tag:blogger.com,1999:blog-17517026.post2435925443997753293..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: திராவிட நாடும் தமிழ் நாடும்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-17517026.post-79875483074301248242007-09-24T19:28:00.000-05:002007-09-24T19:28:00.000-05:00வடமொழி என்று தமிழில் எழுதும் போது அதே 'வடமொழி' என்...வடமொழி என்று தமிழில் எழுதும் போது அதே 'வடமொழி' என்ற சொல்லை வடமொழிகாரர்கள் பயன்படுத்தவில்லை என்று சொல்வது போல் இருக்கிறது. தமிழில் ஏன் 'திராவிட' என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்பது.<BR/><BR/>திரமிட (தமிழ்) வாஸ்யானர் என்று ஒருவர் காஞ்சிபுரத்தில் இருந்து சில வடமொழி நூல்களை மொழிபெயர்த்தாரம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-20858221325797873162007-09-24T16:25:00.000-05:002007-09-24T16:25:00.000-05:00ஓகை ஐயா. தங்கள் கருத்துகளுக்கு நன்றி. நீங்கள் சொன்...ஓகை ஐயா. தங்கள் கருத்துகளுக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் 'திராவிடப் பகுதிகள்' என்று குறிக்கப்பட்டவை பற்றி வரலாற்று அறிஞர்களையும் வடமொழி அறிஞர்களையும் தான் கேட்கவேண்டும். ஆனால் நம் இடையேயும் அவர்கள் இருக்கலாம் என்பதால் இந்த இடுகையில் கேட்டேன். <BR/><BR/>அரவாடு என்று தெலுங்கர்கள் நம்மையும் வடுகர் என்று நாம் அவர்களையும் சொல்வது ஏன் என்று இராம.கி. ஐயா ஒரு இடுகையில் சொல்லியிருந்தார். படித்திருக்கிறீர்களா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-22872927080353224352007-09-24T16:22:00.000-05:002007-09-24T16:22:00.000-05:00வவ்வால். என் பதிவுக்கு வர சிபாரிசு கடிதம் தேவையில்...வவ்வால். என் பதிவுக்கு வர சிபாரிசு கடிதம் தேவையில்லை என்பது சரி தான். பின்னூட்டம் போட தோன்றும் இடங்களில் போடுங்கள். அறுதியிட்டுப் பேச முடியாதவை தான் இந்த இடுகையில் பேசப்பட்டவையும் இன்னும் சில இடுகைகளில் பேசப்பட்டவையும்.<BR/><BR/>மானசீகமாக வெளிப்படையாகச் சொல்லாததை புரிந்து கொள்ளச் சொல்வார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது நடப்பதுண்டு தான். அதே போல் அவர்கள் சொல்லாததையும் சொன்னதாக (அல்லது சொல்லாமல் மறைவாகச் சொன்னதாக) நாமே எண்ணிக்கொண்டு எதிர்வினை செய்வதும் உண்டு. பலமுறை நான் செய்திருக்கிறேன். :-) <BR/><BR/>கோவி.கண்ணனும் நீங்களும் ஒன்று என்று நினைத்தது ஏன் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் நீங்கள் வெவ்வேறு ஆட்கள் என்பது வெகு நாட்களுக்கு முன்பே தெரிந்து விட்டது. இப்போது நீங்கள் அவர் காலை வாரிவிட்டதால் இல்லை. :)<BR/><BR/>சரி. விவகாரமாக இல்லைன்னே வச்சுக்குவோம். விவரமாகவும் நகைச்சுவையாகவும் பின்னூட்டம் இடுபவர்கள்ன்னு சொல்லலாமா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-55267109861117846722007-09-15T10:17:00.000-05:002007-09-15T10:17:00.000-05:00குமரன், இந்தப் பதிவு 'திராவிட' என்கிற அடைமொழி எந்த...குமரன், இந்தப் பதிவு 'திராவிட' என்கிற அடைமொழி எந்த நிலப்பிரிவைக் குறிக்கிறது என்பதாக இருக்கிறது. இக்கேள்விக்கான பதில் நிச்சயமாக தமிழில் இருக்க வாய்ப்பில்லை. வடமொழி வல்லுனர்களும் சரித்திர வல்லுனர்களும் தெளிவு படுத்தவேண்டியதாக இது இருக்கிறது.<BR/><BR/>ஆனால்,<BR/><BR/>தமிழும் அதன் கிளை மொழிகளையும் தாய் மொழியாகக் கொண்டவர்களை மொத்தமாக மற்றவர்கள் அழைப்பதற்கு உண்டான சொற்கள் தான் திராவிடம் மற்றும் திராவிடர்கள் என்பது என் புரிதல். இதை இப்போது தமிழரில் ஒரு பகுதியினர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள பயன்படுத்துவது அரசியல் காரணங்களுக்காக. திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதிலிருந்து பிறழ்ந்து வடமொழி உச்சரிப்பு கலந்து இப்பகுதியையும் இப்பகுதி மக்களையும் குறிக்கப் பயன்படுத்தப் பட்ட சொல் என்னும் விளக்கம் மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.<BR/><BR/><BR/>தெலுங்கு மக்கள் தம்மை மனவாடு என்றும் தமிழர்களை அரவாடு என்றும் அழைப்பது ஒரு வழக்கம். நாம் நம்மை அரவாடு என்று ஒருபோதும் அழைத்துக் கொள்வதில்லை. நாம் நம்மை அரவாடு என்று அழைப்பது எப்படி ஏற்புடையதல்லவோ அது போலவே நாம் நம்மை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதும் ஏற்புடையதில்லை. இந்த அரசியலை என்னவென்று சொல்வது?ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-50590632648933068052007-09-13T16:27:00.000-05:002007-09-13T16:27:00.000-05:00ஆமாம் V. இது தேவநேயப்பாவாணரைப் பற்றியோ மொழிகளைப் ப...ஆமாம் V. இது தேவநேயப்பாவாணரைப் பற்றியோ மொழிகளைப் பற்றியோ பேசும் இடுகை இல்லை. அவற்றைப் பற்றிப் பேசும் போது பிறிதோரிடத்தில் பேச்சைத் தொடரலாம். தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-40587983508586787822007-09-13T16:10:00.000-05:002007-09-13T16:10:00.000-05:00திரு குமரன், இது ஞானமுத்து தேவநேய்னைப் (அவர் offic...திரு குமரன், இது ஞானமுத்து தேவநேய்னைப் (அவர் official பெயர்) ப்ற்றியே, மொழிகளைப் பற்றிடயோ இல்லை. அதனால் அதைப்பற்றி பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அதை பற்றி சரியான இடத்தில் பேசலாம்.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-69677855859634921962007-09-13T12:41:00.000-05:002007-09-13T12:41:00.000-05:00பின்னூட்டத்தைத் திருத்தி மீண்டும் இட்டதற்கு நன்றி ...பின்னூட்டத்தைத் திருத்தி மீண்டும் இட்டதற்கு நன்றி திரு. V. <BR/><BR/>தமிழ் தான் முதல் மொழி. அதிலிருந்து தான் மற்ற திராவிட குடும்ப மொழிகள் பிறந்தன. இந்தக் கருத்து தான் இது வரை நானும் கொண்டிருக்கும் கருத்து. தமிழும் கன்னடமும் ஒரே நேரத்தில் தோன்றிய மொழிகளாக இருக்கக் கூடும் என்று கன்னடர்கள் காட்டுவதாக சில கட்டுரைகள் படித்திருக்கிறேன். ஆனால் இன்னும் சரியான தரவுகள் படிக்கவில்லை. அதனால் இந்தக் கருத்து 'பேத்தல்' என்ற வகையில் இன்னும் வரவில்லை என்பது தான் என் துணிபு. <BR/><BR/>தேவநேயப் பாவாணர் தன் எழுத்துகளின் கீழ் 'தேவநேயன்' என்று கையொப்பம் இட்டிருந்தாலும் ஆதிசங்கரரை அவர் இவர் என்று பேசிய வாயால் (எழுதிய கையால்) தேவநேயரையும் அப்படியே எழுதியிருக்கலாம். இராமன், கண்ணன், முருகன் என்று எழுதுவதைப் போல் எழுதியிருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். :-) <BR/><BR/>தேவநேயப் பாவாணரின் கருத்துகளை இப்போது தான் (வள்ளுவரின் இன்பத்துப் பால் பதிவில் எழுதத் துவங்கிய பிறகு) படிக்கத் தொடங்கியிருக்கிறேன். படித்த வரையில் ஏரணத்திற்குப் பொருந்தியதாகத் தான் இருக்கின்றன அவர் கருத்துகள். <BR/><BR/>மனோன்மனீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் ஏற்கனவே இந்தப் பதிவில் ஒரு இடுகையில் இட்டிருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-76169305218432829202007-09-13T11:41:00.000-05:002007-09-13T11:41:00.000-05:00>அந்தச் சொல்லே தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராகவ...>அந்தச் சொல்லே தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராகவும் பார்ப்பனியத்தை எதிர்த்து மக்களைத் திரட்டும் கருத்தாக்கமாகவும் உருவானது <BR/><BR/>அதை 'சமஸ்கிருத மயமாகுதல்' எனவும் அழைக்கலாம் !!<BR/><BR/>> அந்தச் சொல் பார்ப்பனப் பிரிவுகளை மட்டும் சொல்ல வந்த சொல் இல்லை என்று தோன்றுகிறதே. சரி தானா? <BR/><BR/>ஆமாம், இல்லை. அது context ஐ பொருத்தது<BR/><BR/>>அப்படி என்றால் ஆங்கிலேயர்கள் மொழி என்ற பொருளில் எடுத்துக் கொண்டு திராவிட மொழிக்குடும்பம் என்று சொன்னதையும் அதனை படித்த நம்மவர்கள் அதனை ஏற்றுக்கொண்டதையும் தவறாகச் சொல்ல முடியாதே?!<BR/><BR/>ஆங்கிலேயர்/மேற்க்கத்திய புரிந்து கொண்டதிலும், திராவிட இயக்கம் "புரிந்து கொண்டதிலும்" பெரிய வேறுபாடு உள்ளது. மேற்க்கத்திய மொழியியலில் "திராவிட" என்பது ஒரு மொழிக்குடும்பம்தான், அதாவது ஒரு logical construction.They had to give a name to a logical category and that name was Dravida. அதை தவறாக புரிந்து கொண்ட நம்மூர் பகுத்தறிவு சிங்கங்கள், தமிழ்தான் ஆதிதிராவிட மொழி, அதிலிருந்துதான் மற்ற திராவிட மொழிகள் பிறந்தன என்ற பேத்தலை நம்புகிறார்கள்.தேவநேயன் போன்ற எழுத்தாளர்கள் தமிழ்தான் மூல திராவிட மொழி என்று பல புத்தகங்கள் எழுதினார்கள். தமிழ்நாடு அரசாங்கத்தின் unedited தமிழ்தாய் வாழ்த்து பார்த்தீர்களானல் அது புலனாகும். மேற்க்கத்தியவர் பகுத்தறிவில் புரிந்து கொண்டனர்; தமிழர் அதை ஒரு மதமாக 'புரிந்தனர்'.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-7775442557904215812007-09-13T10:52:00.000-05:002007-09-13T10:52:00.000-05:00தாக்குதல்கள் என்று பன்மையில் எழுதியதற்கு மன்னிக்கவ...தாக்குதல்கள் என்று பன்மையில் எழுதியதற்கு மன்னிக்கவும் V. ஒருவரைத் தான் நீங்கள் முட்டாள் என்று எழுதியிருந்தீர்கள். அதன் தாக்கம் என்னுள் அதிகமாக இருந்ததோ என்னவோ? மற்றபடி தாக்குதல்கள் என்று எழுதியும் பழகிவிட்டேன் என்று எண்ணுகிறேன். அதனால் முட்டாள் என்று பழைய தலைமுறை எழுத்தாளரை எழுதியிருந்த தாக்கமும் பழக்க தோஷமும் சேர்ந்து தாக்குதல்கள் என்று என்னை எழுதவைத்துவிட்டன போலும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-82971824817375588492007-09-13T10:33:00.000-05:002007-09-13T10:33:00.000-05:00திரு குமரன், ஒரு பழைய தலைமுறை தமிழ் நாட்டு எழுத்தா...திரு குமரன், ஒரு பழைய தலைமுறை தமிழ் நாட்டு எழுத்தாளரை 'முட்டாள்' என தாக்கி எழுதினால், அது படிக்கக்கூடாதது என்கிறீர்கள். மேலூம் "தாக்குதல்கள்" என பன்மையில் எழுதியுள்ளீர்கள் , நான் ஒரு மனிதரைத் தானே முட்டாள் என்றேன்.இது , இலக்கணப்பிழையா, புரிந்து கொண்டதா? அதுவும், என் சொந்த வெறுப்பிலிருந்து எழத வில்லை. அவருடைய எந்த கருத்தினால் அப்படி எழுதினேன் என் விளக்கமாக உள்ளதே!வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-73393005040223800022007-09-13T08:06:00.000-05:002007-09-13T08:06:00.000-05:00திரு.V. தனிமனிதத் தாக்குதல்களுடன் இருக்கும் உங்கள்...திரு.V. தனிமனிதத் தாக்குதல்களுடன் இருக்கும் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-77972977699323903212007-09-12T16:45:00.000-05:002007-09-12T16:45:00.000-05:00திரு. V. னீங்கள் சொல்வது போல் அந்தக் காலத்தில் திர...திரு. V. <BR/><BR/>னீங்கள் சொல்வது போல் அந்தக் காலத்தில் திராவிடர்கள் என்று வடமொழி நூல்கள் தென்னகத்தில் வாழ்ந்த பிராமணர்களை மட்டுமே குறித்தன; மற்றவர்களை அப்படிக் குறிக்கவில்லை என்பது மட்டும் உண்மையானால் காலம் செய்யும் கோலத்தை நினைத்து புன்னகை தான் தோன்றுகிறது. அந்தச் சொல்லே தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராகவும் பார்ப்பனியத்தை எதிர்த்து மக்களைத் திரட்டும் கருத்தாக்கமாகவும் உருவானது சொற்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் எப்படி மாறுபட்ட பொருள்களைக் கொள்கின்றன; அவற்றின் வலிமை என்ன என்பதை நன்கு காட்டுகிறது. காலம் எல்லாவற்றையும் நடத்துகிறது. <BR/><BR/>அறுதியிட்டுக் கூற முடியும் என்று சொல்லிவிட்டுப் பின்னர் அதற்குக் கொஞ்சம் எதிரான தகவல்களையும் தந்திருக்கிறீர்கள். பஞ்ச திராவிட பிராமணர்களைப் பற்றிய ஆவணம் மிகத் தெளிவாகவும் மற்ற இடங்களில் மொழி, இனம், நாடு போன்றவற்றிற்கு திராவிட என்ற சொல் பயன்பட்டிருக்கிறது என்பது தெளிவின்றியும் இருந்தாலும் அவற்றிற்கு திராவிடம் என்ற சொல் பயன்பட்டிருப்பதே அந்தச் சொல் பார்ப்பனப் பிரிவுகளை மட்டும் சொல்ல வந்த சொல் இல்லை என்று தோன்றுகிறதே. சரி தானா? <BR/><BR/>அப்படி என்றால் ஆங்கிலேயர்கள் மொழி என்ற பொருளில் எடுத்துக் கொண்டு திராவிட மொழிக்குடும்பம் என்று சொன்னதையும் அதனை படித்த நம்மவர்கள் அதனை ஏற்றுக்கொண்டதையும் தவறாகச் சொல்ல முடியாதே?!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-77654685982935915202007-09-12T16:38:00.000-05:002007-09-12T16:38:00.000-05:00ஜீவா. நீங்கள் சொல்லும் பொருளையும் படித்ததாக நினைவி...ஜீவா. நீங்கள் சொல்லும் பொருளையும் படித்ததாக நினைவிலை. தீர: என்றால் கரை என்று பொருள் வரும் தான் வடமொழியில். ஆனால் அதிலிருந்து த்ராவிட என்ற சொல் பிறக்குமா; அது கரையில் வாழ்பவர்கள் என்று பொருள் தருமா என்று தெரியவில்லை. ஆரியர்களும் நதியோரங்களிலேயே தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பிராகிருத (இயற்கையாக எழுந்த மொழிகள் என்று பொருள்) மொழிகளிலிருந்து சம்ஸ்கிருத (நன்கு செய்யப்பட்ட மொழி என்று பொருள் - அதனால் இதனைத் செந்தமிழ் என்றாற் போல் செங்கிருதம் என்று சொல்வார்கள் தமிழறிஞர்கள்) மொழி செம்மொழியாக ஏற்படுத்தப்பட்ட போது அவர்கள் சிந்து நதிக்கரையிலோ கங்கை யமுனைக்கரைகளிலோ தான் இருந்திருக்க வேண்டும். அதனால் அவர்கள் தங்களையும் திராவிடர்கள் என்றே அழைத்துக் கொள்ள வேண்டும் உங்கள் பொருளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால். <BR/><BR/>கடலோரத்தில் வாழ்பவர்கள் என்றால் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. சரஸ்வதி நதியையே இருப்பதிலேயே பெரிய நீர்நிலையாக வேதங்களில் சொல்லியிருப்பதாகவும் சமுத்ர என்ற சொல்லும் கப்பல் என்ற சொல்லும் பிற்காலத்தில் தான் வடமொழி நூல்களில் வருவதாகவும் படித்திருக்கிறேன். ஆனால் அவை எவ்வளவு தூரம் சரி என்று தெரியாது. ஆனால் இந்தப் பொருள் கொள்வதிலும் கலிங்கமும் வங்கமும் தடை செய்கின்றன. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-37460082266335015432007-09-12T07:23:00.000-05:002007-09-12T07:23:00.000-05:00குமரன் ,உங்கள் பதிவுக்கு வர கோவி அவர்களின் சிபாரிச...குமரன் ,<BR/><BR/>உங்கள் பதிவுக்கு வர கோவி அவர்களின் சிபாரிசு கடிதம் எல்லாம் தேவையா, அதற்கு முன்னரே பதிவு வந்த போதே படித்து விட்டேன். எனக்கு என்னமோ இது பல முறை பேசப்பட்ட ஒன்றாக தெரிந்தது, மீண்டும் பேசினாலும் முன்னர் பேசியதை அகழ்வெடுத்து ஒரு கட்டத்திற்கும் மேல் எதுவும் நகராமல் தொங்கிகொண்டு நிற்கும் , அறுதியிட்டு பேச முடியாது இதில். எனவே பின்னூட்டம் போடாமல் வேடிக்கைமட்டும் பார்த்தேன்!<BR/><BR/>பெரும்பாலும் உங்கள் பதிவு இன்னும் கொஞ்சம் தெரிந்த நபர்களின் பதிவு எல்லாம் படிப்பது உண்டு , பின்னூட்டம் போடாமல் சென்றுவிடுவதால் தெரிவதில்லை.<BR/><BR/>பல நேரங்களில் பிழையை சுட்டிக்காட்டினால் , வருத்தப்பட்டு இது கூட புரியவில்லையா , அந்த அர்த்ததில் அது சொல்லப்படவில்லை, என மானசீகமாக வெளிப்படையாக சொல்லப்படாத ஒன்றையும் புரிந்துக்கொள்ள சொல்வார்கள். எனக்கு அந்த அளவு கற்பனை வளத்தோடு வாசிக்கவும் தெரியாது. எனவே தேமே என்று படித்துவிட்டு போய்விடுவேன்.<BR/><BR/>கோவிக்கண்ணனும் நானும் ஒன்று என்று நினைத்தீர்களா சரியாப்போச்சு, இப்போ அவரை கால் வாரியதால் நான் அவன் இல்லை என்று முடிவுக்கு வந்துட்டிங்களா, நல்ல வேலை, அவருக்கு அவரே வவ்வால் பெயரில் வந்து பின்னூட்டம் போட்டு கொள்கை பரப்பிகிறார்னு நினைக்காம விட்டிங்களே :-))<BR/><BR/>//விவகாரமாகவும் (விவரமாகவும்? :) ) நகைச்சுவையுடனும் இடுபவர்கள். அவ்வளவு தான்.//<BR/><BR/>நினைப்பதை உள்ளது உள்ளபடியே சொன்னால் அதற்கு பெயர் விவகாரமா? என்ன கொடுமை சார் இது!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-10053487984033517482007-09-12T06:45:00.000-05:002007-09-12T06:45:00.000-05:00//புரியுது, கோவி.கண்ணன் என்ற பெயரில் எழுதுவதும், வ...//புரியுது, கோவி.கண்ணன் என்ற பெயரில் எழுதுவதும், வவ்வால் என்ற பெயரில் எழுதுவதும் ஒருவரே என்று நினைத்திருக்கிறீர்கள். இதுதான் குழப்பத்திற்கு காரணமோ.<BR/>:-)<BR/>//<BR/><BR/>இல்லை கோவி.கண்ணன். உங்கள் இருவர் பெயர்களும் மனத்தில் நிலைபெறும் முன்னால் இருந்த குழப்பம் அது. அதற்குக் காரணம் நீங்கள் இருவருமே பின்னூட்டங்கள் விவகாரமாகவும் (விவரமாகவும்? :) ) நகைச்சுவையுடனும் இடுபவர்கள். அவ்வளவு தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-76335753167727999832007-09-12T05:36:00.000-05:002007-09-12T05:36:00.000-05:00முதல் நூற்றாண்டு கிரேக்க மாலுமி பெரிப்ளூசின் பயணங்...முதல் நூற்றாண்டு கிரேக்க மாலுமி பெரிப்ளூசின் பயணங்களீருந்து தயாரிக்கப் பட்ட இந்தியாவின் படம். இதில் பாண்டியன் , திரமிடிகா (திராவிடாவின் திரிபு) என இரு பிரதேசங்கள் குடுக்கப் பட்டுள்ளன. பாண்டிய நாடும் , திராவிட நாடும் தனியாக அந்நாட்டகளில் கருதப்பட்டவை. <BR/><BR/>http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9c/PeriplusMap.jpgவன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-28597377187341421372007-09-12T05:02:00.000-05:002007-09-12T05:02:00.000-05:00>அது மற்ற பிரிவினருக்கான பிரிவினைகள் என்று அறுதியி...>அது மற்ற பிரிவினருக்கான பிரிவினைகள் என்று அறுதியிட்டுக் கூறமுடியுமா?<BR/><BR/>அப்பிரிவினை மற்றவர்களுக்கு சேராது என அறுதியிட்டு கூறமுடியும்<BR/><BR/>>திராவிட என்ற சொல் மற்ற எந்த சூழ்நிலையிலும் வடமொழி நூல்களில் பயன்படுத்தப்படவில்லையா? <BR/><BR/>தமிழ் மொழி என்ற அர்த்ததிலும் பயன்பட்டுள்ளது. இனம் எனவும் பயன்படுத்த்ப் பட்டுள்ளது. உ. மனுஸ்ம்ரிதியில் திராவிடர் ஒரு காலத்து க்ஷத்ரியர் என சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அவர்கள் யார், எங்கிருந்தபனர், என்ன மொழி பேசின்ர என்ற விபரங்கள் இல்லை. புராணங்களிலுல் 'திராவிட தேசம்' பேசப்பட்டுள்ளது. ஆனால் அதை பற்றி விபரங்கள் இல்லை. சில இடங்களில் தற்கால தொண்டைநாடு, தென்னாந்திரா திராவிட நாடு என்றழைக்கப்பட்டுள்ளது. திருவாய்மொழி பினபற்றுபவர்கள் (தமிழ் வைணவர்கள்)திராவிடர்கள் எனவும் ஒரு மலயாள குறிப்பு உள்ளது<BR/><BR/>http://upload.wikimedia.org/wikipedia/en/e/e4/EpicIndia.jpg<BR/><BR/>பஞ்ச திராவிடர் பாகுபாடுதான் ஆவணங்களிடையே துல்லியமாகவும், சுய நிர்ணயம் குறிப்பிட்டவையாகவும் உள்ளன. மற்ற 'திராவிட' ஆவணங்கள் vague ஆகவும் மற்றவர்களைப் பற்றி பேசுபவையாகவும் உள்ளன<BR/><BR/>>எனக்குத் தெரிந்து அது தமிழ் என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது<BR/><BR/>அது சரி.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-17691255313502928802007-09-11T21:17:00.000-05:002007-09-11T21:17:00.000-05:00நான் படித்த/கேளிவிப்பட்ட வரை: த்ராவிட் என்றால் - ஆ...நான் படித்த/கேளிவிப்பட்ட வரை: த்ராவிட் என்றால் - ஆறு அல்லது கடலின் கரை என்று பொருள் என நினைக்கிறேன் - அதாவது தெற்கில், கடல் மற்றும் ஆறுகளின் கரை அருகே வசிப்பவர்களை அடையாளம் சொல்ல. இந்த வகையில் பார்த்தால் - மராட்டியமும், குஜராத்தும் வருகிறது.<BR/><BR/>(கலிங்கமும், வங்காளமும் தான்!)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-74349676525148717082007-09-11T21:16:00.000-05:002007-09-11T21:16:00.000-05:00ஒன்று சொல்ல மறந்தேனே. உங்களையும் கோவி.கண்ணனையும் ம...ஒன்று சொல்ல மறந்தேனே. உங்களையும் கோவி.கண்ணனையும் முன்பெல்லாம் குழப்பிக் கொள்வேன் வவ்வால். இப்போது அந்தக் குழப்பம் எல்லாம் தீர்ந்தது. முன்பு கூட ஒரு முறை இந்தக் குழப்பத்தைச் சொன்னேன் என்று நினைக்கிறேன். :-)//<BR/><BR/>குமரன்,<BR/><BR/>புரியுது, கோவி.கண்ணன் என்ற பெயரில் எழுதுவதும், வவ்வால் என்ற பெயரில் எழுதுவதும் ஒருவரே என்று நினைத்திருக்கிறீர்கள். இதுதான் குழப்பத்திற்கு காரணமோ.<BR/>:-)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-15014207166200206032007-09-11T20:46:00.000-05:002007-09-11T20:46:00.000-05:00ஒன்று சொல்ல மறந்தேனே. உங்களையும் கோவி.கண்ணனையும் ம...ஒன்று சொல்ல மறந்தேனே. உங்களையும் கோவி.கண்ணனையும் முன்பெல்லாம் குழப்பிக் கொள்வேன் வவ்வால். இப்போது அந்தக் குழப்பம் எல்லாம் தீர்ந்தது. முன்பு கூட ஒரு முறை இந்தக் குழப்பத்தைச் சொன்னேன் என்று நினைக்கிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-45354052129343164292007-09-11T20:44:00.000-05:002007-09-11T20:44:00.000-05:00வாங்க வவ்வால். உங்களைக் காணவில்லையே என்று எண்ணிக் ...வாங்க வவ்வால். உங்களைக் காணவில்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கோவி.கண்ணனின் பரிந்துரையின் பின்னாவது வந்தீர்களே. மகிழ்ச்சி. :-) <BR/><BR/>திராவிடம் என்பது வடமொழிச் சொல் தான். அது தமிழ்ச்சொல் இல்லை. அதனால் அது தமிழ் நூல்களில் காணப்படாது. ஒத்துக் கொள்கிறேன். <BR/><BR/>த்வைதம், அத்வைதம் - ஆத்மா, அனாத்மா - ஆர்ய, அனார்ய - தைர்ய, அதைர்ய போன்ற எதிர்பத இரட்டைகளை நீங்கள் சொன்னதற்கு எடுத்துக்காட்டுகளாய் வடமொழியில் காட்டலாம். ஆனால் திராவிடம் எப்படி இப்படி எதிர்மறை சொல்லானது என்று எனக்குப் புரியவில்லை. நான் வடமொழி நூற்களைப் படித்து அறிந்தவரை வடக்கிற்கு 'உத்தர' என்ற சொல்லும் தெற்கிற்கு 'தக்ஷிண' என்ற சொல்லும் பயின்று வருவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் திராவிட என்பது வடக்கு அல்ல என்ற எதிர்மறைப் பொருளில் வந்து பார்த்ததில்லை. <BR/><BR/>நான் அறிந்த வரை திராவிட என்ற வடசொல் அங்கே தமிழ் என்ற பொருளில் தான் வழங்கி வந்திருக்கிறது. தமிழ் தேசம் என்பதை திராவிட தேசம் என்று வடமொழி நூலில் சொல்லியிருக்க அதனை யாராவது தென்னகம் என்று மொழி பெயர்த்திருக்கலாம். அதனால் நீங்கள் சொன்ன குழப்பம் வந்திருக்கலாம். <BR/><BR/>சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்ற முன்னிகை இருக்கிறது. ஆனால் ஐராவதம் மகாதேவன் போன்ற சிந்து சமவெளி நாகரிக ஆராய்ச்சியாளர்களே இன்னும் சிந்து சமவெளி எழுத்துகளை வகைப்படுத்த முடியாமல் இன்னும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர் தான் முதன்முதலில் அந்த எழுத்துகள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த எழுத்தாக இருக்கலாம் என்று முன்மொழிந்தவர் என்று அறிகிறேன். ஆனால் அவரும் அதனை இன்னும் அறுதியிடவில்லை. அந்த முன்னிகையைக் கொண்டு சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்ற முன்னிகை உட்பட பல முன்னிகைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. வேதங்களில் அந்த முன்னிகைகளுக்குச் சான்றுகள் இருப்பதாகவும் எடுத்துக்காட்டுகளுடன் படித்திருக்கிறேன். அதற்கு எதிராக அங்கிருந்தது ஆரிய நாகரிகமே என்ற முன்னிகைகளும் அதற்கு ஆதாரங்களாகக் காட்டப்படுபவைகளையும் படித்திருக்கிறேன். இன்று வரை இரண்டு முன்னிகைகளையும் படித்து வருகிறேனே ஒழிய இரண்டில் ஒன்று சரி என்று அறியும் படி ஒன்றும் இன்று வரை நான் படிக்கவில்லை (யாராவது அதனை உறுதிப்படுத்தியிருக்கலாம். நான் இன்னும் படிக்கவில்லை என்று தான் சொல்கிறேன். இல்லவே இல்லை என்று சொல்லவில்லை). <BR/><BR/>இந்தியாவில் வாழ்ந்த பல சமயப் பிரிவினர்கள் தங்களை இந்துக்கள் என்று எப்படி அழைத்துக் கொள்ளவில்லையோ அது போல் தமிழர்களும் தங்களை திராவிடர்கள் என்று கால்டுவெல்லுக்கு முன்னால் அழைத்துக் கொள்ளவில்லை தான். ஆரியர்கள் அவ்வாறு தமிழர்களை அழைத்திருக்கலாம். தமிழைத் திராவிடம் என்று அழைத்திருக்கிறார்கள்; ஆனால் தமிழ் பேசியவர்களை அப்படி அழைத்தார்களா தெரியவில்லை. ஆனால் கால்டுவெல்லுக்குப் பின்னர் தமிழர்கள் அப்படி அழைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டோம். <BR/><BR/>இணைய உலகில் சரி பார்த்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உண்மையைச் சொல்லும் விவரங்களுக்கு இடையே அதற்கு ஈடான அளவில் பொய்மைகளும் நிரம்பியிருக்கின்றன. அதனால் தான் நேரத்தை செலவிடத் தயக்கம். ஆனால் இறுதியில் அது தான் செய்ய வேண்டியிருக்கும் என்று எண்ணுகிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-22278099616758799662007-09-11T20:29:00.000-05:002007-09-11T20:29:00.000-05:00திரு. V. உண்மை தான். ஆதிசங்கரர் அந்தக்காலத் தமிழகம...திரு. V. <BR/><BR/>உண்மை தான். ஆதிசங்கரர் அந்தக்காலத் தமிழகமான கேரளத்தில் பிறந்தவர் தான். அதனால் நீங்கள் சொன்னது போல் இது வட இந்திய கருத்து மட்டுமில்லை; தென்னிந்திய கருத்தும் என்று சொல்லலாம். ஆனால் ஆதிசங்கரர் காலடியில் இருக்கும் போது சௌந்தர்யலஹரி இயற்றவில்லை; அதனை கங்கைக்கரையிலோ காஷ்மீரத்திலோ இமயவரம்பிலோ இயற்றினார் என்றே நினைக்கிறேன். அதனால் வட இந்திய மரபில் இருக்கும் கருத்தினை வடமொழியில் சொல்லியிருக்கலாம். <BR/><BR/>இந்த விவாதம் முக்கிய விவாதம் இல்லை இந்த இடுகைக்கு. <BR/><BR/>நீங்கள் பஞ்ச திராவிடர்கள், பஞ்ச கௌடர்கள் என்பது பிராமண சாதிக்கு மட்டுமே உள்ள பிரிவினைகள் என்று கூறினீர்கள். அது மற்ற பிரிவினருக்கான பிரிவினைகள் என்று அறுதியிட்டுக் கூறமுடியுமா? திராவிட என்ற சொல் மற்ற எந்த சூழ்நிலையிலும் வடமொழி நூல்களில் பயன்படுத்தப்படவில்லையா? எனக்குத் தெரிந்து அது தமிழ் என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-86205978544559850982007-09-11T18:10:00.000-05:002007-09-11T18:10:00.000-05:00குமரன்,//அந்தக் காலகட்டத்தில் திராவிட என்ற சொல் வட...குமரன்,<BR/><BR/>//அந்தக் காலகட்டத்தில் திராவிட என்ற சொல் வடமொழியில் தமிழ் என்றே பொருள் பட்டிருக்கிறது.//<BR/><BR/>திராவிடம் என்பது சமஸ்கிருதம் , அதன் பொருள் தெற்கு என்று வரும்.<BR/>சமஸ்கிருதத்தில் ஒரு வழக்கம் உண்டு ஒன்றுக்கு எதிர் பெயராக , சொல்ல அதுவல்ல இது என்பார்கள்.உ.ம்.அத்வைதம்(இரண்டல்ல) , த்வைதம்(இரண்டு) அது போல எதிர்மறையாக சொல்லியது தான் திராவிடம் என்பது , வடக்கு அல்ல என்றால் அது தெற்கு எனப்பொருள்படும். தமிழ் என்று பொருள்வருமா? <BR/><BR/>சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆர்ய படை எடுப்புகளுக்கு பின்னரே தெற்கே திராவிடர்கள் வந்தார்கள்.<BR/><BR/>திராவிடர்கள் என்று தங்களை அவர்கள் அழைத்துக்கொண்டது இல்லை. ஆரியர்கள் தான் அவ்வாரு அழைக்க ஆரம்பித்தார்கள் பின்னர் அதுவே நிலைத்து விட்டது.<BR/><BR/>இப்படி வடமொழிச்சொல்லால் ஆரியர்களால் சுட்டிக்கூறப்பட்ட வார்த்தையை தமிழ் இலக்கியங்களில் எப்படிக்காண முடியும்!<BR/><BR/>இன்றைய இணைய உலகில் எதனையும் சரிப்பார்த்துக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே நீங்களே மேற்கொண்டு பார்த்துக்கொள்ளலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-802656560664437902007-09-11T17:31:00.000-05:002007-09-11T17:31:00.000-05:00>2. வடமொழி மரபு சொல்வதை இந்திய மரபு என்று காட்ட மு...>2. வடமொழி மரபு சொல்வதை இந்திய மரபு என்று காட்ட முயன்றிருந்தீர்கள். வடமொழி மரபு மட்டுமே இந்திய மரபு இல்லை. அப்படி சொல்ல முயல்வது சரியில்லை. <BR/><BR/>குமரன், நீங்கள் எழுதியதை சரியாக படித்து பாருங்கள். நான் 'மரபு' என்பதை ஒரு கருத்தோடுதான் பார்த்தேனே தவிர, மொழியோடு பார்க்கவில்லை. ஒரு மரபு பல மொழிகளில் சொல்லப் படலாம். நீங்கள் கேட்டது 'இது வட இந்திய மரபுதானா' என்று, அதாவது வட இந்திய பிரதேசங்களில் தான் இக்கருத்து நிலவியதா என்று? அதரற்கு மாற்று உதாரணமாக , நான் 7ம் நூறாண்டு கேரளத்தில் - தமிழகமாகவே இருக்கலாம் - இருந்த அதே கருத்தை கொடுத்தேன். அதனால் தான் அது இந்திய அளவில் மரபு என்றேன்.<BR/><BR/>>மொழி, இனம், நாடு இவற்றின் தொடர்புகள் என்ன என்றும் கேட்கிறது. <BR/><BR/>அண்டைய இந்தியாவில் இன உணர்வு பலமாக இல்லை - ஜாதி, வர்ணம் , கோத்திரம் இவை இன உணர்வுக்கு (ethnic identity) ஈடாகா.மேற்க்கத்திய மயமாகுதலில் (westernization) இன உணர்வு பெருவதும் ஒன்று.<BR/><BR/>மொழி, இனம், நாடு இவைகளுக்கு நேரடு தொடர்பு, பழைய இந்தியாவிலும் இல்லை, தற்கால உலகத்திலும் இல்லை. ஜெர்மன் மொழி பேசுபவர்கள் ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடு கொண்டவர்கள். பிரெஞ்சு பேசுபவர்கள் பிரான்சு, பெல்ஜியம், கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாட்டு உணர்வு கொண்டவர்கள். ஆங்கில மொழி பேசும் ஆங்கிலேயர்களும், ஸ்காட்லாந்தவர்களும், ஐரிஷ் குடிமக்களும், கருப்பர்களும், சீனர்களும் தங்களை தனி இனத்தவர்களாகவே கருதுகிரனர்.அரேபிய இனத்தவர் 20 தனி நாடுகளில் வசிக்கிரனர்.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-64261263920460428922007-09-11T16:37:00.000-05:002007-09-11T16:37:00.000-05:00கோவி.கண்ணன். நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. இப்போத...கோவி.கண்ணன். நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. இப்போது தான் கவனித்தேன். என் முந்தையப் பின்னூட்டத்தில் ஒரு சிறு பிழை இருக்கிறது. அதனை மீண்டும் எடுத்து இடுகிறேன். <BR/><BR/>//நீங்கள் சொல்லும் பார்ப்பனீயத்திற்கு எதிரான திராவிட கருத்தாக்கத்தை இங்கே பேச முயலவில்லை. பார்ப்பனீயத்திற்கு எதிராக திராவிடம் என்ற சொல்லும் கருத்தும் எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில் அவை எந்தக் கருத்தைச் சொல்லின என்பதைப் பற்றிய கேள்விகள் என்னுடையவை. அந்தக் காலத்தில் திராவிடம் என்ற சொல் பார்ப்பனீயத்திற்கு எதிர்பதமாக இருக்கவில்லை என்பதே என் துணிபு. அது அயோத்திதாசர் காலம் முதல் தொடங்கியதாகக் கொள்ளலாம். இந்தக் கால எண்ணவோட்டத்தை அந்தக் காலத்தில் உள்ள பகுப்புகளில் ஏற்றிக் கூறுவது பிழை என்று தான் எனக்குத் தோன்றுகிறது.<BR/>//<BR/><BR/>திருத்தியது:நீங்கள் சொல்லும் பார்ப்பனீயத்திற்கு எதிரான திராவிட கருத்தாக்கத்தை இங்கே பேச முயலவில்லை. பார்ப்பனீயத்திற்கு எதிராக திராவிடம் என்ற சொல்லும் கருத்தும் எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பு அவை எந்தக் கருத்தைச் சொல்லின என்பதைப் பற்றிய கேள்விகள் என்னுடையவை. அந்தக் காலத்தில் திராவிடம் என்ற சொல் பார்ப்பனீயத்திற்கு எதிர்பதமாக இருக்கவில்லை என்பதே என் துணிபு. அது அயோத்திதாசர் காலம் முதல் தொடங்கியதாகக் கொள்ளலாம். இந்தக் கால எண்ணவோட்டத்தை அந்தக் காலத்தில் உள்ள பகுப்புகளில் ஏற்றிக் கூறுவது பிழை என்று தான் எனக்குத் தோன்றுகிறது.<BR/><BR/>உங்களின் நீண்ட பின்னூட்டம் என் கருத்தை ஒட்டியதாகவே இருக்கிறது. சொன்னது போல் நான் நீங்கள் பேசிய காலகட்டத்தைப் பற்றிப் பேசவில்லை. அதற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றிப் பேசுகிறேன். அந்தக் காலகட்டத்தில் திராவிட என்ற சொல் வடமொழியில் தமிழ் என்றே பொருள் பட்டிருக்கிறது. <BR/><BR/>தமிழகத்தில் நடப்பது வடமொழி/தமிழ்மொழி போராட்டம் இல்லை; அதற்குப் பின்னே வேறு அரசியல் நிலைப்பாடுகள் உண்டு என்பதை நானும் அறிவேன். அந்தப் போராட்டத்தைப் பற்றியோ அவற்றைக் குறை கூறியோ இந்த இடுகையில் பேசவில்லை. அப்படிப்பட்ட எண்ணம் யாருக்கேனும் இருந்தால் தயை செய்து என் இடுகையையும் பின்னூட்டங்களையும் கூர்ந்து படிக்க வேண்டுகிறேன். நேரமிருப்பின். <BR/><BR/>என் இடுகை இலக்கிய அடிப்படையில் கால்டுவெல்லாருக்கு முந்தைய காலகட்டத்தில் என்ன நடந்திருக்கும் என்பதைக் கேட்கிறது. மொழி, இனம், நாடு இவற்றின் தொடர்புகள் என்ன என்றும் கேட்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com