Friday, December 02, 2016

சடகோபர் அந்தாதி - சிறப்புப் பாயிரம் 1

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவால் சிறந்த திருவாய்மொழிப் பண்டிதனே!
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்பநாட்டுப் புலமையனே!

தெய்வங்களில் சிறந்தவன் திருமால்!

அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பாவகைகளைத் திருவாய்மொழியில் சிறப்பாக அமைத்த பண்டிதனான நம்மாழ்வாரே!

நாவண்மையில் சிறந்த அந்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்குத் தக்க நாவண்மை கொண்டவன் தாமரைப் பூவில் அமர்ந்த பிரமனை ஒத்த கம்பநாட்டாழ்வானே!

சடகோபர் அந்தாதி; சிறப்புப் பாயிரம் 

No comments: