Monday, December 14, 2015

சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?!

'கண்ணன் எல்லா இடத்துலயும் இருக்கான்'ன்னு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லாம உறுதியா சொன்ன பிள்ளைய கோவிச்சு, 'இங்கே இருக்கானா?' ன்னு சவால் விட்டு இரணியன் தூணை உடைக்க, அங்கேயே அப்போதே அவன் கொட்டத்தை அழிக்க, தூணுல இருந்து வெளிய வந்த நரசிங்கப் பெருமானுடைய பெருமை நம்மால ஆராயுற அளவுல இருக்கா என்ன?

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?!


No comments: