tag:blogger.com,1999:blog-17517026.post1994074593632720479..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: துரியோதனப் பார்வைகுமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-17517026.post-61322820845236720062008-04-01T06:05:00.000-05:002008-04-01T06:05:00.000-05:00இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 24 மே 2007...இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 24 மே 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்: <BR/><BR/>13 comments:<BR/> <BR/>முத்துகுமரன் said... <BR/>நோய்க்கு மருந்தொன்று காண்பவன் நோயை அறியாது ஆராயாது தீர்த்திடல் இயலுமா. களைதனை நீக்கி மருந்திட்டால்தான் வருங்காலப் பயிர்தழைக்கும். பயிருக்கு அவன் இறைவன். களைக்கவன் பகைவன். ஜீவகாருண்யம் இங்கு ஒத்துவரா.<BR/><BR/>May 24, 2007 6:37 AM <BR/>--<BR/><BR/>மதுரையம்பதி said... <BR/>எதையோ நினைவுபடுத்திவிட்டது குமரன்....<BR/><BR/>May 24, 2007 7:07 AM <BR/>--<BR/><BR/>வெட்டிப்பயல் said... <BR/>உலகத்தில நம்மவிட யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை... அதனால எனக்கு தெரிஞ்சி ரெண்டு பேர் பண்ணதும் சரி தான் ;)<BR/><BR/>May 24, 2007 8:30 AM <BR/>--<BR/><BR/>Boston Bala said... <BR/>கதையில் நான் கண்ட பார்வைகள் :)<BR/><BR/>1. துரோணர்: 'இருவரும் எனக்கு ஒரே மாதிரி தான். ஆனால் அவர்கள் பார்வையில் தான் பிசகு இருக்கிறது.'<BR/><BR/>குற்றத்தை ஒப்புக்கொண்டு களையாமல், அடுத்தவர் மேல் பழிபோட்டு, சுயமறுப்பை வெளிப்படுத்தும் அதிகார ஆசிரியரின் பதில்.<BR/><BR/>2. பீஷ்மர்: 'நீங்களே அதனை துரியனுக்குப் புரிய வைக்கவேண்டும்'<BR/><BR/>தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை முடிக்கத் தெரியாமல், பழி சுமத்தப்பட்டவனையே நியாயம் வழங்க நியமித்து, தட்டிக்கழித்துத் தப்பிக்கும் முதிய செயலவற்றவரின் செய்கை.<BR/><BR/>3. தருமர்: 'எல்லோருமே என்னைவிட மேலானவர்களாகத் தான் இருக்கிறார்கள்.'<BR/><BR/>சொன்ன வேலையில் ஈடுபாட்டுடன் கடமையாற்றி, தேவையானதை கண்டுபிடிக்க இயலாத, எல்லாவற்றுக்கும் சப்பைக்கட்டு கற்பிக்கும் வேடதாரி துரியோதனப் பார்வை.<BR/><BR/>ஏதோ என்னாலான வழக்காடு மன்றம் ;)<BR/><BR/>பிகு.: சமீபத்தில் விசு படம் எதுவும் பார்க்கவில்லை.<BR/><BR/>May 24, 2007 9:36 AM <BR/>--<BR/><BR/>G.Ragavan said... <BR/>இது மிகவும் சிக்கலான வழக்கு. நல்லது கெட்டது இரண்டையும் பார்த்து முடிவெடுப்பதுதான் சரி. எனக்கு இருவர் செய்ததும் தவறாகப் படுகிறது.<BR/><BR/>May 24, 2007 11:22 AM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>நல்ல கருத்து முத்துகுமரன். சிவபெருமானின் அழித்தல் தொழிலைப் பற்றி விளக்கும் போது இப்படித் தான் சொல்வார்கள்.<BR/><BR/>May 24, 2007 1:04 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>இந்தக் கதையை எழுதும் போது உங்களையும் செல்வனையும் தான் நினைத்துக் கொண்டேன் பாலாஜி. அவர் தானே தன்னைப் புதிய கடவுள் என்று அழைத்துக் கொள்பவர். உங்கள் பதிவில் யாரும் என்னை விட உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்று சொல்பவர். :-)<BR/><BR/>May 24, 2007 1:08 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>துரியோதனப் பார்வைக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் பாபா. :-) ரொம்ப நல்லா எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். :-)<BR/><BR/>May 24, 2007 1:09 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>இராகவன். அதனைத் தானே முதல் பத்தியில் சொன்னேன். எதிர் எதிர் துருவங்களாக எல்லாவற்றையும் பிரித்துப் பார்க்கும் போது தருமனின் பார்வை <-> துரியோதனனின் பார்வை, நாத்திகர் <-> ஆத்திகர், நல்லவர் <-> கெட்டவர் என்று தானே பிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம்?! ஆனால் உலகத்தில் அப்படியா இருக்கிறது? எல்லோரும் தருமர்களே; எல்லோரும் துரியோதனர்களே. எல்லோரும் நாத்திகரே; எல்லோரும் ஆத்திகரே. எல்லோரும் நல்லவரே; எல்லோரும் கெட்டவரே. எடுத்துக்காட்டுகள் தான் இவை. ஆங்கிலத்தில் சொல்வார்களே - He wants to see everything Black and White; but everywhere I see various shades of Grey only. <BR/><BR/>அதுவே என் கருத்தும். அதனையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.<BR/><BR/>May 24, 2007 1:12 PM <BR/>--<BR/><BR/>ஓகை said... <BR/>பார்வைக் குறை உள்ளோரை குருடு என்று அழைக்கும் மருத்துவரை நான் கண்டதில்லை. களை விளைந்திருக்கும் வயலை களைக்களம் என்றா அழைக்க முடியும்?<BR/><BR/>குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்<BR/>மிகைநாடி மிக்க கொளல்.<BR/><BR/>பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்<BR/>கருமமே கட்டளைக் கல்.<BR/><BR/>.<BR/><BR/>May 24, 2007 8:35 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>நன்கு சொன்னீர்கள் ஓகை ஐயா. உடல்குறை உள்ளவனுக்கு முதல் தேவை மருத்துவன் மேல் நம்பிக்கை - இவன் நமக்கு நல்லது செய்கிறான் என்ற நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கை வரவழைக்காமல் பார்வைக்குறை இருப்பவரைக் குருடன் குருடன் என்று திட்டிக் கொண்டிருந்தால் அவன் மருத்துவனும் இல்லை; அப்படிப்பட்ட மருத்துவன் மேல் உடல்குறை உள்ளவனுக்கு நம்பிக்கை வரப்போவதும் இல்லை. திட்டித் தீர்ப்பதால் மன அரிப்பு வேண்டுமானாலும் தீரலாம் - திட்டுபவர்களுக்கு. ஆனால் அவன் நோய் தீர்க்கும் மருத்துவன் இல்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். திட்டித் திருந்தியவர்கள் யாரும் இல்லை. நாங்கள் திட்டுவதால் தான் நீங்கள் திருந்துகிறீர்கள் என்று தற்பெருமை மட்டுமே பேசிக் கொள்ளலாம். <BR/><BR/>பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். நன்கு சொன்னார் பொய்யாமொழிப் புலவர்.<BR/><BR/>May 24, 2007 8:53 PM <BR/>--<BR/><BR/>Natarajan said... <BR/>very nice story.ty<BR/><BR/>January 05, 2008 10:13 PM <BR/>--<BR/><BR/>குமரன் (Kumaran) said... <BR/>Thanks Natarajan.<BR/><BR/>January 06, 2008 8:49 AMகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com