tag:blogger.com,1999:blog-17517026.post114610769667677561..comments2024-01-19T01:27:29.384-06:00Comments on கூடல்: 175: மதுரை - 3குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-17517026.post-1148319826963831222006-05-22T12:43:00.000-05:002006-05-22T12:43:00.000-05:00படித்துவிட்டு அழித்துவிட என்றால் எதற்கு பின்னூட்டம...படித்துவிட்டு அழித்துவிட என்றால் எதற்கு பின்னூட்டம் அனானிமஸ் ஐயா. எனக்கு தனிமடல் அனுப்பியிருக்கலாமே? :-) <BR/><BR/>நீங்கள் சொல்லியிருப்பது இப்போது ஊரூருக்கு நடக்கின்றதாம். என்னவோ மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் எனக்கு உங்கள் அனுபவங்கள் எல்லாம் கிட்டியதில்லை. ஒரு வேளை வெளியூர்காரர்களிடம் மட்டும் தான் இந்த மாதிரி கைவரிசைகளைக் காட்டுவார்களோ என்னவோ? எனக்கும் சென்னையில் முதல் அனுபவம் உண்டு. ஆனால் அந்த அனுபவம் சென்னைக் காரர்களுக்கு ஏற்படாது என்று எண்ணுகிறேன். வெளியூர்காரர்களுக்கு மட்டும் தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1148018826227920262006-05-19T01:07:00.000-05:002006-05-19T01:07:00.000-05:00குமரன் ஐயா, "பின் பாக"த்தைக் குறிக்கும் சொல்லைப்...குமரன் ஐயா,<BR/> "பின் பாக"த்தைக் குறிக்கும் சொல்லைப் போட்டு விட்டு பயந்து கொண்டிருந்தேன். நீங்கள் என்னை "போலி டோண்டு" லிஸ்டில் சேர்த்துவிடுவீர்களோ என்று. நல்ல வேளைத் தப்பித்தேன்.<BR/><BR/> ஆனால் மதுரைக்காரர் அந்த வார்த்தைக்கு பயப்படலாமா ? தங்கள் ஊர் வைகைப் புயல் வடிவேலு பல சொற்களைத் திரைப்படங்களில் பிரபலப்படுத்துகிராறே ? உ.தா. "டுபுக்கு", "வெண்ணை". <BR/><BR/> மதுரை என்றாலே கொஞ்சம் கலக்கம் தான். சில பல அனுபவத்தினால்.,<BR/>1. முதல் முறை ஆட்டோக்காரர் பெரியார் பஸ்டாண்டுக்கு எதிரில் இருந்த "Route bus stand"க்கு (முன்பு இருந்தது) ஊரைச் சுத்திக் காண்பித்து 50 ரூபாய் வாங்கினார்.<BR/>2. தெரியாத்தனமாக ஒரு தடவை நைட் பதினோரு மணிக்கு "route bus stand" போவதற்கு பதில் பெரியாருக்குப் போக, "லாட்ஜுக்குப் போகலாம்" என்று ஒரு பெண் பின் தொடர. மாட்னோம்டா சாமின்னு ஓடினேன்.<BR/>3. ஒரு தடவை பிக் பாக்கெட்காரன் சுத்தமாக பாக்கெட்டைக் காலி செய்ய, ஊருப் போய்ச் சேர பட்ட பாட்டை சொல்ல முடியாது.<BR/><BR/>அதனால் மதுரைனாலே ஒரு பயம் தான். ஆனால் கல்யாணம் ஆன பிறகு மனைவியின் "உத்தரவால்" போவதுண்டு. கட்டாயம் "ஜிகிர்தண்டா" எனக்கு உண்டு.<BR/><BR/>பி.கு : இதைப் பின்னூட்டத்தில் எற்ற வேண்டிய அவசியம் இல்லை. படித்துவிட்டு அழித்துவிடவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147984427044227392006-05-18T15:33:00.000-05:002006-05-18T15:33:00.000-05:00அன்புக் குமரனுக்கு!2004 ல்; தான் சென்றேன்; நீங்கள்...அன்புக் குமரனுக்கு!<BR/>2004 ல்; தான் சென்றேன்; நீங்கள் குறிப்பிடும்; சம்பவங்கள் நடக்க மிக வாய்ப்புண்டு. நாங்கள் கூட நுளைந்த கோபுரவாசலாலேயே; வெளியேறினோம் ;எங்கள் வண்டி அந்த வாசலில் நின்றதும்;உடன் வந்த சுற்றத்தார் 20 பேர்; தேடும் படலம் இருக்கக் கூடாதென்பதே நோக்கம். ஆனால் வெளியேறும் போது இப்படத்தைப் பிடிப்பவர் நிற்குமிடம் தாண்டிச் செல்லும் போதே! அந்தத் தொட்டில் கட்டியுள்ள மரத்தைச் சில நிமிடங்கள் பார்த்து விட்டே கடந்தோம். இக் கோவிலில் இப்படிப் பட்ட மரங்கள் பல உண்டா? அப்படி இருக்குமென நான் நினைக்கவில்லை. அதனால் நான் குறிப்பிடுவது; இக் கோபுரங்களே!<BR/>யோகன்<BR/>பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147973304491254842006-05-18T12:28:00.000-05:002006-05-18T12:28:00.000-05:00மதுரையில் தற்போது வெயில் அதிகமாக இருக்கிறது என்று ...மதுரையில் தற்போது வெயில் அதிகமாக இருக்கிறது என்று பின்னூட்டம் போட்ட அனானிமஸ் நண்பரே. அந்தப் பின்னூட்டத்தில் மனிதனின் பின்பாகத்தைக் குறிக்கும் சொல்லை நீங்கள் சொல்லியிருந்ததால் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. மன்னிக்கவும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147900647032656562006-05-17T16:17:00.000-05:002006-05-17T16:17:00.000-05:00மதுரைக்கு அண்மையில் போயிருக்கிறீர்களா யோகன் ஐயா. ந...மதுரைக்கு அண்மையில் போயிருக்கிறீர்களா யோகன் ஐயா. நல்லது. மதுரைக் கோவிலில் எந்த கோபுர வாசலைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கும். ஒரு வாசல் வழியாக உள்ளே சென்று வேறு வாசல் வழியாக வெளியே வந்தவர்கள் நிறைய பேரை எனக்குத் தெரியும். அதனால் நீங்கள் சொல்வது இந்த வாசல் தானா என்று தெரியவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147729204992383112006-05-15T16:40:00.000-05:002006-05-15T16:40:00.000-05:002004 ல்;சென்ற பொழுது; இவ்வீதியில் நின்றுள்ளேன்(என்...2004 ல்;சென்ற பொழுது; இவ்வீதியில் நின்றுள்ளேன்(என் எண்ணம் சரி என நினைக்கிறேன்); அதிலுள்ள சிறு மரத்தில் பிள்ளைவரம் வேண்டி தொட்டில்கள் கட்டப் பட்டிருந்தன. சுமார் 60 வருடங்களுக்கு முன் என் பேத்தியார் இக் கோவில் வந்த பொழுது; தொட்டில் கட்டிய தாகவும்; அதன் பின் தானும்; எங்கள் மைத்துணி ஒருவரும்; பிறந்த தாக, என்னுடன் வந்த என் அக்கா கூறினார்.என் அக்காவும் தன் பேத்திமார் இருவருடன் வந்தே தரிசனம் செய்தார்.நீங்கள் குறிப்பிட்டது போல் மேகம் படத்துக்கு மெருகூட்டியுள்ளது.<BR/>யோகன்<BR/>பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147722474285683002006-05-15T14:47:00.000-05:002006-05-15T14:47:00.000-05:00நன்றி சிவமுருகன். மின்னஞ்சலும் வந்தது.நன்றி சிவமுருகன். மின்னஞ்சலும் வந்தது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147422283845635862006-05-12T03:24:00.000-05:002006-05-12T03:24:00.000-05:00//56 சக்தி பீடங்களா, 54 சக்தி பீடங்களா//தாட்சாயினி...//56 சக்தி பீடங்களா, 54 சக்தி பீடங்களா//<BR/><BR/>தாட்சாயினியின் 54 உடல் கூறுகள் பாரதத்தில் 54 இடங்களில் விழுந்தது அதுவே சக்தி பீடமாக மாறியது. இது 108 பீடங்கள் இருப்பதாகவும் ஒரு கருத்துள்ளது. அதில் முதன்மை பீடமாக கருதப்படுவது ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலும், இரண்டாவதாக சொல்ல படுவது தில்லியில் உள்ள சத்தர்பூர் கோவில். மற்றும் பல இடங்களும் சொல்லப்படுகின்றன. அதில் மதுரையும் ஒன்றாகும்.<BR/><BR/>//ஒரு வேளை மொத்தம் 352 தலங்களில் அம்பிகை கோயில் கொண்டிருக்கிறாள் என்று//<BR/><BR/>352 என்பது தவறு.<BR/><BR/>366 கோவில்களில் அம்மையும், ஈசனும் - மீனாக்ஷி சுந்தரேஸ்வராக கோவில் கொண்டுள்ளானர் என்று சொல்ல வந்தேன். தினமலரில் அப்படி ஒரு செய்தி வந்திருந்தது. அதை தான் இங்கே பதித்தேன். அச்செய்தியை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147376386957749862006-05-11T14:39:00.000-05:002006-05-11T14:39:00.000-05:00அரசமரம் கோயிலை இடிக்கவில்லை என்ற நற்செய்தியைச் சொன...அரசமரம் கோயிலை இடிக்கவில்லை என்ற நற்செய்தியைச் சொன்னதற்கு நன்றி சிவமுருகன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147376323165611252006-05-11T14:38:00.000-05:002006-05-11T14:38:00.000-05:00அனானிமஸ் நண்பரே. எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன். ...அனானிமஸ் நண்பரே. எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன். முதலில் கோயிலுக்குள்ளேயே இருப்பது நான்கு திசைகளிலும் நான்கு ஆடிவீதிகள். கோயிலுக்கு வெளியே சித்திரை வீதிகள். அவற்றைச் சுற்றி ஆவணி மூல வீதிகள். அவற்றைச் சுற்றி மாசி வீதிகள். அவற்றைச் சுற்றி மாரட்டு வீதிகள். அவற்றைச் சுற்றி வெளி வீதிகள். அத்துடன் மதுரையில் எல்லை முடிந்துவிடுவதாகச் சொல்லுவார்கள். ஆனால் மதுரை நகர் அதனை விடப் பெரியது தற்போது. <BR/><BR/>ஏதாவது தவறாக இருந்தால் மதுரைக்காரர்கள் யாராவது வந்து சொல்லுவார்கள் என்று எண்ணுகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147376127736779112006-05-11T14:35:00.000-05:002006-05-11T14:35:00.000-05:00சிவமுருகன், மொத்தம் 56 சக்தி பீடங்களா, 54 சக்தி பீ...சிவமுருகன், மொத்தம் 56 சக்தி பீடங்களா, 54 சக்தி பீடங்களா? 56 என்று படித்ததாக எனக்கு நினைவு. <BR/><BR/>தமிழகத்திலும் கேரளத்திலும் மொத்தம் 352 தலங்களில் மீனாட்சி அம்மன் கோவில்கள் இருக்கின்றனவா? இவ்வளவு நாள் தெரியாதே. மதுரையிலேயே எனக்கு நினைவில் வருவது 3 கோயில்கள் தான் - பழைய சொக்கநாதர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் (முக்கிய கோயில்) & தெற்கு மாசி வீதியில் இருக்கும் தென் திருவாலவாய்நாதர் கோவில். ஒரு வேளை மொத்தம் 352 தலங்களில் அம்பிகை கோயில் கொண்டிருக்கிறாள் என்று சொல்கிறீர்களோ?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147323356261019362006-05-10T23:55:00.000-05:002006-05-10T23:55:00.000-05:00//அதிகாலை வேளையில் கோவிலுக்குச் செல்லுங்கள். அவ்வள...//அதிகாலை வேளையில் கோவிலுக்குச் செல்லுங்கள். அவ்வளவு கூட்டம் இருக்காது//<BR/><BR/>அந்த காலம் மலையேறி விட்டது. அதிகாலையிலிருந்தே கூட்டம் அதிகமாயுள்ளது. இரவில் பள்ளியறை பூஜையிலும் கூட்டம் காணப்படுகிறது.<BR/><BR/>கடந்த முறை பிப்ரவரியில் சென்றபோது நடை திறக்கும் காட்சியை காண மிகுந்த சிரமத்துடன் நிற்கவேண்டியாயிற்று. அதிலும் ஒரு சுகம் தானே. அக்கூட்டத்தில் சில நல்லவர்கள் இருந்திருபார்கள், அவர்களின் காற்று நம் மீது படும் போது நாமும் புனிதமடைவோம் என்று எப்போதும் செல்வதுண்டு.<BR/><BR/>//இப்போது அரசமரம் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிப்பை நீக்குவதாய் சொல்லி இடித்துவிட்டார்களாமே?<BR/>//<BR/><BR/>அந்த கோவில் மட்டும் தான் எஞ்சியுள்ளது. அக்கோவில் அரசின் அறநிலைய துறையின் கீழிருப்பதால் அதனை இடிக்கவில்லை என்று எண்ணுகிறேன்.<BR/><BR/>//நீங்கள் சொல்லும் அம்மன் சன்னிதி உட்பிரகாரத்தில் இருக்கும் பூட்டிய அறை பள்ளியறை என்று எண்ணுகிறேன்... வேறு அறையோ பூட்டிய கதவோ இல்லை. //<BR/><BR/>ஆம் அது பள்ளியறையே. மணற்கேணி பதிவில் அந்த பல்லக்கு காட்சியை இடுகிறேன்.<BR/><BR/>ஆம் இது தவிற எந்த பூட்டிய கதவும் இல்லை.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147312899967716292006-05-10T21:01:00.000-05:002006-05-10T21:01:00.000-05:00கறுப்பு ஐயா, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் ...கறுப்பு ஐயா, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் பொய் சொல்கிறேனா இல்லை நீங்கள் பொய் சொல்கிறீர்களா என்று உங்கள் வலைப்பூவில் இருக்கும் பதிவுகளிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் விரைவில் விளக்கமாகச் சொல்கிறேன். வந்து பார்த்துக் கொண்டிருங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147310042520877852006-05-10T20:14:00.000-05:002006-05-10T20:14:00.000-05:00படித்து மகிழ்ந்துவிட்டு அழிச்சிடுங்க சார்!//இதுவரை...படித்து மகிழ்ந்துவிட்டு அழிச்சிடுங்க சார்!<BR/><BR/>//இதுவரை நீங்கள் எழுதியது எதுவுமே திருக்குறளிலிருந்தோ, கம்ப இராமாயணத்தில் இருந்தோ, சிலப்பதிகாரத்தில் இருந்தோ எழுதப்பட்டதில்லை. கீதையிலிருந்தும் நீங்கள் எழுதியதாக நினைவில்லை. அவற்றிலிருந்து இனிமேல் எழுதப்போகிறீர்கள் போலும்.//<BR/><BR/>ஆக உங்களுக்கு மேற்சொன்ன இவை நான்கும்தான் வேதம்!:)) மற்றவை எல்லாம் வேதமல்ல... ஹிஹி<BR/><BR/>//அப்படி நீங்கள் எழுதி அந்த விளக்கம் தவறாக இல்லாத பட்சத்தில் நீங்கள் சொல்வது பழந்தமிழ் இலக்கியத்திலும் இருக்கின்றன என்று ஒத்துக் கொள்கிறேன்.//<BR/><BR/>அட இதப் பார்றா... சரி சொல்லுங்க. <BR/><BR/>//இங்கேயே பிறந்த மண்ணின் மைந்தர்கள் ஆரியர்கள், திராவிடர்கள் எல்லோருடனும் கலந்து போய்விட்டார்களோ என்னவோ? நான் திராவிடர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று அறுதியிட்டுக் கூறவில்லை. அப்படி நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்னும் அந்த ஆராய்ச்சியாளர்களால் வைக்கப்படவில்லை.//<BR/><BR/>திராவிடர்கள் வெளியில் இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் காதில்மட்டும் ரகசியமானச் சொன்னதாக நீங்கள்தான் கூறினீர்கள்.<BR/><BR/>//ஆனால் அப்படியும் ஆராய்ச்சிகள் உள்ளன என்பதாவது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். நீங்கள் பதில் சொன்ன முறையைப் பார்த்தால் அப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் என்று தெரிகிறது. மகிழ்ச்சி.//<BR/><BR/>அப்படிப்பட்ட ஆராய்ச்சி குறித்த உண்மைத் தகவல்களை எனக்கு அனுப்பி வைக்கவும். அல்லது அந்த தகவல்கள் தாங்கிய சுட்டியை எனக்கு அனுப்பி வைத்தால் ரொம்பவும் மகிழ்ச்சி அடைவேன்.<BR/><BR/>//ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே மீண்டும் மீண்டும் சொல்லியோ இல்லை தகுந்த ஆதாரங்களுடனோ நிறுவப்பட்ட ஆரியப் படையெடுப்புக் கொள்கைக்கு எதிரான ஆதாரங்கள் அந்தக் கொள்கையை ஆட்டிப்பார்க்கும் அளவிற்காவது (இன்னும் அதனைப் - ஆரியப் படையெடுப்புக் கொள்கை - பொய் என நிறுவும் அளவிற்கு இல்லை) வெளிப்பட்டுவிட்டன என்பதையும் நேர்மையான ஒவ்வொருவரும் ஒத்துக் கொள்ளுவர்.//<BR/><BR/>அப்படி ஒப்புக் கொள்பவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் மட்டுமே! <BR/><BR/>//நான் பார்ப்பனியத்திற்காகத் தொண்டை கிழிய கத்தவில்லை தோழரே.//<BR/><BR/>பார்ப்பனர் என்றதும்தான் உங்களின் வாய்களில் என்னவெல்லாமோ வருகிறது. விட்டுது சிகப்பு(சிவப்பு என்றே எழுத தெரியவில்லை... இந்த லெட்சணத்தில் இதெல்லாம் வந்து கருத்து எழுதி... அய்யோ அய்யோ!) பதிவில் சென்று அப்பன் ஆத்தாளைத் தாக்கி எழுதுவதாக பொய் சொன்னீர்கள். உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். சத்தியம் செய்து கூறுங்கள், நான் எங்கே எப்போது அப்படி உங்களை எழுதினேன்?<BR/><BR/>//உங்கள் பதிவுகளில் எங்கெல்லாம் நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன் என்று பாருங்கள். தவறு இருக்கும் இடங்களில் தான் கேள்விகள் வைத்திருக்கிறேன்.//<BR/><BR/>நன்கு அலசிப் பார்த்து விட்டேன். பார்ப்பான்களுக்கு ஆதரவாகத்தான் உங்களின் எல்லா மறுமொழிகளும் வந்துள்ளன.<BR/><BR/> //ஒரு இடத்தில் 'நல்ல பதிவுகள் வரும் உங்கள் வலைப்பூவில் தவறான கருத்துகளும் வருகின்றன. அவற்றைத் தான் கேள்வி கேட்கிறேன்' என்று சொல்லுகிறேன்.//<BR/><BR/>எது தவறான தகவல்? பார்ப்பான் படையெடுத்ததா? உழைக்காமல் சுரண்டித் தின்றதா?<BR/><BR/>//பார்ப்பனியத்திற்கோ தற்கால உயர்த்தப்பட்ட சாதிகள் (பார்ப்பனர் உட்பட) தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இழைக்கும் தீங்குகளுக்கோ ஆதரவாய் எங்கும் பேசவில்லை.//<BR/><BR/>உங்கள் பேச்சு அப்படித்தான் உள்ளது!<BR/><BR/>//தவறாய் பார்ப்பனர் பற்றி சொல்லப்பட்ட செய்திகளைக் கேள்வி கேட்பது அவர்களை ஆதரிப்பதாய் நீங்கள் எடுத்துக் கொண்டால் அது தவறு.//<BR/><BR/>உங்களின் எல்லாக் கூற்றும் பார்ப்பன ஆதரிப்பை மட்டுமே காட்டுகிறது. அவற்றில் உண்மை கொஞ்சம்கூட இல்லை. <BR/><BR/>//பெரும்பான்மையான பார்ப்பனர்கள் மட்டுமே தங்கள் ஜாதியில் இருந்து ஒரு போதும் பின்வாங்க தயாராக இல்லை என்று சொல்கிறீர்களே. நம் நாட்டில் நிலைமை அப்படியா இருக்கிறது?//<BR/><BR/>காதல் திருமணங்கள்மூலம் நல்ல நிலை உருவாகி வருகிறது. கொஞ்சம் நஞ்சம் மாற நினைக்கும் மக்களையும் உம்போன்ற அறிவுஜீவிகள் கெடுத்து விடுகிறீர்கள்!<BR/><BR/> //எல்லா சாதியினரும் தங்கள் சாதியிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லையே? அதனால் தானே சாதிக் கட்சிகள் பல்கிப் பெருகி நிற்கின்றன.//<BR/><BR/>அதற்கு மூல காரணம் பார்ப்பனர்கள். அவர்கள்தான் ஜாதியைக் கண்டு பிடித்தவர்கள்! <BR/><BR/>//நான் திருந்திவிட்டேன் என்கிறீர்கள். தவறு செய்திருந்தால் தானே திருந்துவதற்கு.//<BR/><BR/>யோக்கியர் வருகிறார், செம்பை எடுத்து உள்ளே வைக்க வேண்டும்.<BR/><BR/>//நீங்கள் மற்ற சாதியினரைப் பற்றி பதிவு போடுங்கள்; அதில் தவறு இருந்தால் நான் அங்கே வந்தும் கேள்விகள் கேட்கிறேன் என்கிறேன்;//<BR/><BR/>ஆகட்டும் பார்க்கலாம்.<BR/><BR/>//நீங்கள் இதுவரை போட்டதெல்லாம் பார்ப்பனரைப் பற்றிய பதிவுகள்; அதில் நான் படித்தவரை தவறு இருக்கும் எல்லாப் பதிவுகளிலும் கேள்விகள் கேட்டுவிட்டேன்.//<BR/><BR/>பார்ப்பனரைப் பற்றிச் சொன்னால் தவறூ, மற்றவர்களைப் பற்றிச் சொன்னால் சரி. ரொம்ப புல்லரிக்குது சார் உங்க தத்துவம்!<BR/><BR/>//சம்பந்தர் பதிவில் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் சரி, தவறு என்று கூட சொல்லவில்லை என்றும் பல முறை சொல்லிவிட்டேன். இப்போது வந்து எங்கே பொய்த்தகவல் சொன்னேன் என்று பட்டியல் இடுங்கள் என்கிறீர்கள்.//<BR/><BR/>நானும் பலமுறை விளக்கி விட்டேன். சென்று படித்துப் பாருங்கள். அப்படியும் கேள்வி இருப்பின் தயங்காது karuppupaiyan at gmail.com எனும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.<BR/> <BR/>//இதுவரை நான் பின்னூட்டம் இட்டதெல்லாம் நீங்கள் பொய்த்தகவல் சொன்ன இடங்களில் தான்.//<BR/><BR/>பார்ப்பனர்கள் உழைக்காமல் உண்டு கொழுத்தது எல்லாமே உங்களுக்கு பொய்த்தகவலாகத்தான் சார் இருக்கும்! <BR/><BR/>//நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் சொன்னால் நான் உங்களுக்கு கூஜா தூக்குகிறேன் என்கிறீர்கள்.//<BR/><BR/>அப்படி இதுவரை நான் சொல்லவில்லை. உங்களின் கூஜா பார்ப்பனர்களுக்கு மட்டுமே!<BR/><BR/>//உங்களை எதிர்த்து உங்களின் தவறான தகவல்களைப் பற்றி கேள்விகள் கேட்ட ஒரே காரணத்தால் நான் மடப்பார்ப்பன விசுவாசி என்றால் இருந்துவிட்டுப் போகிறேன்.//<BR/><BR/>உண்மையை ஒத்துக்கொள்ள ரொம்ப தைரியம் வேணும் சார். பாராட்டுகிறேன்.<BR/><BR/>//ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் நான் மட-மற்றை சாதி - விசுவாசியாகவும் தென்படுவேன் - நீங்கள் அவர்களைப் பற்றியும் பதிவுகள் எழுதி, அதுவும் தாக்கி, அவர்கள் செய்யும் தீமைகளைப் பற்றி, அதில் தவறிருந்தால் அதையும் கேள்வி கேட்பேன். அப்போது என்னை மட-மற்றைச்சாதி-விசுவாசியாகப் பார்க்கலாம்.//<BR/><BR/>பாக்கதானே போறேன். <BR/><BR/>//மடம் என்ற சொல் இழிசொல்லா என்ற கேள்விக்கு உங்களுக்கு வடமொழியும் தெரியவில்லை; தமிழும் தெரியவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது;//<BR/><BR/>எங்கள் பக்கம் பார்ப்பனர்கள் மட்டுமே வடமொழி பயில்வார்கள். நீங்கள் வடமொழி பயின்று இருக்கிறீர்கள். பார்ப்பானும் இல்லை என்கிறீர். என்ன கருமாந்திரமோ போங்க.<BR/><BR/>எனக்கு தமிழ் தெரியும். வடமொழி புரியாது. நன்றி மடத்தலைவரே என்ற சிரிப்பு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? தமிழின்மேல் தீராக் காதல் கொண்டவன். மடம் என்ற சொல்லிற்கான அனைத்து விளக்கங்களும் அறிவோம்.<BR/><BR/>//காஞ்சி மடம் என்று இருப்பதில் இருக்கும் மடம் - கூடும் இடம் - என்று பொருள் படும். தமிழில் உள்ள மடம் - மடமை- என்று பொருள் படும். இரண்டையும் குழப்பவேண்டாம்.//<BR/><BR/>காஞ்சி மடமும் தமிழ் மடம்தான். என்ன சார் ரொம்ப குழபியது மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் குழப்பப் பார்க்கிறீர்கள்? இரண்டுமே மடம்தான்! அது இங்கிலீஷ் மடம் இது தமிழ் மடம் என்று யார் உமக்கு கற்றுத்தந்தது? <BR/><BR/>//கறுப்பு அண்ணாவே என்னைக் கோவிச்சுக்கிறார். காஞ்சிப் பெரியவா கோச்சுண்டா என்ன?//<BR/><BR/>கறுப்பு உங்களவா எதிரி. ஆனா காஞ்சி பெரியவா அப்படியா??? <BR/><BR/>//உங்கள் பதிவில் நீங்கள் சொன்னதை நீங்களே கண்டிக்கிறீர்களா? ரொம்ப நல்லதாப் போச்சு. இனி நான் தேவையில்லை கண்டிக்க.//<BR/><BR/>பார்ப்பனர்களின் வேத நூல் என்றல்லவா சொன்னேன். ஹிந்துக்களின் வேதநூல் என்று நீங்கள் அல்லவா தடம் புரண்டு பொய் சொல்கிறீர்கள். <BR/><BR/>//பகவத் கீதை இன்னும் எழுதத் தொடங்கவில்லை நான். ஆன்மிகக் கதைகள் எழுதுகிறேன். ஆனால் அவை என் சொந்த எழுத்துகளில். வெட்டி ஒட்டவில்லை.//<BR/><BR/>ஏற்கெனவே இருக்கும் பகவத் கீதையில் ஒரு இடத்தை எடுத்து நீங்கள் உங்கள் வலைப்பதிவில் எழுதுனால் அது எப்படி சார் நீங்கள் எழுதியதாகும்? உங்கள் விளக்கம் புல்லரிக்குது சார்!<BR/><BR/>//அதனால் அதனைப் பற்றி கேள்விகள் வந்தால் நேரடியாகப் பதில் சொல்ல முடியும். சொன்னதை சொல்லவில்லை என்று மாற்றிவிட்டு பின்னர் அதனை நானே கண்டிக்க வேண்டிய தேவை எனக்கு எழாது.//<BR/><BR/>அப்படியா சார். பார்க்கத்தானே போகிறோம். <BR/><BR/>//அப்படியே பகவத்கீதைக்கு உரை எழுதினாலும் அது என் சொந்த எழுத்தாகத் தான் இருக்குமே ஒழிய இரவல் எழுத்துக்களாக இருக்காது.//<BR/><BR/>பார்க்க இருக்கிறோம் ஆன்மீகப் பெரியவரே.<BR/><BR/>//மற்றவர் கருத்தினைக் கூறும் போது தெளிவாக அது மற்றவர் கருத்து என்பதனையும் சொல்லிவிடுவேன். அடுத்தவர் எழுதியதை வெட்டி ஒட்டி அது என்னுடையது என்று சொல்லிக் கொள்வதில்லை.//<BR/><BR/>அப்படியா சார். நீங்க சொன்னீங்னா ரொம்ப சரிதானுங்க. <BR/><BR/>//நீங்கள் என் பதிவிற்கு வந்து பயன்பெற்று (!!) கேள்விகள் கேட்க உங்களை வரவேற்கிறேன்.//<BR/><BR/>அப்படியா ரொம்ப சந்தோஷம் சார். <BR/><BR/>//ஆன்மிக ஸ்குரு என்ற புதிய பட்டத்திற்கு நன்றிகள்.//<BR/><BR/>ஹிஹிஹி ரொம்ப புகழ்றீங்க. <BR/><BR/>//தங்கள் பதிவுகளில் உள்ள தவறுகளைக் கேள்விக் கேட்கத் தொடங்கி அதற்கு நேரடியாக பதில்கள் வராததால் அதனை நான் கேள்வி கேட்கப் போய் நீங்கள் என்னைத் தாக்க, நான் உங்களைத் தாக்க என்று நம் வாதங்கள் தரம் தாழ்ந்து கொண்டு போகின்றன.//<BR/><BR/>நான் உங்களை ஆத்தா அம்மா என்று தாக்கினேன் என்று நாக்கு மேல்(பழமொழிங்க) பல் போட்டு பொய்த் தகவலாக விட்டுது கறுப்பு பதிவில் சொன்னது நீங்கள். அப்படி ஒரு இட்த்தினிக் காட்டுங்களேன். ஏன் உங்களுக்கு இந்த திருகுதாளம் எல்லாம். டோண்டுபோல அனுதாபம் பெறும் முயற்சியா?<BR/><BR/>//உங்கள் தன்னிலை விளக்கமும் என் தன்னிலை விளக்கமுமாக அது போய்விட்டது. அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.//<BR/><BR/>விளக்கம் என்பது சரி. ஆனால் தனி மனிதத் தாக்குதல் என்று எப்படி சொன்னீர்கள்?<BR/><BR/>//அதனால் உங்கள் பதிவுகளைப் படிப்பதோடு நிறுத்திக் கொண்டு பின்னூட்டம் இடாமல் இருந்து விடலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//<BR/><BR/>அப்படி எல்லாம் சொல்லாதீங்க சார். உங்களின் அறிவு(!) பூர்வமான கேள்விகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>//யாருக்கும் பயனில்லாததை எதற்கு நேரம் வீணடித்துச் செய்யவேண்டும்? உங்கள் பதிவுகளைப் படிப்பதே நேரத்தை வீணடிப்பது என்று இன்னும் தோன்றவில்லை. இனிமேல் எப்படியோ?//<BR/><BR/>உங்கள் கேள்விகள் பலருக்கும் பயனளிக்கின்றன. எனவே நிறைய யோசித்து கேள்விகள் தயார் செய்து வைக்கவும்.<BR/><BR/>உங்களின் மறுமொழிக்கு நன்றி சார்.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147280131673501012006-05-10T11:55:00.000-05:002006-05-10T11:55:00.000-05:00குமரன், மதுரையில் கோவிலைச் சுற்றியே வீதிகள் அமைந்த...குமரன், மதுரையில் கோவிலைச் சுற்றியே வீதிகள் அமைந்துள்ளன. அந்த வீதிகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?. வெளி வீதி, ஆவணி வீதி,மாசி வீதிகள் என்று. அவைகள் எந்த வரிசையில் அமைந்துள்ளன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147156429332325102006-05-09T01:33:00.000-05:002006-05-09T01:33:00.000-05:00//மதுரை ஒரு சக்தி பீடம் என்பது சரி என்று எண்ணுகிறே...//மதுரை ஒரு சக்தி பீடம் என்பது சரி என்று எண்ணுகிறேன்.மதுரைக்கு மனோன்மணி பீடம் என்று பெயர் என்று எண்ணுகிறேன்.ஆனால் எல்லா சக்தி பீடங்களிலும் ... அம்மனுக்குத் தான் முதல் மரியாதையா என்று தெரியவில்லை.//<BR/><BR/>54சக்தி பீடத்தில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் பீடம்.<BR/><BR/>இது தவிர தமிழக-கேரள பகுதியில் மொத்தம் 352 ஸ்தலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் கொண்டுள்ளால். அவ்வனைத்து ஸ்தலங்களில் முதன்மையாக கருதப்படுவது மதுரையின் மனோன்மணி பீடம்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147100695279633082006-05-08T10:04:00.000-05:002006-05-08T10:04:00.000-05:00கீதா அம்மா. மதுரை ஒரு சக்தி பீடம் என்பது சரி என்று...கீதா அம்மா. மதுரை ஒரு சக்தி பீடம் என்பது சரி என்று எண்ணுகிறேன். மதுரைக்கு மனோன்மணி பீடம் என்று பெயர் என்று எண்ணுகிறேன். ஆனால் எல்லா சக்தி பீடங்களிலும் (மொத்தம் ஐம்பத்தி ஆறு சக்தி பீடங்கள் பாரதமெங்கும் இருக்கின்றன) அம்மனுக்குத் தான் முதல் மரியாதையா என்று தெரியவில்லை. ஆனால் மதுரையில் அம்மன் ஆட்சி தான். :-) அவருக்குத் தான் முதல் மரியாதை. அவள் தான் மதுரைக்கு உரிமையுள்ள அரசி. அவளை மணந்ததால் ஐயன் சுந்தர பாண்டியனாய் முடி சூடி அரசனானான். அதனால் வீட்டோடு மாப்பிள்ளை மரியாதை தான் மதுரையில் ஐயனுக்கு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147100512018251762006-05-08T10:01:00.000-05:002006-05-08T10:01:00.000-05:00துளசி அக்கா. நீங்கள் சொல்வது சரி. காலம் மாறிக் கொண...துளசி அக்கா. நீங்கள் சொல்வது சரி. காலம் மாறிக் கொண்டு தான் இருக்கிறது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1147100429339420442006-05-08T10:00:00.000-05:002006-05-08T10:00:00.000-05:00திரு. சுப்பிரமணியன் (சூப்பர் சுப்ரா), மதுரையில் கோ...திரு. சுப்பிரமணியன் (சூப்பர் சுப்ரா), மதுரையில் கோவில் கட்டும் போது அதுவும் நகரின் தெருமட்டத்திலேயே இருந்தது என்றும் காலம் செல்ல செல்ல சாலைகளை செப்பனிடும் போது சாலைகள் கோவிலை விட உயர்ந்துவிட்டன என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். மற்ற கோவில்கள் எல்லாம் ஊரைவிட உயர்ந்த இடத்தில் கட்டியிருப்பார்கள் போலும். அரண்மனையும் கோவிலும் உயர்ந்த மேடான இடத்தில் கட்டவேண்டும் என்று படித்ததாக நினைவு. அப்படிக் கட்டப்படவில்லை போலும் மதுரை ஆலயம். அதனால் காலம் செல்லச் செல்ல கீழே இறங்கிச் செல்லும் படி ஆகிவிட்டது. <BR/><BR/>நீங்கள் சொல்லும் அம்மன் சன்னிதி உட்பிரகாரத்தில் இருக்கும் பூட்டிய அறை பள்ளியறை என்று எண்ணுகிறேன். அது தவிர எனக்குத் தெரிந்து அம்மன் சன்னிதி உட்பிரகாரத்தில் வேறு அறையோ பூட்டிய கதவோ இல்லை. பள்ளியறையும் தினமும் இரவு பள்ளியறை வழிபாட்டின் போது திறக்கப் படுகிறது. <BR/><BR/>அம்மன் கோவிலுக்கு திருமலை நாயக்கர் மகாலிலிருந்து சுரங்க வழி இருந்ததாய் நானும் படித்திருக்கிறேன். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று தற்போது யாருக்கும் தெரியவில்லை. <BR/><BR/>மதுரையில் மீனாட்சிக்கு ஏன் முதல் மரியாதை என்று மற்றவர்கள் சொல்லிவிட்டார்கள். அதனால் நானும் அதனை விரிக்கவில்லை. <BR/><BR/>துர்க்கை சன்னிதி அருகில் இருக்கும் சித்தரைப் பற்றி சிவமுருகன் தன் பதிவில் எழுதியிருக்கிறார். முடிந்தால் பாருங்கள். ஆமாம். நீங்கள் சொன்னது போல் சித்தரின் திருவுருவம் மிக நேர்த்தியாக அழகாக இருக்கும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1146996919292501292006-05-07T05:15:00.000-05:002006-05-07T05:15:00.000-05:00சூப்பர் சுப்ரா,மதுரையில் மீனாக்ஷி கல்யாணக்கோலத்தில...சூப்பர் சுப்ரா,<BR/>மதுரையில் மீனாக்ஷி கல்யாணக்கோலத்திலேயே இருப்பதாலும், அவள் சொந்த ஊர் என்பதாலும் அவளுக்குத்தான் முதல் மரியாதை. சுந்தரேஸ்வரரின் வலது பக்கம் அம்மை குடிகொண்டிருப்பதைக்கவனியுங்கள். குறிப்பிட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் அம்மாதிரி அம்மன் சந்நிதி வலது பக்கம் இருக்கும் என்று சொல்வார்கள். அந்தக்கோவில்களில் மதுரையும் ஒன்று. மேலும் எனக்குத் தெரிந்தவரை இது சக்தி பீடங்களில் ஒன்று என்றும் நினைக்கிறேன். சக்தி பீடங்களில் அம்மன் தான் முதலில்.<BR/>குமரன்,<BR/>நேரு அங்கு சொற்பொழிவு செய்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் பள்ளி மாணவியாக இருந்த சமயம் நேரு மதுரை வந்த போது அந்தக் கோவிலில் மரியாதை செய்ததாகக் கேள்விப்பட்டேன். நிச்சயமாகத் தெரியாது.எங்களைப் பொறுத்தவரை அந்தப் பிள்ளையார்மிகச் சிறந்த நண்பராக இருந்து வந்தார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1146969154003761332006-05-06T21:32:00.000-05:002006-05-06T21:32:00.000-05:00குமரன்,இந்த 'பேர்' வைக்கிற விஷயத்துலே மட்டும் முந்...குமரன்,<BR/><BR/>இந்த 'பேர்' வைக்கிற விஷயத்துலே மட்டும் முந்தி ஒரு காலத்துலே அவுங்கவங்க <BR/>ஊர்லே இருக்க்ற கோயில் தெய்வங்களோட பேர்தான் அநேகமா இருக்கும். அதாலேதான்<BR/>காஞ்சீபுரம் காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, திருநெல்வேலி காந்திமதி, சங்கரன்கோயில்<BR/>கோமதினு இருந்துச்சு. இப்ப அதெல்லாம் ஃபேஷனா இல்லேன்னு மீனா, காந்தான்னு <BR/>ஆயிருக்கும். <BR/><BR/>நம்ம அக்கா ஒருத்தர் அவுங்க குலதெய்வம் பேர் அங்காளம்மன் பேரைக் குழந்தைக்கு<BR/>வைக்கணுமுன்னு 'ஆஷா'ன்னு பேர் வச்சிருக்காங்க. ஏன்னா 'A' லே ஸ்டார்ட் ஆகுதாம்.<BR/>இது எப்படி இருக்கு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1146959059778402862006-05-06T18:44:00.000-05:002006-05-06T18:44:00.000-05:00குமரன் மற்றொரு விஷயம் கவனிதீர்களா. பெரும்பாலும் எல...குமரன் மற்றொரு விஷயம் கவனிதீர்களா. பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் வாசலிருந்து கோவிலுக்குள் செல்ல செல்ல உயரம் அதிகமாகும். ஆனால் மதுரையில் மீனாட்சி கோவிலில் தெற்கு கோபுரம் வழியாக நுழையும் பொழுது கீழே இறங்கிச் செல்லவேண்டும். அது ஏன் என்று தெரியவில்லை. மேலும் அம்மன் சன்னதி உட்பிரகாரத்தில் இடது புறம் ஒரு பூட்டிய அறை இருக்கும். அது திருமலை நாயக்கர் காலத்தில் அரண்மனையிலிருந்து கோவிலுக்கு வரும் ஒரு பாதாள சுரங்கத்தின் வாயில் என்று சொல்வார்கள். எல்லா ஊர்களிலும் சாமிக்கு பிறகுதான் அம்மன். ஆனால் மதுரையில் முதலில் மீனாக்ஷி அப்புறம்தான் சிவன். சிவன் சன்னதியை சுற்றி வரும்பொழுது ஒரு சித்தர் சிலை (துர்க்கை சன்னதி அருகில்) வடிவமைப்பு அவ்வளவு நேர்த்தியாக அழகாக இருக்கும்.supersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1146951106858412122006-05-06T16:31:00.000-05:002006-05-06T16:31:00.000-05:00நன்றி தமிழ்க்குழந்தைநன்றி தமிழ்க்குழந்தைகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1146950972561744072006-05-06T16:29:00.000-05:002006-05-06T16:29:00.000-05:00உண்மை தான் கீதா அம்மா. மதுரைக் காரர்களுக்கு மதுரைய...உண்மை தான் கீதா அம்மா. மதுரைக் காரர்களுக்கு மதுரையைப் பற்றி எழுதுவதும் படிப்பதும் திகட்டவே திகட்டாது. வடக்கு மாசி வீதி மேல மாசி வீதி முக்கில் இருக்கும் நேரு விநாயகர் கோவில் இன்னும் இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். அந்த சந்திப்பில் தான் முதன் முதலில் கலைஞர் பேசியதையும் அம்மையார் பேசியதையும் ஏதோ ஒரு தேர்தல் காலத்தில் கேட்டேன். அந்த விநாயகருக்கு நேரு விநாயகர் என்று பெயர் வந்ததற்கும் நேருவின் பொதுக்கூட்டப் பேச்சிற்கும் தொடர்பு இருப்பதாய்ப் படித்திருக்கிறேன். நேரு அந்த சந்திப்பில் பேசியிருக்கிறாரா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17517026.post-1146906425483079022006-05-06T04:07:00.000-05:002006-05-06T04:07:00.000-05:00ஒரு வாரம் கழித்து உங்கள் பதிவை இன்றுதான் பார்க்க ம...ஒரு வாரம் கழித்து உங்கள் பதிவை இன்றுதான் பார்க்க முடிந்தது. லிங்க் கிடைக்காமல் ஒன்றுமே பார்க்கமுடியவில்லை. <BR/>மிக நல்ல பதிவு.. மதுரைக்காரர்களுக்கு மதுரையைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் திகட்டாது.மேல கோபுர வாசலிலே நுழையும்போதே வரும் அற்புதமான காற்று ஒரு இரண்டு நிமிடம் அங்கேயே கட்டிப் போடும். எங்கள் வீட்டு மாடியில் இருந்து கொண்டே ஒரு பக்கம் மதுரை சோமுவின் இசைப்பயிற்சியும் மற்றொரு பக்கம் தெருமுனையில் லிருந்து வரும் மதுரை ஜி.எஸ்.மணியின் இசைப் பயிற்சியும் இன்னும் மறக்க முடியவில்லை.இன்னும் செல்லத்தம்மன் கோயில், பேச்சியம்மன் படித்துறைக்கோயில், வடக்குக் கிருஷ்ணன் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில், பழைய சொக்கநாதர் கோயில், மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி கூடும் இடத்தில் உள்ள(இன்னும் இருக்கிறதா) நேரு பிள்ளையார் கோயில் எத்தனையோ உள்ளன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com