Thursday, January 10, 2013

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!





கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சன்மானம் -
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்!
ஆடை உடுப்போம்! அதன் பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

உன்னுடன் நண்பராக விரும்பாதவரையும் உனது அன்பால் வெல்லும் பெருமை உடைய கோவிந்தா! உன்னைப் பாடி நோன்பிற்கு உரியவற்றைப் பெற்று நோன்பினை நோற்றபின் நாங்கள் பெறும் சன்மானங்களை சொல்கிறோம்.

நாடெல்லாம் புகழும் பெருமையால் நன்றாக நெற்றிச்சுட்டி, தோளில் அணையும் வளையல், தோடு, காதின் மேல்புறத்தில் அணியும் செவிப்பூ என்று இவை போன்ற பலவிதமான அணிகலன்களை அணிவோம்!

புத்தாடைகளை உடுப்போம்! அதன் பின்னே பால் சோறு பொங்கி அதில் நெய் நிறைய இட்டு அந்த நெய் முழங்கை வரை வழிந்து வர, அனைவரும் கூடி அமர்ந்து உண்டு மகிழ்வோம்!

2 comments:

Unknown said...

கூடாரை வெல்லும் கோவிந்தன் . அருமை

குமரன் (Kumaran) said...

நன்றி திரு.சேகர்.