Saturday, December 18, 2010

க்ருஷ்ணம் வந்தே பரமானந்தம் வந்தேஹம்!

18 comments:

sury siva said...

முதல் வாக்கியம்
க்ருஷ்ணம் வந்தே பரமானந்தம் வந்தேஹம்.
பரமானந்தம் என்ற வார்த்தையை, பரமன் அந்தம் என உச்சரிக்கிறார்கள்>
பரமன் அந்தனா !! குருடனா !!

பரம ஆனந்தம் என்ற சரியான சிலபிள் டிடக்ஷன்.

நான் அந்த யூ ட்யூபீற்கே சென்று ஒரு கமென்ட் போட்டு திரும்பவும் பாடச்சொல்லியிருக்கிறேன்.
ஏன் என்றால், ட்யூன் அற்புதமாகவும் தெய்வ சான்னித்யமாகவும் இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com

sury siva said...

இந்த கமென்ட் ஐ எழுதியபின் என் மனைவியிடம் இது போன்ற அழகான சொல் பரமானந்தம்
என்பதை பரமன் + அந்தம் என்று பிரித்து இருக்கிறார்கள் பரமன் குருடன் என்று சொல்வது போல்
அல்லவா இருக்கிறது என்றேன். அவள் அந்தக் காலத்து ஸாஹித்ய ரத்னா.

" அந்தம் என்றால் முடிவு என்று உங்களுக்குத் தெரியாதா ! பரமன் ஒருவனே அந்தம் . எங்கு,எப்படி,
எவ்வழியாகச் சென்றாலும் எவருக்குமே பரமன் ஒருவன் தான் இலக்கு, முடிவு, அந்தம். அந்தப்பொருள்
உங்களுக்குத் தோன்ற வில்லையா ! "

என்கிறாள.

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

குமரன் (Kumaran) said...

உண்மை தான் ஐயா. அந்தம் என்றால் முடிவு. அந்தகம் என்றால் குருடு.

மாதேவி said...

அற்புதமான கிருஸ்ணபஜன். இசைமனத்தை இழுத்துச்செல்கிறது.

பாடலுக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

உண்மை மாதேவி. பகிர்ந்து கொண்டது அதனால் தான்.

sury siva said...

//அந்தம் என்றால் முடிவு. அந்தகம் என்றால் குருடு. //

अन्ध andha adj. blind
अन्ध andha adj. dark
अन्ध andha adj. making blind

http://www.spokensanskrit.de/index.php?script=HK&tinput=%E0%A4%85%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A7&country_ID=&trans=Translate&direction=AU

antham ( first tha )is end. mudivu .
subbu thatha

sury siva said...

paadalai ucharikkumbodhu naalavathu dha thaan kaathil vizhukirathu.

ungka kaadai mudhalil nalla doctor itam kaanbiyunga appadi en manaivi cholkiraal.

neengal ketpathu ethanavathu tha ?

subbu thatha

குமரன் (Kumaran) said...

அதே இடத்தில் அந்தக என்றாலும் குருடு என்று காட்டுகிறது ஐயா. இது வரையில் அந்தக என்றால் தான் குருடு என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த என்றாலும் குருடு (எந்த த என்பதைப் பொறுத்து) என்று புரிந்தது.

பரமானந்தம் என்பதை இசைக்கேற்பப் பிரித்துப் பாடுகிறார்கள் என்பதால் எனக்கு பரமானந்தம் என்றே கேட்கிறது. அதில் வருவது முதல் 'த'வா நான்காவது 'த'வா?

sury siva said...

அந்தம் முதல் த வோ அல்லது நாலாவது த வோ ?
எதா இருந்தா என்ன ?

எனை மறந்து அந்த இசையில் லயித்துப்போய்
கிடைத்த
க்ருஷண் முகுந்த ,கோபால, கோவிந்த ,
அந்த நந்த நந்தனின்
ப்ரேமானுபவம் அல்லவா
ஸ்லாக்கியம் !!

சுப்பு ரத்தினம்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் ஐயா. இந்த வீடியோவின் பின் பகுதியில் வரும் நந்த ஆனந்த பகுதியும் அருமை. இன்று இதனைப் பல முறை கேட்டு நானும் குழந்தைகளும் ஆடிக் கொண்டிருந்தோம்.

sury siva said...

என்னமோ தெரியவில்லை.

காலையில் இந்த பஜன் கேட்டதிலிருந்து வாய் இதையே
ஒரு ஆறு மணி நேரமாக முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறது.
(humming )

இதனுடைய அடிப்படை ஹம்ஸத்வனி ராகம் காரணமா அல்லது
க்ருஷ்ண ப்ரேமையா !!

சுப்பு தாத்தா.

sury siva said...

hi
i again heard the song intently.
What I hear is
Parama nandham.
(The first among the nandhas).
I have only heard it wrongly.
I enjoy the bhajan.
subbu rathinam

Radha said...

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே !
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே !

முரளீதரா ! கிருஷ்ணா துளசீதரா
மன மோஹனா ! ஆனந்த வந்தனா !
ஹே கிரிதாரி ! வனமாலீ !
யமுனா தீர விஹாரி ஹரி !

அருமை அருமை. thanks for sharing. :-)

குமரன் (Kumaran) said...

:-) Glad to hear that Radha!

Kavinaya said...

அருமை. குட்டி கோபியர்கள் சேர்ந்து ஆடினா சூப்பரா இருக்கும் :)

குமரன் (Kumaran) said...

அப்ப என்னை ஆடாதேன்னு சொல்றீங்க. அப்படித் தானே? :-)

குட்டிப்பசங்க ஆடினா தான் நல்லா இருக்கும். போய் தான் நானெல்லாம் ஆடணும். எங்க வீட்டு அஸ்திவாரம் பலமா இருக்குங்கற நம்பிக்கையில சொல்றேன். :-)

Kavinaya said...

//அப்ப என்னை ஆடாதேன்னு சொல்றீங்க. அப்படித் தானே? :-)//

பக்தி பரவசத்தில் யார் வேணுன்னாலும் எப்ப வேணுன்னாலும் எப்படி வேணுன்னாலும் ஆடலாம் :) அதை எப்படி வேண்டான்னு சொல்றது?

மேடையில் ஆடறதுக்கு நடனம் முறையா அமைச்சு குட்டீஸ் ஆடினா நல்லாருக்கும்னு சொன்னேனப்பா :)

//எங்க வீட்டு அஸ்திவாரம் பலமா இருக்குங்கற நம்பிக்கையில சொல்றேன். :-)//

இல்லைன்னாலும், கண்ணன் பார்த்துப்பான் :)

குமரன் (Kumaran) said...

Basement போய் தான் நானெல்லாம் ஆடணும். Left without saying Basement. :-)