Thursday, December 14, 2023

சொர்க்க வாசலா? வைகுண்ட வாசலா?

 'வா குமரா! என்ன இந்த பக்கம்?'

'கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தேன். அப்படியே உன்னைப் பாத்துட்டு போலாம்னு'
'என்ன விஷேசம்?'
'ஒண்ணுமில்ல. வைகுண்ட வாசல் திருவிழா நடக்குதுல்ல. அதான்'
'வைகுண்ட ஏகாதசிக்குத் தானே சொர்க்கவாசல் தொறப்பாங்க?'
'மாதவா. அது சொர்க்க வாசல் இல்ல. வைகுண்ட வாசல்'
'ரெண்டும் ஒண்ணு தானேப்பா?!'
'இல்லை. புண்ணியம் செஞ்சவங்க போறது சொர்க்கம். பாவம் செஞ்சவங்க போறது நரகம்'
'அதான் தெரியுமே?! வைகுண்டம்ங்கறதும் புண்ணியம் செஞ்சவங்க போறது தானே? அப்ப அத சொர்க்கம்ன்னு சொன்னா தப்பா?'
'ஒரு வகையில சரி தான். ஆனா, இன்னொரு விதத்துல சொன்னா வித்தியாசம் புரியும்'
'அப்ப சொல்லு!'
'இந்திரனும் தேவர்களும் இருக்கிறது சொர்க்கம். நாம செஞ்ச புண்ணியம் தீர்ந்தவுடனே நாம சொர்க்கத்துல இருந்து திரும்பவும் பூமியில அடுத்த பிறவி எடுப்போம்'
'சரி'
'வைகுண்டம் போறதுன்னா திரும்பி வந்து இன்னொரு பிறவி எடுக்கிறது இல்லை.
அங்கே தான் பெருமாளும், ஆதி சேஷன், கருடன், சேனைமுதலியார், ஆழ்வார் ஆசாரியர்கள் எல்லாரும் இருக்காங்க.
மோக்ஷம், முக்தின்னு சொல்றது இந்த வைகுண்டம் போறதத்தான்.
அங்கே போனா திரும்பி வர்ற கதை இல்லை.
ந புனர் ஆவர்த்ததே ந புனராவர்த்ததே ன்னு வேதம் பாடும். அப்படின்னா வைகுண்டம் போனவங்க திரும்பி வருவதில்லை; திரும்பி வருவதில்லைன்னு அர்த்தம்'
'அப்படியா?
அப்ப யாராவது காலம் ஆனா இப்படியாப்பட்ட இந்த பிரமுகர் வைகுண்ட பதவி அடைந்தார்னு போஸ்டர் அடிக்கிறாங்கள்ல. அந்த வைகுண்ட பதவின்னா என்ன?'
'அவர் காலம் ஆனதும் சொர்க்கம், நரகம் ரெண்டுக்கும் போகாம வைகுண்டத்துக்கு போகணும்ங்கறது இவங்க விருப்பம். அதத்தான் அப்படி சொல்றாங்க.
ஓம் சாந்தின்னு சொல்றதும் அது தான். சும்மா போறது வர்றதுன்னு இல்லாம இந்த ஆத்மா வைகுண்டம் போயி நிம்மதியா இருக்கட்டும்னு வேண்டிக்கிறது'
'சரிப்பா. இப்ப புரியுது.
ஆனா வைகுண்ட ஏகாதசி இன்னைக்கு இல்லையே? அன்னைக்குத் தானே வைகுண்ட வாசல் தொறப்பாங்க?!'
(தொடரும்)
- அன்பன் குமரன் மல்லி

No comments: