக்கு வளந்தியோ என் வயச தாங்குற
ஏய்... நா உனக்குப் பொறந்தவ ஏன் பாஞ்சி பதுங்குற
வா... நா உனக்கு வளந்தவ ஏன் காஞ்சி வெதும்பற
(கோலிகுண்டு)
வேப்பிலை கூட இப்ப தித்திக்குது தேனா
பால்பனி பாதி கொடுத்தா
கேக்கலை சோறு தண்ணி கேட்டுக்க நீ மாமா
உன் பேச்சை யாரு எடுத்தா?
அருகம் புல்லுன்னா ஆடாக வேணுமா?
இலவம் பஞ்சுன்னா இடிபாடு ஆகுமா?
நீ சாமியா பூதமா ஒன்னும் புரியலை ரெண்டும் புரியலையே
(ஏய்...கோலிகுண்டு...)
பத்தாய நெல் போல நின்னாயே முன்னால
வம்பு வளக்குது வம்பு வளக்குது அந்த சிரிப்பு
வெள்ளாவி கண்ணால சுட்டாயே தன்னால
கொள்ளையடிக்குது கொள்ளையடிக்குது கள்ள நெருப்பு
கண்ணுக்குள்ள கொட்டிக்கிட்ட சீயக்காய போல
ஐயோ நீ உறுத்துறியே
தண்ணீல சிந்திவிட்ட சீமை எண்ணெய் போல
என்னை நீ ஒதுக்குறியே
ஏடி நீ சகடையா எதுக்கென்னை உருட்டுற
மாசக்கடைசியா ஏன் என்னை விரட்டுற
நீ வசதியா வறுமையா அங்க குறையுது இங்க நிறையுது ஏன்
(ஏய்...கோலிகுண்டு)
திரைப்படம்: எம் மகன்
பாடியவர்கள்: கல்யாணி, கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
இயற்றியவர்: ??
எதுகை மோனைகள் மட்டுமின்றி மிகப் பொருத்தமான உவமைகளுடன் மிகுந்த அணி நயத்துடன் வந்த அண்மைக்காலப் பாடல் (2006) இது.
பாலைப்போல பல்லு படிய வச்ச வகிடு
ஆளைத்தின்னும் கன்னம் அலட்டிக்காத கையி
சோளத்தட்டைக் காலு சொக்கவைக்கும் வாயி
தேளு தொட்ட ஒன்னை தேடி வந்தேன் தாயி
ஏய்...நீ எதுக்குப் பொறந்தியோ என் உசிர வாங்குற
ஜே...நீ எதுக்கு வளந்தியோ என் வயச தாங்குற
ஏய்... நா உனக்குப் பொறந்தவ ஏன் பாஞ்சி பதுங்குற
வா... நா உனக்கு வளந்தவ ஏன் காஞ்சி வெதும்பற
(கோலிகுண்டு)
வேப்பிலை கூட இப்ப தித்திக்குது தேனா
பால்பனி பாதி கொடுத்தா
கேக்கலை சோறு தண்ணி கேட்டுக்க நீ மாமா
உன் பேச்சை யாரு எடுத்தா?
அருகம் புல்லுன்னா ஆடாக வேணுமா?
இலவம் பஞ்சுன்னா இடிபாடு ஆகுமா?
நீ சாமியா பூதமா ஒன்னும் புரியலை ரெண்டும் புரியலையே
(ஏய்...கோலிகுண்டு...)
பத்தாய நெல் போல நின்னாயே முன்னால
வம்பு வளக்குது வம்பு வளக்குது அந்த சிரிப்பு
வெள்ளாவி கண்ணால சுட்டாயே தன்னால
கொள்ளையடிக்குது கொள்ளையடிக்குது கள்ள நெருப்பு
கண்ணுக்குள்ள கொட்டிக்கிட்ட சீயக்காய போல
ஐயோ நீ உறுத்துறியே
தண்ணீல சிந்திவிட்ட சீமை எண்ணெய் போல
என்னை நீ ஒதுக்குறியே
ஏடி நீ சகடையா எதுக்கென்னை உருட்டுற
மாசக்கடைசியா ஏன் என்னை விரட்டுற
நீ வசதியா வறுமையா அங்க குறையுது இங்க நிறையுது ஏன்
(ஏய்...கோலிகுண்டு)
திரைப்படம்: எம் மகன்
பாடியவர்கள்: கல்யாணி, கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
இயற்றியவர்: ??
எதுகை மோனைகள் மட்டுமின்றி மிகப் பொருத்தமான உவமைகளுடன் மிகுந்த அணி நயத்துடன் வந்த அண்மைக்காலப் பாடல் (2006) இது.
சுவாரசியம்
அடுத்தவர்களின் செயல்பாடுகளை (சங்கதி) அறிந்து கொள்வது என்பதில் ஆண் என்ன ? பெண் என்ன ? அவை எல்லோருக்குமே சுவாரசியாமன ஒன்று தான். நம் வலைப்பதிவுகளில் 'சாம்பு' என்ன எழுதி இருக்கிறார், 'கழுகார்' என்ன எழுதி இருக்கிறார் ? எவர், எவர் பற்றிய தகவல்கள் கசிகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் இருக்கும்.
உங்க வாழ்க்கையில் மிக சுவாரசியமாக நடந்த ஒன்றை சொல்கிறீர்களா ? என்று கேட்போம். 'கடிதம் கொடுத்து அசடுவழிந்தது, விடுப்பு எடுத்து திரைப்படம் பார்க்கச் சென்று தற்காலிகமாக பாட்டி தாத்தாவை சாகடித்தது' என்பது போன்ற இளமையின் குறும்புகள் பற்றிய நினைவுகள் சிலருக்கு உடனே நினைவு வந்துவிடும்.
இது போல் கேட்பதற்கு, சொல்வதற்கு மிக விரும்பிய செய்திகளில் சுவாரசியத்தை நுழைத்துப் பேசுவோம். சிலருக்கு திரை நடிகர், நடிகைகளின் கிசு கிசுக்களைப் படிப்பதில் என்ன ஒரு சுவாரிசியம் ! என்ன ஒரு சுவாரிசியமான செய்தியாக அவைகள் இருக்கின்றன!.
மிகவும் வியப்பான செய்திகளைக் கேட்கும் போது தெரிந்தவர்களுக்கெல்லாம் இதைச் சொன்னால் என்ன ? என 'சுவாரிசியம்' உணர்வுகளில் சேர்ந்து கொள்கிறது, அதனடிப்படையில் வதந்திகள் விரைவாக பரவுகின்றன. சுவாரசியம் என்பது ஒரு மகிழ்வுடன் தொடர்புடைய ஒரு உணர்வுச் சொல்.
ஆங்கிலத்தில் சில சொற்களுக்கு பல பொருள்கள் உள்ளது போல... தமிழிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் இடத்துக்கு ஏற்றவாறு உண்டு. அவற்றை தனியாக சொல்லிப் பார்த்தால் ஒரு பொருளாகவும், சொற்றொடர்களில் (வாக்கியம்) அமைத்துப் பயன்படுத்தும் போது மெல்லிய வேறுபாடு அல்லது முற்றிலும் மாறுபட்ட பொருளைத் தரும் சொற்கள் உள்ளன. இனிமை, சுவை என்பவை அது போன்ற சொற்கள் தான். 'கரும்பின் சுவை இனிமை என்னும் போது இனிமை என்பது இனிப்பு என்னும் சுவை தொடர்பில் சொல்லப்படுகிறது. 'இளையராஜாவின் இசை கேட்பதற்கு இனிமை' என்று சொல்லும் போது செவிக்கு / மனத்துக்கு இதமான ஒரு உணர்வு என்று சொல்வதற்கு 'இனிமை'பயன்படுகிறது.
இது போன்றே 'சுவையான சமையல்' என்னும் போது உணவின் சுவையைக் குறிக்க 'சுவை' யை பயன்படுத்துகிறோம். அதே சுவையை செய்திகளில் சேர்த்துச் சொல்லும் போது ஒரு 'சுவையான தகவல் இருக்கிறது சொல்லட்டுமா ? 'அல்லது 'எதாவது ஒரு சுவையான நிகழ்வை (சம்பவம்) சொல்லமுடியுமா ?' என்று கேட்கிறோம்.
தமிழ் சுவையின் சுவையை மேலும் கூட்ட எங்கெல்லாம் சுவாரசியம் பயன்படுத்துகிறோமோ, அங்கெல்லாம் 'சுவை'யைக் கூட்டிக் கொள்வதால் சுவாரசியத்தின் பயன்பாட்டை குறைத்து தமிழை மேலும் 'சுவை'படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினாலும் சொற்றொடரில் பொருள் வேறுபடாது.
பின்குறிப்பு : எழுத்துப் பிழை எதாவது இருந்தால், சுவாரசியத்துக்கு மாற்றான வேறு கலைச் சொற்கள் இருந்தால் தெரிவியுங்கள். சுவையான உங்கள் பின்னூட்டங்களை சுவைக்க காத்திருக்கிறேன்.
உங்க வாழ்க்கையில் மிக சுவாரசியமாக நடந்த ஒன்றை சொல்கிறீர்களா ? என்று கேட்போம். 'கடிதம் கொடுத்து அசடுவழிந்தது, விடுப்பு எடுத்து திரைப்படம் பார்க்கச் சென்று தற்காலிகமாக பாட்டி தாத்தாவை சாகடித்தது' என்பது போன்ற இளமையின் குறும்புகள் பற்றிய நினைவுகள் சிலருக்கு உடனே நினைவு வந்துவிடும்.
இது போல் கேட்பதற்கு, சொல்வதற்கு மிக விரும்பிய செய்திகளில் சுவாரசியத்தை நுழைத்துப் பேசுவோம். சிலருக்கு திரை நடிகர், நடிகைகளின் கிசு கிசுக்களைப் படிப்பதில் என்ன ஒரு சுவாரிசியம் ! என்ன ஒரு சுவாரிசியமான செய்தியாக அவைகள் இருக்கின்றன!.
மிகவும் வியப்பான செய்திகளைக் கேட்கும் போது தெரிந்தவர்களுக்கெல்லாம் இதைச் சொன்னால் என்ன ? என 'சுவாரிசியம்' உணர்வுகளில் சேர்ந்து கொள்கிறது, அதனடிப்படையில் வதந்திகள் விரைவாக பரவுகின்றன. சுவாரசியம் என்பது ஒரு மகிழ்வுடன் தொடர்புடைய ஒரு உணர்வுச் சொல்.
ஆங்கிலத்தில் சில சொற்களுக்கு பல பொருள்கள் உள்ளது போல... தமிழிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் இடத்துக்கு ஏற்றவாறு உண்டு. அவற்றை தனியாக சொல்லிப் பார்த்தால் ஒரு பொருளாகவும், சொற்றொடர்களில் (வாக்கியம்) அமைத்துப் பயன்படுத்தும் போது மெல்லிய வேறுபாடு அல்லது முற்றிலும் மாறுபட்ட பொருளைத் தரும் சொற்கள் உள்ளன. இனிமை, சுவை என்பவை அது போன்ற சொற்கள் தான். 'கரும்பின் சுவை இனிமை என்னும் போது இனிமை என்பது இனிப்பு என்னும் சுவை தொடர்பில் சொல்லப்படுகிறது. 'இளையராஜாவின் இசை கேட்பதற்கு இனிமை' என்று சொல்லும் போது செவிக்கு / மனத்துக்கு இதமான ஒரு உணர்வு என்று சொல்வதற்கு 'இனிமை'பயன்படுகிறது.
இது போன்றே 'சுவையான சமையல்' என்னும் போது உணவின் சுவையைக் குறிக்க 'சுவை' யை பயன்படுத்துகிறோம். அதே சுவையை செய்திகளில் சேர்த்துச் சொல்லும் போது ஒரு 'சுவையான தகவல் இருக்கிறது சொல்லட்டுமா ? 'அல்லது 'எதாவது ஒரு சுவையான நிகழ்வை (சம்பவம்) சொல்லமுடியுமா ?' என்று கேட்கிறோம்.
தமிழ் சுவையின் சுவையை மேலும் கூட்ட எங்கெல்லாம் சுவாரசியம் பயன்படுத்துகிறோமோ, அங்கெல்லாம் 'சுவை'யைக் கூட்டிக் கொள்வதால் சுவாரசியத்தின் பயன்பாட்டை குறைத்து தமிழை மேலும் 'சுவை'படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினாலும் சொற்றொடரில் பொருள் வேறுபடாது.
பின்குறிப்பு : எழுத்துப் பிழை எதாவது இருந்தால், சுவாரசியத்துக்கு மாற்றான வேறு கலைச் சொற்கள் இருந்தால் தெரிவியுங்கள். சுவையான உங்கள் பின்னூட்டங்களை சுவைக்க காத்திருக்கிறேன்.
Tuesday, June 03, 2008
சொல் ஒரு சொல் - ஏன்?
சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
இது தான் எஸ்.கே. 'சுடர்' தொடர்ப்பதிவிற்காக என்னிடம் கேட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்லி விட்டிருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியில் இருக்கும் கருத்தை ஒட்டியும் வெட்டியும் கடந்த சில நாட்களாக வலைப்பதிவுகளில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கும் என் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். அதனால் இதனைத் தனிப்பதிவாக இடுகின்றேன். 'சொல் ஒரு சொல்' பதிவில் என்னுடன் இராகவனும், கோவி.கண்ணன் அண்ணாவும் இணைந்து இடுகைகள் இட்டுவருகின்றனர். அவர்களுக்கும் நான் இந்தப் பதிவில் சொல்லப்போகும் கருத்துகளில் பெரும்பான்மையானவற்றில் ஒப்புதல் இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கெல்லாம் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதோ அவற்றை அவர்கள் தயங்காமல் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் தங்கள் கருத்துகளைத் தயங்காமல் சொல்லுங்கள்.
***
முதலில் மேலே கேள்வியில் இருக்கும் கருத்தினை ஒட்டியும் வெட்டியும் வரும் கருத்துகளைச் சுருக்கமாகப் பட்டியல் இடலாம்.
ஒட்டி வரும் கருத்துகள்:
1. ஆங்கிலம் எந்த வித தயக்கங்களும் இன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டதால் ஆங்கிலம் வளர்ந்து வருகிறது. தமிழில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பதின் மூலம் அப்படிப் பரிந்துரைப்பவர்கள் தமிழை ஒரு தேக்க நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அது தமிழுக்கு ஒரு பின்னடைவு. அப்படி தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்கும் போது கடினமான சொற்களைப் பயன்படுத்தி சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத படி எழுதுகிறார்கள். அப்படி எல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் தமிழில் எழுதுவதற்கே சாதாரண மக்களுக்கு ஆர்வம் போய்விடும். அப்படி நடந்தால் அது தமிழுக்கு வளர்ச்சியைத் தருமா?
2. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கின்றது. தமிழ் மட்டும் விதிவிலக்கு இல்லை. சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தமிழால் இருக்க முடியாது.
3. ஸ்டாலின், இஸ்லாம், சரஸ்வதி, சுரேஷ், சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிச் சொற்களை இசுடாலின், இசுலாம், சரசுவதி, சுரேசு, சமசுகிருதம் என்று எழுதுவதைப் பார்க்கும் போது கண் கூசுகிறது. இப்படி எழுதுவது கொடுந்தமிழ்.
4. மொழி என்பது ஒருவர் எண்ணத்தை மற்றவருக்குச் சொல்வதற்கு ஏற்பட்ட வழி. அவ்வளவு தான். நான் சொல்வதை யாரிடம் நான் சொல்கிறேனோ அவர்களுக்குப் புரிந்தால் போதும். அது எந்த மொழிச் சொற்களைக் கொண்டு சொல்லியிருந்தாலும் சரி. காலம் மாறுகையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் நடந்தே தீரும்; இவற்றைத் தடுக்க நினைப்பது பிற்போக்குத்தனம்.
கேள்வியில் இருக்கும் கருத்துக்கு மாற்றாக வரும் கருத்துகள்:
1. வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களை வழக்கிழக்கச் செய்கின்றன. ஒரு மொழியை அழிக்க அதன் சொற்களை வழக்கிழக்கச் செய்வதே எளிய வழி.
2. வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவதால் வேற்று மொழியினர் / ஆதிக்க வகுப்பினர் தமிழ் மக்களை / அடக்கப்பட்ட வகுப்பினரை மேன்மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். வேற்று மொழிச் சொற்களைப் புழங்கி அவர்கள் ஏதோ மேதாவிகளைப் போல் தோற்றமளித்து வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தெரியாத அப்பாவிகளை எளிதாக மன அளவில் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள்.
***
எனக்கு இரண்டு தாய்மொழிகள். இரண்டாவது தாய்மொழி தமிழ். சௌராஷ்ட்ரனாய் இருப்பது இந்தப் பிரச்சனையில் எனக்கு ஒரு ஆழ்ந்த பார்வையைக் கொடுத்திருக்கிறது. இரு தலைமுறைக்கு முன்னர் சௌராஷ்ட்ரர்கள் பல நல்ல சௌராஷ்ட்ரச் சொற்களை எளிதாகப் பேசிக் கொண்டிருந்தனர். என் பெற்றோர்களின் தலைமுறை சௌராஷ்ட்ரத்தில் பேசும் போது நிறைய தமிழ்ச்சொற்களைப் புழங்கத் தொடங்கியது. என் தலைமுறையினர் தமிழ்ச்சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் கலந்து தான் சௌராஷ்ட்ரம் பேசுகின்றனர் (பேசுகிறோம்). அவர்கள் பெற்றோர்கள் பேசிய சொற்களை என் பெற்றோர்களின் தலைமுறையினர் புரிந்து கொண்டனர் - ஆனால் அவற்றை எங்களிடம் தரவில்லை. அதனால் எங்களிடம் சௌராஷ்ட்ரம் பேச தேவையான எல்லா சொற்களும் இல்லை; அதனால் எங்கள் எண்ணங்களை நன்கு வெளிப்படுத்த வேற்று மொழிச் சொற்களைப் புழங்க வேண்டிய கட்டாயம்.
இன்னொன்றையும் சொல்கிறேன். 19ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் வாழ்ந்த நடனகோபால நாயகி சுவாமிகள் இயற்றிய சௌராஷ்ட்ர மொழிப் பாடல்கள் எதுவுமே என் தலைமுறையினருக்குப் புரியாது. ஆங்காங்கே ஒரு சில சொற்கள் புரியும். அவ்வளவு தான். அவ்வளவு ஏன்? என் தந்தையாரிடமும் என் மாமனாரிடமும் ஒரு முறை டி.எம்.எஸ். பாடிய இந்தச் சௌராஷ்ட்ர பாடல்களைப் போட்டுக் காண்பித்தேன். அவர்களுக்கும் அதே நிலை தான். 'நம் மொழி என்று தெரிகிறது. ஆனால் எல்லா சொற்களும் புரியவில்லை' என்கிறார்கள். பாடலை எழுத்து வடிவில் பார்த்தால் புரியாமல் போகலாம். பாட்டாகப் பாடும் போது கூடப் புரியவில்லை என்றால்? அதுவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எழுதியவற்றை. அப்படி என்றால் எத்தனை இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்?
என் நல்வினைப்பயன் இந்தப் பாடல்களில் இருக்கும் பெரும்பான்மையான சொற்கள் எனக்குப் புரிகின்றன. செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே. அது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். மொழி ஆர்வத்தால் சௌராஷ்ட்ர மொழியின் சொற்களும் புரிகின்றன. சிவமுருகனைத் தவிர்த்து இந்த பாடல்களை முழுதாகப் புரிந்து கொள்ளும் எங்கள் தலைமுறையினரை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்தக் காரணத்தால் தான் சிவமுருகனும் நானும் நாயகி சுவாமிகளின் பாடல்களுக்கு விளக்கம் எழுதிக் கொண்டிருக்கிறோம் - அப்போதாவது சௌராஷ்ட்ர இளைஞர்களுக்கு தங்கள் மொழியில் உள்ள பாடல்கள் புரியுமே என்று.
கால்கரி சிவா அண்ணாவுடனும், அவருடைய அண்ணனுடனும் பேசும் போது அவர்கள் என் சொற்தொகையில் (Vocabulary) இல்லாத சில சொற்களைப் புழங்கக் கண்டேன். அவர்கள் என்னை விட மூத்தவர்கள்; எனக்கும் முன்னாலேயே மதுரையை விட்டுக் கிளம்பியவர்கள் என்பதை அதன் மூலமே சொல்லிவிடலாம். என்னுடைய மொழி ஆர்வத்தையும் மீறி அவர்கள் புழங்கிய அந்த சௌராஷ்ட்ர சொற்கள் ஏன் என் சொற்தொகையில் இல்லை? இப்படியே இருந்தால் யாருக்கு நட்டம்? எனக்கும் சௌராஷ்ட்ரத்திற்கும் தானே.
இந்த நிலைக்கு என் முன்னோர்களை மட்டுமே குறை கூற விரும்பவில்லை. இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு பல சமூக, வரலாற்றுக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பேசுவது இந்தப் பதிவின் நோக்கத்திற்குத் தேவையில்லாதது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
***
என் பின்புலத்தைச் சொன்னது என் கருத்துகள் எந்த இடத்திலிருந்து வருகின்றன என்று காட்டுவதற்காகத் தான். அது மட்டுமின்றி கற்பது இரண்டு வகை - தானே பட்டு கற்றுக் கொள்வது; மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்வது. தமிழ் இங்கே சௌராஷ்ட்ரத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். (சௌராஷ்ட்ரத்தை எந்த வகையிலும் நான் தாழ்த்தி எழுதவில்லை என்றே நினைக்கிறேன். அப்படி யாருக்காவது தோன்றினால் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்).
மேலே ஒட்டியும் வெட்டியும் வருகின்ற கருத்துகளின் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை அறிவேன். நான் சொல்வதும் என் புரிதல், நம்பிக்கை, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையிலேயே இருப்பதால் ஏதோ ஒரு அரசியல் சார்பாகத் தோன்றலாம். நான் சொல்வதே உண்மை. மற்ற கருத்துகள் எல்லாம் பொய் என்று எண்ணவில்லை.
***
இப்போது கருத்துகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பேசலாம். முதலில் எஸ்.கே.யின் கேள்வியை ஒட்டி வரும் கருத்துகளைப் பார்ப்போம்.
1. ஆங்கிலம் எந்த வித தயக்கங்களும் இன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டதால் ஆங்கிலம் வளர்ந்து வருகிறது. தமிழில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பதின் மூலம் அப்படிப் பரிந்துரைப்பவர்கள் தமிழை ஒரு தேக்க நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அது தமிழுக்கு ஒரு பின்னடைவு. அப்படி தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்கும் போது கடினமான சொற்களைப் பயன்படுத்தி சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத படி எழுதுகிறார்கள். அப்படி எல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் தமிழில் எழுதுவதற்கே சாதாரண மக்களுக்கு ஆர்வம் போய்விடும். அப்படி நடந்தால் அது தமிழுக்கு வளர்ச்சியைத் தருமா?
ஆங்கிலத்தில் வேற்று மொழிச் சொற்களைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். உண்மை. சொற்களின் குறை இருக்கும் போது வேற்று மொழிச் சொற்களை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை. அதனைத் தான் ஆங்கிலம் செய்கிறது. ஆனால் அது தான் ஆங்கிலத்தின் வளர்ச்சிக்குக் காரணம் என்பது சரியில்லை. ஆங்கிலம் வளர்வதற்கு வேறு காரணிகள் இருக்கின்றன. முன்னாள் உலக வல்லரசும் இன்னாள் உலக வல்லரசும் ஆங்கிலம் பேசியதாலும் பேசுவதாலும் மற்றவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. அந்த வலுவில் தான் ஆங்கிலம் வளர்கிறதே அன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வதால் இல்லை. மேலே சொன்னது போல் வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வது அந்த மொழியில் அந்தச் சொற்கள் இல்லாததால்.
ஆங்கிலத்தில் ஏற்கனவே சொற்கள் இருந்து அந்தச் சொற்களுக்குப் பதிலாக வேற்று மொழிச் சொற்களைப் புழங்கினால் அது தவறு. அது மொழி அழிவதற்குத் தான் வழி வகுக்கும். ஆங்கிலத்திற்கு இருக்கும் மற்ற காரணிகள் இல்லாத மொழிகளுக்கு இது இன்னும் அதிகமான உண்மை என்பதை உணரவேண்டும். சௌராஷ்ட்ரம் ஒரு எடுத்துக்காட்டு.
இன்று நாம் தமிழில் மற்ற மொழிச் சொற்களைக் கலந்து பேசுகிறோம். அதனால் மிக எளிதான பாரதியார் பாடல்களுக்குக் கூட விளக்கம் சொல்ல வேண்டிய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். இது நல்லதில்லை.
பல நூற்றாண்டு கால இலக்கியங்கள் இருக்கும் தமிழ் போன்ற செம்மொழிகளில் மனிதனின் கருத்துகளில் பெரும்பான்மையானவற்றைச் சொல்வதற்குச் சொற்கள் இருக்கின்றன. அவற்றை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவது அந்த மொழி அழியாமல் காப்பாற்றும். அதனை விட்டு வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவது தான் மொழி வளர்வதற்கு வழி என்ற தவறான எண்ணத்தால் வேற்று மொழிச் சொற்களைப் புழங்கத் தொடங்கினால் தமிழை மறந்துவிட்டு வேற்று மொழியையே பேசும் காலம் வர நெடுங்காலம் செல்லாது.
எல்லா கருத்துகளையும் கூற தமிழில் சொற்கள் இருக்கின்றன என்று சொல்ல இயலாது. புதிதாக வந்த அறிவியல் சொற்களுக்கு நேரான சொற்கள் தமிழில் இல்லாமல் இருக்கலாம். அப்போது அவற்றிற்கு ஏற்ற கலைச்சொற்களைத் தமிழில் பரிந்துரைத்துப் புழங்கச் செய்வது தமிழை வளர்க்குமா? வேற்று மொழிச் சொற்களை அந்த நேரத்தில் புழங்குவது தமிழை வளர்க்குமா?
அப்படி பரிந்துரைக்கப்படும் சொற்களில் எது கடினம் எது எளிது என்பது அவரவர் மொழி அறிவைப் பொறுத்தது. கொஞ்சம் இலக்கிய பழக்கம் இருப்பவர்களுக்கு எளிதாகத் தோன்றும் சொற்கள் இலக்கிய பழக்கம் இல்லாதவர்களுக்கு கடினமாகத் தோன்றலாம். ஆனால் அதே சொற்கள் பழக்கத்தினால் எளிதாகத் தோன்றத் தொடங்கும். சில காலத்திற்கு முன்னால் பரிந்துரைக்கப்பட்ட பேருந்து, சட்டப்பேரவை, பேரவைத் தலைவர் போன்ற சொற்கள் இப்போது கடினமாக இருக்கின்றனவா? பெரும்பான்மையானவர்களுக்குப் புரிகின்றதல்லவா? அதே போல் இப்போது கடினமாகத் தோன்றும் பல பழைய சொற்களும் புதிய சொற்களும் மீண்டும் புழக்கத்தில் வரும் போது அவை எளிதாகத் தோன்றும்.
பரிந்துரைக்கப்பட்ட எல்லாச் சொற்களும் புழக்கத்தில் வருவதில்லை. அதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. யார் அந்தச் சொற்களைப் புழங்குகிறார்கள், எந்த பொருளில் புழங்குகிறார்கள், அந்த சொற்களின் வீச்சு என்ன என்று பல காரணிகள் இருக்கின்றன. அதனால் பழைய சொற்களை எடுத்துக் கொடுப்பதும் புதிய சொற்களை உருவாக்குதலும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். 100 சொற்கள் பரிந்துரைக்கப் பட்டால் அதில் 50 சொற்கள் புழக்கத்தில் வந்தாலே அது பெரும் நன்மையை விளைக்கும். அதுவே மொழி அழியாமல் இருப்பதற்கும் வளர்வதற்கும் வழி.
பின்னூட்டம், உள்குத்து, வெளிக்குத்து போன்ற சொற்களை பதிவுலகம் தவிர்த்து மற்ற இடங்களில் பேசினால் அவை மற்றவர்களுக்கு கடினமான சொற்களாகத் தோன்றும். அப்படி துறை சார்ந்த சொற்களும் இருக்கின்றன. அந்த பரிபாஷையை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது அந்தத் துறையின் வீச்சைப் பொறுத்து அமையும்.
2. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கின்றது. தமிழ் மட்டும் விதிவிலக்கு இல்லை. சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தமிழால் இருக்க முடியாது.
இரு வேறு மொழி பேசுபவர்கள் பழகும் போதும் ஒருவர் மொழியை மற்றவர் கற்கும் போது மொழிகளுக்குள் கொடுக்கல் வாங்கல் நடப்பது இயற்கை. அப்படி பார்க்கும் போது பண்பாட்டு அளவிலும் பல வித வரலாற்று, அரசியல் காரணிகளாலும் தமிழும் வடமொழியான சமஸ்கிருதமும் நெருங்கிப் பழகியது. வேண்டுமென்றோ இல்லை இயற்கையாகவோ வடமொழியில் தமிழ்ச்சொற்களும் தமிழில் வடமொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன. அப்படி வேறு இடங்களில் இருந்து வரும் சொற்களைத் தமிழ்ப்படுத்தி தமிழ்ச்சொற்களுக்கு இணையாகப் புழங்குவதற்கு இலக்கணத்திலேயே திசைச்சொற்கள் என்று ஒரு பிரிவை வைத்து வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள் தமிழ் ஆன்றோர்கள். இயற்கையாக இப்படி ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்வது அந்த இன்னொரு மொழியின் தேவைக்கேற்ப அமையும். அவ்வாறின்றி வேண்டுமென்றே ஒரு மொழியின் சொற்களைப் புழங்காமல் வேற்று மொழிச் சொற்களையே புழங்குவது முதல் மொழியின் சொற்கள் அழிவதற்கே வழி வகுக்கும்.
சங்க இலக்கியங்களைத் தவிர்த்து மற்ற தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஓரளவு பழக்கம் இருக்கிறது. அப்படி இலக்கியங்கள் படிக்கும் போது இப்போது தமிழில் புழங்கும் பல வடமொழிச்சொற்களுக்கு (திசைச் சொற்களுக்கு) இணையான தமிழ்ச்சொற்கள் இருப்பதைக் காண்கிறேன். அவற்றை மீண்டும் புழக்கத்தில் கொண்டுவந்தால் அந்த சொற்கள் அழியாமல் இருக்கும். அந்தச் சொற்களை புழக்கத்தில் கொண்டு வருதல் திசைச்சொற்களை (வேற்று மொழிச் சொற்களை) முழுவதுமாக தமிழ் அகராதிகளில் இருந்து எடுப்பதற்காக இல்லை. பழந்தமிழ்ச் சொற்கள் தமிழ் அகராதிகளில் இல்லாமல் போகும் நிலையைத் தவிர்க்க. அந்த பழந்தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பதாலும் மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவதாலும் திசைச் சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களும் - இரண்டுமே புழக்கத்தில் இருக்கும். எது எளிதாக இருக்கிறதோ அது மக்கள் நடுவில் புழக்கத்தில் நிற்கும்.
வடமொழியின் தாக்கம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் பல மொழிகளிலும் இருக்கிறது என்பது உண்மை. அதே நேரத்தில் தமிழின் தாக்கம் வடமொழி முதற்கொண்டு பல மொழிகளில் இருக்கிறது என்பதும் உண்மை. வடமொழியின் துணையின்றி தமிழால் இருக்க முடியாது என்று எண்ணுபவர்கள் தமிழிலிருந்து தான் வடமொழிச் சொற்கள் பிறந்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டும் போது பதறுதல் கூடாது.
நான் அறிந்த வரையில் தமிழால் தனித்து இயங்க முடியும். எந்த விதமான கருத்துகளையும் எடுத்துக் கூறும் வகையில் தமிழில் அடிச்சொற்கள் இருக்கின்றன. அந்த அடிச்சொற்களை வைத்து புது அறிவியல் கருத்துகளைக் கூறும் சொற்களையும் தமிழால் சொல்ல முடியும். அப்படியே சில சொற்கள் தமிழில் ஏற்படுத்த முடியாவிட்டால் அப்போது மற்ற மொழிச் சொற்களை எடுத்தாள தமிழில் திசைச்சொல் என்ற வகை இருக்கிறது. ஆனால் அப்படி செய்வது தமிழில் அந்தக் கருத்தைச் சொல்ல முடியாது என்பது நன்கு நிறுவப்பட வேண்டும். அதற்கு முன்னரே வேற்று மொழிச் சொற்களைப் புழங்கிவிட்டு தமிழில் அதற்குச் சொல் இல்லை; தமிழில் அந்தக் கருத்துகளைச் சொல்ல இயலாது; தமிழால் தனித்து இயங்க இயலாது என்று சொல்வது சரியன்று.
3. ஸ்டாலின், இஸ்லாம், சரஸ்வதி, சுரேஷ், சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிச் சொற்களை இசுடாலின், இசுலாம், சரசுவதி, சுரேசு, சமசுகிருதம் என்று எழுதுவதைப் பார்க்கும் போது கண் கூசுகிறது. இப்படி எழுதுவது கொடுந்தமிழ்.
ம்ம்ம். முதன்முதலில் இசுடாலின், இசுலாம், சரசுவதி போன்றவற்றைப் படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கும். கன்னன், கருணன், துருபதை, இலக்குவன், சானகி, தயரதன், கோசலை, சுமித்திரை, சனகன், விசுவாமித்திரன், வசிட்டன், விட்டுசித்தன், வீடணன், கும்பகருணன், அயோத்தி, மிதிலை, யுதிட்டிரன், வீடுமன் போன்ற சொற்களைப் படிக்கும் போது சிரிப்பாக இருக்கிறதா? இயல்பாக இருப்பது போல் தோன்றுகிறதா? இயல்பாக இருப்பது போல் தான் தோன்றுகிறது. ஏன்? ஏனெனில் இவை இலக்கியத்தில் படித்திருக்கிறோம். படித்துப் பழக்கம் இருக்கிறது. இப்படி வேற்று மொழிப் பெயர்ச் சொற்களைத் தமிழ்படுத்திச் சொல்வது தமிழ் மரபு. அப்படித் தான் இலக்கியங்களில் செய்திருக்கிறார்கள். அதன் படி இலக்கணமும் அமைத்திருக்கிறார்கள். இசுடாலின், இராசீவ் போன்ற சொற்களை முதலில் பார்க்கும் போது அவை சிரிப்பாக இருக்கலாம். ஆனால் பழக தொடங்கிய பின் அவை இயற்கையாக இருக்கும். அதனை விட்டுவிட்டு அப்படி எழுதுவது கொடுந்தமிழ் என்றால் இலக்கியங்கள் எல்லாவற்றையுமே கொடுந்தமிழ் என்றே சொல்ல வேண்டும். அவற்றில் சமய இலக்கியங்களும் அடங்கும்.
4. மொழி என்பது ஒருவர் எண்ணத்தை மற்றவருக்குச் சொல்வதற்கு ஏற்பட்ட வழி. அவ்வளவு தான். நான் சொல்வதை யாரிடம் நான் சொல்கிறேனோ அவர்களுக்குப் புரிந்தால் போதும். அது எந்த மொழிச் சொற்களைக் கொண்டு சொல்லியிருந்தாலும் சரி. காலம் மாறுகையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் நடந்தே தீரும்; இவற்றைத் தடுக்க நினைப்பது பிற்போக்குத்தனம்.
கால மாற்றத்தால் பல மாறுதல்கள் வரும் என்பது உண்மை. கால மாறுதலால் தான் சௌராஷ்ட்ரமும் இந்த நிலையில் இருக்கிறது. தருமி ஐயா சொன்னது போல் மூன்று தலைமுறைக்கு முன் தமிழே சரியாகத் தெரியாத பெண்கள் மதுரையில் இருந்தார்கள். காலத்தின் கட்டாயத்தால் அடுத்த தலைமுறை தங்களைத் தனிப்படுத்திக் கொள்வதைக் குறைத்தது. தமிழருடன் கலந்து பழகத் தொடங்கியது. அடுத்தத் தலைமுறை தமிழைக் கலந்து பேசத் தொடங்கியது. அடுத்தத் தலைமுறை தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுகிறது. இப்போது மிஞ்சியது முன்னேறிய சௌராஷ்ட்ரமா? சௌராஷ்ட்ரர்கள் மூன்று தலைமுறைக்கு முன்னர் இருந்ததை விட இப்போது முன்னேறியிருக்கலாம். ஆனால் அவர்கள் இழந்தது அவர்களின் மொழியில் இருந்த சொற்கள்.
இந்தப் போராட்டம் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. கால மாற்றத்தால் நடக்கும் செயல்கள் எல்லாமே நல்ல செயல்கள் இல்லை. சில நேரங்களில் ஈடு செய்ய முடியாத இழப்புகளும் நேர்கின்றன. இன்று நான் சௌராஷ்ட்ரன் என்று சொல்லிக் கொள்கிறேன். இன்னும் இரண்டு தலைமுறை இதே போல் சென்றால் இந்திய வம்சாவளியினர் என்று மேலை நாடுகளில் இப்போது சொல்கிறோமே அதே போல் சௌராஷ்ட்ர வம்சாவளியினர் மட்டுமே மிஞ்சுவார்கள்.
தமிழனின் நல்வினைப்பயன் (அதிருஷ்டம்) நிறைய தமிழ் இலக்கியங்கள் இருக்கிறது. நீண்ட நெடிய இலக்கிய பாரம்பரியம் இருக்கிறது. அவற்றின் மூலம் பழைய தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்து வரலாம். அதனால் முன்னேற்றம் தடைபடாது. வேற்று மொழியினருடன் அவர்கள் மொழியில் பேசுவோம். நம்மவர்களுடன் நம் மொழியில் பேசுவோம். அப்படி நம் மொழியில் பேசும் போது நம் சொற்களைக் கொண்டு பேசுவோம். அதனால் நாம் முன்னேற்றமும் அடையலாம்; நம் மொழியும் தொலையாது.
(இவ்வளவு பேசுகிற நீ சௌராஷ்ட்ரத்தில் அது நடக்க ஏதாவது செய்யலாமே. தமிழைத் தமிழர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - என்று யாராவது சொன்னால் - அவர்களுக்கு என் பதில் இது - சௌராஷ்ட்ரத்திலும் இந்த விவாதம் நடக்கிறது. சௌராஷ்ட்ரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது வேற்று மொழியினர் இருக்கும் போதும் சௌராஷ்ட்ரத்தில் பேசிக் கொள்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டு இது நடப்பதைக் காட்டுகிறது. வேறு தளங்களில் சௌராஷ்ட்ரத்திற்காகவும் இந்த முயற்சிகளில் பலர் ஈடுபட்டுள்ளோம். மதுரையில் பிறந்து வளர்ந்த நாங்கள் தமிழாலும் தமிழராலும் அடைந்த நன்மைகள் ஏராளம். அந்த உணர்வில் இயற்கையாகத் தமிழ், தமிழர் என்றால் எங்களுக்கும் பதறுகிறது. மேலே சொன்னது போல் தமிழ் எனது இரண்டாவது தாய்மொழி. வேறு யார் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ எனக்கு தமிழும் தாய்மொழி தான்; நான் தமிழனும் தான். ஆக சொல் ஒரு சொல் பதிவு ஒரு தமிழனால் தான் தொடங்கப்பட்டிருக்கிறது).
இப்போது எஸ்.கே.யின் கேள்வியில் இருக்கும் கருத்திற்கு மாற்றுக் கருத்துகளைப் பார்ப்போம்.
1. வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களை வழக்கிழக்கச் செய்கின்றன. ஒரு மொழியை அழிக்க அதன் சொற்களை வழக்கிழக்கச் செய்வதே எளிய வழி.
மேலே உள்ள கருத்துகளைப் பற்றி பேசும் போதே இந்தக் கருத்திற்கு ஆதரவாகப் பேசிவிட்டேன்.
2. வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவதால் வேற்று மொழியினர் / ஆதிக்க வகுப்பினர் தமிழ் மக்களை / அடக்கப்பட்ட வகுப்பினரை மேன்மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். வேற்று மொழிச் சொற்களைப் புழங்கி அவர்கள் ஏதோ மேதாவிகளைப் போல் தோற்றமளித்து வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தெரியாத அப்பாவிகளை எளிதாக மன அளவில் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள்.
இது நடக்கவில்லை என்று மறுக்க முடியாது. நடக்கிறது. ஆனால் இது ஒரு பகுதி மட்டுமே. எந்த வித ஆதிக்க மனப்பான்மை இல்லாமலும் எந்த வித உள்நோக்கங்கள் இல்லாமலும் பழக்கத்தின் காரணமாக மட்டுமே பலர் வேற்று மொழிச் சொற்களைப் புழங்குகிறார்கள். அவை வேற்று மொழிச் சொற்கள் என்று கூட அறியாமலேயே.
வேற்று மொழிச் சொற்களை புழங்கி மேதாவிகளைப் போல் தோற்றமளிக்கிறார்கள் என்று சொல்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வேற்று மொழிச் சொற்களைப் புழங்குபவர்கள் எல்லாருக்குமே மேதாவிகளைப் போல் தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்களின் மேல் நாம் அந்தப் பழியைப் போடும் போது, நம்மைப் பார்த்து அவர்கள் 'சரி. நீங்கள் தமிழில் தானே எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதுவது யாருக்குமே புரியவில்லையே. பலருக்கும் புரியாத பழைய சொற்களையும் நீங்களே உருவாக்கிய புதிய சொற்களையும் கலந்து தானே நீங்கள் எழுதுகிறீர்கள்?! அது உங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொண்டு மற்றவர்களை அடக்கி ஆள்வதற்கா?' என்ற கேள்வியைக் கேட்பதற்கு வழி செய்கிறோம். நாம் பழந்தமிழ் சொற்களையும் புதிதாக நாமே உருவாக்கியச் சொற்களையும் வைத்து எழுதுவது நம் மேதாவித் தனத்தைக் காட்டுவதற்கு இல்லை. தனித் தமிழில் எழுதி தமிழ் வளர்க்கவே. தமிழ்ப் பணி செய்யவே என்பது நமக்குத் தெரியும். ஆனால் நம் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றவர்கள் நம் கருத்துகளுடன் ஒத்துப் போகாதவர்களை அவர்கள் நினைக்காத ஒன்றை வைத்துத் தாக்கும் போது அதே தாக்குதல் நம் மீதும் எழுகிறது.
நம் நோக்கம் அவர்களைத் தாக்குவதைத் தவிர்த்துவிட்டு அறியாமல் வேற்று மொழிச் சொற்களைப் புழங்குகிறார்களே - எந்த அரசியல் நோக்கமும் இல்லாத சாதாரணத் தமிழர்கள் - அவர்களுக்கு தமிழ் மொழிச் சொற்களை எடுத்துக் கொடுப்பதாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் தாக்குவது தேவையில்லாத ஒன்று. நம்மைத் தாக்கும் போது தகுந்த பதில் சொல்லலாம். நாமே சென்று தேவையில்லாமல் தாக்குதல் கூடாது. அதற்கு பதில் இராம.கி. ஐயாவைப் போலவும், தமிழ் விக்சனரி நண்பர்களைப் போலவும் ஆக்க பூர்வமான வேலையில் ஈடுபடவேண்டும். அதுவே நமக்கும், நம் மொழிக்கும் நல்லது.
***
சொல் ஒரு சொல் பதிவில் எழுதுபவர்கள் யாருமே தமிழ் அறிஞர்கள் இல்லை. இராம.கி. ஐயா போன்ற அறிஞர்கள் செய்யும் மொழி ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு தமிழ் அறிந்தவர்கள் இல்லை. இராம. கி. ஐயா போன்றவர்கள் பழந்தமிழ் சொற்களை மீட்டுக் கொடுக்கட்டும்; புதிய சொற்களை ஆக்கிக் கொடுக்கட்டும். புதிய சொல்லாக்கத்தில் 'தமிழ் விக்சனரி' நண்பர்களின் ஆக்கம் மிக நன்றாக இருக்கிறது. சொல் ஒரு சொல் பதிவில் நாங்கள் இந்த இரண்டையுமே செய்யவில்லை. இரண்டு பேர்களும் செய்வதிலிருந்து எடுத்துக் கொண்டு அதனை முடிந்த வரையில் பொதுமக்கள் விரும்பும் வகையில் கதை வடிவாகவோ, கட்டுரை வடிவாகவோ நகைச்சுவை வடிவாகவோ கொடுத்து பழைய சொற்களையும் புதிய சொற்களையும் புழக்கத்தில் கொண்டு வர முயல்கிறோம்.
அந்த வகையில் பார்த்தால் சொல் ஒரு சொல் முயற்சி பின்னோக்கு கருத்து இல்லை. புதுச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சிக்குப் பின்னடைவு இல்லை.
***
தொடர்ந்து சொல் ஒரு சொல் பதிவில் ஆக்கபூர்வமாகப் பங்கேற்று வரும் ஜெயஸ்ரீ அவர்கள் மிக அழகாக மேலே நான் நீட்டி முழக்கிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். அவர் சொன்னது இதோ.
புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்படுவதோடு இருக்கும் பல நல்ல, அழகான சொற்களும் வழக்கொழிந்து போய்விடக்கூடாது என்பதற்கான நல்ல் முயற்சிதான் 'சொல் ஒரு சொல்' பக்கம் .
இது தான் எஸ்.கே. 'சுடர்' தொடர்ப்பதிவிற்காக என்னிடம் கேட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்லி விட்டிருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியில் இருக்கும் கருத்தை ஒட்டியும் வெட்டியும் கடந்த சில நாட்களாக வலைப்பதிவுகளில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கும் என் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். அதனால் இதனைத் தனிப்பதிவாக இடுகின்றேன். 'சொல் ஒரு சொல்' பதிவில் என்னுடன் இராகவனும், கோவி.கண்ணன் அண்ணாவும் இணைந்து இடுகைகள் இட்டுவருகின்றனர். அவர்களுக்கும் நான் இந்தப் பதிவில் சொல்லப்போகும் கருத்துகளில் பெரும்பான்மையானவற்றில் ஒப்புதல் இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கெல்லாம் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதோ அவற்றை அவர்கள் தயங்காமல் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் தங்கள் கருத்துகளைத் தயங்காமல் சொல்லுங்கள்.
***
முதலில் மேலே கேள்வியில் இருக்கும் கருத்தினை ஒட்டியும் வெட்டியும் வரும் கருத்துகளைச் சுருக்கமாகப் பட்டியல் இடலாம்.
ஒட்டி வரும் கருத்துகள்:
1. ஆங்கிலம் எந்த வித தயக்கங்களும் இன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டதால் ஆங்கிலம் வளர்ந்து வருகிறது. தமிழில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பதின் மூலம் அப்படிப் பரிந்துரைப்பவர்கள் தமிழை ஒரு தேக்க நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அது தமிழுக்கு ஒரு பின்னடைவு. அப்படி தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்கும் போது கடினமான சொற்களைப் பயன்படுத்தி சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத படி எழுதுகிறார்கள். அப்படி எல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் தமிழில் எழுதுவதற்கே சாதாரண மக்களுக்கு ஆர்வம் போய்விடும். அப்படி நடந்தால் அது தமிழுக்கு வளர்ச்சியைத் தருமா?
2. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கின்றது. தமிழ் மட்டும் விதிவிலக்கு இல்லை. சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தமிழால் இருக்க முடியாது.
3. ஸ்டாலின், இஸ்லாம், சரஸ்வதி, சுரேஷ், சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிச் சொற்களை இசுடாலின், இசுலாம், சரசுவதி, சுரேசு, சமசுகிருதம் என்று எழுதுவதைப் பார்க்கும் போது கண் கூசுகிறது. இப்படி எழுதுவது கொடுந்தமிழ்.
4. மொழி என்பது ஒருவர் எண்ணத்தை மற்றவருக்குச் சொல்வதற்கு ஏற்பட்ட வழி. அவ்வளவு தான். நான் சொல்வதை யாரிடம் நான் சொல்கிறேனோ அவர்களுக்குப் புரிந்தால் போதும். அது எந்த மொழிச் சொற்களைக் கொண்டு சொல்லியிருந்தாலும் சரி. காலம் மாறுகையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் நடந்தே தீரும்; இவற்றைத் தடுக்க நினைப்பது பிற்போக்குத்தனம்.
கேள்வியில் இருக்கும் கருத்துக்கு மாற்றாக வரும் கருத்துகள்:
1. வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களை வழக்கிழக்கச் செய்கின்றன. ஒரு மொழியை அழிக்க அதன் சொற்களை வழக்கிழக்கச் செய்வதே எளிய வழி.
2. வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவதால் வேற்று மொழியினர் / ஆதிக்க வகுப்பினர் தமிழ் மக்களை / அடக்கப்பட்ட வகுப்பினரை மேன்மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். வேற்று மொழிச் சொற்களைப் புழங்கி அவர்கள் ஏதோ மேதாவிகளைப் போல் தோற்றமளித்து வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தெரியாத அப்பாவிகளை எளிதாக மன அளவில் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள்.
***
எனக்கு இரண்டு தாய்மொழிகள். இரண்டாவது தாய்மொழி தமிழ். சௌராஷ்ட்ரனாய் இருப்பது இந்தப் பிரச்சனையில் எனக்கு ஒரு ஆழ்ந்த பார்வையைக் கொடுத்திருக்கிறது. இரு தலைமுறைக்கு முன்னர் சௌராஷ்ட்ரர்கள் பல நல்ல சௌராஷ்ட்ரச் சொற்களை எளிதாகப் பேசிக் கொண்டிருந்தனர். என் பெற்றோர்களின் தலைமுறை சௌராஷ்ட்ரத்தில் பேசும் போது நிறைய தமிழ்ச்சொற்களைப் புழங்கத் தொடங்கியது. என் தலைமுறையினர் தமிழ்ச்சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் கலந்து தான் சௌராஷ்ட்ரம் பேசுகின்றனர் (பேசுகிறோம்). அவர்கள் பெற்றோர்கள் பேசிய சொற்களை என் பெற்றோர்களின் தலைமுறையினர் புரிந்து கொண்டனர் - ஆனால் அவற்றை எங்களிடம் தரவில்லை. அதனால் எங்களிடம் சௌராஷ்ட்ரம் பேச தேவையான எல்லா சொற்களும் இல்லை; அதனால் எங்கள் எண்ணங்களை நன்கு வெளிப்படுத்த வேற்று மொழிச் சொற்களைப் புழங்க வேண்டிய கட்டாயம்.
இன்னொன்றையும் சொல்கிறேன். 19ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் வாழ்ந்த நடனகோபால நாயகி சுவாமிகள் இயற்றிய சௌராஷ்ட்ர மொழிப் பாடல்கள் எதுவுமே என் தலைமுறையினருக்குப் புரியாது. ஆங்காங்கே ஒரு சில சொற்கள் புரியும். அவ்வளவு தான். அவ்வளவு ஏன்? என் தந்தையாரிடமும் என் மாமனாரிடமும் ஒரு முறை டி.எம்.எஸ். பாடிய இந்தச் சௌராஷ்ட்ர பாடல்களைப் போட்டுக் காண்பித்தேன். அவர்களுக்கும் அதே நிலை தான். 'நம் மொழி என்று தெரிகிறது. ஆனால் எல்லா சொற்களும் புரியவில்லை' என்கிறார்கள். பாடலை எழுத்து வடிவில் பார்த்தால் புரியாமல் போகலாம். பாட்டாகப் பாடும் போது கூடப் புரியவில்லை என்றால்? அதுவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எழுதியவற்றை. அப்படி என்றால் எத்தனை இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்?
என் நல்வினைப்பயன் இந்தப் பாடல்களில் இருக்கும் பெரும்பான்மையான சொற்கள் எனக்குப் புரிகின்றன. செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே. அது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். மொழி ஆர்வத்தால் சௌராஷ்ட்ர மொழியின் சொற்களும் புரிகின்றன. சிவமுருகனைத் தவிர்த்து இந்த பாடல்களை முழுதாகப் புரிந்து கொள்ளும் எங்கள் தலைமுறையினரை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்தக் காரணத்தால் தான் சிவமுருகனும் நானும் நாயகி சுவாமிகளின் பாடல்களுக்கு விளக்கம் எழுதிக் கொண்டிருக்கிறோம் - அப்போதாவது சௌராஷ்ட்ர இளைஞர்களுக்கு தங்கள் மொழியில் உள்ள பாடல்கள் புரியுமே என்று.
கால்கரி சிவா அண்ணாவுடனும், அவருடைய அண்ணனுடனும் பேசும் போது அவர்கள் என் சொற்தொகையில் (Vocabulary) இல்லாத சில சொற்களைப் புழங்கக் கண்டேன். அவர்கள் என்னை விட மூத்தவர்கள்; எனக்கும் முன்னாலேயே மதுரையை விட்டுக் கிளம்பியவர்கள் என்பதை அதன் மூலமே சொல்லிவிடலாம். என்னுடைய மொழி ஆர்வத்தையும் மீறி அவர்கள் புழங்கிய அந்த சௌராஷ்ட்ர சொற்கள் ஏன் என் சொற்தொகையில் இல்லை? இப்படியே இருந்தால் யாருக்கு நட்டம்? எனக்கும் சௌராஷ்ட்ரத்திற்கும் தானே.
இந்த நிலைக்கு என் முன்னோர்களை மட்டுமே குறை கூற விரும்பவில்லை. இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு பல சமூக, வரலாற்றுக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பேசுவது இந்தப் பதிவின் நோக்கத்திற்குத் தேவையில்லாதது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
***
என் பின்புலத்தைச் சொன்னது என் கருத்துகள் எந்த இடத்திலிருந்து வருகின்றன என்று காட்டுவதற்காகத் தான். அது மட்டுமின்றி கற்பது இரண்டு வகை - தானே பட்டு கற்றுக் கொள்வது; மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்வது. தமிழ் இங்கே சௌராஷ்ட்ரத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். (சௌராஷ்ட்ரத்தை எந்த வகையிலும் நான் தாழ்த்தி எழுதவில்லை என்றே நினைக்கிறேன். அப்படி யாருக்காவது தோன்றினால் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்).
மேலே ஒட்டியும் வெட்டியும் வருகின்ற கருத்துகளின் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை அறிவேன். நான் சொல்வதும் என் புரிதல், நம்பிக்கை, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையிலேயே இருப்பதால் ஏதோ ஒரு அரசியல் சார்பாகத் தோன்றலாம். நான் சொல்வதே உண்மை. மற்ற கருத்துகள் எல்லாம் பொய் என்று எண்ணவில்லை.
***
இப்போது கருத்துகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பேசலாம். முதலில் எஸ்.கே.யின் கேள்வியை ஒட்டி வரும் கருத்துகளைப் பார்ப்போம்.
1. ஆங்கிலம் எந்த வித தயக்கங்களும் இன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டதால் ஆங்கிலம் வளர்ந்து வருகிறது. தமிழில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பதின் மூலம் அப்படிப் பரிந்துரைப்பவர்கள் தமிழை ஒரு தேக்க நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அது தமிழுக்கு ஒரு பின்னடைவு. அப்படி தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்கும் போது கடினமான சொற்களைப் பயன்படுத்தி சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத படி எழுதுகிறார்கள். அப்படி எல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் தமிழில் எழுதுவதற்கே சாதாரண மக்களுக்கு ஆர்வம் போய்விடும். அப்படி நடந்தால் அது தமிழுக்கு வளர்ச்சியைத் தருமா?
ஆங்கிலத்தில் வேற்று மொழிச் சொற்களைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். உண்மை. சொற்களின் குறை இருக்கும் போது வேற்று மொழிச் சொற்களை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை. அதனைத் தான் ஆங்கிலம் செய்கிறது. ஆனால் அது தான் ஆங்கிலத்தின் வளர்ச்சிக்குக் காரணம் என்பது சரியில்லை. ஆங்கிலம் வளர்வதற்கு வேறு காரணிகள் இருக்கின்றன. முன்னாள் உலக வல்லரசும் இன்னாள் உலக வல்லரசும் ஆங்கிலம் பேசியதாலும் பேசுவதாலும் மற்றவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. அந்த வலுவில் தான் ஆங்கிலம் வளர்கிறதே அன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வதால் இல்லை. மேலே சொன்னது போல் வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வது அந்த மொழியில் அந்தச் சொற்கள் இல்லாததால்.
ஆங்கிலத்தில் ஏற்கனவே சொற்கள் இருந்து அந்தச் சொற்களுக்குப் பதிலாக வேற்று மொழிச் சொற்களைப் புழங்கினால் அது தவறு. அது மொழி அழிவதற்குத் தான் வழி வகுக்கும். ஆங்கிலத்திற்கு இருக்கும் மற்ற காரணிகள் இல்லாத மொழிகளுக்கு இது இன்னும் அதிகமான உண்மை என்பதை உணரவேண்டும். சௌராஷ்ட்ரம் ஒரு எடுத்துக்காட்டு.
இன்று நாம் தமிழில் மற்ற மொழிச் சொற்களைக் கலந்து பேசுகிறோம். அதனால் மிக எளிதான பாரதியார் பாடல்களுக்குக் கூட விளக்கம் சொல்ல வேண்டிய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். இது நல்லதில்லை.
பல நூற்றாண்டு கால இலக்கியங்கள் இருக்கும் தமிழ் போன்ற செம்மொழிகளில் மனிதனின் கருத்துகளில் பெரும்பான்மையானவற்றைச் சொல்வதற்குச் சொற்கள் இருக்கின்றன. அவற்றை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவது அந்த மொழி அழியாமல் காப்பாற்றும். அதனை விட்டு வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவது தான் மொழி வளர்வதற்கு வழி என்ற தவறான எண்ணத்தால் வேற்று மொழிச் சொற்களைப் புழங்கத் தொடங்கினால் தமிழை மறந்துவிட்டு வேற்று மொழியையே பேசும் காலம் வர நெடுங்காலம் செல்லாது.
எல்லா கருத்துகளையும் கூற தமிழில் சொற்கள் இருக்கின்றன என்று சொல்ல இயலாது. புதிதாக வந்த அறிவியல் சொற்களுக்கு நேரான சொற்கள் தமிழில் இல்லாமல் இருக்கலாம். அப்போது அவற்றிற்கு ஏற்ற கலைச்சொற்களைத் தமிழில் பரிந்துரைத்துப் புழங்கச் செய்வது தமிழை வளர்க்குமா? வேற்று மொழிச் சொற்களை அந்த நேரத்தில் புழங்குவது தமிழை வளர்க்குமா?
அப்படி பரிந்துரைக்கப்படும் சொற்களில் எது கடினம் எது எளிது என்பது அவரவர் மொழி அறிவைப் பொறுத்தது. கொஞ்சம் இலக்கிய பழக்கம் இருப்பவர்களுக்கு எளிதாகத் தோன்றும் சொற்கள் இலக்கிய பழக்கம் இல்லாதவர்களுக்கு கடினமாகத் தோன்றலாம். ஆனால் அதே சொற்கள் பழக்கத்தினால் எளிதாகத் தோன்றத் தொடங்கும். சில காலத்திற்கு முன்னால் பரிந்துரைக்கப்பட்ட பேருந்து, சட்டப்பேரவை, பேரவைத் தலைவர் போன்ற சொற்கள் இப்போது கடினமாக இருக்கின்றனவா? பெரும்பான்மையானவர்களுக்குப் புரிகின்றதல்லவா? அதே போல் இப்போது கடினமாகத் தோன்றும் பல பழைய சொற்களும் புதிய சொற்களும் மீண்டும் புழக்கத்தில் வரும் போது அவை எளிதாகத் தோன்றும்.
பரிந்துரைக்கப்பட்ட எல்லாச் சொற்களும் புழக்கத்தில் வருவதில்லை. அதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. யார் அந்தச் சொற்களைப் புழங்குகிறார்கள், எந்த பொருளில் புழங்குகிறார்கள், அந்த சொற்களின் வீச்சு என்ன என்று பல காரணிகள் இருக்கின்றன. அதனால் பழைய சொற்களை எடுத்துக் கொடுப்பதும் புதிய சொற்களை உருவாக்குதலும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். 100 சொற்கள் பரிந்துரைக்கப் பட்டால் அதில் 50 சொற்கள் புழக்கத்தில் வந்தாலே அது பெரும் நன்மையை விளைக்கும். அதுவே மொழி அழியாமல் இருப்பதற்கும் வளர்வதற்கும் வழி.
பின்னூட்டம், உள்குத்து, வெளிக்குத்து போன்ற சொற்களை பதிவுலகம் தவிர்த்து மற்ற இடங்களில் பேசினால் அவை மற்றவர்களுக்கு கடினமான சொற்களாகத் தோன்றும். அப்படி துறை சார்ந்த சொற்களும் இருக்கின்றன. அந்த பரிபாஷையை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது அந்தத் துறையின் வீச்சைப் பொறுத்து அமையும்.
2. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கின்றது. தமிழ் மட்டும் விதிவிலக்கு இல்லை. சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தமிழால் இருக்க முடியாது.
இரு வேறு மொழி பேசுபவர்கள் பழகும் போதும் ஒருவர் மொழியை மற்றவர் கற்கும் போது மொழிகளுக்குள் கொடுக்கல் வாங்கல் நடப்பது இயற்கை. அப்படி பார்க்கும் போது பண்பாட்டு அளவிலும் பல வித வரலாற்று, அரசியல் காரணிகளாலும் தமிழும் வடமொழியான சமஸ்கிருதமும் நெருங்கிப் பழகியது. வேண்டுமென்றோ இல்லை இயற்கையாகவோ வடமொழியில் தமிழ்ச்சொற்களும் தமிழில் வடமொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன. அப்படி வேறு இடங்களில் இருந்து வரும் சொற்களைத் தமிழ்ப்படுத்தி தமிழ்ச்சொற்களுக்கு இணையாகப் புழங்குவதற்கு இலக்கணத்திலேயே திசைச்சொற்கள் என்று ஒரு பிரிவை வைத்து வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள் தமிழ் ஆன்றோர்கள். இயற்கையாக இப்படி ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்வது அந்த இன்னொரு மொழியின் தேவைக்கேற்ப அமையும். அவ்வாறின்றி வேண்டுமென்றே ஒரு மொழியின் சொற்களைப் புழங்காமல் வேற்று மொழிச் சொற்களையே புழங்குவது முதல் மொழியின் சொற்கள் அழிவதற்கே வழி வகுக்கும்.
சங்க இலக்கியங்களைத் தவிர்த்து மற்ற தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஓரளவு பழக்கம் இருக்கிறது. அப்படி இலக்கியங்கள் படிக்கும் போது இப்போது தமிழில் புழங்கும் பல வடமொழிச்சொற்களுக்கு (திசைச் சொற்களுக்கு) இணையான தமிழ்ச்சொற்கள் இருப்பதைக் காண்கிறேன். அவற்றை மீண்டும் புழக்கத்தில் கொண்டுவந்தால் அந்த சொற்கள் அழியாமல் இருக்கும். அந்தச் சொற்களை புழக்கத்தில் கொண்டு வருதல் திசைச்சொற்களை (வேற்று மொழிச் சொற்களை) முழுவதுமாக தமிழ் அகராதிகளில் இருந்து எடுப்பதற்காக இல்லை. பழந்தமிழ்ச் சொற்கள் தமிழ் அகராதிகளில் இல்லாமல் போகும் நிலையைத் தவிர்க்க. அந்த பழந்தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பதாலும் மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவதாலும் திசைச் சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களும் - இரண்டுமே புழக்கத்தில் இருக்கும். எது எளிதாக இருக்கிறதோ அது மக்கள் நடுவில் புழக்கத்தில் நிற்கும்.
வடமொழியின் தாக்கம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் பல மொழிகளிலும் இருக்கிறது என்பது உண்மை. அதே நேரத்தில் தமிழின் தாக்கம் வடமொழி முதற்கொண்டு பல மொழிகளில் இருக்கிறது என்பதும் உண்மை. வடமொழியின் துணையின்றி தமிழால் இருக்க முடியாது என்று எண்ணுபவர்கள் தமிழிலிருந்து தான் வடமொழிச் சொற்கள் பிறந்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டும் போது பதறுதல் கூடாது.
நான் அறிந்த வரையில் தமிழால் தனித்து இயங்க முடியும். எந்த விதமான கருத்துகளையும் எடுத்துக் கூறும் வகையில் தமிழில் அடிச்சொற்கள் இருக்கின்றன. அந்த அடிச்சொற்களை வைத்து புது அறிவியல் கருத்துகளைக் கூறும் சொற்களையும் தமிழால் சொல்ல முடியும். அப்படியே சில சொற்கள் தமிழில் ஏற்படுத்த முடியாவிட்டால் அப்போது மற்ற மொழிச் சொற்களை எடுத்தாள தமிழில் திசைச்சொல் என்ற வகை இருக்கிறது. ஆனால் அப்படி செய்வது தமிழில் அந்தக் கருத்தைச் சொல்ல முடியாது என்பது நன்கு நிறுவப்பட வேண்டும். அதற்கு முன்னரே வேற்று மொழிச் சொற்களைப் புழங்கிவிட்டு தமிழில் அதற்குச் சொல் இல்லை; தமிழில் அந்தக் கருத்துகளைச் சொல்ல இயலாது; தமிழால் தனித்து இயங்க இயலாது என்று சொல்வது சரியன்று.
3. ஸ்டாலின், இஸ்லாம், சரஸ்வதி, சுரேஷ், சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிச் சொற்களை இசுடாலின், இசுலாம், சரசுவதி, சுரேசு, சமசுகிருதம் என்று எழுதுவதைப் பார்க்கும் போது கண் கூசுகிறது. இப்படி எழுதுவது கொடுந்தமிழ்.
ம்ம்ம். முதன்முதலில் இசுடாலின், இசுலாம், சரசுவதி போன்றவற்றைப் படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கும். கன்னன், கருணன், துருபதை, இலக்குவன், சானகி, தயரதன், கோசலை, சுமித்திரை, சனகன், விசுவாமித்திரன், வசிட்டன், விட்டுசித்தன், வீடணன், கும்பகருணன், அயோத்தி, மிதிலை, யுதிட்டிரன், வீடுமன் போன்ற சொற்களைப் படிக்கும் போது சிரிப்பாக இருக்கிறதா? இயல்பாக இருப்பது போல் தோன்றுகிறதா? இயல்பாக இருப்பது போல் தான் தோன்றுகிறது. ஏன்? ஏனெனில் இவை இலக்கியத்தில் படித்திருக்கிறோம். படித்துப் பழக்கம் இருக்கிறது. இப்படி வேற்று மொழிப் பெயர்ச் சொற்களைத் தமிழ்படுத்திச் சொல்வது தமிழ் மரபு. அப்படித் தான் இலக்கியங்களில் செய்திருக்கிறார்கள். அதன் படி இலக்கணமும் அமைத்திருக்கிறார்கள். இசுடாலின், இராசீவ் போன்ற சொற்களை முதலில் பார்க்கும் போது அவை சிரிப்பாக இருக்கலாம். ஆனால் பழக தொடங்கிய பின் அவை இயற்கையாக இருக்கும். அதனை விட்டுவிட்டு அப்படி எழுதுவது கொடுந்தமிழ் என்றால் இலக்கியங்கள் எல்லாவற்றையுமே கொடுந்தமிழ் என்றே சொல்ல வேண்டும். அவற்றில் சமய இலக்கியங்களும் அடங்கும்.
4. மொழி என்பது ஒருவர் எண்ணத்தை மற்றவருக்குச் சொல்வதற்கு ஏற்பட்ட வழி. அவ்வளவு தான். நான் சொல்வதை யாரிடம் நான் சொல்கிறேனோ அவர்களுக்குப் புரிந்தால் போதும். அது எந்த மொழிச் சொற்களைக் கொண்டு சொல்லியிருந்தாலும் சரி. காலம் மாறுகையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் நடந்தே தீரும்; இவற்றைத் தடுக்க நினைப்பது பிற்போக்குத்தனம்.
கால மாற்றத்தால் பல மாறுதல்கள் வரும் என்பது உண்மை. கால மாறுதலால் தான் சௌராஷ்ட்ரமும் இந்த நிலையில் இருக்கிறது. தருமி ஐயா சொன்னது போல் மூன்று தலைமுறைக்கு முன் தமிழே சரியாகத் தெரியாத பெண்கள் மதுரையில் இருந்தார்கள். காலத்தின் கட்டாயத்தால் அடுத்த தலைமுறை தங்களைத் தனிப்படுத்திக் கொள்வதைக் குறைத்தது. தமிழருடன் கலந்து பழகத் தொடங்கியது. அடுத்தத் தலைமுறை தமிழைக் கலந்து பேசத் தொடங்கியது. அடுத்தத் தலைமுறை தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுகிறது. இப்போது மிஞ்சியது முன்னேறிய சௌராஷ்ட்ரமா? சௌராஷ்ட்ரர்கள் மூன்று தலைமுறைக்கு முன்னர் இருந்ததை விட இப்போது முன்னேறியிருக்கலாம். ஆனால் அவர்கள் இழந்தது அவர்களின் மொழியில் இருந்த சொற்கள்.
இந்தப் போராட்டம் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. கால மாற்றத்தால் நடக்கும் செயல்கள் எல்லாமே நல்ல செயல்கள் இல்லை. சில நேரங்களில் ஈடு செய்ய முடியாத இழப்புகளும் நேர்கின்றன. இன்று நான் சௌராஷ்ட்ரன் என்று சொல்லிக் கொள்கிறேன். இன்னும் இரண்டு தலைமுறை இதே போல் சென்றால் இந்திய வம்சாவளியினர் என்று மேலை நாடுகளில் இப்போது சொல்கிறோமே அதே போல் சௌராஷ்ட்ர வம்சாவளியினர் மட்டுமே மிஞ்சுவார்கள்.
தமிழனின் நல்வினைப்பயன் (அதிருஷ்டம்) நிறைய தமிழ் இலக்கியங்கள் இருக்கிறது. நீண்ட நெடிய இலக்கிய பாரம்பரியம் இருக்கிறது. அவற்றின் மூலம் பழைய தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்து வரலாம். அதனால் முன்னேற்றம் தடைபடாது. வேற்று மொழியினருடன் அவர்கள் மொழியில் பேசுவோம். நம்மவர்களுடன் நம் மொழியில் பேசுவோம். அப்படி நம் மொழியில் பேசும் போது நம் சொற்களைக் கொண்டு பேசுவோம். அதனால் நாம் முன்னேற்றமும் அடையலாம்; நம் மொழியும் தொலையாது.
(இவ்வளவு பேசுகிற நீ சௌராஷ்ட்ரத்தில் அது நடக்க ஏதாவது செய்யலாமே. தமிழைத் தமிழர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - என்று யாராவது சொன்னால் - அவர்களுக்கு என் பதில் இது - சௌராஷ்ட்ரத்திலும் இந்த விவாதம் நடக்கிறது. சௌராஷ்ட்ரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது வேற்று மொழியினர் இருக்கும் போதும் சௌராஷ்ட்ரத்தில் பேசிக் கொள்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டு இது நடப்பதைக் காட்டுகிறது. வேறு தளங்களில் சௌராஷ்ட்ரத்திற்காகவும் இந்த முயற்சிகளில் பலர் ஈடுபட்டுள்ளோம். மதுரையில் பிறந்து வளர்ந்த நாங்கள் தமிழாலும் தமிழராலும் அடைந்த நன்மைகள் ஏராளம். அந்த உணர்வில் இயற்கையாகத் தமிழ், தமிழர் என்றால் எங்களுக்கும் பதறுகிறது. மேலே சொன்னது போல் தமிழ் எனது இரண்டாவது தாய்மொழி. வேறு யார் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ எனக்கு தமிழும் தாய்மொழி தான்; நான் தமிழனும் தான். ஆக சொல் ஒரு சொல் பதிவு ஒரு தமிழனால் தான் தொடங்கப்பட்டிருக்கிறது).
இப்போது எஸ்.கே.யின் கேள்வியில் இருக்கும் கருத்திற்கு மாற்றுக் கருத்துகளைப் பார்ப்போம்.
1. வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களை வழக்கிழக்கச் செய்கின்றன. ஒரு மொழியை அழிக்க அதன் சொற்களை வழக்கிழக்கச் செய்வதே எளிய வழி.
மேலே உள்ள கருத்துகளைப் பற்றி பேசும் போதே இந்தக் கருத்திற்கு ஆதரவாகப் பேசிவிட்டேன்.
2. வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவதால் வேற்று மொழியினர் / ஆதிக்க வகுப்பினர் தமிழ் மக்களை / அடக்கப்பட்ட வகுப்பினரை மேன்மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். வேற்று மொழிச் சொற்களைப் புழங்கி அவர்கள் ஏதோ மேதாவிகளைப் போல் தோற்றமளித்து வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தெரியாத அப்பாவிகளை எளிதாக மன அளவில் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள்.
இது நடக்கவில்லை என்று மறுக்க முடியாது. நடக்கிறது. ஆனால் இது ஒரு பகுதி மட்டுமே. எந்த வித ஆதிக்க மனப்பான்மை இல்லாமலும் எந்த வித உள்நோக்கங்கள் இல்லாமலும் பழக்கத்தின் காரணமாக மட்டுமே பலர் வேற்று மொழிச் சொற்களைப் புழங்குகிறார்கள். அவை வேற்று மொழிச் சொற்கள் என்று கூட அறியாமலேயே.
வேற்று மொழிச் சொற்களை புழங்கி மேதாவிகளைப் போல் தோற்றமளிக்கிறார்கள் என்று சொல்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வேற்று மொழிச் சொற்களைப் புழங்குபவர்கள் எல்லாருக்குமே மேதாவிகளைப் போல் தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்களின் மேல் நாம் அந்தப் பழியைப் போடும் போது, நம்மைப் பார்த்து அவர்கள் 'சரி. நீங்கள் தமிழில் தானே எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதுவது யாருக்குமே புரியவில்லையே. பலருக்கும் புரியாத பழைய சொற்களையும் நீங்களே உருவாக்கிய புதிய சொற்களையும் கலந்து தானே நீங்கள் எழுதுகிறீர்கள்?! அது உங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொண்டு மற்றவர்களை அடக்கி ஆள்வதற்கா?' என்ற கேள்வியைக் கேட்பதற்கு வழி செய்கிறோம். நாம் பழந்தமிழ் சொற்களையும் புதிதாக நாமே உருவாக்கியச் சொற்களையும் வைத்து எழுதுவது நம் மேதாவித் தனத்தைக் காட்டுவதற்கு இல்லை. தனித் தமிழில் எழுதி தமிழ் வளர்க்கவே. தமிழ்ப் பணி செய்யவே என்பது நமக்குத் தெரியும். ஆனால் நம் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றவர்கள் நம் கருத்துகளுடன் ஒத்துப் போகாதவர்களை அவர்கள் நினைக்காத ஒன்றை வைத்துத் தாக்கும் போது அதே தாக்குதல் நம் மீதும் எழுகிறது.
நம் நோக்கம் அவர்களைத் தாக்குவதைத் தவிர்த்துவிட்டு அறியாமல் வேற்று மொழிச் சொற்களைப் புழங்குகிறார்களே - எந்த அரசியல் நோக்கமும் இல்லாத சாதாரணத் தமிழர்கள் - அவர்களுக்கு தமிழ் மொழிச் சொற்களை எடுத்துக் கொடுப்பதாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் தாக்குவது தேவையில்லாத ஒன்று. நம்மைத் தாக்கும் போது தகுந்த பதில் சொல்லலாம். நாமே சென்று தேவையில்லாமல் தாக்குதல் கூடாது. அதற்கு பதில் இராம.கி. ஐயாவைப் போலவும், தமிழ் விக்சனரி நண்பர்களைப் போலவும் ஆக்க பூர்வமான வேலையில் ஈடுபடவேண்டும். அதுவே நமக்கும், நம் மொழிக்கும் நல்லது.
***
சொல் ஒரு சொல் பதிவில் எழுதுபவர்கள் யாருமே தமிழ் அறிஞர்கள் இல்லை. இராம.கி. ஐயா போன்ற அறிஞர்கள் செய்யும் மொழி ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு தமிழ் அறிந்தவர்கள் இல்லை. இராம. கி. ஐயா போன்றவர்கள் பழந்தமிழ் சொற்களை மீட்டுக் கொடுக்கட்டும்; புதிய சொற்களை ஆக்கிக் கொடுக்கட்டும். புதிய சொல்லாக்கத்தில் 'தமிழ் விக்சனரி' நண்பர்களின் ஆக்கம் மிக நன்றாக இருக்கிறது. சொல் ஒரு சொல் பதிவில் நாங்கள் இந்த இரண்டையுமே செய்யவில்லை. இரண்டு பேர்களும் செய்வதிலிருந்து எடுத்துக் கொண்டு அதனை முடிந்த வரையில் பொதுமக்கள் விரும்பும் வகையில் கதை வடிவாகவோ, கட்டுரை வடிவாகவோ நகைச்சுவை வடிவாகவோ கொடுத்து பழைய சொற்களையும் புதிய சொற்களையும் புழக்கத்தில் கொண்டு வர முயல்கிறோம்.
அந்த வகையில் பார்த்தால் சொல் ஒரு சொல் முயற்சி பின்னோக்கு கருத்து இல்லை. புதுச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சிக்குப் பின்னடைவு இல்லை.
***
தொடர்ந்து சொல் ஒரு சொல் பதிவில் ஆக்கபூர்வமாகப் பங்கேற்று வரும் ஜெயஸ்ரீ அவர்கள் மிக அழகாக மேலே நான் நீட்டி முழக்கிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். அவர் சொன்னது இதோ.
புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்படுவதோடு இருக்கும் பல நல்ல, அழகான சொற்களும் வழக்கொழிந்து போய்விடக்கூடாது என்பதற்கான நல்ல் முயற்சிதான் 'சொல் ஒரு சொல்' பக்கம் .
தமிழ்ச் சுடர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது பொய்யாமொழி. பலரின் மதிப்பினைப் பெற்றவர்கள் மறைந்தால் அவர்கள் நினைவாக திருக்கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றுவார்கள். எம்.ஜி.ஆர். இறந்த போதும் காஞ்சிப் பெரியவர் மறைந்த போதும் இந்திரா அம்மையார் கொலையுண்ட போதும் அண்மையில் தமிழக முன்னாள் பேரவைத்தலைவர் பழனிவேல்ராசன் மறைந்த போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கோபுரங்களில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. வீடுகளிலும் மறைந்தவர் நினைவாக சுடர்த்தீபம் ஏற்றுவது நம் பண்பாடு. வலையுலகில் பல்லோராலும் பண்பாளர் என்று போற்றப்படும் திரு. சாகரன் அவர்களின் மறைவிற்கு சுடர் ஏற்றி என் அஞ்சலியைச் செலுத்தி நண்பரும் அகவையில் மூத்தவரும் ஆன திரு. எஸ்.கே. அவர்களின் கேள்விகளுக்கு விடை அளிக்க முயல்கிறேன்.
(இந்த சுடர் எனும் தொடர்ப்பதிவுகள் திரு.சாகரன் அவர்களின் நினைவாக என்று யாருமே எனக்குச் சொல்லவில்லை. எங்கும் படித்ததாகவும் நினைவில்லை. அதனால் நான் அப்படி குறிப்பிட்டது தவறெனில் மன்னித்துக் கொள்ளுங்கள்)
எஸ்.கே. கொஞ்சம் விவகாரமான கேள்விகளாகத் தான் கேட்டிருக்கிறார். எளிதாகப் பூசி மெழுகி பதில் சொல்லலாம். அப்படி சொல்லாமல் நேர்மையாக மனத்தில் தோன்றும் பதில்களைத் தந்திருக்கிறேன். ஏதேனும் அவையடக்கம் இன்றிப் பேசினால் குட்ட வேண்டிய அளவிற்குக் குட்டுங்கள். சரியான பதில்கள் என்று தோன்றினால் தர வேண்டியதைத் தாருங்கள்.
1. நீங்கள் பார்ப்பனர் அல்ல எனத் தெரியும் எனக்கு. உங்களை ... உங்கள் சாதியினரை ஏன் பார்ப்பனரோடு வைத்து சதிராடுகின்றார்கள்? சௌராஷ்ட்ரர்களுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு?
நான் சௌராஷ்ட்ரன் என்று சொல்லிக் கொள்ளும் போது அதனை ஒரு தமிழர் தான் தமிழன் என்றுச் சொல்லிக் கொள்வதைப் போல் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அது ஒரு தனி சாதியாக குறிக்கப்படுவதால் அதனை சாதியாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை சௌராஷ்ட்ரர்களில் சாதிப்பிரிவினை இல்லை. புரோகிதர்களும் இருக்கிறார்கள்; எல்லா விதமான தொழிலை பரம்பரையாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள்; புரோகிதமும் தொழிலில் ஒன்றாக இருக்கிறது. பரம்பரையாக மட்டுமில்லாமல் மற்றவர்களும் புரோகிதம் கற்றுக் கொண்டு புரோகிதம் செய்கிறார்கள். அனைவரும் சௌராஷ்ட்ரர்கள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள். (பெரும்பான்மையாக நெசவுத் தொழில் செய்பவர்களாக இருப்பதாலும் பட்டு நெசவில் தேர்ந்தவர்களாக இருந்ததாலும் - இருப்பதாலும் என்று சொல்லலாமா தெரியவில்லை - பட்டுநூல்காரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.) கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கும் சௌராஷ்ட்ரர்களும் சடங்குகளில் புரோகிதர்களாக இருக்கும் சௌராஷ்ட்ரர்களும் எந்த வித வேறுபாடுகளும் இன்றி எல்லாரிடமும் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். மொழி என்னும் கட்டுப்பாட்டால் சௌராஷ்ட்ரர்களுக்குள்ளேயே நடந்து வந்த கொடுக்கல் வாங்கல் இப்போது வேற்று மொழியினருடனும் நடக்கத் தொடங்கியிருக்கிறது.
உங்கள் கேள்வியின் அடுத்தப் பகுதி ஏன் சௌராஷ்ட்ரர்களைப் பார்ப்பனர்களுடன் வைத்துச் சதிராடுகிறார்கள் என்பது. அப்படி ஒரே ஒரு வலைப்பதிவர் மட்டுமே செய்கிறார். அவர் பதிவில் வரும் அனானிப் பின்னூட்டங்கள் மட்டுமே அப்படி சொல்கின்றன. அவர்(கள்) கருத்தினை சில நேரங்களில் தவறென்று நானும் இன்னொரு சௌராஷ்ட்ரப் பதிவரும் சொன்னதால் எங்கள் கருத்துகளை நேராக எதிர்க்காமல் எல்லா சௌராஷ்ட்ரர்களையும் திட்டுகிறார்(கள்). அவ்வளவு தான். அவர்கள் சொல்லும் கருத்திற்கு யார் எதிர் கருத்து சொன்னாலும் அவர் ஒன்று பார்ப்பனராக இருக்க வேண்டும்; இல்லை பார்ப்பன அடிவருடியாக இருக்க வேண்டும் என்ற தீவிரவாத எண்ணத்தின் வெளிப்பாடு தான் அந்த மாதிரிப் பேசுவது. You are with us or against us என்று புஷ் சொன்னதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை.
இந்த இந்தியத் திருநாட்டில் இருக்கும் மொழிகள் பலவற்றிற்கும் வடமொழிக்கும் என்ன தொடர்போ அந்த தொடர்பு தான் சௌராஷ்ட்ரத்திற்கும் வடமொழிக்கும் இருக்கும் தொடர்பு.
2. திருப்பரங்குன்ற முருகனை வைத்து ஒரு கவி பாடுங்களேன்!
மன்றங்கள் நிறைந்திருக்கும் மதுரை மாநகரிலே
என்றைக்கும் எழிலார்ந்த இன்ப பூங்காவிலே
கன்றுக்கு இரங்கும் கவின்பசுவாம் மீனாட்சிக்
கன்றான குமரனைப் போற்றினோம் போற்றினோம்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்
குன்றாத அருள் வீசி குவலயத்தைக் காக்கும் இடம்
குன்றங்கள் எத்தனை தான் இருந்தாலும் திருப்பரங்
குன்றத்தை ஒக்குமோ போற்றினோம் போற்றினோம்
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
இன்று அவன் மருகன் இனியனவன் பெற்றியை
என்றும் மனம் விரும்பிப் போற்றினோம் போற்றினோம்
3. கூட்டு வலைப் பதிவைத் தவிர, தனியே வலைபதிவதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
நீங்கள் என்னக் கேட்க நினைத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. கேள்வியில் தவறுள்ளது. கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதுகிறேன். என்னுடைய தனி வலைப்பதிவுகளிலும் எழுதுகிறேன். வாரத்திற்கு குறைந்தது நான்கு ஐந்து பதிவுகளாவது எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். உங்களுக்கும் மின்னஞ்சலில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் பார்ப்பதில்லையோ என்னவோ?
நீங்கள் கேட்க நினைத்தது - கூட்டு வலைப்பதிவுகளைத் தவிர உங்களின் தனி வலைப்பதிவுகளை தமிழ்மணத்தில் தொடுப்பதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? - இது தான் உங்கள் கேள்வி. சரியா?
நல்ல கேள்வி. அண்மைக்காலமாக சில நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி. தமிழ்மணத்தில் இருந்து விலகுவதாக இரு மாதத்திற்கு முன் சொன்ன போது இருந்த சூழலுக்கும் இப்போதிருக்கும் தமிழ்மணச் சூழலுக்கும் வேறுபாடு அதிகம் இல்லை. அப்போதிருக்கும் நிலையே இப்போதும் இருக்கிறது. அதனால் எந்தக் காரணத்தைக் கூறி நான் விலகினேனோ அந்தக் காரணம் சரியாகிவிட்டது என்று நான் மீண்டும் தமிழ்மணத்தில் சேர முடியாது. அப்போதும் நீங்கள் கேட்டக் கேள்வியை பலர் கேட்டார்கள். நீங்கள் விலகுவதால் தமிழ்மணத்தில் இருக்கும் சூழல் மாறிவிடப்போவதில்லை; ஆனால் உங்களை விரும்பிப் படிக்கும் நண்பர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்க முடியாமல் போகும் - என்று சொன்னார்கள். அப்போது நான் சொன்ன பதில் - என் பதிவுகளை விரும்பிப் படிக்கும் நண்பர்களுக்கு நான் மின்னஞ்சலில் சொல்கிறேன்; அவர்கள் அதன் மூலம் பதிவுகளுக்கு வந்து படித்துக் கொள்வார்கள்; அப்படி படிக்க முடியவில்லை; நீங்கள் தமிழ்மணத்தில் இருந்தால் நாங்கள் உங்கள் பதிவுகளைப் படிப்பதற்கு வசதியாக இருக்கும்; என்று அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது நான் மீண்டும் வந்துவிடுவேன் - என்பது தான். தனிமடல்களிலும் மின்னரட்டைகளிலும் (Chat) சில நண்பர்கள் இதனைச் சொல்லியிருக்கிறார்கள். பெரும்பான்மையினரின் கருத்து அது தான் என்றால் நான் என் முடிவை மாற்றிக் கொள்வதில் எந்தத் தடையும் இருக்காது. நண்பர்கள் சொன்னால் நாராயணன் சொன்ன மாதிரி.
4. சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
இந்தக் குற்றச்சாட்டு உங்கள் குற்றச்சாட்டு இல்லை என்று நம்புகிறேன். இதற்கான பதிலை ஒரு தனிப்பதிவாகவே இடவேண்டும். சென்ற சில நாட்களாகத் தமிழ்மணத்தில் இந்த கருத்தினை ஒட்டியும் வெட்டியும் வரும் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது என் கருத்தைச் சொல் ஒரு சொல் பதிவில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதே நேரத்தில் இது அரசியல் பாற்பட்டது. தேவையில்லாமல், யாரும் என் கருத்தைக் கேட்காத போது என் மூக்கை நுழைக்க வேண்டுமா என்றெண்ணித் தயங்கிக் கொண்டிருந்தேன். இப்போது நீங்கள் கேட்டுவிட்டீர்கள். பதிலைத் தனிப் பதிவாகத் தருகிறேன்.
5. "ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா! மனம் சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடா" என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எப்போதும் உணர்ந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாகவே அமைதியான மனம் உடையவன் நான். ஆட்டிவைக்கும் மிருகங்கள் எதுவும் இன்னும் அடங்கவில்லை. அதற்குரிய நேரம் வந்தால் தானே அடங்கும்.
முருகனருள் முன்னிற்கும்.
***
சுடர் பதிவுகளுக்கான விதிமுறைகள்
ஆத்திகச் சுடராய் என்னிடம் கொடுத்தார் எஸ்.கே. ஆத்திரச் சுடர் அடங்க வேண்டும் என்றும் விரும்பினார். ஆத்திரச் சுடரை அடங்கவைக்க ஆத்திகச் சுடரால் சில நேரம் முடிவதில்லை. ஆனால் விசுப்பாற்றிச் சுடரால் (நகைச்சுவைச் சுடரால்) கட்டாயம் முடியும். அதனால் இந்தச் சுடரை நம் நண்பர் நாமக்கல் சிபி அவர்களின் கரங்களில் தருகிறேன். பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
நகைச்சுவை நாயகர் நாமக்கல்லாருக்கு நான்கு கேள்விகள்(சே. இந்த கேள்விகள் என்ற சொல் வந்து மோனைச்சுவையைக் கெடுத்துவிட்டது):
1. நீங்கள் நடுநிலை நாயகர் என்று தெரியும். எல்லோரிடமும் நட்புடன் இருப்பதையே விரும்புபவர். உங்கள் கருத்துகளை நேர்மையாகச் சொல்பவர். ஆனாலும் எப்போதெல்லாம் புதிதாக பெயர் மறைத்து வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தில் தோன்றுகிறார்களோ அப்போதெல்லாம் அந்த வலைப்பதிவர் நீங்கள் தான் என்று ஒரு வதந்தி கிளம்புகிறதே? அது ஏன்? நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். நெருப்பு இருக்கிறதா?
2. உங்களிடம் கவிதை எழுதுங்கள் என்று மட்டுமே கேட்க நினைத்தேன். ஆனால் நீங்கள் எழுதுவதோ புதுக்கவிதைகளாகவே இருக்கின்றன. அதனால் ஒரு மரபுக்கவிதை எழுதுங்கள். நாமக்கல்லையும் மதுரையையும் பாடலின் கருத்தாக வைத்து.
3. கலாய்த்தல் திணை என்ற பெயரில் பதிவெழுதுகிறீர்களே. திணை என்றால் என்ன என்று தெரியுமா? விளக்கமாக விளக்குங்கள். (சொல் ஒரு சொல் பதிவில் சேர விரும்புபவர்களுக்கு இது தான் முதல் கேள்வி).
4. அமெரிக்கா என்றவுடன் உங்களுக்கு எந்த நகரம் நினைவிற்கு வருகிறது? அந்த நகரத்தைப் பற்றி நகைச்சுவையாக எழுதுங்கள்.
ஆத்திரச் சுடர் அடங்கி ஆத்திகச் சுடர் விளங்கி விசுப்பாற்றி நிற்கட்டும்.
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!
Monday, June 02, 2008
தீக்குறளை சென்றோதோம்!
'என்ன? என்ன சொல்றீங்கப்பூ? குறளை ஓத மாட்டீங்களா? உணர்ந்து தான் சொல்றீங்களா? இல்லை உளர்றீங்களா? திருக்குறள் உலகப் பொதுமறைங்கோ. எல்லா காலத்துக்கும் எல்லா நாட்டுக்கும் பொதுவான பொத்தகமுங்கோ. அத ஓதாட்டி உங்களுக்குத் தான் நட்டமுங்கோ. அம்புட்டுதான் சொல்லமுடியும்.'
'ஐயா. நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க. தீக்குறளை சென்று ஓதோம்ன்னு தானே சொன்னேன். திருக்குறளை ஓதமாட்டேன்னா சொன்னேன்?'.
'என்னப்பூ இது? சொல்றதையும் சொல்லிப்புட்டு அப்புறம் இல்லைங்கறீங்க. அதென்ன திருக்குறளை தீக்குறள்ன்னு சொல்றது? இது நல்லதுக்கில்லைப்பூ. சொல்லிப்புட்டேன்'
'ஐயா. தீக்குறளைன்னா திருக்குறளைன்னு பொருள் கிடையாதுங்கையா. குறள்ன்னா குறுகியது; சின்னதுன்னு பொருளுங்கையா. சின்னதா இருக்கும் எல்லாத்தையுமே குறள்ன்னு சொல்லலாமையா. வாமன அவதாரத்தையும் குறள்ன்னு சொல்லுவாங்கையா தமிழ்ல. புள்ளையாரப்பனையும் அப்படி சொல்றது உண்டுங்கையா. திருக்குறள் முழுக்க சின்ன சின்ன குறள் வெண்பா வகையில பாக்கள் இருக்கிறதால அதுக்கு திருக்குறள்ன்னு பெயருங்கையா. இதெல்லாம் உங்களுக்கே தெரியுமையா'
'ஆமாம். தெரியுந்தான்'
'நான் சொன்னது குறளைங்கறதுங்க ஐயா. குறளை சொல்றதுன்னா புறம் பேசறதுங்கையா. குறளை சென்று ஓதோம்ன்னா எங்கேயும் போய் கோள் சொல்ல மாட்டொம்; புறம் பேசமாட்டோம்ன்னு பொருளுங்கையா. அதை நீங்க தப்பா திருக்குறளைன்னு புரிஞ்சிக்கிட்டிங்கையா. இலக்கண முறைப்படி சொன்னா தீக்குறளைச் சென்றோதோம் அப்படின்னு இருந்தா நீங்க சொன்ன பொருளை எடுத்துக்கலாமுங்கையா. ஆனா ச் மிகாம தீக்குறளை சென்றோதோம்ன்னு இருக்குங்கையா. தீக்குறளையைச் சென்றோதோம்ங்கறதுல யை அப்படிங்கற இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கி வந்த (மறைந்து வந்த) இரண்டாம் வேற்றுமைத் தொகைங்கையா இது. இப்ப சொல்லுங்க நான் தப்பா ஏதாவது சொன்னேனா?'
'இல்லைப்பூ. சரியாத் தான் சொல்லியிருக்கீங்க. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்'.
'ஐயா. இது கூட நான் சொல்லலைங்கையா. நம்ம காமராஜர் மாவட்டத்து பொண்ணு கோதை சொன்னது தாங்கையா'.
'கோதை சொன்னதா? என்ன சொல்லியிருக்கு அந்தப் புள்ளை?'
'ஐயா. அதை இங்கன விளக்கக் கூடாதுங்கையா. அது திருப்பாவை விளக்கமெல்லாம் 'கோதை தமிழ்' வலைப்பதிவுல வர்றப்ப படிச்சுக்கலாம்'
'ஆமாம். நீங்க எழுதுற வேகத்துக்கு அதுக்கு ரொம்ப... நாளாயிடுமே.'
'ஐயா. நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க. தீக்குறளை சென்று ஓதோம்ன்னு தானே சொன்னேன். திருக்குறளை ஓதமாட்டேன்னா சொன்னேன்?'.
'என்னப்பூ இது? சொல்றதையும் சொல்லிப்புட்டு அப்புறம் இல்லைங்கறீங்க. அதென்ன திருக்குறளை தீக்குறள்ன்னு சொல்றது? இது நல்லதுக்கில்லைப்பூ. சொல்லிப்புட்டேன்'
'ஐயா. தீக்குறளைன்னா திருக்குறளைன்னு பொருள் கிடையாதுங்கையா. குறள்ன்னா குறுகியது; சின்னதுன்னு பொருளுங்கையா. சின்னதா இருக்கும் எல்லாத்தையுமே குறள்ன்னு சொல்லலாமையா. வாமன அவதாரத்தையும் குறள்ன்னு சொல்லுவாங்கையா தமிழ்ல. புள்ளையாரப்பனையும் அப்படி சொல்றது உண்டுங்கையா. திருக்குறள் முழுக்க சின்ன சின்ன குறள் வெண்பா வகையில பாக்கள் இருக்கிறதால அதுக்கு திருக்குறள்ன்னு பெயருங்கையா. இதெல்லாம் உங்களுக்கே தெரியுமையா'
'ஆமாம். தெரியுந்தான்'
'நான் சொன்னது குறளைங்கறதுங்க ஐயா. குறளை சொல்றதுன்னா புறம் பேசறதுங்கையா. குறளை சென்று ஓதோம்ன்னா எங்கேயும் போய் கோள் சொல்ல மாட்டொம்; புறம் பேசமாட்டோம்ன்னு பொருளுங்கையா. அதை நீங்க தப்பா திருக்குறளைன்னு புரிஞ்சிக்கிட்டிங்கையா. இலக்கண முறைப்படி சொன்னா தீக்குறளைச் சென்றோதோம் அப்படின்னு இருந்தா நீங்க சொன்ன பொருளை எடுத்துக்கலாமுங்கையா. ஆனா ச் மிகாம தீக்குறளை சென்றோதோம்ன்னு இருக்குங்கையா. தீக்குறளையைச் சென்றோதோம்ங்கறதுல யை அப்படிங்கற இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கி வந்த (மறைந்து வந்த) இரண்டாம் வேற்றுமைத் தொகைங்கையா இது. இப்ப சொல்லுங்க நான் தப்பா ஏதாவது சொன்னேனா?'
'இல்லைப்பூ. சரியாத் தான் சொல்லியிருக்கீங்க. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்'.
'ஐயா. இது கூட நான் சொல்லலைங்கையா. நம்ம காமராஜர் மாவட்டத்து பொண்ணு கோதை சொன்னது தாங்கையா'.
'கோதை சொன்னதா? என்ன சொல்லியிருக்கு அந்தப் புள்ளை?'
'ஐயா. அதை இங்கன விளக்கக் கூடாதுங்கையா. அது திருப்பாவை விளக்கமெல்லாம் 'கோதை தமிழ்' வலைப்பதிவுல வர்றப்ப படிச்சுக்கலாம்'
'ஆமாம். நீங்க எழுதுற வேகத்துக்கு அதுக்கு ரொம்ப... நாளாயிடுமே.'
Subscribe to:
Posts (Atom)
