Thursday, May 30, 2013

திருப்பாவை அறிமுகம் - 1

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மாமதுரையின் தெற்கே ஏறக்குறைய 75 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அழகிய சிறு நகரம் ச்ரீவில்லிபுத்தூர். பாண்டியன் கொண்டாட, வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து பொற்கிழி அறுத்த, பட்டர்பிரான் விஷ்ணுசித்தன் பெரியாழ்வாரும் அவர்தம் அருமைத் திருமகள் கோதை ஆண்டாளும் வாழ்ந்து இறைவனை வழுத்திய ஊர். சிறு வயதிலிருந்தே கண்ணனைப் பற்றி தன் தந்தையார் பாடிய பாடல்களையும் அவனின் பாலலீலைகளை அவர் மூலமாய்க் கேட்டும் அந்த கண்ணனையே தன் காதலனாய் வரித்துவிட்டாள் கோதை. அவள் பாடிய 30 பாடல்கள் தான் திருப்பாவை.

கோதை பாடிய மற்ற பாடல்களும் அமுதம் போன்றவையே. அவை 'நாச்சியார் திருமொழி' என்ற பெயரில் தொகுக்கப் பட்டுள்ளது. ஆனாலும் திருப்பாவை என்னும் இந்த 30 பாடல்கள் தான் மக்கள் நடுவில் பெரும்பெயர் பெற்று விளங்குகிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் இறைவனை அடையும் வழியை தன் தகப்பனைக்காட்டிலும் மிக எளிதாக இந்த சங்கத் தமிழ் மாலை முப்பதிலும் ஆண்டாள் சொல்லியிருப்பது தான்.

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஏனோ, அந்நாள் நினைவுகள் வந்து, கண்ணிலே...

வாழி குமரன்!

Unknown said...

Vanakkam sir,
Bagavath Ramanujar recites Thiruppavai, at the time of unjavrithi,even periya thirunal period,in the house we can recite only Thiruppavai.He fulfilled andal desire in Thirumalirunjcholai,100 tada adisil.UDAYAVAR is the reason behind this fame.
ARANGAN ARULVANGA.
anbudan,
srinivasan.

Unknown said...

Vanakkam sir,
Bagavath Ramanujar recites Thiruppavai, at the time of unjavrithi,even periya thirunal period,in the house we can recite only Thiruppavai.He fulfilled andal desire in Thirumalirunjcholai,100 tada adisil.UDAYAVAR is the reason behind this fame.
ARANGAN ARULVANGA.
anbudan,
srinivasan.

குமரன் (Kumaran) said...

Yes Srinivasan sir.