கல்யாணத் தேனிலா காய்ச்சாதப் பால்நிலா
நீதானே வானிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா (கல்யாணத் தேனிலா)
தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் தூறலா
என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலா வா வா நிலா ஆ ஆ அ (கல்யாணத் தேனிலா)
உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப் பலா உன் சொல்லிலா ஆ ஆ ஆ (கல்யாணத் தேனிலா)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜேசுதாஸ், சித்ரா
திரைப்படம்: மௌனம் சம்மதம்
8 comments:
I love the song too.. :)
Great! :-)
நல்ல பாடல்....அந்த நாள் அத்திகாய்..வான் நிலா..படல் வரிசையில் இதுவும் ஒன்று..
//படல்// அல்ல
பாடல்
ஆமாம் பாசமலர். அதனால் தான் இந்தப் பாடலும் பிடிக்கிறது போலும்.
எனக்கும் பிடித்த பாடல். :-)
மெல்லிசைப் பகிர்வுக்கு நன்றி
நன்றி சிவகுமாரன்.
Post a Comment